Tuesday, March 31, 2020

Sharing is caring - Useful info for job oppurtunities





Thanks - Sharmalan Thevar

Monday, March 30, 2020

கொரோணா நிதி 10 லட்சம் வழங்கினார் கருணாஸ்...




இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சம் வழங்கினார் முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் சேது கருணாஸ்தேவர்...

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி

Image may contain: 1 person

#ரிபெல் #முத்துராமலிங்க #சேதுபதி
# இன்று_மார்ச்_30 #260_வது_பிறந்த_தினம்

வாழ்ந்த காலம் 49 ஆண்டுகள்.

சிறையில் இருந்த காலம் 25 ஆண்டுகள்

ஆட்சி செய்தது 14 ஆண்டு காலம்.

பத்து வயதில் சிறைப்பட்டவர்.

மதுரை பெரியாறு அணையை கட்ட முதலில் திட்டம் வகுத்தவர்.

நாடு முழுதும் ஒரே நில அளவை முறையை முதலில் அமல்படுத்தியவர்.

கல்வியின் தேவை உணர்ந்து பல கல்வி நிலையங்களை குறிப்பாக ஸ்வார்ட்ஸ் என்னும் புகழ்பெற்ற பள்ளிகளை தன் நாட்டிற்குள் அனுமதித்து அதற்கு மாதாமாதம் ஒரு தொகையை ஒதுக்கியவர்.

அன்னிய நாட்டு பணங்களை மாற்றும் வசதியை (Money change & Transfer ) இந்தியாவிலேயே முதலில் ஏற்படுத்தியவர்.

கொல்கத்தா, பாம்பே,திருவாங்கூர், பினாங்கு, டச்சு மற்றும் பல நாடுகளில் தன்னுடைய. பிரதிநிதிகளின் அலுவலகத்தை அமைத்து ஆங்கிலேயர்களே வியக்கும் அளவிற்கு வணிகத்தில் ஈடுபட்டவர்.

வறண்ட பூமிக்கெனவும் விளைச்சல் பூமிக்கெனவும் தனித்தனியாய இரட்டை வரிக்கொள்கையை அமல்படுத்தியவர்.

விளைச்சலை முழுதும் ஒப்படைக்காமல் விளைச்சலில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை மட்டும் வரியை பணமாக வாஙகியவர்.

நாடு முழுவதும் உள்ள ஏரி, குளங்களை,ராம்நாடு பெரிய கண்மாயை சீரமைத்தவர்.

ஆங்கிலேயன் ஆதிக்கம் பெற்ற தன் நாட்டிலேயே ஆங்கிலேயனிடம் சுங்கவரி வசூலித்தவர்.

நவாப்களை நாவடைக்க வைத்தவர்.

சிவகங்கை சீமையை மறுபடியும் சேதுநாட்டுடன் இணைக்க பாடுபட்டவர். தான் ஆட்சி செய்த 14 ஆண்டுகளும் ஒரு காசு அயலாருக்கு வரி கொடுக்காதவர்.

ஆங்கிலேயனின் கப்பலுக்கு சுங்கவரி கேட்டு சிறைபிடித்து வரியை வசூலித்ததின் விளைவு சூழ்ச்சியால் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.

20 வயதில் சிறையிலிருந்து வெளிவந்து 35வது வயதில் மீண்டும் சிறை சென்றான். 49 வயதுவரை சிறையிலேயே இருந்து தன் உயிர்நீத்தார்.

ஆனால் சாகும்வரை ஒரு பைசா வரியாய் எவருக்கும் கொடுக்காதவர். இவருடன் நிறைவுற்றது சேதுநாட்டின் சுதந்திரம்.

அந்த திமிருக்கு சொந்தக்காரர்.... மார்தட்டி சொல்வேன்...எம் முப்பாட்டன்...

#ரிபெல்_முத்துராமலிங்க_சேதுபதி

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படுவது இருவருக்கு மட்டுமே. ஒருவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மற்றொருவர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி 🙏🙏

தேவரின உறவுகள் பயன் பெற

No photo description available.

