Wednesday, February 29, 2012

நாங்கள் தேவர் சிலை வைக்கின்றோம்! நீங்கள் அம்பேத்கர் சிலையை வையுங்கள்!

மதுரை : ஒரு சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் முக்குலத்தோர் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவரோடு பரமக்குடி இம்மானுவேல் பேரவையினர் சந்திப்பு நடந்திருக்கின்றது. அந்த சந்திப்பில் " நாங்கள் பசும்பொன் தேவரின் சிலையை பரமக்குடி பகுதியில் வைத்து வழிபட ஏற்பாடு செய்கின்றோம் எனவும் , நீங்கள் அம்பேத்கர் சிலையை மதுரைப் பகுதியில் வைக்க ஏற்பாடு செய்ய
வேண்டும் " எனவும் ஒரு கோரிக்கையை வைத்ததாக தகவல் கிடைத்தது. ஆனால் அதை என்னால் செய்ய இயலாது என்று பட்டென்று பேசி அனுப்பி விட்டாராம் மதுரை முக்குலத்தோர் கட்சித் தலைவர்.
நாங்கள் சாதியை மறந்து சமத்துவம் காண முயற்சி செய்வதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. சாதியில் விடாப்பிடியாக இருக்கின்றார்கள் என்ற கருத்து அவர்கள் பேரவை தொடர்பானவர்களிடம் பரவிக்கிடக்கிறது .
" நான் புளி தருகிறேன் , நீ மிளகாய் கொடு என்ற பண்ட மாற்று முறைபோல இப்போது இந்த சிலை விவகாரத்தை கொண்டு வருகின்றார்கள். எக்குலமும், எல்லா மதத்தினரும் போற்றி பாராட்டி வணங்கும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் புகழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக யார் வேண்டுமானாலும் பாதுகாப்பான முறையில் சிலைகளை வைப்பதில் நாங்கள் தலையிடப் போவதில்லை. ஆனால் அதற்காக நாங்கள் இதை செய்யும் பொழுது நீங்கள் அதை செய்ய வேண்டும் என்பது பிரதிபலன் கருதி ஒரு நல்ல காரியம் செய்தலை விட செய்யாதிருத்தல் சிறப்பு" என்று மதுரை முக்குலத்தோர் அமைப்பின் நிர்வாகிகளிடையே பேச்சு அடிபடுகிறது.
எப்படியோ, தேவரின் புகழ் அறிந்து , அவரின் தெய்வீக சக்தி அறிந்து அவரின் ஆசிர்வாதத்தில் இந்த உலகம் பலனடைய விரும்புவோர் , இல்ல வழிபாட்டினாலும் , கோவில் கட்டி வழிபடுதலினாலும் தனது விருப்பத்தை நிறைவேற்றுதல் என்பது வரவேற்கத் தக்கதே!


THANX : DEVARTV.COM

பாலாவின் படத்தில் நடிக்கிறார் பூஜா

நான் கடவுள் படத்தில் கண்ணில்லாத பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களின் கண்ணீரை விருதாகப் பெற்ற பூஜா, பாலாவின் எரியும் தணல் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

திடீரென பாலாவின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்று நமக்கு ஆச்சரியம் மேலிட்டது. அதனை எவ்வாறு தீர்ப்பது... ஒரே வழிதான் நேரடியாக பூஜாவைக் கேட்டுவிடலாமே என்று அவரை தொலைபேசியில் அழைத்தோம்.

அப்போது,

நான் தற்போது சென்னையில்தான் தங்கியுள்ளேன். பாலா சாரைப் பார்த்து இந்தப் படம் குறித்து பேசினோம், கதை சொன்னார், மிகவும் மிடித்துப்போய்விட்டது. தற்போது ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்திருக்கிறோம்.

பாலா சாருடன் இன்னொரு படம் நடிக்கப் போகிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறியுள்ள பூஜா, படத்தில் உங்கள் கதாபாத்திரம் பற்றி கூறுங்களேன் என்று கேட்டதற்கு மௌனத்தையே பதிலாக அளித்தார்.

இந்த நீண்ட இடைவெளி ஏன் என்று கேட்டதற்கு, நான் கடவுள் படத்தில் நடித்தது மிகப்பெரிய அனுபவம். அதில் நடித்ததைப் பார்த்து என் தந்தை, உன் திரையுலகில் ஒரு லட்சியத்தை நீ அடைந்துவிட்டாய். இனி வாழ்க்கையில் செட்டிலாக வேண்டிய வேலையை பார்க்கலாம் என்று கூறி இலங்கைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அவரது வார்த்தையை தட்ட முடியாமல், பல நல்ல வாய்ப்புகளை நான் மறுக்க வேண்டியதாகிவிட்டது.

ஆனால், பாலா சாருக்கு என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. அவரது அழைப்பு வந்ததுமே ஓகே சொல்லிவிட்டேன் என்கிறார் கண்களில் மகிழ்ச்சியுடன்.

Tuesday, February 28, 2012

இணையதளத்தில் ரேஷன் கார்டு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,

தமிழக முதல்வர் ஜெயலலிதா குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை ஓராண்டிற்கு நீட்டிக்க உத்தரவிட்டார்
மேற்படி உத்தரவின்படி புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல் தாளின் மேற் பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது. புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 28.02.2012 வரை அளிக்கப்பட்டது 1,97,70,682 குடும்ப அட்டைகளில் இதுவரை 1,86,58,768 குடும்ப அட்டைகள் நியாய விலைக் கடைகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் கால நீட்டிப்பு வேண்டுமென்று கேட்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை கனிவுடன் பரிசீலித்த முதல்வர் அரசு மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது 31.03.2012 வரை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் குடும்ப அட்டை வைத்திருப்போர் மற்றும் அரிசி, சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக நியாய விலைக் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள், புனிதப் பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது குடும்ப அட்டைகளை ஆன்-லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி htt://210.212.62.8080/newfcp/cardvalidity.do என்ற இணைய தள முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக் கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும், மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் பொருள் வேண்டாதோர் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது. மேற்படி இணையதள வசதி 01.03.2012 முதல் 31.03.2012 வரையில் நடைமுறையில் இருக்கும். இந்த வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், கேட்டுக் கொண்டுள்ளார்

பெட்ரோல் விலை மீண்டும் உயர்கிறது: 4 ரூபாய் உயர வாய்ப்பு

பெட்ரோல் விலை மீண்டும் 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை உயர்கிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு தற்போது பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.4 நஷ்டம் ஏற்படுகிறது.

தற்போது ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடவடிக்கைகள் துவங்கி விட்டதால், விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்ததும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் தான் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Monday, February 27, 2012

Veteran Tamil actress dead

Veteran film and stage actress S N Lakshmi died of cardiac arrest while being treated for a hip fracture in Chennai on February 20.
The 84-year-old actress lived with her brothers’ children at Saligramam in the city.
In a career spanning nearly seven decades, Sennalkudi Narayana Thevar Lakshmi acted in more than 1,500 Tamil and Telugu films, dramas and television serials.
Born in Sennalkudi village in Virudhunagar district, Lakshmi had a hard childhood as her father died orphaning her mother and seven siblings. Her mother then migrated to Virudhunagar and put her sons to work in a stone quarry, while Lakshmi and her sisters did housework.
Lakshmi soon decided to try her luck in films in Chennai, then known as Madras. As was the custom in those days, the 13-year-old girl joined a drama troupe and after many failures got a break as a dancer in the Tamil magnum opus Chandralekha (1948).
After this there was no looking back for the talented and hardworking actress. She did a number of outstanding roles as a character artiste and supporting actress in many films. Her acting skills were honed by film directors S V Sahasranaham, K Balachander, N S Krishnan and many others.
Her memorable films include Server Sunderam, Baghdad Thirudan, Idhaya Veenai, Vivasayi, Sangae Muzhangu, Udhayageetham, Jeans and Mahanadhi.
She fought a tiger during the shooting of Baghdad Thirudan (1960) without using a stuntman. This courageous feat prompted the film’s hero late M G Ramachandran to remark,” Am I the hero of this film or this young lady?”
She was the favourite choice of award-winning actor Kamalhaasan’s films like Mahanadhi, Michael Madana Kamarajan, Thevar Magan and Virumandi. Her comic timing had the audience in splits in Michael Madana Kamarajan (1990) as a kleptomaniac granny with her own fight scenes.
Though she was often cast as an old woman donning a cotton sari with horn rimmed spectacles and a forehead smeared with ash, Lakshmi managed to stand out with her acting, dialogue delivery and homely and wise looks.
A deeply religious and humble person, Lakshmi was a devotee of the late god man Satya Sai Baba and often did free service like sweeping and collecting slippers at his centres in Chennai and Puttaparthi.

மணிரத்னத்திற்கு நான் வில்லன் அல்ல: அர்ஜுன்

மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் தான் வில்லன் இல்லை என்று ஆக்ஷன் கிங் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

ராவணன் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படம் கடல். இதில் நடிகர் கார்த்திக் மகன் கவுதம் தான் ஹீரோ. சமந்தா நாயகியாக நடிக்கிறார். அர்ஜுனும், மோகன் பாபு மகள் லட்சுமி மஞ்சுவும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்துவும் அவர் மகன் மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதுகிறார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் அர்ஜுன் தான் வில்லன் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அர்ஜுன் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

கடல் படத்தில் நான் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இன்னும் ஷூட்டிங் துவங்காததால் படத்தைப் பற்றி வேறு எதுவும் கூற இயலாது. மணிரத்னம் இயக்கத்தில் நான் நடிப்பது இது தான் முதல் தடவை என்பதால் ரொம்ப த்ரில்லாக உள்ளது. இதில் நான் தான் வில்லன் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. கடல் படத்தில் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது தான் எனக்குத் தெரியும்.

இரண்டாவது நாயகனாக நடிப்பதில் பிரச்சனையில்லை. ஏனென்றால் எனக்கு கதாபாத்திரம் தான் மிகவும் முக்கியம். தென்னிந்திய சினிமாவில் பெயர் எடு்த்துவிட்டேன். பாலிவுட்டிலும் ஒரு கை பார்க்கலாம் என்று நினைத்து கதை தயார் செய்து கொண்டிருக்கிறேன். அதில் நான் தான் ஹீரோ என்றார்.

மதுரையில் நாளைமுதல் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்

மதுரையில் நாளை முதல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் தெரிவித்தார்.

ஹெல்மெட் அணியாவிட்டால் நாளைமுதல் 1 வாரத்துக்கு எச்சரிக்கும்விதமாக ரூ 100 அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னர் முறைப்படியான அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

84வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! ஹூகோ, தி ஆர்ட்டிஸ்ட் படங்களுக்கு 5விருது!!

சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடந்தது. இதில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர். விருதுகள் விபரம் வருமாறு...

* ஹூகோ படத்திற்கு 5 விருது : ஹூகோ படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு, கலை, விஷூவல் எபக்ட்ஸ், சவுண்ட் மிக்சிங் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருது கிடைத்தது.

* தி ஆர்ட்டிஸ்ட் படத்திற்கும் 5 விருது : ஹூகோ படத்தை போன்று தி ஆர்ட்டிஸ்ட் படத்திற்கு 5 விருதுகள் கிடைத்ததுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த படம், இயக்குநர், இசையமைப்பு, ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது.


* சிறந்த இயக்குநருக்கான விருது, "தி ஆர்ட்டிஸ்ட்" படத்திற்காக மைக்கேல் ஹசானாவிசியஸ்க்கு கிடைத்தது.


* சிறந்த படத்திற்கான விருது, "தி ஆர்ட்டிஸ்ட்" படத்திற்கு கிடைத்துள்ளது.


* சிறந்த நடிகருக்கான விருது, "தி ஆர்ட்டிஸ்ட்" படத்தில் நடித்த ஜீன் துஜார்தினுக்கு கிடைத்தது.


* சிறந்த நடிகைக்கான விருது, "தி அயன் லேடி" என்ற படத்தில் நடித்த மெரில் ஸ்ட்ரீப்க்கு கிடைத்தது.


* சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருது ஈரானின், "ஏ ஷெப்ரேஷன்" என்ற படத்திற்கு கிடைத்தது.


* சிறந்த துணை நடிகருக்கான விருதை, "பிகினர்ஸ்" படத்தில் நடித்த 82வயதான கிறிஸ்டோபர் பிளம்பர் பெற்றார். இவர் வெல்லும் முதல் ஆஸ்கர் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.


* சிறந்த துணை நடிகைக்கான விருது, "தி ஹெல்ப்" படத்தில் நடித்த ஆக்டிவா ஸ்பென்சருக்கு கிடைத்தது.


* சிறந்த விஷூவல் ‌எபெக்ட்ஸ் விருதுக்கான விருது ஹூகோ படத்திற்கு கிடைத்தது.


* சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது, "ராங்கோ" படத்திற்கு கிடைத்தது.


* சிறந்த ஆவணப்படத்திற்கான விருது, "அன்டிபிட்டடு" படத்திற்கு கிடைத்தது.


* சிறந்த படத்தொகுப்புக்கான விருது, "தி கேர்ள் வித் தி டிராகன் டாட்டூ" என்ற படத்திற்காக கிரிக் பாக்ஸ்டர் மற்றும் அங்கூஸ் வால் ஆகி‌யோருக்கு கிடைத்தது.


* சிறந்த இசையமைப்பாளருக்கான விருது, "தி ஆர்ட்டிஸ்ட்" படத்தில் இசையமைத்த லூடுவிக்கிற்கு கிடைத்தது.


* சிறந்த திரைக்கதைக்கான விருது, "மிட்நைட் இன் பாரிஸ்" என்ற படத்திற்காக உட்டி ஆலனுக்கும், "தி டிஸடண்டன்ஸ்" என்ற படத்திற்காக அலெக்ஸாண்டர் பயினி ஆகிய இருவருக்கும் கிடைத்தது.

நாளை பொது வேலை நிறுத்தம்: ஆட்டோ, பஸ் ஓடுமா?

மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) பொது வேலைநிறுத்தம் செய்ய தொழிலாளர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வங்கி, இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பெரும்பாலான மத்திய அரசுத் துறைகளில் பணிகள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கலந்துகொள்வதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது என எதிர்பார்க்கப்படுகிறது. பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்படும் என தெரிகிறது.

மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையால் தொழிலாளர் நலன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் கொள்கைகள் முதலாளிகளுக்குச் சாதகமாக உள்ளன என்று கூறி, வரும் பிப்ரவரி 28-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

காங்கிரஸ் கட்சி சார்புள்ள ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கமும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் என அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இப் போராட்டத்தில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., திமுகவின் தொ.மு.ச. பேரவை, பி.எம்.எஸ். உள்பட 17 தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.

வங்கிப் பணிகள் பாதிக்கும்: வங்கித்துறையில் 7 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறினார். 8 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனால், நாடு முழுவதும் வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

வெளிப்பணி ஒப்படைப்பு, கண்டேல்வால் குழுவின் பரிந்துரைகளை ஏற்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தொலைத் தொடர்புத் துறை, அஞ்சல் துறை, மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள், அமைப்பு சாரா தொழிற்சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கம் என பல்வேறு தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கின்றன.

இந்தப் பொது வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கெüரவத் தலைவர் ஏ.எம்.கோபு கூறியதாவது:

உலக வர்த்தகப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் எனக் கருதி, பொருள்களை குறைந்த அடக்க விலையில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காக தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. பல நிறுவனங்களில் நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் 5 கோடி ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர். எனவே, தொழிலாளர் நலன் காக்க பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக தொழிற்சங்கம் தவிர அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்பதால் மாநிலத்தில் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படும். பெரும்பாலான ஆட்டோ, பஸ்கள் ஓடாது என்றார் கோபு.

Bank strike

இந்த மாத இறுதிக்கணக்கு வெகுவாக பாதிக்கும் வகையில் பாங்க்., ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் நாளை ( 28 ம் தேதி) மெகா ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். இதனால் மாத இறுதி நாளில் பணப்பட்டுவாடா பல வழிகளில் பாதித்து ஒரு நாள் , இரண்டு நாள் என கால தாமதம் ஏற்பட வேண்டியிருக்கும். ( இந்த மாதம் 29ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது நினைவு கூறத்தக்கது )
காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் தொழிலாளர் கொள்கை விரோத போக்கை கண்டித்தும், விலைவாசி உயர்வு , அன்னிய முதலீடு, பொது நிறுவன பணிகளை அவுட்சோர்சிங் கொடுப்பது , வாராக்கடனை திரும்ப பெறுதலில் உள்ள சுணக்கம் பணவீக்கம் கட்டுபடுத்தாமை, கான்ட்ராக்ட் அடிப்படையில் நியமனம் கூடாது. குறைந்பட்ச கூலி சட்ட திருத்தம், அனைத்து ஊழியர்களுக்கும் பென்சன், உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி இந்த போராட்டம்

நடக்கிறது. நாட்டில் உள்ள 11 மத்திய தொழிலாளர் சங்கங்கள், சுமார் 5 ஆயிரம் சிறு கூட்டமைப்புகள் இதில் பங்கேற்கின்றன. பாங்க்., ஊழியர்கள் சுமார் 8 லட்சம் பேர் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். ரயில்வே துறையினர் மட்டும் பங்கேற்க மாட்டார்கள். இடதுசாரி அமைப்புகளான, சி.ஐ.டி.யு.,- ஏ.ஐ.டி.யு.சி., - யு.டி.யு.சி.,- ஏ.யு.டி.யு.சி.,காங்கிரஸ்ஐ.என்.டி.யு.சி.,- பி.எம்.எஸ்., எச்.எம்.எஸ்., - டி.யு.சி.ஐ., - எல். எல்.ஓ., மற்றும் பா.ஜ.,, சிவசேனா, பாரதிய மஸ்தூர் சங்கம், யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அமைப்பினர் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் குறித்து இந்திய கம்யூ., தலைவர் குருதாஸ் குப்தா கூறுகையில்: இது போன்று அனைத்து சங்கத்தினரும் இணைந்திருப்பது இதுவரை நடக்காத ஒன்று . இது மத்திய அரசு மீதான வெறுப்பையே காட்டுகிறது. ஆர்.பி.ஐ., பி.எஸ்.யு.எஸ்., டிரான்ஸ்போர்ட, டெலிகாம், ஆயில்நிறுவனங்கள், கனிமசுரங்க நிறுவனங்கள்

உள்ளிட்வை இதில் பங்கேற்கும். தொழிலாளர் பிரச்னை குறித்து பார்லி.,யில் பல முறை குரல் எழுப்பியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. சமீபத்திய தொழிலாளர்மாநாட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லை. இதனால் ஸ்டிரைக்கில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் என்றார் குப்தா. பிரதமர், தொழிலாளர் துறை அமைச்சர் ஆகியோரிடம் பல முறை பேசியிருக்கிறேன். ஆனால் அவர்கள் இதற்கு தீர்வு காண முயற்சிக்கவில்லை. நாங்கள் பேசித்தீர்க்கவே விரும்புகிறோம் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
கடைசி நேர முயற்சியாக மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் யூனியன் அமைப்புகள் நிராகரித்து விட்டன. மாத இறுதி வரவு- செலவு கடுமையாக பாதிக்கும்.

"Sachin Ramesh Tendulkar" : List of 100 Records.

Its been 21 years since Sachin Tendulkar stepped in to the International arena of Cricket. Sachin has been breaking cricket records ever since his debut, and will surely break more records in the time to come. Following Sachin Tendulkar records list has been growing ever year, and will grow until he plays.






1.Record number of matches played – 442 matches
2.First player to play a record 400 innings
3.Number of consecutive ODI appearances – 190 matches
4.Cricket grounds played on – 90 grounds
5.Highest individual score by a single player – 200*
6.Most runs in a cricket career – 17,598 runs
7.Record number of ODI centuries – 46 Centuries
8.Record number of centuries in ODIs against an opponent – 9 Centuries
9.Record number of centuries in tournament finals – 6 Centuries
10.Record number of centuries in all formats against an opponent – 19 centuries
11.On Sachin’s Debut, he was the second youngest debutant after Aaqib Javed of Pakistan
12.First player to score 10,000 runs
13.First player to score 11,000 runs
14.First player to score 12,000 runs
15.First player to score 13,000 runs
16.First player to score 14,000 runs
17.First player to score 15,000 runs
18.First player to score 16,000 runs
19.First player to score 17,000 runs
20.Only male player to score a double century in ODIs
21.Tendulkar has scored more than 1,000 runs against every major cricket playing nation
22.Sachin is the only player to score more than 3000 runs against a single opponent – Sri Lanka and Australia
23.Holds the record to score more than 1,000 runs in a single calender year. He has done this 7 times so far.
24.Most number of runs in tournament finals – 1833 runs
25.Most fours in an innings – 25 against South Africa
26.Record number of scores above 150 in an innings – 5
27.Most Half Centuries in ODIs – 93 Half Centuries
28.Highest number of scores over 50 – 139
29.Most Man of the Match awards in ODIs – 61
30.Most Man of the Series awards in ODIs – 19
31.Most half centuries in world cup matches – 13
32.Sachin Tendulkar holds the record for the most runs in ODIs in a calendar year – 1894 runs in 1998
33.Second FasTEST to reach 8000 TEST runs. Record recently broken by Kumar Sangakarra
34.FasTEST to reach 12,000 TEST runs
35.FasTEST to reach 13,000 TEST runs
36.Record centuries in a calendar year – 9 centuries in 1998
37.Highest partnership for any ODI wicket – 331 runs with Rahul Dravid
38.Highest partnership for 2nd wicket in ODIs – 331 runs with Rahul Dravid
39.Highest partnership for 3rd wicket in ODIs – 237* runs with Rahul Dravid
40.Highest partnership aggregated by a pair – 8227 runs with Sourav Ganguly
41.Record opening partnership pair – 6609 runs with Sourav Ganguly
42.Most century partnerships – 26 partnerships with Sourav Ganguly
43.4 wickets and Century in the same match – Against Australia in 1998
44.Sachin Tendulkar has been dismissed a record 3 times on 99 in ODIs
45.Sachin has been the most dismissed batsman in the 90s in International cricket – 24
46.Most 200 run partnerships in ODIs – 6
47.Most century partnerships by an opening pair – 21 with Sourav Ganguly
48.Record number of runs in a cricket world cup – 673 runs in 2003
49.Most runs in cricket world cups combined – 1796 runs
50.Most centuries in International cricket – 94 centuries
51.Most TEST cricket centuries – 51 Centuries
52.First batsman to complete 31,000 International runs
53.Most TEST runs – 13447 runs
54.Most dismissals in the 90s in ODIs – 17
55.Most number of TEST appearances - 169
56.Most fours in TEST cricket – 1734+
57.Most century partnerships in TESTs – 17 with Rahul Dravid
58.Highest score by an Indian captain – 217 against New Zealand
59.More than 1000 TEST runs in a single calendar year – 5 times
60.Record number of man of the match awards by an Indian in TEST matches – 14 times
61.First batsman to score 50 international centuries
62.First batsman to score 60 International centuries
63.Tendulkar holds the record for being the only batsman to score 70 International centuries
64.Tendulkar holds the record for being the only batsman to score 80 International centuries
65.Tendulkar holds the record for being the only batsman to score 90 International centuries
66.Sachin Tendulkar is the only player to have scored century on debut in the Irani trophy, Ranji trophy and Duleep trophy
67.Most Centuriess in World cup Cricket – 4
68.Most Half Centuries in World Cup cricket – 17
69.Most boundaries in International cricket – 3675
70.Most half centuries in International cricket – 149
71.Most runs in a single edition of the IPL – 618 runs
72.Most runs scored in TEST matches away from home – 7819 runs
73.Highest overall partnership runs, in all formats combined – 12,400 runs with Sourav Ganguly
74.Most matches in a career – 606 matches
75.Sachin Tendulkar has played for a record number of consecutive matches for India – 239 matches
76.Highest partnership for the 3rd wicket in World Cup – 237 runs with Rahul Dravid
77.FasTEST to reach 10,000 TEST runs
78.Sachin is currently second after Sanath Jayasuriya for the most ODI appearances, soon expected to overtake
79.Sachin Tendulkar scored 5 centuries before he turned 20
80.Most fours in ODI cricket – 1927 boundaries
81.Ranked by Wisden as the Best ODI batsman of all time
82.Ranked by Wisden as the Second Best TEST batsman of all time
83.Highest Indian last wicket partnership – 133 runs with Zaheer Khan
84.Most number of Man of the Match awards in World Cup
85.Sachin Tendulkar and Vinod Kambli were involved in a 664 run partnership in Harris Shield game in 1988. A record broken this year
86.In 1992, Sachin became the first overseas player to play for Yorkshire at the age of 19
87.Has the least percentage of Man of the Match awards when on the losing side. Out of the 56 times, India has lost 5 times
88.Sachin has won the Padma Shri, Arjuna Award and Rajiv Gandhi Khel Ratna awards, and he is the only cricketer to receive them all
89.One of the few batsmen to have Centuries against all TEST Playing countries
90.The first batsman to be given out by a Third Umpire TV reviewal system
91.Sachin holds the record for being the only player to have 40 wickets and 11000 runs in TEST cricket
92.Sachin holds the record for being the only player to have 150 wickets and 15000 runs in ODI cricket
93.Sachin Tendulkar holds the best average amongst the batsman who have crossed 10,000 ODI runs
94.The highest run scorer in the 199 and 2003 cricket world cups
95.Sachin is the only player to have more than 100, fifty plus scores
96.The only batsman to have scored more than 2 centuries against all TEST playing nations
97.Sachin has completed his Century by hitting a 6, on four different occasions in TEST matches, a record shared by Ken Barrington
98.Only cricketer to have done 10,000 runs, 100 wickets and 100 catches in ODIs
99.The only player to be in Top 100 of ICC rankings for 10 years
100.Sachin is the cricketer to have a record number of records.

When Sachin Tendulkar toured Pakistan to face the finest bowling attacks ever in cricket, Michael Schumacher was yet to race a Formula 1 car, Lance Armstrong had never been to the Tour de France, Diego Maradona was captain of the world champion Argentine team, Pete Sampras had never won a Grand Slam title, Roger Federer was a name no one knew of , Lionel Messi was probably in his nappies, Usain Bolt was an unknown kid back in Jamaica. The Berlin Wall still existed firmly, USSR was one big, big country fighting the Cold War, Dr Manmohan Singh was yet to open the Narsimha Rao’s Indian economy.

Sunday, February 26, 2012

உலகின் பணக்கார நாடு கத்தார்

உலகின் செல்வம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் கத்தார் முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் இதழ் தயாரித்துள்ள புதிய பட்டியலில் இந்த நாடு தனிநபர் வருமானத்தில் மிகவும் வளமிகுந்த நாடாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கத்தாரின் எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயுமே அந்த நாடு முதலிடத்தைப் பிடிக்கக் காரணமாகியுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்கும்படி தமிழக அரசு வற்புறுத்த வேண்டும்: சீமான் கோரிக்கை

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சிங்கள இனவாத அரசின் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த ஆயுதமேந்திப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது மத்திய அரசு விதித்துள்ள தடையை நீட்டிக்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது நியாயமற்ற நடவடிக்கையாகும். தங்கள் தாயகத்தை மீட்கவும், சுதந்திரமாக தமிழர்கள் வாழவும் விடுதலையைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்த பின்னர் தோன்றியது தான் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்.

அது இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளால் உருவாக்கப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தை அழித்து தமிழர்களை அடிமைப்படுத்தவே மத்திய அரசின் ஆதரவுடன் தமிழர்கள் மீது இன அழிப்புப்போரை ராஜபக்சே அரசு தொடுத்தது. தமிழீழத்தின் மூன்றில் ஒரு பகுதி, அதாவது 8,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு இன்று சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்று அந்நாட்டு நாடாளு மன்றத்திலேயே ஆதாரப்பூர்வமாக தமிழர் உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளாரே? அங்கு வாழ்ந்த தமிழர்களின் கதியென்ன? 90 ஆயிரம் விதவைகளுடன், வாழ வழியின்றியும், எதிர்காலம் இருண்டும் ஈழத்தமிழினம் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு மேலும் அங்கு தமிழின அழிப்பு தொடர வேண்டும் என்பதுதான் மத்திய காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு. அதனால்தான் அது இலங்கை அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டும் காணாதது போல் இருக்கிறது. தமிழக அரசின் நிலையும் அது தானா? தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான இந்தத் தடையின் காரணமாகவே இலங்கைத் தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக பார்க்கப்படுகின்றனர்.

உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும், எதிர் காலத்தை தேடிக்கொள்ளவும் எந்த நாட்டிற்கு அகதிகளாகச் சென்றாலும் அவர்கள் பயங்கரவாதிகள் என்று கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். கடல் மூலம் பெரும்பாடுபட்டு ராமேஸ்வரம் கரைக்கு வந்த ஈழத்தமிழர் குடும்பம் ஒன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறது.

ஈழத்தமிழச்சியின் கருவில் இருக்கும் குழந்தையைக் கூட பயங்கரவாதியாகவே பார்க்கப்படுகிறது. அதனால் தான் இங்கும் சிறப்பு முகாம்கள் இன்றும் இருக்கின்றன. இந்த அவல நிலை ஒழிய வேண்டுமானால் விடுதலைப் புலிகளின் மீதான தடை அகற்றப்பட வேண்டும்.

இலங்கைத் தீவைப் பொறுத்தவரை தமிழர்களின் பாதுகாப்பு என்பது, அவர்களின் விடுதலைக்காக அளப்பரிய தியாகம் செய்துப் போராடி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்கிற உண்மையை உணர்ந்து, புலிகள் மீதான தடையை விலக்கிக்கொள்ளுமாறு மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, February 19, 2012

தேவர் பேரவையினர் (இளைஞர் அணி ) காவல்துறையினரோடு தள்ளு முள்ளு.30 பேர் கைது - thevar peravai _ madurai airport _ 19/02/2012

இன்று காலை தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணியினர் மேற்கொண்ட மதுரை விமான நிலைய முற்றுகையால் விமான நிலைய வளாகமே போர்க்களம்போல காட்சியளித்தது.
காவல்துறைக்கு முன்னறிவிப்பு செய்யாமலேயே போராட்டத்தை நிகழ்த்தியமையால் காவல்துறையினர் திணறிப் போயினர். இது தொடர்பாக தேவர் பேரவை இளைஞர் அணி பொதுச்செயலாளர் திரு பசும்பொன் முத்தையா தேவர் அவர்கள் அளித்த செய்தி :
" மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனாரின் பெயரை வைக்க கோரி தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி சார்பில் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தியும் இதுவரை செவி சாய்க்காத மத்திய அரசின் இந்த செயல் தேவர் மக்களின் மனதை புண்படுத்திய செயலாகும்.

தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி சார்பில் கடந்த 23.10.2011 அன்று இதே கோரிக்கைக்காக மதுரை விமான நிலையத்தை என் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன்பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கின்ற வகையில் இந்த முற்றுகை போராட்டத்தை நடத்தியிருகின்றோம் . இதற்கு மேலும் தாமதிப்பின் தமிழகம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

இதப் போராட்டத்தில் : வி.பி.தேவன் , ஆர், தேவராஜ், எஸ்.செல்வகுமார், மாவட்ட நிர்வாகிகள் ஜி.சீனு , ராமு, லட்சுமணன், கே.பழனிச்சாமி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

THANX : DEVARTV.COM

Saturday, February 18, 2012

பிரேசில் நாட்டில் குளு குளு வசதியுடன் தயாராகும் மெட்ரோ ரெயில் பெட்டிகள்: இந்த ஆண்டு இறுதியில் சென்னை வந்து சேரும்

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் ரூ.14,600 கோடி செலவில் வேகமாக நடைபெற்று வருகிறது. இரண்டு வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் பாதையிலும், சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் பாதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதுபோல சுரங்கப் பாதை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளும் தொடங்கியுள்ளன. மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்காக பல்வேறு கம்பெனிகளுக்கு 22 டெண்டர்கள் விடப்பட்டு உள்ளன. சுரங்கப் பாதை அமைப்பதற்காக சீனாவில் இருந்து கப்பல் மூலம் 4 ராட்சத `டனல் போரிங் மிஷின்கள்' வந்துள்ளன.

முதலில், வண்ணாரப்பேட்டையில் இருந்தும், செனாய் நகரில் இருந்தும் சுரங்கப் பாதை அமைக்கும் பணி இன்னும் 2 மாதங்களில் தொடங்கும் என்றும், அதற்குள் மேலும் 7 டனல் போரிங் மிஷின்கள் சீனாவில் இருந்து கப்பலில் வந்து சேர்ந்து விடும் என்றும் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதற்கிடையே, கோயம்பேட்டில் 68 ஏக்கர் பரப்பளவில் 7 மாடிகளுடன் நிர்வாக அலுவலகம், ஒட்டுமொத்த மெட்ரோ ரெயில்களை இயக்கக்கூடிய அதிநவீன கட்டுப்பாட்டு மையம், மெட்ரோ ரெயிலை நிறுத்துவதற்கான இடமும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான பணிமனையும் இங்கே பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது.

இதற்கான பணியில் 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயிலுக்காக குளு குளு வசதிகளுடன்கூடிய ரெயில் பெட்டிகளை வடிவமைத்து, தயாரித்து, சோதனை செய்து, இயக்கித் தருவதுடன், அந்தப் பெட்டிகளை இயக்குவது பற்றி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வேலைக்கான டெண்டர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த `அல்ஸ்டம் டிரான்ஸ்போர்ட்' என்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிறுவனம் சென்னை மெட்ரோ ரெயில் போக்குவரத்திற்காக 42 `செட்' ரெயில் பெட்டிகளை தயாரித்து கொடுக்க உள்ளது. ஒரு `செட்' ரெயிலில் 4 பெட்டிகள் இருக்கும். ஆக மொத்தம் 168 பெட்டிகளை தயாரித்துக் கொடுப்பதற்கு ரூ.1471 கோடியே 39 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது மெட்ரோ ரெயில் பெட்டிகள் பிரேசில் நாட்டில் முழுவீச்சில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக அடுத்த ஆண்டு இறுதியில், கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே, பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் பெட்டிகள் இந்த ஆண்டு இறுதியில் இருந்தே சென்னைக்கு வரத் தொடங்கிவிடும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டை குறைக்க நடவடிக்கை: சென்னையில் மேலும் ஒரு மணி நேரம் மின்வெட்டு

தமிழ்நாட்டில் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒரு நாளுக்கு சுமார் 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு நாளுக்கு 7 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. இதனால் தினமும் 4500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை நிலவுகிறது. மின் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு அமல் படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில் அதிகபட்சமாக 8 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. தொழிற்சாலைகளில் 20 சதவீதம் மின் வெட்டு கடைபிடிக்கப்படுகிறது. புதிய மின் திட்டங்களை உரிய காலத்தில் தொடங்காததும், ஏற்கனவே உள்ள மின் உற்பத்தி நிலையங்களை சீராக முறைப்படி பராமரிக்காததும், நிதி நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் மின் வாரியம், பணம் செலவழித்து மற்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவு மின்சாரத்தை வாங்க இயலாமல் இருப்பதும் தான் மின் தட்டுப்பாட்டுக்கு முக்கியகாரணமாகும்.

இந்த குறைகளை தீர்த்து 2013-ம் ஆண்டுக்குள் தமிழ் நாட்டை மின்உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற முதல்- அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் உள்ள 8 மணி நேர மின்வெட்டு மக்களிடம் கடும் அவதியை ஏற்படுத்தி உள்ளது.

தொழிற் சாலைகளிலும் திட்ட மிட்டப்படி உற்பத்தியை நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து உயர்அதிகாரிகளை நேற்று அழைத்து ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மின்தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்த வழி முறைகளை அறிக்கையாக தயாரித்து அளிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மின்வாரிய அதிகாரிகள் தயாரித்தனர்.

இந்த அறிக்கையை தமிழக அரசிடம் இன்று மின் வாரிய அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில், சென்னை மற்றும் பெரிய தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அளவை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் மிச்சமாகும் கணிசமான மெகாவாட் மின்சாரத்தை மற்ற மாவட்டங்களுக்கு வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் அமலில் உள்ள மின்வெட்டில் மாற்றங்கள் வர உள்ளது. சென்னையில் தற்போது ஒவ்வொரு பகுதி வாரியாக தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. இனி இந்த மின்வெட்டு 2 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது.

சென்னை நகருக்கு தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கூடுதலாக ஒரு மணி நேரம் மின் வெட்டை சென்னையில் அமல்படுத்தும் பட்சத்தில் தினமும் 300 மெகாவாட் மின்சாரம் மிச்சமாக வாரியத்துக்கு கிடைக்கும்.

சென்னையில் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது போன்று தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை தினம் அறிவித்து, மின்சாரத்தை மிச்சப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது தொழிற்சாலைகளுக்கு 20 சதவீத மின்வெட்டு உள்ளது.

இந்த மின்வெட்டு 40 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. மேலும் பெரிய தொழிற்சாலைகளுக்கு 2 நாட்கள் மின்சார விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் 700 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும்.

சென்னையில் மிச்சமாக கிடைக்கும் 300 மெகாவாட், தொழிற்சாலை விடுமுறையால் மிச்சமாக கிடைக்கும் 700 மெகா வாட்மூலம் மின்சார வாரியத்துக்கு தினமும் சுமார் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்த மின்சாரத்தை சென்னை தவிர்த்த மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக மாவட்டங்களில் உள்ள மின்வெட்டு நேரம் கணிசமாக குறையும். தற்போது சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் 8 மணி நேர மின்வெட்டு உள்ளது. இந்த மின்வெட்டு 5 மணி நேரமாக குறையும். இது தமிழக மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.

இதற்கிடையே வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவது பற்றியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது மின்வாரியம் சுமார் 7 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. இந்த நிலையில் வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கினால், நிதிநிலைமை மேலும் மோசம் அடையலாம் என்று கருதப்படுகிறது.

வெளிச்சதையில் ஒரு யூனிட் மின்சாரம் நேரத்துக்கு தகுந்தபடி ரூ.6 முதல் ரூ.16 வரை பணம் கொடுத்து வாங்கப்படுகிறது. இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் மின்சாரம் மக்கள் நலன் கருதி, யூனிட் ஒன்றுக்கு 80 பைசாவுக்கு தான் கொடுக்கப்படுகிறது. எனவே மின் கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே இந்த சிக்கலுக்கு தீர்வு காணமுடியும் என்று சொல்கிறார்கள்.

இந்த சிக்கலையும் மீறி வெளிச்சந்தைகளில் மின்சாரம் வாங்குவது பற்றி தமிழக அரசு இன்று முடிவு எடுக்க உள்ளது. வெளிச்சந் தைகளில் கூடுதல் மின்சாரம் வாங்கும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு கால அளவை மேலும் குறைக்க முடியும். மற்ற மாவட்டங்களில் உள்ள தனியார் மின் உற்பத்தியாளர்களிடமும் மின்சாரம் வாங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அப்படி மின்சாரம் வாங்கினால் 400 மெகாவாட் மின்சாரம் தினமும் கூடுதலாக கிடைக்கும். அதுபோல மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக தினமும் 100 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. இவற்றை வைத்து சமாளித்து விட்டால், வரும் மே மாதம் முதல் காற்றாலை மூலம் ஓரளவு மின்சாரம் கிடைக்க தொடங்கி விடும்.

மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தினமும் 2500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதை வைத்து கோடையில் ஏற்படும் மின்தட்டுப்பாட்டை சமாளிக்கலாம் என்று மின் வாரிய அதிகாரிகள் கருதுகிறார்கள்.

இதற்கிடையே மின் வெட்டை அமல்படுத்துவதில் பயங்கர குளறுபடிகள் நடப்பதாக மக்கள் குற்றச்சாட்டுகிறார்கள். எந்தெந்த நேரங்களில் மின்சாரம் வராது என்பதை தெள்ளத் தெளிவாக கூறி விட்டால், அதற்கு ஏற்ப, தங்கள் அன்றாட பணிகளை செய்து கொள்ள வசதியாக இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள். எனவே மாவட்டங்களுக்கு மின்வெட்டு நேரம் குறைப்பு அறிவிப்பு வெளியிடப்படும் போது, எந்தெந்த நேரத்தில் மின்சாரம் இருக்காது என்ற விவரம் தெளிவாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் அனைத்து தரப்பினருக்கும் வேறுபாடியின்றி மின்வெட்டை அமல்படுத்தவும் தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு குறைப்பு நாளை மறுநாள் (20-ந் தேதி திங்கட்கிழமை) முதல் நடை முறைக்கு வரும் என்று மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐ.நா.வில் போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை ஆதரிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்: நாம் தமிழர் கட்சி

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை அழித்தொழித்தது.

போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இரண்டு கிராமங்களில் நெருக்கமாக தஞ்சமடைந்திருந்த தமிழர்களை சுற்றி வளைத்து இலங்கை இராணுவத்தினர் நடத்திய கொடூரமானத் தாக்குதலில் மட்டும் 50ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொன்றொழிக்கப்பட்டனர். அப்பட்டமான, திட்டமிட்ட இந்த இன அழித்தல் உலக நாடுகளையும் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இப்படிப்பட்ட ஒரு திட்டமிட்ட பெரும் இன அழிப்பை செய்த இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி போர் முடிந்த ஒரு மாதத்திலேயே ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் ஐரோப்பிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தபோது அதனை எதிர்த்தது இந்திய அரசு.

இந்திய அரசின் பிரதிநிதி கோபிநாத் அச்சங்குளங்கரே தீர்மானத்தை எதிர்த்தது மட்டுமின்றி, சீனா, தென் அமெரிக்க நாடுகளின் ஆதரவைப் பெற்று தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கச் செய்து தோற்கடிக்கவும் செய்தார். அதன் பிறகு இலங்கை அரசைப் பாராட்டி அந்நாடு கொண்டு வந்த தீர்மானத்தையும் இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொடுத்தது.

