Tuesday, October 30, 2012

THEVAR JEYANTHI NEWS

105-வது பிறந்தநாள்: சென்னையில் தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை


105-வது பிறந்தநாள்: சென்னையில் தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை


பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 105-வது பிறந்த நாளையொட்டி நந்தனத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தென் சென்னை மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவர் கோதண்டராமர், தொழிற்சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜூனன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் மகிழன்பன் லட்சுமி நாராயணன், டைரக்டர் நாஞ்சில், பி.சி.அன்பழகன், பகுதி செயலாளர் ஏ.என்.வெங்கடேசன், கவுன்சிலர்கள் எஸ்.அமீர்பாஷா, டி.சிவராஜ், புஷ்பா நகர் ஆறுமுகம், அலிகான்பஷீர், கற்பகம், நுங்கைமாறன், எம்.என்.பாஸ்கரன், ராஜஸ்ரீ வெற்றிவேந்தன், மற்றும் ஆர்.டி.சாம்சன், முன்னாள் மாவட்ட செயலாளர் புரசை கிருஷ்ணன், கவிஞர் வீரைகரீம், டி.ஈஸ்வரன், ஏ.என்.சுப்பிரமணி, வெற்றிவேந்தன், மூலக்கடை சக்தி, பாஸ்கர், ஷீலா பாஸ்கர், அண்ணா நகர் பாண்டுரங்கன். முகப்பேர் இளஞ்செழியன்.

தி.மு.க. சார்பில் தேவர் சிலைக்கு எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.எல்.ஏக்கள் ஜெ.அன்பழகன், டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. உசேன், கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், ஆருண் எம்.பி., முன்னாள் எம்.பி.திருநாவுக்கரசர், எம்.எல்.ஏக்கள் ரங்கராஜன், விஜயதாரணி, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், முன்னாள் மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சைதைரவி, ராயபுரம் மனோ, மாநில செயலாளர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், கவுன்சிலர் பி.வி.தமிழ்செல்வன், ஜி.ஆர்.வெங்கடேஷ், வில்லிவாக்கம் சுரேஷ், திலிப்குமார், தனசேகர், எல்.கே.வெங்கட், நாச்சிகுளம் சரவணன், அரிகிருஷ்ணரெட்டி, கமல்குமார் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பா.ம.க சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன் உள்பட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக பொதுச் செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் தேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் நிர்வாகிகள் சைதை கணேசன், கே.எஸ்.இளங்கோவன், பிரபு, திருநாவுக்கரசு, சங்கரபாண்டியன், பி.ஆர்.பி.பாண்டியன், சண்முகவேல் பாண்டியன், பெரியதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.

வடசென்னை வியாசர்பாடி பி.வி.காலனியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு பெண்கள் பால்குடம் எடுத்து வந்து பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தேவர் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எம்.கே.பி.நகர் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் முதல்வன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பாரதீய ஜனதா சார்பில் இல.கணேசன் தலைமையில் மாலை அணிவித்தனர். இதில் மாநில துணைத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன், செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், டால்பின் ஸ்ரீதர், மாவட்ட தலைவர்கள் பிரகாஷ், ரவிச்சந்திரன் மற்றும் விவேகாகனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். அவருடன் லட்சிய தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை, முரளி, மாவட்ட செயலாளர் எம்.எம்.ஆர்.மதன், கே.ஜி.சுரேஷ், மூசா, சங்கர், கஜேந்திரன், அனுஷ்ராஜு, செல்வம், முத்து ஆகியோரும் மாலை அணிவித்தனர்.

அம்பேத்கர் முன்னணி கழகம் சார்பில் பொது செயலாளர் திண்டிவனம் ஸ்ரீராமலு மாலை அணிவித்தார்.

கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அன்பழகன்-வைகோ மாலை

கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அன்பழகன்-வைகோ மாலை











தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அன்பழகன் மற்றும் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 105-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதுரை நகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மேயர் ராஜன்செல்லப்பா, அவைத்தலைவர் துரைப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. துணைமேயர் கோபால கிருஷ்ணன், பொருளாளர் ராஜா, மண்டலத்தலைவர்கள் சாலைமுத்து, ராஜபாண்டியன், இளைஞர் அணி நிர்வாகிகள் முத்து முருகன், ஆட்டோ விஜயன், பேரவை நிர்வாகிகள் வெற்றி வேல், பாரதிமுருகன், தொழிற்சங்க நிர்வாகிகள் வக்கீல் பாலசுப்பிரமணி, ரவிச்சந்திரன், அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் பசும்பொன் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், சொக்கர், நல்லுச்சாமி உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, முன்னாள் அமைச்சர் பொன்முத்து ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கவுஸ் பாட்சா, வேலுச்சாமி, முன்னாள் துணை மேயர் மன்னன், நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், செல்லூர் குரும்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் தெய்வ நாயகம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே.ராஜேந்திரன், நிர்வாகிகள் ராம்பாபு, காந்தி, சிலுவை, அன்னபூர்ணா தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.ஆர்.தங்கராமன் தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது.