தூய பிரம்மச்சரிய வாழ்க்கையை கடைபிடித்தவர்கள் நேதாஜியும்,தேவரும் மட்டும் தான்



No photo description available.
திருமணம் ஆகாமல் இருப்பது என்பது வேறு.பிரம்மச்சரிய வாழ்க்கையை கடைபிடிப்பது என்பது வேறு.அனைத்து தகுதிகளும் இருந்து தூய பிரம்மச்சரிய வாழ்க்கையை கடைபிடித்தவர்கள் நேதாஜியும்,தேவரும் மட்டும் தான்.நாடு கடந்து சென்று இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து வீர போர் புரிந்த மாவீரர் நேதாஜியை தீவிரவாதி என்று சிறுமைப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் அவரது பரிசுத்த தூய பிரம்மச்சரிய வாழ்க்கையையும்,அவரது தனி மனித ஒழுக்கத்தையும் சிறுமைப்படுத்துகின்ற வகையிலே அன்றைய காங்கிரஸ் செயல்பட்டது.நேதாஜிக்கு எதிராக செயல்பட்டவர்கள் எல்லாம் கால நீரோட்டத்தில் காணாமல் போய்விட்டார்கள்.நேதாஜி தூய பிரம்மச்சாரி என்பதையும்,அனிதா போஸ் என்ற பிம்பம் நேருவால் உருவாக்கப்பட்ட ஒரு போலி பிம்பம் என்பதையும் தலைவர் தேவர் அவர்கள் தொடர்ந்து கூறி வந்தார்.Marraige is not for me என்று நேதாஜி கூறியுள்ளார்.மேலும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பால சேனா படையை தொடங்கி வைத்து பேசுகின்ற போது,எனக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களையும் இந்த படையில் சேர்த்து விட்டிருப்பேன் என்று நேதாஜி கூறினார்.நேதாஜி எந்த வருடம் வெளிநாடு சென்றார்? அனிதா போஸ் பிறந்த வருடம்? அனிதா போஸின் தற்போதைய வயது? ஆகியவற்றை எல்லாம் ஒப்பீட்டு பார்த்தோம் என்றால் காங்கிரஸின் பித்தலாட்டம் நமக்கு தெரியும்.திருமணம் ஆகி குழந்தை இருந்தது என்றால் ஆமா எனக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது என்று நேதாஜியே கூறி இருப்பாரே? அதை சொல்கின்ற அளவிற்கு கூட தைரியம் இல்லாத கோழை அல்ல நேதாஜி.

V.K. Avinas

சித்த மருத்துவர் திரு.தணிகாசலம்

*தயவு செய்து கவனம் செலுத்தவும்....*
*மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாண்புமிகு அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கனிவான வேண்டுகோள்...*
*கொடூர உயிர்க்கொல்லி வைரஸ் ஆன கொரானாவை தமிழக்த்தை விட்டு ஒழிக்க நீங்கள் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும் பாராட்டி வரவேற்கிறேன்*
*அதே நேரம்...*
*இந்த வைரஸ் தொற்றை குணமாக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என சொல்கிறார்கள்*.
*ஆனால்...*
*சித்த மருத்துவர் திரு.தணிகாசலம் என்பவர் தன்னிடம் கொரானாவை ஒழிக்கும் மருந்து இருப்பதாக பல நாட்களாக கூறி வருகிறார்*.
*இந்த வைரஸ் தோன்றிய சீனாவே இவரின் மருந்து விவரங்களை பெற்று பயன்படுத்தியதாக வீடியோ வெளியிடுகிறார். சீன தூதர் இவரது ஆஸ்பத்திரி சென்று சந்தித்து பேசியதாக சொல்கிறார்*.
*போதா குறைக்கு "வாதசுர குடிநீர்" என ஒரு மருந்தை பயன்படுத்த சொல்கிறார். ஏற்கனவே டெங்கு காய்ச்சல் நேரத்தில் இதே போல "நிலவேம்பு" குடிநீர் சித்தாவில் இருந்து தான் மக்களை காப்பாற்றியது*.
*கொரானா நோயாளிகளை குணப்படுத்தாமல் போனால் தன்னை தூக்கில் போடும்படி அறை கூவல் விடுக்கிறார்*.
*சமூக வலை தளத்தில் அரசையோ, முதல்வரையோ, அமைச்சர்களையோ தவறாக சித்தரித்து பதிவு போட்டால் உடனே நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட நபரை பிடிக்கிறீர்கள்*.
*ஒரு பேராபத்து வந்திருக்கிறது அதில் இருந்து தமிழக மக்களை காக்க நான் ரெடி என சொல்லும் நபரை பிடித்து உண்மையான நிலையை அரசு ஏன் தெளிவு படுத்த கூடாது*.
*ஒருவேளை திருத்தணிகாசலம் வைத்திருக்கும் மருந்து நிஜத்தில் கொரானாவை கொன்றழித்தால் இந்த உலகத்துக்கே புத்துயிர் கொடுத்த அரசாங்கம் என உங்களை உலக மக்கள் ஆராதிக்க மாட்டார்களா*...
*அல்லது*...
*அவர் சொல்வது தவறு என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே*...
*தயவு செய்து முதல்வர் அவர்களும், சுகாதார துறை அமைச்சர் அவர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்*.
*கோடங்கி @ ஆபிரகாம் லிங்கன்
Kodanki.in மூத்த செய்தியாளர்,
News 7 Tamil திரை விமர்சகர்.