தங்கள் சொந்தங்களை இலட்சக்கணக்கில் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு ஆதாரவாக நின்ற இந்திய அரசின் இந்த நடவடிக்கை உலகத் தமிழர்களை அதிர்ச்சியிலும் சினத்திலும் ஆழ்த்தியது. மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் இந்திய அரசின் அநியாயமான நடவடிக்கையை கண்டித்தன. அதன் எதிர்வினையாகவே தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் – திமுக அணி படுதோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.

ஆனால் இலங்கை அரசிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் உலக நாடுகள் இன்று வரை உறுதியாக குரல் கொடுத்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் இம்மாத இறுதியில் ஐ.நா.வின் மனித உரிமை மாமன்றம் ஜெனிவாவில் கூடுகிறது.

ஒரு மாத காலத்திற்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் குறித்தும், அது குறித்து ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கை பற்றியும், போர்க்குற்றங்கள் மீது விசாரணை நடத்த பன்னாட்டுக் குழு அமைப்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி தீர்மானத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு நடந்துக்கொண்டதுபோல் இலங்கை அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்ளாமல், இந்திய அரசு நடுநிலையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

இலங்கையில் நடந்த தமிழின அழிப்புப் போரின் பிரதிபலிப்பே கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. பெற்ற மாபெரும் வெற்றியாகும். அதனை கருத்தில்கொண்டே இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த உலக நாடுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரே முன்மொழிந்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இப்போது மனித உரிமை மாமன்றக் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நினைவூட்டி, போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்திய அரசு செயல்பட வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்.

தமிழக மக்களின் ஏகோபித்த குரலாக ஒலித்த சட்டப் பேரவைத் தீர்மானத்திற்கு எதிராக மத்திய அரசு நடந்துகொண்டால் அது தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணிப்பதாகும் என்பதையும், அது இந்திய ஒற்றுமையின் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைத் தகர்த்துவிடும் என்பதையும் பிரதமருக்கு தமிழக முதல்வர் எடுத்துரைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழகம்: ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் 5 வயதுக்‍குட்பட்ட குழந்தைகளுக்‍கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு முதல் தவணையாக நாளை, 5 வயதுக்‍குட்பட்ட குழந்தைகளுக்‍கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் சத்துணவு மையங்களில் அமைக்‍கப்பட்டுள்ள 40,000-க்கும் மேற்பட்ட முகாம்களில், காலை 7 மணி முதல் மாலை 5 வரை போலியோ சொட்டு மருந்து அளிக்‍கப்படுகிறது.

பயணம் செய்வோருக்கு வசதியாக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில், 903 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தொலைதூர கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 838 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கைவாழ் அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 5.5 லட்சம் குழந்தைகளுக்‍கு, போலியோ சொட்டு மருந்து வழங்க ஆயிரத்து 126 மையங்கள் அமைக்‍கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகளுக்கு நாளை சொட்டு மருந்து அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, 2-வது தவணையாக வரும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

தேவர் திருமகன் மகிமை என்று பூரிக்கும் தம்பதியினர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்றால் அனைவருக்கும் நினைவு வருவது தேசியமும் , தெய்வீகமும் ஆகும். தன்னுடைய இளமைக் காலம் தொட்டே ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த தேவர் பின்னாளில் முருகப் பெருமானின் அவதாரமாக கருதப்பட்டு
அனைத்து மக்களாலும் வழிபடப் பட்டார். சித்த ஞானத்தால் பறவைகளோடும், விலங்குகளோடும் தன்னுடைய சிந்தனைகளை பரிமாறிக்கொள்ளும் வரம் பெற்றிருந்த தேவர் பெருமகனார் ஒட்டுமொத்த உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதையே அனைவருக்கும் போதித்தார். மக்களோடு மக்களாக தன்னுடைய வாழ்வை கழித்தபோதும் அவரின் தெய்வ அனுகூலங்களை அறிந்த மக்கள் தொடர்ந்து அவரது கோவிலுக்கு சென்று வழிபடுதல் , வேண்டுதல் செய்தல் , நேற்றிக்கடன் செலுத்துதல் , மொட்டையடித்தல் , பால் கொடம் எடுத்தல், முளைப்பாரி போடுதல் என்ற வழிபாடுகள் நீளும்.
தேவர் திருமகனார் அவதரித்ததும் , மறைந்ததும் ஒரே தினமாதலால் அக்டோபர் முப்பது அன்று தேவர் கோவிலில் லட்சக் கணக்கான பக்தர்கள் கூடி தரிசிக்க வருவார்கள். அப்படி அங்கே வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை முன்வைத்து செல்வார்கள். பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை முடித்த பிறகும் எட்டு வருடங்களாக குழந்தை பேறின்மை என்ற நிலையில் இருந்த தம்பதியினர் 2010 ம் வருடம் நடந்த குருபூஜை அன்று தனது வேண்டுதலை நிறைவேற்றுமாறும், அப்படி பிறந்தால் அந்த குழந்தைக்கு உங்கள் பெயர் வைத்து உங்களுக்காக தொண்டாற்ற அற்பணிக்க தயாராக வுள்ளேன் என்றும் வேண்டிக் கொண்டாராம். அடுத்த நாற்பதாவது நாளில் நான் கருத்தரித்தேன் என்று கூறிய சீதா மேலும் கூறுகையில் எங்களை பரிசோதித்த மருத்துவர்கள் நான் கருத்தரித்தது நம்பும்படியான நிகழ்வில்லை என்பதால் திரும்பவும் சோதித்து உறுதிசெய்த ஒன்பதாவது மாதத்தில் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சென்ற குருபூஜை அன்று பெயர் வைக்கப்பட்டது. முத்துராமலிங்கம் என்ற பெயரால் அலங்கரிக்கப்பட்டுள்ளார். எவ்வளவு அழுகையானாலும் தனது கழுத்தில் கிடக்கும் தேவர் செயின் காண்பித்தால் உற்று நோக்கியபடி சிரித்து விடுவார்" என்று மெய் சிலிர்க்க பேசிப்போனார்கள்.

THANX : DEVARTV.COM

ஜெயலலிதா குற்றமற்றவர் : நீதிமன்றத்தில் சசிகலா ஒப்புதல்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தொடர்புடைய சசிகலா நடராஜன், பெங்களூரூ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி, வங்கிக் கணக்கிற்கும், ஜெயலலிதாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

பெங்களூரூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சசிகலாவிடம், இன்று முதன்முறையாக கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, வங்கிக் கணக்கை நான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர் என்று சசிகலா கூறியுள்ளார்.

1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு காலத்திற்குள் ஜெயலலிதா மற்றும் சசிகலா பேரில் சுமார் 66 கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமான இந்த சொத்துக்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான வழக்கு பெங்களூரூ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் அதிமுகவில் இருந்து 2011, டிசம்பர் மாதம் நீக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Friday, February 17, 2012

ராஜீவைக் கொல்ல பிரபாகரன் என்ன முட்டாளா?! செய்தது அமெரிக்காதான்!- விமல் வீரவன்ச

ராஜீவ் காந்தியைக் கொன்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பெரும் பாதகம் ஏற்படும் என்பதை பிரபாகரன் உணராமலா இருந்திருப்பார். மேலும், ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கு அவர் என்ன முட்டாளா. இந்த காரியத்தை செய்தது அமெரிக்காதான். இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுக்கே தெரியாமல், தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை வைத்து ராஜீவ் காந்தியை அமெரிக்காதான் கொலை செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் என நான் திடமாக நம்புகிறேன்.

ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படக் கூடிய பாதக நிலைமைகள் குறித்து பிராபகரன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்க முடியாது.

பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவு, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை என்று அவர் கூறியுள்ளார்.

மார்ச் 18-ல் சங்கரன்கோவில் இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம்

சங்கரன்கோவில் (தனி) சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் மார்ச் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

தேர்தல் நன்னடத்தை விதிகள், தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே அமலுக்கு வருவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக அமைச்சரும், சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருப்பசாமி கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, அந்த இடம் காலியானது. எனவே, ஆறு மாதங்களுக்குள் அங்கு இடைத் தேர்தலை நடத்த வேண்டும். இந்த நிலையில், இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிப்ரவரி 22-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 29. வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 1 நடைபெறும்.

வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 3 கடைசி நாளாகும். வாக்குப்பதிவு மார்ச் 18-ல் நடைபெறுகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 21-ம் தேதி எண்ணப்படுகின்றன.

வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தல் நடத்துவதற்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிமுக தீவிரம்: தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஆளும்கட்சியான அதிமுக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னாள் எம்.எல்.ஏ. சங்கரலிங்கத்தின் மகளும், பொறி யியல் பட்டதாரியுமான முத்துச்செல்வி களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் இப்போது நகராட்சித் தலைவராக உள்ளார். அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய 26 அமைச்சர்களைக் கொண்டு தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் தேர்தல் களம் காணுவதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கி விட்டன.

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி, வெள்ளிக்கிழமை நேர்காணல் நடத்துகிறார்.

இந்தத் தேர்தலில் போட்டியிட மதிமுக முடிவெடுத்துள்ளது.

மற்றொரு பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக, வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழுவில் தேர்தல் குறித்த முக்கிய முடிவினை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக ஏற்கெனவே வேட்பாளர் பெயரை அறிவித்து விட்டது. தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடுகள் தெரிந்த பின், இடைத்தேர்தலில் எத்தனை முனை போட்டி இருக்கும் என்பது தெரிய வரும்.

பிரவம் தொகுதிக்கும் தேர்தல்: கேரள மாநிலத்தில் பிரவம் சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே முல்லைப்பெரியாறு பிரச்னையை அங்குள்ள கட்சிகள் பெரிதுபடுத்தி வருவதாகத் தமிழகக் கட்சிகள் குற்றஞ்சாட்டின.

தேர்தல் அட்டவணை

வேட்புமனு தாக்கல் தொடக்கம் பிப்ரவரி 22

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் பிப்ரவரி 29

வேட்புமனு பரிசீலனை மார்ச் 1

வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் மார்ச் 3

தேர்தல் தேதி மார்ச் 18

வாக்கு எண்ணிக்கை மார்ச் 21

பள்ளியில் சேர்க்க மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் ரூ. 50000 அபராதம்: தமிழக அரசு அதிரடி

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த கல்விச் சட்டத்தை தமிழக அரசு தீவிரமாக நிறைவேற்றி வருகிறது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் சட்ட விதிகளை மீறினால் விதிக்கப்படும் தண்டனை குறித்து தெரிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கோ, குழந்தைகளுக்கோ தனியார் பள்ளிகள் தேர்வு எதையும் நடத்தக்கூடாது. இந்த விதியை முதல் முறையாக மீறும் பள்ளிகளுக்கு ரூ. 25 ஆயிரமும் தொடர்ந்து நடைபெற்றால் ஒவ்வொரு முறையும் ரூ. 50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். மாணவர்களை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தினால் பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அங்கீகாரம் திரும்பப் பெற்ற பிறகும் பள்ளிகள் பழையபடி செயல்பட்டால் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். மாற்றுச் சான்றிதழ்கள் வழங்க தாமதம், ஆசிரியர்களின் தவறு ஆகியன மீது பணி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்த குழந்தையையும் கல்வி ஆண்டின் தொடக்கத்திலோ, கல்வியாண்டு தொடங்கி 6 மாதம் வரையிலோ பள்ளியில் சேர்க்கலாம். நீட்டிக்கப்பட்ட கால அளவுக்குப் பிறகு சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும். வயது சான்றை நிரூபிக்கும் ஆதாரம் இல்லை என்பதற்காக பள்ளிகளில் குழந்தை சேர்க்கைக்கு அனுமதி மறுக்கக்கூடாது.

தனியார் பள்ளிகளுக்கு அருகாமை பகுதிகளில் வசிக்கும் நலிவுற்ற, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு 25 சதவித இடஒதுக்கீட்டை முதல் வகுப்பிலோ, எல்.கே.ஜி.யிலோ, மழலையர் வகுப்பிலோ அளிக்க வேண்டும். இவர்களுக்கான கட்டணத்தை அரசே பள்ளிகளுக்கு செலுத்தும்.

25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற குழந்தைகளுக்கான பள்ளி கட்டணத்தை உதவி தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆய்வாளர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர், ஐ.சி.எஸ்.இ. நிர்வாகம் ஆகியோரிடம் கோரிக்கை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

இந்த அலுவலர்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான செலவீனத்தை கணக்கிட்டு திருப்பி அனுப்ப வேண்டும். அரசு பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ஆகும் செலவினத்தொகை அல்லது கட்டண நிர்ணயக் குழுவால் அந்த பள்ளிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட தொகை, இதில் எது குறைவோ அதை வழங்க வேண்டும்.

செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 2 தவணைகளாக இந்த தொகை அரசிடமிருந்து வழங்கப்படும். இந்த ஒதுக் கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை ஜூலை மாதத்தில் அதிகாரிகளுக்கு பள்ளிகள் அனுப்ப வேண்டும்.

Thursday, February 16, 2012

Rahman’s tunes for Mani’s Kadal

Oscar winning music director AR Rahman has completed setting the tunes for Mani Ratnam’s Kadal. The musician has come out with some great tunes for Mani, whom he considers as his guru. It was Mani Ratnam who introduced Rahman as a music director several years ago in Roja and since then there is no looking back for the musician.

Rahman has always given his best for Mani and Kadal is not going to be any different, state sources. Kadal will mark the debut of Gautham, son of Karthik and pairing up with him is Samantha.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் பல்வேறு பதவிகளில் பணியாளர்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் 10.10.2010 அன்று நடத்திய தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாளிதழ்களிலும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. tnpsc.gov.in/recruitnresults.htm இணையதளத்திலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் 2003-2004 மற்றும் 2005-2006ம் ஆண்டுகளுக்கான துணை இயக்குநர் பதவி, 2003-2004 மற்றும் 2006-2007ம் ஆண்டுகளுக்கான குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி பதவி ஆகியவற்றுக்கு 2010ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் 2012, பிப்ரவரி மாதம் 28ம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேர்முகத் தேர்வு, தமிழ்நாடு பணியாளர் தேரவாணையம், எண் 1, கிரீம்ஸ் சாலை, வணிக வரித்துறை கட்டடம், சென்னை -6 என்ற முகவரியில் நடைபெறுகிறது.

நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டிய விண்ணப்பாதாரர்களுக்கு தனித்தனியாக விவரங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும். அன்றைய தினம், அவர்களது வயது, ஜாதி, கல்வி சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். சான்றிதழ்களும் அன்றைய தினம் சரிபார்க்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

உலகின் செலவு குறைந்த நகரங்கள்

இந்தியாவில் அதிக பணவீக்க விகிதத்தால் நாளுக்குநாள் விலைவாசி அதிகரித்து மக்களை திணறடித்து வருகிறது. ஆனால் உலகின் மிகக்குறைவான செலவாகும் நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் மும்பையும், தில்லியும் இடம்பெற்றுள்ளன.

பொருளாதார புலனாய்வுப் பிரிவு இதுதொடர்பாக நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

உலகின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் மும்பை 2-வது இடத்தையும், தில்லி 4-வது இடத்தையும் பெற்றுள்ளது.

உலக அளவில் மிகவும் செலவு குறைந்த நகரம் பாகிஸ்தானின் கராச்சி நகரமாகும். ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரம்தான் உலகிலேயே மிக அதிக செலவாகும் நகரம் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பணவீக்க விகிதம்தான் அரசுக்கும், பொதுமக்களுக்கும் கவலைக்குரிய விவகாரமாக இருந்து வருகிறது. எனினும் சமீபகாலமாக பணவீக்க விகிதம் சிறிதளவு குறைந்து வருகிறது.

2011 டிசம்பரில் 7.47 சதவீதமாக இருந்த நாட்டின் பணவீக்க விகிதம் 2012 ஜனவரியில் 6.55 சதவீதமாகக் குறைந்தது. பணவீக்க விகிதம் குறைந்தாலும், விலைவாசி விகிதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பொருளாதார புலனாய்வுப் பிரிவு எடுத்த ஆய்வின்படி உலகின் 4 செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் இடம்பெற்ற கராச்சி, மும்பை, தில்லி ஆகியவை இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள நகரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு நகரம் தெஹ்ரான்.

இந்த 4 நகரங்களும் கடந்த ஆண்டும் இதே இடத்தைப் பெற்றிருந்தன.

எனினும் உலகின் அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் பட்டியலில் டோக்கியோவை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஜூரிச் நகரம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அடுத்தபடியாக டோக்கியோ, ஜெனிவா, ஓசாகா கோபே, ஓஸ்லோ, பாரிஸ், சிட்னி, மெல்போர்ன், சிங்கப்பூர் மற்றும் ஃபிராங்பர்ட் நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

400 பொருட்களின் விலைகளைக் கொண்டு இந்த ஆய்வை பொருளாதார புலனாய்வுப் பிரிவு நடத்தியது. அந்த பொருட்களில் உணவு, தண்ணீர், ஆடைகள், வீட்டுச்சாமான்கள் மற்றும் வாடகை, போக்குவரத்து, தனியார் பள்ளிக் கட்டணங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

தேவர் தொலைக்காட்சி நிறுவனருக்கு பிடிவாரன்ட்! பொய் வழக்கின் தொடர் சதி!

தேவர் தொலைக்காட்சி நிறுவனர் திரு அ.பூங்கதிர்வேல் அவர்களுக்கு 13.02.12 காரைக்குடி நீதிமன்றத்தால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக தேவர் தொலைக்காட்சி நிறுவனர் திரு அ.பூங்கதிர்வேல் அளித்த செய்தியில் "
தமிழீழ பிரச்சனையில் எங்களை முழுமையாக இணைத்துக்கொண்ட காலத்தில் எங்களின் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக பல்வேறு பொய் வழக்குகளையும், அடக்குமுறைகளையும், சித்ரவதைகளையும் அனுபவித்தோம். அதில் ஒன்றான பொய் வழக்கு 25.07.2009 அன்று பெண் உதவி ஆய்வாளரை கொலை முயற்சி செய்ததாக மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் துணைச் சிறையில் எங்கள் குழுவை சேர்ந்த மூவரை அடைத்தனர். தமிழ் தேசியம், தமிழ் ஈழ விடுதலைக்காக எங்களை ஒப்படைத்திருந்த போது எங்கள் வழக்கின் பின்னணியில் ஒரு சாதி வன்மம் இருந்ததை என்னால் வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.
" காரைக்குடி வடக்கு காவல்நிலையம் அப்போது அதன் ஆய்வாளராக இருந்தவர் அண்ணாத்துரை. இவர் முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் கிராமத்தை சேர்ந்தவரும் பள்ளர் சமூகத்தை சார்ந்தவரும் ஆவார். இவர் தற்போது தேவகோட்டையில் பணியாற்றிவருகிறார். காரைக்குடி பகுதியில் தேவர் சமூக மக்கள் இவரால் பெரிதும் பாதித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த சாதியென்று விசாரித்த பின்னரே இவரது செயல் அரங்கேறும். இந்தச் சூழ்நிலையில்தான் எங்களது போராட்டத்தின் மீது அடக்கு முறையை பல வழிகளில் முடக்குவதில் தீவிரம்காட்டினார் அண்ணாத்துரை.
இந்த வழக்கு தொடரும் ஒரு நாளுக்கு முன்னர் ஈழத்தில் கொத்துக்குண்டு போட்டு ஒரே நாளில் மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட செய்தியறிந்து அதனை எதிர்த்து காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தின் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது என்னுடன் தோளோடு தோளிருந்தவர் முதுகுளத்தூர் அருகே உள்ள பூசெரி கிராமத்தை சேர்ந்த திரு தமிழ்மணி, இவர் பள்ளர் சமூகத்தை சார்ந்தவர். எங்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரே நோக்கத்திற்காக போராடி வந்தோம். அதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் எங்கள் போராட்டம் பரவியது.எங்கள் குழுக்கள் பரவலாக சிவகங்கை , ராமநாதபுரம் மாவட்டங்களில் போராட்டங்களை வழிநடத்தி வந்தனர். நாங்கள் அப்போது காரைக்குடியில் தொழில் நிமிர்த்தமாக வசித்து வந்ததால் எங்களை அடக்கும் முழு வாய்ப்பையும் அண்ணாத்துரைக்கு வழங்கப்பட்டது.
25.07.2009 அன்று காரைக்குடியில் தமிழர் பண்பாட்டுக் கழகம் விடுத்த அழைப்பின் பேரில் அங்கு சென்று எங்கள் கருத்துக்களை பரிமாறிவிட்டு வந்து கொண்டிருந்த போது திட்டமிட்டே வரும் வழியில் காவலர்களை நிறுத்தி எங்களை நாகரிகமற்ற வார்த்தையில் பேசினார். வேண்டுமென்றே ஏதோ ஒரு வழக்கு பதிவை செய்து விட்டு அந்த வழக்கு ரசீதை அவர்களே கிழித்தனர். எங்களை கோபத்திற்கு ஆளாக்கும் செயல்களை செய்கிரார்களை என்பதை உணர்ந்த நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். அதைத்தொடர்ந்து காவல்துறை எங்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு தேவையான வேலைகளில் ஈடுபடுவதாக காவல் நிலையத்திலிருந்தே செய்திகள் வந்தது. உடனே அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு கிளம்பும் பொழுது காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது. காவல் நிலையம் வந்து செல்லும்படி கூறினார். அதன் பெயரில் நானும் , திரு தமிழ்மணியும் தினத்தந்தி அலுவலகம் சென்று எங்களின் நிலையை செய்தியாக எழுதிக் கொடுத்துவிட்டு காவல்நிலையம் சென்றோம்.. அவ்வளவுதான் அவர்கள் வேலையை ஆரம்பித்தார்கள் . தனது இருக்கையிலிருந்து எழுந்து வேகமாய் வந்த அண்ணாத்துரை " ஏன்டா தேவரா நீ? உனக்கு கொடுக்குற அடி உன் சாதிக்கே வலிக்கனும் என்றார். அதர்ந்து போனேன்! சாதியா? ஒரு நொடிப்பொழுதில் ஓராயிரம் கேள்விகள் மனதில் வந்து போயின.

போலிசுக்கு எதிராவே செய்தி கொடுத்துட்டு வாரியா !என்று என் கன்னத்தில் அரைந்தார். அருகில் இருந்த தமிழ்மணிக்கும் ஒரு அரை! அருகிலிருந்த மூன்று லத்தியை முறித்து சாதனை புரிந்த அண்ணாத்துரை இருக்கும் காவலர்களை எல்லாம் அழைத்து அவரவர் திறமையை காட்டச் சொல்லி மிரட்டினார். 15 காவலர்கள் ஒரு அறைக்குள் எங்கள் இருவரையும் இழுத்துச் சென்று தாக்க ஆரம்பித்தனர். இருவரும் கூட்டத்துக்கு நடுவே கிடக்கின்றோம், 30 பூட்ஸ் கால்கள் உடலெல்லாம் பதம்பார்த்துக் கொண்டிருந்தது. அடிச்சத்தத்தை தவிர அங்கே நாங்கள் எந்தக் குரலையும் எழுப்பவில்லை. "ஆதராவாக இருக்கும் நமக்கே இந்த நிலையென்றால் அங்கே போராடும் மக்களுக்கு? " என்ற கேள்வியே இருவர் மனதிலும். அந்த பதினைந்து பேர் அடித்து முடித்ததும் மீண்டும் அண்ணாத்துரை அறைக்குள் நுழைந்து சுவரோரமாய் உட்கார வைத்தார். கைகளை நான்கு காவலர்களை பிடிக்கச் சொல்லிவிட்டு கால்களை இரு கோணங்களில் இழுக்கச் சொன்னார் . இரண்டு காவலர்கள் அந்த கடமையை நிறைவேற்றினர். இரண்டு கால்களையும் இரு துருவங்களில் பிளந்தனர். அப்போது செங்கோணத்தில் விறைப்பாய் இருந்த விரல் பகுதிகளை அப்படியே மிதித்து ஒடிக்க முயற்சித்தனர். நானும் ஓடிந்ததாகவே அப்போது கருதினேன். பல்வேறு சித்ரவதைக் கலைகளை எங்கள் மீது பாய்ச்சினார் அண்ணாத்துரை!

ஒருவழியாக முக்கால் மணிநேரம் அவர்களது கடமையை நிறைவேற்றி சென்றனர். அறையிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டோம்.பெண் உதவி ஆய்வாளர் ஆல்பின் பிரிஜித் மேரி அவர்களை வரவழைத்தார் . நான் சொல்வதை எழுது என்றார். தயங்கினார் ஆல்பின் பிரிஜித் மேரி! "என்னமா? எழுது" என்று எங்களுக்கு எதிராக மனுவை வாங்கிக் கொண்டார். வழக்கு பதியப்பட்டது.
அடுத்து ? எங்களின் மனத்துள் இருந்த ஒரே கேள்வி. அண்ணாத்துரையின் ஜீப் டிரைவர் ஞானம் ! "என்னடா நல்லா வாங்கிருக்ரிங்க போல! இருங்க ட்ரைனிங் போலிஷ் இருக்காங்க அவுங்கள வர சொல்றேன் என்று ஆறு பயிற்சி காவலருக்கு எங்களை வைத்து சொல்லிக் கொடுத்த்தார். அவர்கள் அடிப்பார்கள் ... அப்படி அல்ல என்று டிரைவர் ஞானம் அடித்துக் காட்டுவார். இப்படியாக அன்று மூன்று மணி நேரமும் எங்களை மாற்றி மாற்றி அடித்து சித்ரவதை செய்தனர். அன்று மதிய உணவு கொடுத்தார்கள் நாங்கள் இருவரும் சற்று நேரம் பார்த்து சிரித்துக் கொண்டோம். எங்கள் அருகே ஒரு போலிஷ் " சாப்டுங்க தம்பி! உங்கள நினச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு! நான் இங்கே உங்களை அடிக்காதீர்கள் என்று சொல்ல முடியாது. என்னால் அடிக்காமல் இருக்கத்தான் முடியும்,சாப்பிடுங்க சாப்பிடுங்க "என்று அவர் கண்கள் கலங்கின. எங்களுடன் அவரும் ஒரு பார்சலை பிரித்தார். எங்களுக்கு வேண்டாம் என்று அமைதியாகிவிட்டோம். அவரும் மூடி வைத்துவிட்டார். அவர் எங்களுக்காக பட்டினி மட்டுமே கிடக்க முடிந்தது. சில விசயங்களை எங்களிடம் பரிமாறிக் கொண்டார். அந்த செய்தியே " நெற்றிக்கண்" பத்திரிகையில் வெளியானது. அந்த செய்தியின் தலைப்பு " எஸ்.எம்.எஸ் மூலம் செக்ஸ் டார்ச்சர் செய்யும் ஆய்வாளர் அண்ணாத்துரை" என்பதுவே!

எங்களை இரவு எட்டு முப்பது மணிக்கு பிடித்ததாகவும் , அதன் பின்னரே வழக்கு பதியப்பட்டதாகவும் குற்றப் பத்திரிகையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களை அடித்த கையேடு என் நண்பன் தமிழ்மணியை கையில் விளங்கோடு சுமார் மூன்று மணிக்கு நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்துப்போய் அறைகளை சோதனை செய்தனர். வீட்டில் வைக்கப்பட்டிருந்த முக்கியமான பொருட்களை சூறையாடினர். திரும்பக் கேட்டபோது அதே மிரட்டலை அனுபவித்தோம். அன்று காரைக்குடி பகுதியில் சில ஈழ ஆதரவுக் குழுக்கள் இருந்தும் அஞ்சி ஒதுங்கினர். எந்தவித ஆதரவும் எங்களுக்கு அப்போது கிடைக்கவில்லை. இப்போது கையை உயர்த்தி கோஷம்போடும் ஈழ ஆதரவுக் கட்சிகளை நாங்கள் முறையிட்ட போது எங்களை காவல்துறையின் கையாலேன்று கருதுவதாக நண்பர்களின் மூலம் அறிந்தோம்.