இதில் நிர்வாகிகள் கோகுல கிருஷ்ணன், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாரதீய ஜனதா கட்சி யினர் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்ட தலைவர் ராஜரத்தினம், நிர்வாகிகள் சுரேந்திரன், சசிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன், நிர்வாகிகள் சின்னசெல்லம், ஆசைத்தம்பி, மனோகரன், பாஸ்கரசேதுபதி, மகபூப் ஜான் மற்றும் பலர் இதில் பங்கேற்றனர்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநில குழு சார்பில் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சந்தானம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாநில பொருளாளர் மகேஸ்வரன், தலைவர் நவமணி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். வல்லரசு பார்வர்டு பிளாக் சார்பில் அதன் தலைவர் அமாவாசை தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளை சேர்ந்தவர்களும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி: பால் குடம், முளைப் பாரிகளுடன் ஊர்வலம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க  தேவரின் நினைவாலயம் உள்ளது. இங்கு அவரின் குருபூஜை விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் ஆன்மீக விழாவாகவும், 2-ம் நாள் அரசியல் விழாவாகவும் கொண்டாடப்பட்டது. 3-ம் நாள் குருபூஜை விழா இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் அதிகாலை 4 மணிக்கு விசேஷ யாகசாலை பூஜைகள் மற்றும் வேள்வி வழிபாடுகள் நடத்தப்பட்டன.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையிலான குழுவினர் வேள்வி பூஜையை நடத்தினர். தொடர்ந்து தேவர் நினைவாலயத்திற்கு பலரும் வந்து மலர் அஞ்சலி வைத்து மரியாதை செலுத்தினர். அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான சந்தானம் தலைமையில் தேவர் நினைவிடத்தில் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
தேவர் குல கூட்டமைப்பு தலைவர் சண்முகையா பாண்டியன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். கடையனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கருணாகரன், பழுவூர் கோபால், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஏராளமான இளைஞர்கள் ஜோதி ஏந்தி வந்து, தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து வந்து அஞ்சலி செலுத்தினர். மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வாகனங்களில் அணி வகுத்து ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
இளைஞர் அணி தலைவர் ரவிச்சந்திர வாண்டையார், பொதுச்செயலாளர் செல்வ ராஜ், பொருளாளர் கோவிந்தசாமி, ஆட்சி மன்ற குழு செயலாளர் ரவீந்திரன், மாநில இணை தலைவர் ஆறுமுக நட்டார், துணைத்தலைவர் வி.கே.ராமசாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் முத்து, சிதம்பரம், மதியழகன், கோவிலாங்குளம் ஜோதி முத்துராமலிங்கம் உள்பட ஏராளமான மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தினர் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
குருபூஜையை முன்னிட்டு மூவேந்தர் முன்னேற்றக்கழகம் சார்பில் நேற்று இரவு முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. அமைப்பின் தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். காலையிலும் அன்னதானம் நீடிக்க, சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காலையிலேயே தேவர் நினைவாலயம் வந்து மலர் அஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன் (ராமநாதபுரம்), சண்முகசுந்தரம் (விருதுநகர்), மாநில நிர்வாகிகள் கராத்தே பழனிச்சாமி, ராமநாதபுரம் சுரேஷ் மற்றும் கட்சியினர் அவருடன் வந்திருந்தனர்.
தொடர்ந்து நிருபர்களுக்கு வைகோ பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
1971-ம் ஆண்டு முதல் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறேன். இடையில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்ததால், அப்போது மட்டும் வர முடியவில்லை. தற்போது 37-வது ஆண்டாக அஞ்சலி செலுத்தி உள்ளேன். அனைத்து சாதி சமயத் தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசின் சார்பில் 10 அமைச்சர்கள், தேவர் நினைவாலயத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், செல்லூர் ராஜூ, காமராஜ், சுந்தர்ராஜன், செந்தூர் பாண்டியன், கோகுல இந்திரா, ராஜேந்திரபாலாஜி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டன. குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

நந்தனத்தில் கொட்டும் மழையில் முத்து ராமலிங்கதேவர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 105-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் நந்தனத்தில் உள்ள தேவர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

சிலைக்கு கீழே தேவரின் முழு உருவப்படம் மலர்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. காலையில் மழை பெய்தாலும் சிலைக்கு மாலை அணிவிக்க ஏராளமானோர் திரண்டு வந்தனர். 

காலை 10.45 மணிக்கு கொட்டும் மழையிலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அங்கு வந்தார். தேவரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு திரண்டு நின்ற கூட்டத்தினரைப் பார்த்து கையசைத்தார். 