Sunday, March 29, 2020

பரவை_முனியம்மா

Image may contain: 2 people, people standing
கிராமிய தெம்மாங்கு பாடகியும், திரைப்பட குணச்சித்திர நடிகையுமான நம்மினத்தை சார்ந்த #பரவை_முனியம்மா அவர்கள் இன்று (29/3/20) இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் பொதுச்செயலாளர் #விஆர்கே_கவிக்குமார், தமிழ் மாநில அகமுடையார் பேரவை தலைவர் பா.மருதுபாண்டியன் சேர்வைநேதாஜி சுபாஷ் சேனை யின் மதுரை மாவட்ட தலைவர் சுமன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தோழர் திவான் தமிழன்

படத்தில் இருப்பவர் ஃபார்வர்டுபிளாக் மாணவர் அணியின்(AISB) மத்தியக்குழு உறுப்பினர் தோழர் திவான் தமிழன் அவர்கள்.தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்.தோழருக்கு 21 வயது தான்.ஆனால் இவருடைய அரசியல் செயல்பாடுகளை பார்த்த யாரும் இவருக்கு 21 வயது என்பதை நம்பமாட்டார்கள்.அந்தளவிற்கு அரசியல் முதிர்ச்சியுடையவர்.எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் இயக்கத்தை முன்னிலைப்படுத்தி செயல்படுபவர்.இவரது சிந்தனை,செயல்பாடு என அனைத்துமே இயக்கத்தை முன்னிலைப்படுத்தி தான் உள்ளது.அதனால் தான் இவரது செயல்பாடுகளை எல்லாம் எனது முகநூல் பக்கத்தில் பதிவுசெய்து வந்தேன்.தோழரை நேரில் சந்திக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை.அந்த வாய்ப்பு ஃபார்வர்டுபிளாக் தேசிய கவுன்சில் கூட்டத்தின்போது கிடைத்தது.அப்போதுதான் தோழரை முதன்முதலில் சந்தித்தேன்.உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை நன்கு தெரிந்துவைத்துள்ளார்.நல்ல சிந்தனையாளராக உள்ளார்.தேனி மாவட்டத்தில் உழைக்கும் மக்களுக்கான குரலாக தோழர் திகழ்கிறார்.எந்த மாநிலமாக இருந்தாலும் சரி இயக்க ரீதியாக செயல்படுகிற ஃபார்வர்டுபிளாக் தோழர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களது செயல்பாடுகளை ஆதரிப்பேன்.தோழர் திவான் தமிழன் அவர்கள் இயக்க ரீதியாக,அரசியல் ரீதியாக வளர்ச்சி அடையவேண்டும்.தேனி மாவட்டத்தில் ஒரு மாபெரும் அரசியல் ஆளுமையாக தோழர் திவான் தமிழன் அவர்கள் உருவெடுக்க எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