ஒரு வழியாக அன்று அரை நிர்வாணத்தோடு காவல் நிலைய சிறையில் தூங்கினோம். பலர் வியர்வையில் ஊறிய வெறுந்தரையில் தூங்க வைத்தார்கள். சற்று நேரத்தில் உடலெல்லாம் வியர்த்தது. அருகிலேயே சரிவர சுத்தம் செய்யப்படாத கழிப்பறை நாற்றம்! அந்த ஒருநாள் இரவு இன்னும் மனதிலிருந்து அகலவில்லை.

விடிந்தது! நீதிபதியிடம் அழைத்து சென்றனர். நீதிபதி கேட்பார் நடந்ததை சொல்லிவிடலாம் என முடிவு செய்தோம். நீதிபதி முன் நிறுத்தினர். நீதிபதி கேட்டார் " உங்களை அடித்தார்களா? எங்கள் பதில் ஆம்!" உங்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் என்னவென்று தெரியுமா? எங்கள் பதில் தெரியாது!" நீதிபதி அதன் பிறகு கையெழுத்திட்டார். காவலர்கள் " ஏன்டா இவ்வளவு போட்டும் இன்னும் அடங்கலை'ல " என்றபடி காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு கை விளங்கோடு அழைத்துச் சென்றனர். கூட்டமெல்லாம் எங்களை அவரவர் சிந்தனைக்கேற்ப உற்று கவனித்தவாறு இருந்தனர் . சார் இந்த விளங்கை கழற்றுங்கள் நாங்கள் எங்கும் ஓடிவிடமாட்டோம், அவமான படுத்தாதீர்கள் என்று முறையிட்ட போது " தீவிர வாதிகளை பின்ன எப்படி கூட்டிட்டு போகணும்? என்று என்னிடம் கேள்வி எழுப்பினார். பேருந்து வந்தது. ஏற்றினார்கள். திருப்பத்தூர் மருத்துவமனையில் நிறுத்தினர். அங்கே மருத்துவர் " என்ன இப்படி அடிசிருகிங்க? " என்று எங்கள் முன் கேள்விகேட்க தனியே அழைத்துபோய் காவலர் பேசினார்... அனைத்து படிவமும் பூர்த்தியாகியது. சிறைக்கு அழைத்து செல்லும்முன் சாப்பிட ஒரு உணவகத்தில் கை விளங்கை அவிழ்த்தனர். சாப்பிட்டோம். சிறைக்குள் அடைத்தனர். பதிமூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் காரைக்குடி வந்தோம். அதன் பிறகும் எங்கள் போராட்டம் தொடர்வதைக் கண்ட அண்ணாத்துரை எங்களின் வருமான வாய்ப்புகளை முடக்கும் வேலையினை கையிலெடுத்தார். எந்த நேரமும் அலுவலகம் முன் ஒரு காவலர் நின்று கொண்டு வருவோரை மிரட்டும் கேவலமான போக்கை கடைபிடித்தனர். ஒருவழியாக அலுவலகம் மூடும் நிலைக்கு கொண்டு வந்தார். என் தொடர்பான அலுவலகங்கள், பயிற்சி மையங்கள் கட்டிட உரிமையாளர் மிரட்டப்பட்டு காலி செய்ய வைத்தனர். இப்படியே எங்களுக்கும் அண்ணாத்துரை துறைக்குமான மோதல்கள் தொடர்ந்து வந்தன...

இந்த வழக்கு தொடர்பான சம்மன் எனக்கு வழங்கப்படாமலேயே நீ நேரில் வந்து வாங்கிக்கோ என்று காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது. நான் அப்போது சென்னையில் இருந்து வந்தேன். எனது முகவரிக்கு கொண்டு பொய் சேர்க்குமாறு கோரியும் அதை செய்ய மறுத்தனர். ஊர் வருவதற்கு அவர்களுக்கு என்ன அச்சமோ , கூச்சமோ தெரியவில்லை. அதற்கிடையே " நெற்றிக்கண் அண்ணாத்துரை செக்ஸ் டார்ச்சர் நியூஸ் " வேற புயலைக் கிளப்ப இதற்கு நானே காரணமென கருதி என்னை அலைபேசியில் மிரட்டினர். உன் சம்பந்தப்பட்டவர்களை நான் என்ன செய்கிறேன் பார் என்ற சவால்கள் குவிந்தன. அந்த மாதத்திலேயே முதல் வாயிதா போடப்பட்டது. என்னை காரைக்குடியிலே வைத்து பிடித்து வேறொரு வழக்கு போடுவதற்கு தேவையான வேலைகள் அரங்கேறி விட்டது... நீ வராதே என்று காவல் நிலையத்திலிருந்து செய்தி கிடைக்கவும் நான் அந்த வாயிதாவை புறக்கணித்தான். அதே போல் என் நண்பர்கள் நீதி மன்றம் செல்லும் போது வழிமறித்த ஏழு காவலர்கள் " எங்கேடா அவன்? எங்கேடா அவன்? என்று ஒரு பதட்டத்தை உருவாக்கியிருக்கின்றார்கள். எனக்கும் போன் செய்து " ஏனடா வரல ? என்று கோபப்பட்டவர்களின் மானத்தை வாங்கிய கையேடு அண்ணாத்துரைக்கே பேசினேன். அதை அவர் மறுத்தார். அங்கே வந்த ஆறு பேரும் காவல்களா இல்லை கூலிப் படையினரா என்று சந்தேகம் உள்ளதாக நண்பர்கள் தெரிவித்ததையும் இங்கே சொல்ல வேண்டி உள்ளது.

இங்கே நடந்த சூழலை முழுவதுமாக விளக்க முடியாத சூழலில் தற்போது நடக்கும் சதிகளை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். சென்ற 9 ம் தேதி நான் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் சென்று வந்த போதும் அடுத்த மூன்று நாளில் போடப்பட்ட வாயிதாவிற்கு ஆஜராகும் சூழல் இல்லாமல் போனது. அதை சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு அறிவித்த போதும் எந்த தொடர்பும் இல்லாதவர் போல தனது நிலையை நிருபித்துள்ளார். ஆகவே எந்த மனுவும் நீதிமன்றம் பெறப்படாததால் பிடி வாரென்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது. நான் தற்போது ஈடு பட்டுவரும் முக்கிய விளைவுகளை சீர்குலைக்கும் செயலில் காவல்துறையினர் முயல்வதும் அதற்கேற்றவாறு வழக்கறிஞர் நடந்து கொண்டமையும் அவர் மீது நம்பிக்கையின்மையை ஏற்ப்படுத்தி உள்ளது. மேற்கொண்டு இது தொடர்பாக வேண்டிய ஆவணங்கள் செய்துவருக்றோம்" என்று தெரிவித்தார்.

முழு நெட் தேர்வும் இனி OBJECTIVE முறையிலேயே இருக்கும்

கல்லூரி பேராசிரியர் ஆக வேண்டும் என்ற கனவுடைய லட்சக்கணக்கான மாணவர்கள் மகிழும் வகையில், நெட் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நெட் தேர்வானது 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

முதல் பிரிவு தேர்வில், கேள்வித்தாளில் Teaching aptitude, Research methodology, Maths & Reasoning abilities and Policy & institutions
போன்ற அம்சங்களின் அடிப்படையில் Objective type கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாம் பிரிவு தேர்வில், கேள்வித்தாளில், அவரவர் சம்பந்தப்பட்ட பாடம் தொடர்பாக Objective type கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.

மூன்றாம் பிரிவு தேர்வில், கேள்வித்தாளில், விரிவாக விடையளிக்கும்(Descriptive type) வகையில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.

தற்போதைய மாற்றம்

ஆனால் இந்த மூன்றாம் பிரிவு தேர்வில்தான் இந்தாண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மூன்றாம் கேள்வித்தாளில், இனிமேல் விரிவாக விடையளிக்கும்(Descriptive type) கேள்விகளுக்குப் பதிலாக, Objective type கேள்விகளே கேட்கப்படும்.

புதிய நெட் தேர்வு முறையின் தெளிவான விபரம்

முதல் தாள்

60 Objective type கேள்விகள் கேட்கப்பட்டு, அதில் 50 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள் வீதம்(50x2) மொத்தம் 100 மதிப்பெண்கள். இதற்கு ஒதுக்கப்படும் காலஅளவு 1.25 மணி நேரங்கள். தேர்வு நேரம் காலை 9.30 முதல் 10.45 வரை.

இரண்டாம் தாள்

மொத்தம் 50 Objective type கேள்விகள் கேட்கப்பட்டு, அனைத்திற்குமே விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள் வீதம்(50x2) மொத்தம் 100 மதிப்பெண்கள். இதன் காலஅளவும் 1.25 மணிநேரங்கள். தேர்வு நேரம் காலை 10.45 முதல் நண்பகல் 12 மணி வரை.

மூன்றாம் தாள்

மொத்தம் 75 Objective type கேள்விகள் கேட்கப்பட்டு, அனைத்திற்கும் விடையளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 2 மதிப்பெண்கள் வீதம்(75x2) மொத்தம் 150 மதிப்பெண்கள். தேர்வின் காலஅளவு மொத்தம் 2.5 மணி நேரங்கள். தேர்வு நேரம் மதியம் 1.30 முதல் மாலை 4 மணிவரை.

எடுக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள்

முதல் தாள்

பொதுப்பிரிவு மாணவர்கள் 40% மதிப்பெண்களும், OBC மாணவர்கள் 35% மதிப்பெண்களும், SC/ST/PH/VH மாணவர்கள் 35% மதிப்பெண்களும் எடுக்க வேண்டும்.

இரண்டாம் தாள்

பொதுப்பிரிவு மாணவர்கள் 40% மதிப்பெண்களும், OBC மாணவர்கள் 35% மதிப்பெண்களும், SC/ST/PH/VH மாணவர்கள் 35% மதிப்பெண்களும் எடுக்க வேண்டும்.

மூன்றாம் தாள்

பொதுப்பிரிவு மாணவர்கள் 50%(75) மதிப்பெண்களும், OBC மாணவர்கள் 45%(67.5) மதிப்பெண்களும், SC/ST/PH/VH மாணவர்கள் 40%(60) மதிப்பெண்களும் எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு தாளிலும், தனித்தனியாக தகுதி மதிப்பெண்கள் பெற்றுள்ளதை வைத்தே, இறுதி தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்படும். Junior Research Fellowship மற்றும் Lectureship ஆகிய பணிகளுக்கு, தனித்தனியாக மாணவர்களை, இறுதி முடிவுகளை வெளியிடும் முன்பாக UGC தேர்வுசெய்யும்.

பொது விதிகள்

மூன்று தாள்களின் பாடத்திட்டமும் மாற்றப்படவில்லை.

தேர்வு முடிந்தப்பிறகு, Carbon printout of OMR Response sheet -ஐ மாணவர்கள் தங்களுடன் எடுத்துச் செல்லலாம்.

Negative மதிப்பெண்கள் கிடையாது.

Monday, February 13, 2012

வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தின் மதிப்பு ரூ. 24.5 லட்சம் கோடி: சிபிஐ தகவல்

ஊழல் தடுப்பு மற்றும் சொத்து பறிமுதல் தொடர்பான சர்வதேச கூட்டத்தில் கலந்து கொண்டு சி.பி.ஐ. இயக்குனர் ஏ.பி.சிங் பேசியதாவது:-

வெளிநாடுகளில் பணம் பதுக்கி வைத்துள்ளவர்களில் இந்தியர்கள் தான் பெருமளவில் உள்ளனர். இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தொகை 500 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் இருக்கும். அதாவது இந்திய ரூபாய் கணக்கின்படி ரூ. 24.5 லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.

சுவிஸ் வங்கியில் உள்ள வைப்புத் தொகையாளர்களில் இந்தியர்களே அதிகம். சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், மது கோடா உள்ளிட்ட ஊழல்களின் மூலம் பதுக்கப்பட்ட கருப்பு பணம் துபாய், சிங்கப்பூர், மொரீசியஸ் போன்ற நாடுகளின் வழியாக சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வங்கிகளில் பரிவர்த்தனைகளுக்கு எந்த வரம்பும் கிடையது. ஒரு வங்கி கணக்கில் இருந்து இன்னொரு வங்கி கணக்கிற்கு சில மணி நேரங்களில் பணமாற்றம் நடைபெறுகிறது. இது குற்றவாளிகளுக்ச்கு மிகவும் சாதகமாக உள்ளது.

மொரிஷியஸ், சுவிட்சர்லாந்து, லிச்டென்ஸ்டெய்ன், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர் மற்றும் தகவல்களை சேகரித்து வருகிறோம். ஆனால் இதற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு குறைவாகவே உள்ளது என கூறியுள்ளார்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் சசிகலா பேரவை

சசிகலா பெயரில் பேரவை அமைக்கவும், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் முடிவு செய்திருப்பதாக, மாமன்னர் பூலித்தேவர் பாசறை மாநிலப் பொதுச்செயலர் ராஜாமறவன் கூறினார்.

தென்காசியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: சசிகலா பேரவை அமைப்பது தொடர்பாக கடந்த வாரம் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் அடுத்த வாரம் தென்காசியில் அதன் தொடக்க விழா நடைபெறுகிறது.

இதையடுத்து, சசிகலா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். சங்கரன்கோவிலில் எங்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்த 40 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். விரைவில் அங்கு வேட்பாளர் அறிமுகப்படுத்தப்பட்டு, சசிகலா அங்கு 5 நாள்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி எனப் பிரிந்தபோது சசிகலாதான் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு 1991, 2001 தேர்தலில் வெற்றியைப் பெற்றுத் தர முயற்சிகள் மேற்கொண்டார்.

2011 தேர்தலில் அனைத்து சமுதாயத் தலைவர்களையும், ஒரே கூட்டணியின் கீழ் கொண்டு வந்து தேர்தலைச் சந்தித்து வெற்றி பெறவும் அவர்தான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார் என்றார் அவர்.

Saturday, February 11, 2012

தகவல் உரிமைச் சட்டம் - தகவல் பெறுவதற்கான விண்ணப்ப மாதிரி

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல்களைக் கேட்டுப் பெறுவதற்கு தனியாக விண்ணப்பப்படிவம் ஏதும் கிடையாது. எனினும் ஒரு வெள்ளைத் தாளில் கீழ்கண்ட மாதிரி எழுதி விண்ணப்பிக்கலாம். இதைக் கேட்கும் தகவலுக்கேற்ப மற்றும் சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.