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், பழனியப்பன், தங்கமணி, வளர்மதி, கே.டி.பச்சைமால், விஜய், செந்தில் பாலாஜி, ஆனந்தன், மாதவரம் மூர்த்தி, மோகன், எடப்பாடி பழனிச்சாமி, சம்பத், ஜெயபால், பச்சைமால், முக்கூர் சுப்பிரமணியன், துணை சபாநாகயர் பொள்ளாச்சி ஜெயராமன், அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின், எம்.பி.க்கள் தம்பித்துரை, இளவரசன், பாலகங்கா, எம்.எல்.ஏக்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், கலைராஜன், செந்தமிழன், கே.பி.கந்தன் ராஜலட்சுமி, வேலுமணி, வாலாஜாபாத் கணேசன், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், நடிகர் ராமராஜன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தியை முன்னிட்டு, மதுரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஏந்தி வந்து அவரது சிலைக்கு திங்கள்கிழமை வழிபாடு நடத்தினர்.
 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திலுள்ள அவரது நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
 இதையடுத்து, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தோர் மாலை அணிவிக்கின்றனர். அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் சார்பில், மதுரையில் ஆயிரக்கணக்கானோர் தேவர் சிலைக்கு திங்கள்கிழமை ஊர்வலமாக வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
 சோலையழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம், காமராஜர்புரம், கீரைத்துறை, வில்லாபுரம், பொன்னகரம், எஸ்.எஸ்.காலனி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் முளைப்பாரி ஏந்தி வந்து தேவர் சிலை முன்பு வைத்து வழிபாடு செய்தனர்.
 மேலும், ஏராளமானோர் பால்குடம் சுமந்து வந்து தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர். உசிலம்பட்டி முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மாணவர்கள் தொடர் ஜோதியை நடைபயணமாகக் கொண்டு வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
 தேவர் சிலை முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. இதனால் கோரிப்பாளையம் பகுதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தது. ஜயந்தியை முன்னிட்டு, தேவர் சிலை பகுதியில் ஏராளமான போலீஸôர் குவிக்கப்பட்டிருந்தனர்.
 சிலைகளுக்குப் பாதுகாப்பு: மதுரை நகரில் தலைவர்கள் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், அழகர்கோவில் சாலை, தெப்பக்குளம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சிலைகளைச் சுற்றிலும் போலீஸôரின் ரோந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

மருதுபாண்டியர் நினைவு  மாட்டு வண்டிப்பந்தயம்


திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டும், தேவர் ஜயந்தியையொட்டியும் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.
 திருப்பத்தூர்-சிங்கம்புணரி சாலையில் நடைபெற்ற இந்த மாட்டுவண்டிப் பந்தயத்திற்கு அகமுடையார் சங்கத் துணைத் தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். போட்டியை திரைப்படத் தயாரிப்பாளர் சந்திரசேகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 
 இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் பெரியமாடு பிரிவில் 15 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் மதுரை அவனியாபுரம் பசும்பொன் முதலிடத்தையும், மேலமடை சீமான்ராஜா 2-ம் இடத்தையும், மாம்பட்டி ஆர்.வி.கே. 3-ம் இடத்தையும் பிடித்தன. 
 சின்ன மாடு பிரிவில் 22 ஜோடிகள் கலந்து கொண்டன. அதில் மாவூர் கோபிகிருஷ்ணன் முதல் பரிசையும், கிலுகிலுப்பைப்பட்டி சோணைமுத்து 2-ம் பரிசையும், புதுவாக்காடு நல்லமுகமது 3-ம் பரிசையும் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

பா.பி. செயற்குழு கூட்டம்


அகில இந்திய பார்வர்டு பிளாக் (தினகரன் பிரிவு) செயற்குழு கூட்டம் மதுரையில் மாநில பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், “திருப்பாச்சேத்தி அருகே நடந்த வன்முறையில் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்ஐ ஆல்வின் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது, அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பது, ம் தேதி (இன்று) தேவர் ஜெயந்தி விழாவை, அமைதியான முறையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லா மல் நடத்த அரசுக்கு ஒத்துழைப்பு தருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


































Thevar Cabs


Thevar Cabs

Upload Photos
+(91)-(422)-3227887
+(91)-(422)-3227887 WIN IPAD2
+(91)-9003438371, 9659432051
No 87, Thamarai Periyanayagam Street, Ramanathapuram, Coimbatore - 641045 | Locate on Map | View Map

Police halt anti-KKNPP protest, 1,800 arrested

Members of different political parties being arrest after participating in a protest against Kudankulam Nuclear Power Plant in Chennai on Monday. Photo: K. Pichumani


Hundreds of anti-nuclear activists were arrested here on Monday after they attempted to march towards the Secretariat.
The protesters, including many owing allegiance to different political parties, alleged that the Kudankulam Nuclear Power Project (KKNPP) posed a grave threat to the safety of people and demanded its closure.
Addressing a gathering before commencing the march, Marumalarchi Dravida Munnetra Kazhagam general secretary Vaiko said nuclear energy was not a solution to overcome the power crisis in the State. “Even if the entire power generated from the KKNPP is given to Tamil Nadu, we will reject it,” he said.
Mr. Vaiko accused the police of preventing thousands of protesters, including women, from reaching Chennai. “This agitation should not be confined to Idinthakarai. We also demand the closure of the Kalpakkam nuclear plant.”
Contending that he was the first to register a protest against the KKNPP in Parliament, Mr. Vaiko said the anti-nuclear agitation had nothing to do with caste or religion.
Tamizhar Desiya Iyakkam leader P. Nedumaran and Periyar Dravidar Kazhagam president Kolathur Mani were among those who spoke. As the protesters tried to march towards the Secretariat, police intercepted them and took them into custody. The agitation took place near the Rajarathinam Stadium.
Roads leading to Montieth Road and Rukmani Lakshmipathi Road in Egmore were blocked on either side by police. Vehicles which reached these areas before the agitation were stranded for several hours, police sources said, and added that about 1,800 agitators who were arrested were released in the evening.
In a related development, over 300 members of Naam Thamizhar Iyakkam led by actor Seeman staged a protest in Pudupet against the KKNPP.
They were arrested and released later.

THEVAR JAYANTHI IS MUKKULATHOR THIRUNAAL



Thevar Jayanthi is celebrated by Mukkulathor community members on 30 October each year. It is actualy the birthday of the late Muthuramalingam Thevar, the great man who brought the Kallars, Maravars and Agamudayars under one Mukkulathor umbrella.
We should remember the sacrifice of our past leaders like Thevar Ayya on this day. When the British discriminated us as Criminal Tribes and took away our rights, it was people like him who stood up to fight against it.
For me, it is not just Thevar Ayya's birthday, it is a day for the Kallars, Maravars and Agamudayars to remember that they are one. The unity of the three clans as one Mukkulathor community must be preserved.
Therefore, 30 October should also be celebrated as Mukkulathor Thirunaal.

Regards,
SHARMALAN THEVAR
Founder and Administrator of Facebook Malaysian Mukkulathors

Recording on for Paradesi’s last song

GV Prakash and director Bala have teamed up for Paradesi. The collaboration has indeed raised expectations from the young composer. His music has found a special place amongst Kollywood music aficionados and directors, which is keeping him busy for good.

It is known that there is a new trend in Kollywood these days of holding music launches in foreign lands. Of course with veteran directors like Illayaraja choosing to go abroad and record with the best it seems the winds have brought back a lust for something ‘foreign’. Director Bala too hopes to market his movie internationally prior to its release. Though the Paradesi team din’t get their London visas , there are plans to launch the audio in Singapore or Malaysia. Earlier in the day we spoke to GV Prakash and he revealed, “The last song for the album is being recorded.” Moreover GV will announce the track list in five days time. Paradesi is based on real life incidents during pre-Independence era in India and features Adharva, Dhansika and Vedhika in the lead roles.

Thevar Jayanthi celebrated with grandeur, Youth murdered


Tension gripped Paambuvilunthan village near Kamuthi, where a youth Sivakumar (27), hailing from Virudhunagar district was beaten to death by a mob belonging to another community. Sivakumar and a group of people were proceeding to Pasumpon to pay homage, when they were waylaid by the armed mob. Police rushed to the spot and removed the body to the government hospital at Paramakudi.
Police made tight security arrangements in and around the memorial and in all the Southern districts. More than 5000 police personnel, including Armed Police and Swift Action Force were deployed in the caste-sensitive Ramanathapuram district. 

கனடா தமிழர்கள் எதிர்ப்பு எதிரொலி: இளையராஜா இசை நிகழ்ச்சி ரத்து?

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடாவில் அடுத்த மாதம் நடக்க இருந்தது. இதில் நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள், உள்பட தமிழ் திரையுலகை சேர்ந்த 100 பேர் பங்கேற்க தயாராகினர். 

இந்த இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள் சென்னையில் நடந்து வந்தன. இந்த இசை நிகழ்ச்சிக்கு கனடாவில் உள்ள தமிழர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

நவம்பர் மாதத்தை விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமாக ஈழத்தமிழர்கள் கடைபிடிப்பதால் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை புறக்கணிப்போம் என்று அவர்கள் கூறினர். இதையடுத்து இசை நிகழ்ச்சி ரத்தாகும் என தெரிகிறது. 

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழீழ விடுதலை போராட்டத்தில் நவம்பர் மாதம் புனிதமான மாதம். உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் எழுச்சி கொள்ளும் மாதம். நவம்பர் 27 தமிழ் மண்ணின் விடுதலைக்காக களம் ஆடி விழுப்புண்பட்டு வீழ்ந்து நடுகல்லாகிவிட்ட மாவீரர்களின் அளப்பரிய தற்கொடையை நினைவு கூறுமுகமாக கொண்டாடப்படும் எழுச்சி நாள். 

இந்த நாள்களை உள்ளடக்கிய மாதத்தில் கேளிக்கை, கொண்டாட்டம் போன்றவற்றில் திளைத்திருக்க செய்து தமிழ் மக்களை அவர்களது விடுதலை வேட்கையில் இருந்து திசை திருப்பிவிட இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முனைகிறது என்பதால் இந்நிகழ்ச்சிக்கும் நாம் தமிழர் கட்சி தன் எதிர்ப்பை பதிவு செய்தது. 

இந்நிலையில் இன்று சென்னையில் என்னை சந்தித்த இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தாங்கள் அந்த நிகழ்ச்சியை நவம்பர் மாதம் தவிர்த்து வேறொரு நாளுக்கு தள்ளிப் போடுவதாகவும் அதற்குரிய உடன்பாட்டை இளையராஜாவிடம் இருந்து பெறப்போவதாகவும் உறுதி அளித்துள்ளார்கள். 

இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சி புலம் பெயர் மக்களிடத்தில் நடத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை, தமிழீழ விடுதலை போராட்டத்தின் முக்கிய மாதமான நவம்பர் மாதத்தில் நடத்துவதில் தான் முரண்பாடு. எனவே இசை நிகழ்ச்சி வேறு மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டால் மகிழ்ந்து கைகோர்ப்போம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, October 29, 2012

அகமுடையார் சமுதாயத்தினர் திடீர் சாலை மறியல்

ராமநாதபுரத்தில் காவல் துறையைக் கண்டித்து அகமுடையார் சமுதாயத்தினர் சனிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 ராமேசுவரம், வாலாந்தரவை, மண்டபம், ராமநாதபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த அகமுடையார் சங்கத்தினர் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் செல்வதற்காக ராமநாதபுரம் பாரதி நகரில் 8 வேன்கள், 30 கார்களில் தயார் நிலையில் இருந்தனர்.
 அவர்கள் மத்தியில் அகமுடையார் சங்க மாவட்டத் தலைவர் பாம்பன் என்.ராஜாஜி பேசுகையில், தங்களுக்கு டிஜிட்டல் விளம்பரப் பலகை வைக்க காவல் துறையினர் அனுமதி மறுத்து வருவது ஏன்? என்று புரியவில்லை. இதற்காக காவல் துறையைக் கண்டிக்கிறோம் என்று கூறி அவரது தலைமையில் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 அப்போது அச்சமுதாய இளைஞர்கள் பலர் திடீரென பாரதி நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 பின்னர் சங்க நிர்வாகிகள் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அய்யனார், மருதுபாண்டியர் அறக்கட்டளைத் தலைவர் வீராச்சாமி, மாவட்டச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் இளைஞர்களை சமாதானம் செய்து அஞ்சலி செலுத்தச் சென்றனர்.

INA soldier who fought along Subhas Chandra Bose passes away


A soldier of Indian National Army (INA), Patram Singh, 95, who breathed his last on October 26, was cremated with full state honours at village Badhsa in district Jhajjar in the presence of family members, a large number of admirers besides leaders of political parties on Saturday.
The pyre was lit by deceased's son Ramphal Singh. The police fired gunshots into the air as a mark of respect to the departed soldier. MLA Badli, Naresh Sharma, Tehsildar Surender Verma, Sarpanh of viilage Ranvir Singh and representatives of various organizations also paid tribute to the departed soul by laying wreath on his body.
On the call of Netaji Subhash Chander Bose, Patram joined the INA to free motherland from the rule of Britishers. He remained imprisoned in jails of Malaya, Singapur and Rangoon for about four years and freed by British rulers in the year 1947. For his exemplary valor, he was honored by the then Prime Minister Indira Gandhi on the occasion of Independence Day in the year 1972.

THEVAR JEYANTHI - NEWS


Thevar Jayanthi begins at Pasumpon

Thousands of followers of Muthuramalinga Thevar, paid their respects at his memorial in Pasumpon village near Kamuthi on Sunday.
The Thevar Jayanthi vizha, which will be celebrated for three days, began on Sunday in a grand manner at Pasumpon village. Followers of Thevar from different parts of the state, thronged the memorial and paid their homage on the first day itself.
Gandhi Meenal Natarajan, caretaker of the memorial, performed puja at the memorial during the wee hours of Sunday to mark the beginning of the event. The Kovai Kamatchipuri Adheenam performed special poojas at the memorial.
A group of followers, including women, from Kottaimedu took out a ‘Mulaipari’ procession to Pasumpon. A large number of followers from various parts of the district also arrived at the native place of  Thevar.
As part of security arrangements, the government has deputed 12 SPs, 10 additional SPs, 50 DSPs, 150 Inspectors and more than 5000 cops of 28 districts for Thevar Jayanthi.

Pasumpon Muthuramalinga Thevar - Rare Video




ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் தொண்டர்கள் பசும்பொன் பயணம் - ஒரு லட்சம் பேருக்கு நாளை அன்னதானம்
தேவர் ஜெயந்தி விழாவையொட்டி சிவகங்கையில் இருந்து மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், செல்வராஜ், கோவிந்தசாமி, சிதம்பரம், மதியழகன் உள்பட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் 500 வாகனங்களில் பசும்பொன் செல்கிறார்கள். மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் செல்லும் வழியில் ஸ்ரீதர் வாண்டையாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

நாளை (30-ந்தேதி) காலை பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. பின்னர் பசும்பொன்னில் உள்ள பிரேம்குமார் வாண்டையார் நினைவு பந்தலில் ஒரு லட்சம் பேருக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

பரமக்குடியில் பிளக்ஸ்பேனர் சேதம்: பொதுமக்கள் சாலை மறியல் - போலீசார் குவிப்பு
கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நேற்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. குருபூஜை விழாவையொட்டி பரமக்குடி நகர் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பரமக்குடியில் உள்ள மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் பேனரை நேற்று இரவு மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி உள்ளனர். 

இன்று காலை பிளக்ஸ் பேனர் சேதப்படுத்தப்பட்ட செய்தி அந்தப்பகுதியில் காட்டு தீ போல் பரவியது. உடனே அப்பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேனரை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பரமக்குடி டி.எஸ்.பி. கணேசன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

முத்துராமலிங்க தேவரின் 2-ம் நாள் குருபூஜை விழா: ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர்
முத்துராமலிங்கத் தேவரின் 2-ம் நாள் குருபூஜை விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவாலயத்தில் நேற்று குருபூஜை விழா தொடங்கியது. 2-ம் நாள் குருபூஜை விழா இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் தேவரின் அரசியல் வாழ்வு குறித்த கருத்தரங்குகளும் நடைபெற்றது. 2-ம் நாள் குருபூஜை விழாவையொட்டி ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர். லட்சார்ச்சனை பூஜையும் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஜோதி ஏந்தி வந்தனர். முன்னதாக நேற்று இரவு தேரோட்டமும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கீடு