அனுப்புநர்

(விண்ணப்பதாரரின் பெயரும், முகவரியும் குறிப்பிடவேண்டும்)

பெறுநர்

(உரிய அலுவலகத்தின் பொதுத்தகவல் அலுவலர்/ உதவி பொதுத்தகவல்அலுவலர் முகவரி குறிப்பிடப்பட வேண்டும்)

ஐயா/அம்மையீர்,

தயவு செய்து கீழ்க்கண்ட தகவல்களை கொடுக்கவேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

தகவல் விவரம்

2. நான் கீழ்கண்ட ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டுகிறேன்.

( பார்வையிட விரும்பும் ஆவணங்கள் )

3. எனக்கு கீழ்கண்ட ஆவணங்களின் படிகளை கொடுக்குமாறு வேண்டி

கேட்டுக்கொள்கிறேன்.

(ஆவணங்களின் விவரம்)

4. நான் தகவல் அறியும் கட்டணங்கள் செலுத்தியுள்ளேன், அதன் விவரங்கள் கீழ்வருமாறு

கட்டணம் செலுத்தியதற்கான சான்றுகளை இணைத்துள்ளேன்.

5. எனக்கு மேற்கண்ட தகவல்கள் / ஆவணங்கள் அவசரமாக தேவைப்படுகின்றன. விரைவில் எனக்கு

கொடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இடம்

நாள்

விண்ணப்பதாரர் கையொப்பம்



thanx : தேவர் தொலைக்காட்சி

Friday, February 10, 2012

ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலர் மீது ஜே.கே.ரித்தீஷ் எம்பி கடும் தாக்கு

ராமநாதபுரம், பிப்.10: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தனிப்பட்ட நபரிடம் திமுக அடிமையாக உள்ளது என்று ராமநாதபுரம் எம்பி ஜேகே.ரித்தீஷ் தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் கட்சியை வளர்க்காமல் தன்னை மட்டும் வளர்த்துக் கொண்டார் மாவட்டச் செயலர் சுப.தங்கவேலன் என அவர் புகார் கூறினார்.

திமுக உள்கட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த ராமநாதபுரம் எம்பி ஜேகே ரித்தீஷ் தலைமையில் இன்று போட்டிக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய பலரும் ராமநாதபுரம் மாவட்டச் செயலர் சுப.தங்கவேலன் மீது புகார் கூறினர்.

பின்னர் பேசிய ஜேகே.ரித்தீஷ், ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆண்டுகளாக தனிப்பட்ட நபரிடம் திமுக அடிமையாக உள்ளது. எனது பெயர்கூட இல்லாமல் நோட்டீஸ் அடித்து கூட்டங்கள் நடத்துகின்றனர். அவர்கள் தொண்டர்களின் உழைப்பை வீணாக்குகின்றனர். பதவிக்கு வரும்முன் தொண்டர்களின் உழைப்பை சுரண்டிவிட்டு பதவிக்கு வந்தவுடன் அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் திமுக தலைமையகத்தில் இருந்து அவரே உறுப்பினர் படிவங்களை வாங்கி, அவரே அதை பூர்த்தி செய்து கட்சித் தலைமைக்கு அனுப்பி வந்துள்ளார். இதனால் கட்சியில் யார் யார் உறுப்பினராக உள்ளோம் என்பதே தெரியாமல் இருந்தது.

அவர் 2 ஆயிரம் உறுப்பினர்களுக்கு விண்ணப்பங்களை வாங்கியுள்ளார். நான் 5000 உறுப்பினர்களுக்கு விண்ணப்பங்களை வாங்கியுள்ளேன். அதுவே போதவில்லை. இந்த மாவட்டத்தில் கட்சிக்கு போலியாக உறுப்பினர்களை சேர்க்காமல் உண்மையாக தொண்டர்களை சேர்த்து சிறந்த திமுகவை உருவாக்கிக் காட்டுவோம் எனத் தெரிவித்தார்.

Thursday, February 9, 2012

Last Updated: 20 August 2010 Reporting and Identification of Phishing, Fraudulent Refund E-mail Scams and Fake Income Tax Web Sites

Disclaimer:

* The Income Tax Department does not request detailed personal information through e-mail.
* The Income Tax Department does not send e-mail requesting your PIN numbers, passwords or similar access information for credit cards, banks or other financial accounts.


Identification of phishing / fraudulent refund e-mails:

* What is 'phishing'?
o Phishing is the process of attempting to acquire sensitive information such as usernames, passwords and credit card details by masquerading as a trustworthy entity in an electronic communication. Communications purporting to be from financial institutions, popular social web sites, auction sites, online payment processors or IT administrators are commonly used to lure the unsuspecting public. Phishing is typically carried out by e-mail or instant messaging and it often directs users to enter details at a fake website whose look and feel are almost identical to the legitimate one.
* Samples of phishing e-mails PDF/HTML

* What is 'phishing'?
* Samples of phishing e-mails PDF


Advisory:

If you receive an e-mail from someone claiming to be the authorized by Income Tax Department or directing you to an Income Tax website:

* Do not reply.
* Do not open any attachments. Attachments may contain malicious code that will infect your computer.
* Do not click on any links. If you clicked on links in a suspicious e-mail or phishing website then do not enter confidential information like bank account, credit card details.
* Do not cut and paste the link from the message into your browsers, phishers can make link look like real, but it actually send you to different websites.
* Use anti-virus software, anti spyware, and a firewall and keep them updated. Some phishing e-mails contain software that can harm your computer or track your activities on the internet without your knowledge. Anti-virus & Anti-spyware software and firewall can protect you from inadvertently accepting such unwanted files.


Reporting:

* If you receive an e-mail or find a website you think is pretending to be of Income Tax Department, forward the e-mail or website URL to phishing@incometaxindia.gov.in. A copy may also be forwarded to incident@cert-in.org.in
* You may forward the message as received or provide the Internet header of the e-mail. The Internet header has additional information to help us locate the sender.
* After you forward the e-mail or header information to us, delete the message.
* If you receive a phishing mail not pertaining to the Income Tax Department, forward the same to incident@cert-in.org.in

Wednesday, February 8, 2012

பிப்.28 இல் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம்

வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள வைப்பகங்கள் (வங்கிகள்) தங்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள இருக்கின்றன. அந்த அறிவிப்பை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ளது.

தங்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக அந்த வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது என்று கூறியுள்ள அந்த அமைப்பு கண்டேல்வால் குழு பரிந்துரைகளைத் தாங்கள் எதிர்ப்பதாகவும், வழக்கமான வைப்பக (வங்கி) பணிகளுக்கு அவுட்சோர்சிங் முறையைக் கொண்டுவருவது போன்ற மற்ற சீர்த்திருத்த நடவடிக்கைகளையும் தாங்கள் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளது.

அன்று இந்தியா முழுவதும் அதில் இடம்பெற்றுள்ள 5 இலட்சம் உறுப்பினர்கள் அந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.

இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள்

* பாலாவின் ஒருநாள் மெனு இதுதான். காலையில் இரண்டு இட்லி, மதியம் ஒரு கைப் பிடிச் சாதம், இரவு இரண்டு தோசை. 'ராத்திரி ரெண்டு தோசை சாப்பிட்டேன்!' என கண்கள் விரித்துச் சொல்வார்!

* பாலாவின் படத்தில் 'சன்ரைஸ் ஷாட்'டை நீங்கள் பார்க்கவே முடியாது. அதிகாலையில் எழும் பழக்கம் இல்லாததால் நேர்ந்தது இது. ஆனால், சன்செட் காட்சிகள் ஏகமாகவே இருக்கும்!

* பாலாவின் திருமண ஏற்பாடுகளின்போது அவரது மாமனார் கொஞ்சம் தயக்கம் காட்ட, விளையாட்டாக 'பிதா மகன்' வில்லன் ரோலுக்கு 'மகாதேவன்' என்று மாமனார் பெயரை வைத்தது அக்மார்க் பாலா குறும்பு!

* அதிகாலையில் பாலாவைத் துயிலெழுப்ப துணை ராணுவப் படையே தேவைப்படும்.அவரை எழுப்பி ஷூட்டிங்குக்குத் தயாராக்கக் குறைந்தது நான்கு பேராவது மெனக்கெட வேண்டும்!

* தியேட்டரில் படம் பார்க்கும்போது செல் போனில் பேசினாலோ, எஸ்.எம்.எஸ். ஒலிஎழும்பி னாலோ பாலாவுக்குப் பிடிக்காது. செல்போனில் பேசுவதை நிறுத்துமாறு யாருடனும் சண்டை போடுகிற எல்லைக்குக்கூடச் செல்வார்!

* எப்பவும் காலில் அணிவது ரப்பர் காலணி கள்தான். வேறெந்த வகைக் காலணிகளையும் உபயோகிக்க மாட்டார்!!

PON.MANICKAVEL

8 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்த, வாரியம் உத்தரவிட்டுள்ளது

பற்றாக்குறை அதிகரிப்பால், மாநிலம் முழுவதும், அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, 8 மணி நேரமாக, இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது. கோடைக்காலம் துவங்கும் நேரத்தில், அதிகரிக்கப்பட உள்ள இந்த மின்வெட்டு, மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். மின் பற்றாக்குறையால், ஏற்கனவே தமிழகம் புழுங்கி வருகிறது. புதிய மின் திட்டங்கள் அமலாக, இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும். செயலில் உள்ள திட்டங்களிலும், சொல்லிக்கொள்ளும்படியாக உற்பத்தி இல்லை. ஆனால், பயன்பாட்டு அளவு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.உற்பத்திக்கும், பயன்பாட்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஈடுகட்ட முடியாமல், தமிழக மின் வாரியம் திணறி வருகிறது. இதை சமாளிக்கும் வகையில், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், 1 மணி நேரம், புறநகர் மற்றும் பிற நகர்ப்பகுதிகளில், 3 மணி நேரம், கிராமப்புறங்களில், 6 மணி நேரம் என, மூன்று விதமாக, அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.அறிவிக்கப்பட்டது தான் இவ்வளவே தவிர, பெரும்பாலான இடங்களில், இதை விடவும் அதிகமான நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.பாகுபாடு கிடையாது: நிலைமை இன்னும் மோசமானதைத் தொடர்ந்து, இன்று முதல், தலைநகர் சென்னை தவிர, மாநிலம் முழுவதும், 8 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்த, வாரியம் உத்தரவிட்டுள்ளது.இதில், நகர்ப்பகுதி, கிராமப்பகுதி என்ற பாகுபாடே
கிடையாது. எல்லா இடங்களிலும், 8 மணி நேரம், "கரன்ட் கட்' இருக்கப் போகிறது. சென்னையில், அறிவிக்கப்படாமல், 2 மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதே, 8 மணி நேரமாகிவிட்ட நிலையில், சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில், அதை விடவும் அதிகமாகவே மின்வெட்டு இருக்கும் என அஞ்சப்படுகிறது. எந்த நேரம்?இந்த புதிய மின்வெட்டு, இரண்டு விதங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. காலை, 6 முதல், 9 மணி வரை, 3 மணி நேரமும்; பகல், 12 முதல், மாலை, 3 மணி வரை, 3 மணி நேரமும்; மாலை, 6 முதல், இரவு, 7 மணி வரை மற்றும் 8 முதல், 9 வரை, தலா 1 மணி நேரம் என, மொத்தம், 8 மணி நேரம் மின்வெட்டு வருகிறது.
இன்னொரு முறைப்படி, காலை, 9 மணி முதல், 12; மாலை, 3 முதல் 6; இரவு, 7 முதல், 8 மற்றும் 9
முதல், 10 என, 8 மணி நேரம் இருட்டில் மூழ்கப் போகிறது.மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டு விட்டாலும், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால், இது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. குளிர்காலம் முடிந்து, கோடைக்காலம் துவங்கும் நேரம் இது; சும்மாவே, புழுக்கத்துக்கு பஞ்சமிருக்காது. மாணவர்களுக்கான தேர்வுக் காலமும் நெருங்கிவிட்டது; பரீட்சை பதட்டத்தில் இருக்கும் அவர்களுக்கும், இந்த மின்வெட்டு ஓர் இடியாகவே இறங்கும். பற்றாக்குறையும், பயன்பாடும் அதிகரித்து வருவதால், தமிழக அரசுக்கும் வேறு
வழியில்லாதது போல் தான் தெரிகிறது.மாலை, 6 மணிக்கு மேல், வர்த்தக நிறுவனங்கள், ஜெனரேட்டரைத் தான் பயன்படுத்த வேண்டும்; அரசின் மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. மின் உற்பத்தி சீராகும் வரை, புதிய இணைப்புகள் வழங்கப்படாது என்பன போன்ற முடிவுகளை மின்வாரியம் எடுத்தால், பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும். அப்பாவி பொதுமக்களும், தொழில் துறையும் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும்.முதல்வரின் மவுனம் கலையுமா? தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்குமா?மின் தட்டுப்பாட்டால் திணறும் ஒரு மாநிலத்தில், புதிய மின் உற்பத்தித் திட்டம் துவக்கப்படாமல் தடுக்கப்படுவது, ஒரு வினோதம் தான். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவக்கப்பட்டால், அதில், தமிழகத்தின் பங்காகமட்டும், 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.இன்றைய பற்றாக்குறை நிலையில், இது மிகப்பெரிய அளவு. ஆனால், அந்த நிலையத்தைத் துவக்கவிடாமல், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். மத்திய அரசு எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும், பேச்சு நடத்தியும், விளக்கங்கள் பல அளித்தும், இவர்கள், தங்கள் பிடிவாதத்தை மட்டும் தளர்த்துவதாக தெரியவில்லை. எல்லா பிரச்னைகளிலும் மன உறுதியோடு நடவடிக்கை எடுக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், இந்த விஷயத்தில் மட்டும் ஏன் மவுனம் காக்கிறார் என்பது, புரியாத புதிராக இருக்கிறது. ஒரு படி மேலே போய், "முதல்வரின் மவுனத்தில் உள்நோக்கம் இருக்கிறது' என்றே, தி.மு.க., குற்றம் சாட்டிவிட்டது. அப்படியும், அவரது மவுனம் கலையவில்லை.முதல்வரின் மவுனம் கலையுமா? தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்குமா?