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 105-வது ஜெயந்தி விழா, 50-வது குருபூஜைவிழா நேற்று முதல் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நாளான நாளை (30-ந்தேதி) அனைத்து அரசியல்கட்சி தலைவர், முக்கிய பிரமுகர்கள் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

அஞ்சலி செலுத்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் வருமாறு:-

காலை 4 மணிக்கு தேவர் நினைவிடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 8 மணிக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஸ்ரீதர் வாண்டையார், 8.30 மணிக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் பி.என்.அம்மாவாசை, 8.45 மணிக்கு தேவர் மலர் அறக்கட்டளை பாலமுருகன், 9 மணிக்கு விஜயகுமார் சுவாமிகள் டிரஸ்ட் ராமதாஸ், 9.15 தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவை எஸ்.ஆர்.தேவர், 9.30 மணிக்கு தமிழக அமைச்சர்கள், 10 மணிக்கு அ.தி.மு.க. கட்சியினர்,

புரட்சித்தலைவி பசுமை தமிழகம் சுந்தரராஜன், 10.30 மணிக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கதிரவன் எம்.எல்.ஏ., 10.45 மணிக்கு அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் அரசகுமார், 11.15 மணிக்கு மூவேந்தர் முன்னணி கழகம் டாக்டர் சேதுராமன், 11.30 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியினர், 11.45 தமிழ்நாடு முக்குலத்தோர் தேவர் சமூகம், 12 மணிக்கும் தி.மு.க. கட்சியினர்,

12.30க்கு பார்வர்டு பிளாக் சந்தானம், 12.45 தேவர் இளைஞர் பேரவை, 1 மணிக்கு முக்குலத்தோர் பாசறை, 1.15க்கு தமிழ் மாநில சிவசேனா பார்ட்டி, 1.30 மணிக்கு ம.தி.மு.க. கட்சி தலைவர் வைகோ அஞ்சலி செலுத்துகிறார். 2 மணிக்கு ஸ்ரீமான் தேவர் டிரஸ்ட், 2.10 மணிக்கு மருது பாண்டியர் முன்னேற்ற கழகம், 2.20 மணிக்கு தேவரின கூட்டமைப்பு, 2.30க்கு பசும்பொன் தேசிய கழகம், 2.40க்கு நாம் தமிழர் கட்சி, 2.50 மணிக்கு பார்வர்டு பிளாக் தினகரன்,

3 மணிக்கு மக்கள் கட்சி, 3.15 மணிக்கு பார்வர்டு பிளாக் சுபா சிஸ்ட், தே.மு.தி.க. கட்சியினர் 3.30க்கு, நாடாளும் மக்கள் கட்சி கார்த்திக். 3.45 மணிக்கு தேவரின மறுமலர்ச்சி இயக்கம், 4 மணிக்கு தேவரின பாதுகாப்பு பேரவை, 4.10க்கு ஜனநாயக பார்வர்டு பிளாக், 4.20க்கு முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ், 4.30க்கு மற தமிழர் சேனை, 4.40 மணிக்கு தேவரின முன்னேற்ற பேரவை,

4.50 மணிக்கு அகில இந்திய ஜனதா கட்சி சுப்பிரமணிசாமி, 5 மணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு அரசு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் காலதாமம் இல்லாமல் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேவர் ஜெயந்தி விழா: மதுரையில் நாளை போக்குவரத்து மாற்ற
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் மாலை அணிவிப்பார்கள். இதையொட்டி மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதுதொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாளை (30-ந் தேதி) காலை 4 மணி முதல் ஊர்வலங்கள் முடியும்வரை நகருக்குள் லாரிகள், சரக்கு வாகனங்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது. கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில் தேவர் சிலைக்கு மாலையிட வரும் வாகனங்கள் தவிர மற்றவற்றுக்கு அனுமதி இல்லை. அதேபோல நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு வழியாக வரும் வாகனங்கள் பெரியார் சிலையில் இருந்து மாவட்ட கோர்ட்டு, கே.கே.நகர், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர் மெயின்ரோடு, பி.டி.ஆர். பாலம், காமராஜர் சாலை வழியாக செல்ல வேண்டும்.

மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பு ஆகிய பகுதியில் இருந்து நத்தம் ரோட்டிற்கு வரும் வாகனங்கள் ராஜா முத்தையா மன்றம், இளைஞர் விடுதி, ரேஸ்கோர்ஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். தத்தனேரி பகுதியில் இருந்து கோரிப்பாளையம் வரும் வாகனங்கள் பாலம் ஸ்டேசன் ரோட்டில் இருந்து குலமங்கலம் ரோடு வழியாக செல்லூர் கண்மாய்க்கரை பகுதிக்கு சென்று மாற்றுப் பாதைகளில் செல்ல வேண்டும்.

ஊர்வலம் நடக்கும் சாலைகளான அண்ணா சிலை சந்திப்பு, கீழ மாசிவீதி, விளக்குத்தூண், தெற்கு மாசிவீதி, அழகர்கோவில் மெயின் ரோடு, பாலம் ஸ்டேஷன் ரோடு ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. அந்த சாலைகளில் உள்ள சிறு தெருக்களில் வாகனங்களை நிறுத்தலாம். தேனி மாவட்டம் மற்றும் உசிலம்பட்டி பகுதியில் இருந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பசும்பொன் செல்வதற்கு வரும் வாகனங்கள் தேனி ரோடு வழியாக காளவாசல் வர வேண்டும்.

அதேபோல நெல்லை ரோடு வழியாக வரும் வாகனங்கள் பழங்கா நத்தம், பைபாஸ் ரோடு வழியாக காளவாசல் வர வேண்டும். பின்னர் அங்கிருந்து அரசரடி, புதுஜெயில் ரோடு, மதுரா கோட்ஸ் பாலம், சிம்மக்கல், யானைக்கல், கல்பாலம் வழியாக மேளக்காரத்தெரு சென்று பனகல் ரோட்டில் அந்த வாகனங்களை நிறுத்திவிட்டு தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும்.

திண்டுக்கல் மற்றும் மேற்கு பகுதி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திண்டுக்கல் ரோடு வழியாக பாத்திமா கல்லூரி சந்திப்பு, செல்லூர், கொன்னவாயன் சாலை, பாலம் ஸ்டேஷன் ரோடு வழியாக வந்து பனகல் ரோட்டிற்கு வந்து வாகனங்களை நிறுத்த வேண்டும். வில்லாபுரம் பகுதி வழியாக வரும் வாகனங்கள் தெற்கு வாசல் சந்திப்பு தெற்கு மாரட் வீதி, மகால் ரோடு, கீழ மாரட் வீதி வழியாக யானைக்கல் வந்து கல்பாலம் வழியாக பனகல் ரோடு சேர வேண்டும்.

மாலை அணிவித்த பிறகு அனைத்து வாகனங்களும் பனகல் ரோட்டில்இருந்து ஆவின் சந்திப்பு, குருவிக் காரன் சாலை ரோடு, காமராஜர் சாலை வழியாக விரகனூர் சந்திப்பு சென்று மானாமதுரை, பார்த்திபனூர் வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேவர் ஜெயந்தி விழா: தொண்டர்கள் பசும்பொன் பயணம் - பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. ஏற்பாடு

அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எங்களது அகில இந்திய பார்வர்டு பிளாக் இயக்கத்தின் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 105வது ஜெயந்தி விழா சிறப்பாக 28, 29 மற்றும் 30ம் தேதியில் கொண்டாடப்படுகிறது. பசும்பொன்னில் நேற்று ஆன்மீக விழா தொடங்கியது. விழாவில் கோவை காமாட்சி ஆதீனம் பேராசிரியர் ஏ.கோபால் கலந்து கொண்டு ஆன்மீக விழா நடத்தினர்.

100 வாகனங்கள் இன்று திங்கட்கிழமை எங்களது கட்சியின் சார்பில் தேவரின் 48-வது குருபூஜை விழா பசும்பொன்னில் அகில இந்திய தலைவர் வேலப்பநாயர், மாநில பொதுச்செயலாளர் (நானும்) தமிழ் மாநில பொறுப்பாளர் ப.முத்து மற்றம் மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோர் மாலை 5 மணிக்கு மதுரை ரெயில்வே நிலையத்திலிருந்து 100 வாகனங்களில் புறப்பட்டு பசும்பொன் செல்கிறோம்.

திருப்புவனம் பார்த்திபனூர் மற்றும் அபிராமத்தில் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கமுதி சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பசும்பொன்னில் இரவு 8.30 மணி முதல் 9.00 மணியளவில் தேவர் குருபூஜை சிறப்பாக நடைபெறும். நாளை (30-ந்தேதி) காலை 8.30 மணிக்கு மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு தோழர் வேலப்ப நாயருடன் நானும் மற்றும் நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செய்தும், திருநகர் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தும், ஒத்தக்கடை ராஜகம்பீரத்தில் அமரர் அய்யனன் அம்பலம் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தல், மதுரை மாநகர் நான்கு பிரிவுகளாக பிரிந்து மதுரை மாநகர் முழுவதும் கொடியேற்று விழா, அன்னதானம் விழாக்கள் நடைபெறும்.

மாலை 5 மணிக்கு கோரிப்பாளையம் தேவர் சிலையிலிருந்து என்னுடைய தலைமையில் ஊர்வலம் புறப்பட்டு ஏ.வி.பாலம், கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, கான்சாமேட்டுத் தெரு வழியாக ஜான்சிராணி பூங்காவை அடைகிறது. அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நமது கட்சி சார்பில் நடை பெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம்

கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு இன்று பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்தனர். தேசிய பார்வர்டு பிளாக் தலைவர் பி.டி.அரசக்குமார் தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

பின்னர் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் மாநில அவைத் தலைவர் ராஜபாண்டியன், துணை பொதுச்செயலாளர் நல்லமணி, மாவட்ட நிர்வாகிகள் முத்துராமலிங்கம், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமானோர் தொடர் ஜோதி ஏந்தி வந்தனர். 

இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநிலக்குழு சார்பில் நாளை காலை 9 மணிக்கு மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்தானம் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. பின்னர் 100 வாகனங்களில் பசும்பொன் செல்கின்றனர்.

இதனை தொடர்ந்து அரசரடியில் உள்ள மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் பொதுச் செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் மகேஸ்வரன், உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். மாலை 4 மணிக்கு சந்தானம் தலைமையில் தமுக்கத்திலிருந்து தேவர் ஜெயந்தி ஊர்வலம் நடக்கிறது. பின்னர் ஜான்சி ராணி பூங்காவில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. 