Tuesday, February 7, 2012

It’s first time for Perarasu

VJ Jagannathan, who had apprenticed under directors Rama Narayanan and Perarasu is to direct a film titled Ivanum Panakkaaran. Interestingly, Perarasu is penning the dialogues and lyrics for this film. The director is known for taking care of the story, screenplay, dialogues, lyrics etc for his films but this is the first time he is taking charge of the dialogues and lyrics for someone else’s film.

Siddesh and Kaniya play the lead pair in this film which also has Bhagyaraj in an important role. Ivanum Panakkaran is a film that is filled with suspense, we are told.

Monday, February 6, 2012

KADAL FIRST LOOK

ராமநாதபுரத்தில் மன்னர் பாஸ்கர சேதுபதி சிலை

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்ல நிதியுதவி செய்த மாமன்னர் பாஸ்கர சேதுபதியின் சிலையை ராமநாதபுரம் நகரில் நிறுவ வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தும் தீர்மானம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கூட்டம், ராமநாதபுரம் பாரதி நகர் கலைவாணி மெட்ரிக்குலேசன் பள்ளியில், அமைப்பின் மாவட்ட செயலாளர் ந.சேகரன் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மை.அப்துல் சலாம், மூத்த வழக்குரைஞர் எம்.ராமசாமி, அமைப்பின் மானாமதுரை கிளை செயலாளர் பெ.ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை இலக்கியப் பெருமன்ற முன்னாள் தலைவர் ஐ.கதிரேசன் வரவேற்றார்.

அமைப்பின் மாநிலக் குழு உறுப்பினரும், எழுத்தாளருமான சந்திரகாந்தன் பாரதி, ஜீவா பார்வையில் சுவாமி விவேகானந்தர் என்ற தலைப்பில் பேசினார்.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று உலக சமய மாநாட்டில் பங்கேற்க நிதியுதவி செய்த மாமன்னர் பாஸ்கர சேதுபதிக்கு ராமநாதபுரம் நகரின் மையப் பகுதியில் சிலை அமைக்க தமிழக அரசை வலியுறுத்துதல், மாவட்டத்தில் காலியாக உள்ள நூலகர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோருதல், பள்ளி,கல்லூரிகளில் நூலகங்கள் சிறப்பாக செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்ளுதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்ப்டடன.

கூட்டத்தில் கலைவாணி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஜெகதீசன், அமைப்பின் எமனேசுவரம் கிளை செயலாளர் எல்.எஸ்.ரெங்காச்சாரி, ஆசிரியர் சௌந்தரபாண்டியன், தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் குழ.விவேகானந்தன், பொருளாளர் எம்.சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் பொருளாளர் ஆர்.டி.ரகுநாதன், கலை இலக்கிய பெருமன்ற மாவட்டத் துணைத் தலைவர் ஜோசப், ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட கன்வீனர் ராக்லாண்ட் மதுரம், என்.ஏ.காதர், கார்த்திக்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். கவிஞர் முகவை சந்துரு நன்றி கூறினார்.

உசிலம்பட்டி கல்லூரியில் கருத்தரங்கம்

உசிலம்பட்டி, பிப். 3: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூயில் ஆன்மிகமும், இலக்கியமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஆங்கிலத் துறை சார்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு கல்லூரிச் செயலர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். முதல்வர் என்.பாலுச்சாமி, ஆங்கிலத் துறைத் தலைவர் தமிழ்செல்வி, பேராசிரியர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விசுவஹிந்து பரிஷத் மாநில இணை அமைப்பாளர் சின்மயா சோமசுந்தரம், எஜுகேட்டர் தொண்டு நிறுவனத் தலைவர் ஆர்.வேல்முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேராசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

ஏழை மாணவர்களின் கல்விப் படிப்புக்கு உதவித் தொகை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மன்னர் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கை, பிப். 1: சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியின் 156-ம் ஆண்டு விழா, விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மன்னர் கல்வி நிறுவனங்களின் முகவாண்மைக் குழுத் தலைவர் டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார் தலைமை தாங்கினார். செயலர் வி.எஸ்.குமரகுரு வரவேற்றார். எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி சிவகங்கை கிளையின் முதன்மை மேலாளர் பி.இரவிராம் பரிசுகளை வழங்கினார். மேல்நிலைத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு இந்தியன் வங்கி சிவகங்கை கிளையின் முதன்மை மேலாளர் டி.சுப்பையா பரிசுகளை வழங்கினார்.

பள்ளியின் முன்னாள் மாணவரும் திரை இசைக் கவிஞருமான பூவை செங்குட்டுவன், முன்னாள் சட்ட மேலவை உறுப்பினரும், திரை இசை மற்றும் அரசவைக் கவிஞருமான முத்துலிங்கம் ஆகியோருக்கு பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளிக் குழு உறுப்பினர் எஸ்.காளீஸ்வரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.எம்.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.அழகுமலை தொடங்கி வைத்தார். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு மன்னர் கல்வி நிறுவனங்களின் பள்ளிக்குழு தலைவர் ஆர்.இராஜ்யலெட்சுமி நாச்சியார் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் எம்.இராமகிருஷ்ணன் வரவேற்றார். சிவகங்கை இளைய மன்னர் மகேஷ்துரை, நகர்மன்றத் தலைவர் எம்.அர்ச்சுணன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.கண்ணன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். உடற்கல்வி இயக்குநர் சி.முருகேசன் நன்றி கூறினார்.

BHEL-ல் நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெயினி பணி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BHEL-ல் நிறுவனத்தில் காலியாகவுள்ள இன்ஜினியர் டிரெயினி பணிக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணியின் பெயர்: Engineers Trainee

துறை வாரியான காலியிடங்கள் விவரம்:

1.மெக்கானிக்கல் -550

2. எலக்ட்ரிக்கல் -175

3.எலக்ட்ரானிக்ஸ் -75

கல்வித்தகுதி: AICTE அங்கீராம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல, எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் பி.இ, பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: பி.இ, பி.டெக் பட்டதாரிகள் 27 வயததிற்குள் இருக்க வேண்டும். எம்.இ, எம்.டெக், எம்பிஏ பட்டம் பெற்றவர்கள் 29 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயதுவரம்பானது 01.08.2012 அன்று உள்ளபடி கணக்கிடப்படும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 3 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுதிறனாளிகளுக்கு 10 வருடங்களும் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் GATE-12 நுழைத்தேர்வில்பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

GATE-12 தேர்வு நடைபெறும் நாள்: 12.02.2012.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ''Power Jyoti A/C.:30989466064 '' என்ற முகவரிக்கு ஏதாவது ஒரு SBI வங்கி கிளையில் பணமாக செலுத்தவும். SC/ST/PH பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் GATE-12 நுழைவு தேர்விற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். GATE நுழைவு தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் www.careers.bhel.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்ப பதிவு எண்ணுடன் கூடிய விண்ணப்பித்த விவரங்கள் அடங்கிய பதிவிறக்க நகல் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை தபாலில் அனுப்ப கடைசி நாள்: 22.02.2012.

மேலும் விவரங்களுக்கு www.careers.bhel.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, February 4, 2012

தமிழக அரசின் புதிய திட்டங்கள்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது கடந்த ஜனவரி 31 ஆம் தேதி சட்டமன்ற உரையில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்குப் பிப்ரவரி 4 ஆம் தேதி புயல் தாக்கிய மாவட்ட மக்களுக்கான உதவிகளை அறிவிக்க இருப்பதாக கூறியிருந்தார் .அதன்படி இன்று அவர் அந்த உதவிகளை அறிவித்தார். மற்றும் மேலும் பல திட்டங்களையும் இன்று அவர் தன் உரையில் அறிவித்தார்.

அதன்படி, புயல் தாக்கிய மாவட்டங்களில் முந்திரி, பலா பயிர்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பராமரிப்புச் செலவை அரசே ஏற்கும் என்றும், அப்பகுதி 1 இலட்சத்து 10,000 உழவர்களுக்கு 790 கோடி உதவித் தொகுப்பு அளிக்கப்படும் என்றும் கூறிய அவர், அப்பகுதியில் உள்ள அனைத்து உழவர்களுக்கும் நில வரி நீக்கப்படும் என்றும் கூறினார்.

மற்ற திட்டங்களாக, 2013 ஆம் ஆண்டு நடுவில் தமிழ்நாட்டில் மின்வெட்டு முழுமையாக நீங்கும் எனவும் வரும் ஜூன் மாதத்திற்குள் 1950 மெகாவாட் மின் உருவாக்கம் கூடுதலாகக் கிடைக்கும் என்றும் வரும் அக்டோபர் மாதத்திற்குள் 600 மெகாவாட் மின் உருவாக்கம் கிடைக்கும் என்றும் கூறினார்.

மேலும் கூடங்குள மக்களின் அச்சம் பற்றி அறிய மாநில அரசின் வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.

Mani Rathnam’s Kadal – Official Announcement

The official confirmation is finally here; Mani Rathnam has got everything ready and decided for his next project, a romantic bilingual in Tamil and Telugu. We have been hearing all kinds of reports about this for a few months now. While most of them were true, the title of the film was just decided. It is not Pookadai, as was widely speculated, Mani Rathnam has christened his 23rd film Kadal.

As reported throughout media circles for quite a while now, Karthik’s son Gautham will make his debut through this film. It will be a unique generation shift, with Mani Rathnam having delivered the evergreen Mounaragam with Karthik himself. Playing Gautham’s pair in the movie will be the rising heroine of the Soouth, Samantha. She is having quite a time both in Telugu and Tamil. Her film with Mahesh Babu, Dookudu, broke quite a few records while she has Neethane En Ponvasantham under Gautham Menon coming up for release.

However, the big casting news is the presence of Arjun. It will be interesting to see what plans Mani Rathnam has for this senior star in a romantic movie. And, the biggest surprise of all was the return of Aravind Swamy to the silver screen after quite a while. Quite rightly, it is under his mentor and we are sure that Mani Rathnam would not have called upon him without a good enough reason. Thambi Ramaiah too is being considered for an important role, it is reported.

Finally, there are the constants without which a Mani Rathnam film is never complete. Yes, A.R.Rahman will be scoring the music for Kadal and this will be the first occasion since Alai Paayudhe when Rahman and Rathnam are combining for a full fledged romantic flick; expect some magic. Rajeev Menon will handle the camera. The film will be produced by Mani Rathnam’s banner Madras Talkies.

Thursday, February 2, 2012

Bharathiraja hits out at FEFSI

Veteran director Bharathiraja, one of the respected personalities of Tamil cinema, has come down heavily on the Film Employees Federation of South India (FEFSI), for posing a hurdle to movie shootings, in the name of demanding wage rise.

"There is no head for FEFSI. So some persons who aspire to capture the president post are blowing the issue into a big problem. They are the reason behind all troubles and not the workers," the filmmaker said in his interview to a Tamil weekly.

He added: "They are demanding same wages for films produced on a huge budget and movies made on minimum budget. Small producers will be affected a lot if their demand is accepted. So movies should be classified into three categories- A, B and C."

On his colleague Ameer's support to FEFSI in this issue, Bharathiraja said, "Without holding talks with the Producers Council, FEFSI is acting in a unilateral manner. Without understanding this, Ameer is offering his support. He should think again."

Wednesday, February 1, 2012

Mani Ratnam ropes in Aravind Swamy

Aravind Swamy, who ruled the hearts of young girls during the early 1990s, is back in the limelight. And the credits go to Mani Ratnam, who launched his acting career with 'Thalapathi' and utilized his talent in 'Roja', 'Bombay' and 'Alaipayuthey'.

"Aravind Swamy will be seen playing a very crucial role in Mani's next film, which is set in the backdrop of the lives of fishermen in Rameswaram. Both are happy about working together after a long time," say sources.

The actor who is fully concentrating on his business for the past one decade and more, has been refusing offers from Kollywood, including Vishal starrer 'Samaran'. But he could not say no when Mani Ratnam approached him, add sources.

The yet-to-be-titled movie already has many popular actors in its cast and the list includes Arjun, Pasupathy et al. Karthik's son Gautham is expected to play the lead role. Music is by AR Rahman and lyrics by Vairamuthu.

செல்போன் கட்டணம் 30 சதவீதம் உயரும்: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு

இந்தியாவில் தற்போது 40 கோடி பேர் செல்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் கடந்த 2007-ம் ஆண்டு தினமும் சராசரியாக 465 நிமிடங்கள் வரை செல்போன்களில் பேசி வந்தனர். தற்போது தினமும் சராசரியாக 350 நிமிடங்கள் பேசுகிறார்கள்.

செல்போன் நிறுவனங்களிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக கட்டணம் வெகுவாக குறைந்தது. கடந்த சில மாதங்களாக செல்போன் நிறுவனங்களுக்கு போதுமான அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை. அதில் சில நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதை சரிக்கட்ட இந்த ஆண்டு செல்போன் நிறுவனங்கள் 30 சதவீதம் அளவுக்கு கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன. வோடோபோன் நிறுவனம் சமீபத்தில் டெல்லியில் உள்ள “போஸ்ட்-பெய்டு” வாடிக்கையாளர்களிடம் 20 சதவீதம் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியது. விரைவில் இந்த கட்டண உயர்வை மற்ற பகுதிகளிலும் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

இதே போல் ஏர்டெல், யூனினார், ஏர்செல், ரிலையன்ஸ், டொகோமோ போன்ற செல்போன்நிறுவனங்கள் பிரீபெய்டு வாடிக்கையாளர்களிடம் கட்டண மாக நிமிடத்திற்கு 72 பைசா வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. தற்போது 60 பைசாவாக உள்ளது. எஸ்.டி.டி. கட்டணம் தற்போது நிமிடத்திற்கு 60 பைசாவாக உள்ளது. அதை 90 பைசாவாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. சில நிறுவனங்கள் நொடிக்கு ஒரு பைசா வீதம் வசூலிக்கின்றன. அவை இனி நொடிக்கு 1.5 பைசாவாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.