இதனை தொடர்ந்து தெற்குமாசி வீதி-மேல வீதி சந்திப்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

தேவர் குரு பூஜை: அன்னதானம்  வழங்க நிபந்தனைகள்


தேவர் குருபூஜை விழாவின்போது தேவர் நினைவிடத்தில் அன்னதானம் வழங்குவோருக்கு பல்வேறு நிபந்தனைகளை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் அறிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 அன்னதானத்திற்கு அமைக்கப்படும் பந்தல் போன்ற இதர தாற்காலிகக் கட்டுமானங்களின் உறுதித் தன்மை குறித்து பொதுப்பணித் துறை நிர்வாகத்திற்கு கட்டணம் செலுத்தி சான்றிதழ் பெற வேண்டும்.
 அன்னதானம் வழங்கும் நிர்வாகிகள் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரத்தையும், சமையலர்கள், உதவியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் பெயர், முகவரி ஆகிய விவரங்களையும் ராமநாதபுரம் எஸ்.பி.க்கு எழுத்து மூலமாகத் தெரிவிக்க வேண்டும்.
 தயாரிக்கப்பட்ட உணவை கமுதி பேரூராட்சி உணவு ஆய்வாளரின் சோதனைக்குப் பின்பே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். 
 இதை கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.பாதுகாப்பு கருதி அன்னதானம் ஏற்பாடு செய்யும் அமைப்புகள் அன்னதானம் நடைபெறும் இடத்தில் சொந்தப் பொறுப்பில் குறுவட்டத் தொலைக்காட்சிப் பெட்டி அமைத்து நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டும்.
 அன்னதானம் நடைபெறும் இடத்தில் தீ தடுப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை கடைப்பிடிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேவர் ஜயந்தி திருவிளக்குப் பூஜை


கமுதி-கோட்டைமேட்டில் உள்ள தேவர் நினைவு கல்லூரியில் பசும்பொன் தேவர் 150-வது ஜயந்தி மற்றும் 50-வது குருபூஜையை முன்னிட்டு திருவிளக்குப் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு கோவை-காமாட்சிபுரி ஆதீனம், குரு மகா சன்னிதானம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் கே.செல்வராஜ் முன்னிலை வகித்தார். வேதியியல் துறை பேராசிரியர் ஆர்.முத்து ராமலிங்கம் வரவேற்றார்.
 திருவிளக்குப் பூஜையில் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர், பேராசிரியைகள், மாணவ, மாணவிகள் பலரும் நிகழ்ச்சியில கலந்து கொண்டனர்.
 வணிகவியல் துறை பேராசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தேவர் ஆராய்ச்சி மையத்துக்கு அதிக நிதி ஒதுக்கக் கோரிக்கை


பசும்பொன் தேவர் ஆராய்ச்சி மையத்திற்கு தமிழக அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
 பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் சனிக்கிழமை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 சாதி, மத நல்லிணக்கத்துடனும், நாட்டுப்பற்றுடனும், உறுதியான கொள்கைகளுட னும், தியாக மனப்பான்மையுடனும் பசும்பொன் தேவர் வாழ்ந்தார். மதுரை-காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேவர் ஆராய்ச்சி மையத்திற்கு ஆண்டிற்கு ரூ.5 லட்சம்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்தொகை மிகவும் குறைவானது. அதிகமான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
 தேவர், கள்ளர், அகமுடையார் ஆகிய இனங்களை ஒருங்கிணைத்து தேவர் இனம் என்று அறிவிக்கப்படும் என்று 1995-ம் ஆண்டில் அரசு அறிவித்தது. ஆனால் இந்த அறி விப்பு செயல்படுத்தப்படாமல் உள்ளது. 
 கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு இனம் வாரியாக இட ஒதுக்கீடு செய்யப்படுவதுபோல, பதவி உயர்வும் இன வாரியாக வழங்கப்பட வேண்டும் என்றார்.
 ஜி.கே.மணியுடன் மாவட்டச் செயலர்கள் கிட்டு (மதுரை), தங்கராஜ் (ராமநாதபுரம் மேற்கு), சண்முகம் (ராமநாதபுரம் கிழக்கு) உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

தேவர் ஜயந்தி:  10 அமைச்சர்கள் பங்கேற்பு


கமுதி அருகே பசும்பொன்னில் அக்.30-ம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழக அரசு சார்பில் நடைபெறும் தேவர் 105-வது ஜயந்தி விழாவில் அமைச்சர்கள் 10 பேர் பங்கேற்கின்றனர்.
 விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் க.ந்நதகுமார் தலைமை வகிக்கிறார். மாவட்ட வரு வாய் அலுவலர் சோ.விஸ்வநாதன் வரவேற்கிறார். தேவர் உருவப் படத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு திறந்து வைக்கிறார்.
 அமைச்சர்கள் எஸ்.சுந்தரராஜ், எஸ்.கோகுல இந்திரா, கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் நலத் திட்ட உதவிகள் வழங்கிப் பேசுகின்றனர்.
 விழாவில் அமைச்சர்கள் ஓ.பன்னீóர செல்வம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், பி.செந்தூர் பாண்டியன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
 விழாவிற்கு ஜே.கே.ரித்தீஸ் எம்.பி., மு.முருகன் எம்.எல்.ஏ., கமுதி ஊராட்சி ஒன்றியத் தலைவர் த.பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.