Image may contain: 1 person


V.K. Avinas

Saturday, March 28, 2020

அய்யா #A_C_சீனிச்சாமித்தேவர்_மறைந்தார்

Image may contain: 1 person, text
உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த தேவரினத்தின் உயிர் மூச்சாக 1997.வரையிலும் வாழ்ந்தவர் #தமிழ்நாடு_தேவர்_பேரவைக்கு தலைவராக திகழ்ந்தவர் தமிழகம் முழுவதும் பசும்பொன் தேவர் அய்யா சிலைகள் அமைந்துள்ளது என்றால் அதில் இவருடைய பங்களிப்பு இல்லாமல் இருக்காது #அள்ளிக்_கொடுத்த_வள்ளல் இவர் சமூகத்திற்கு தலைவராக இருந்த வரையில் ஒட்டுமொத்த திராவிட கட்சிகளின் தலைவர்களும் இவரின் காலடியில் கிடந்தார்கள் தேவர் சமூகத்தின் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் இப்படியெல்லாம் இந்த சமூகத்திற்காக அயராது பாடுபட்ட இவர் பிற்காலத்தில் #பொருளாதாரத்தில்_பின்தங்கிய_நிலை_வந்தவுடன் இந்த சமூகத்தினரால் கொடைவள்ளல் என்று அழைக்கப்பட்ட இவர் மிகவும் ஏழ்மை நிலைக்கு ஆளானார் எப்படியெல்லாம் வாழ்ந்த மனிதனை கடைசி காலங்களில் கண் கொண்டு பார்க்க முடியவில்லை இடைப்பட்ட காலகட்டத்தில் அவரைச் சந்திக்க நேர்ந்த தருணங்களில் மிகவும் வேதனைப்பட்டு கண்கலங்கி அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறேன் இப்பேற்பட்ட மாமனிதனை இந்த சமூகம் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் காணப்போவதில்லை ஆனால் அவரது இறப்பில் கலந்துகொண்டு அவரது முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்கக்கூட முடியாத சூழ்நிலையில் #கொரோனா_பாதிப்பு_ஊரடங்கு_உத்தரவில்_மாட்டிக்கொண்டது_தான்_மிகப்பெரிய_வேதனை அய்யா தெய்வத்திரு A.C.சீனிச்சாமித்தேவர் அவர்கள் ஆன்மா சாந்தியடைய கண்ணீர்மல்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நல்லடக்கம்
No.2.மூன்றாம் தெரு அரங்கநாதன் நகர் பம்மல்
சென்னை-75.
நடைபெறுகிறது சென்னையில் இருப்பவர்கள் முடிந்தலவு இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளும்படி மிகுந்த மனவேதயுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஃபார்வர்டுபிளாக்

1) ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்தது.
2) நேரு இயக்கத்தை தன்னகப்படுத்திக் கொண்டு அழிக்க முற்பட்டார்.
3) காமராஜர் தேவர் மீது பொய்யான கொலைக்குற்றம் சுமத்தி அவரை சிறையில் அடைத்தார்.
4) பல்லாயிரக்கணக்கான ஃபார்வர்டுபிளாக் தொண்டர்கள் மீது அடக்குமுறைகளை ஏவினார்.
5) ஃபார்வர்டுபிளாக் தொண்டர்கள் 5 பேரை கண்ணை கட்டி,கையை கட்டி சுட்டுக் கொன்றார்.
6) கருணாநிதி அவர்கள் கூட்டணி தர்மத்தையும் மீறி ஃபார்வர்டுபிளாக் இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய துரோகத்தை இழைத்தார்.
7) ஃபார்வர்டுபிளாக் இயக்கத்திற்கு போட்டியாக டம்மி ஃபார்வர்டுபிளாக்குகளை,தேவமார் அமைப்புகளை உருவாக்கினார்.
8) இத்தனை செய்தும் ஃபார்வர்டுபிளாக் இன்றைக்கும் உயிரோட்டமாக உள்ளது என்றால் அதற்கு காரணம் நேதாஜியும்,தேவரும் செய்த புண்ணிய செயல்கள் தான்.
9) தேவர் எப்படி மக்கள் மனதில் என்றைக்கும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரோ அதேபோல ஃபார்வர்டுபிளாக் இயக்கமும் என்றைக்கும் மக்கள் மத்தியில் உயிரோட்டமாக இருக்கும்.
10) ஃபார்வர்டுபிளாக் இயக்கத்திற்கு அழிவு என்பது ஒருபோதும் கிடையாது.
V.K. Avinas

Friday, March 27, 2020

ஏன் இவர் மருந்தை ஒருமுறை சோதித்து பார்த்தால் தான் என்ன?


உண்மை என்றால் மக்கள் பலன் பெறட்டும்
பொய் என்றால் மக்களால் புறக்கணிக்கப்படட்டும்.


1955 - ல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் ஐயா பொதுக்கூட்டத்தில் பேசியது

அக்காலத்தில் இருந்து காலையில் முற்றத்தில் சாணம் தெளிப்பது என்ற பழக்கத்தைக் கையாண்டு வந்திருக்கிறார்கள். இதன் நியாயம் இன்னதெனத் தெரியாத ஆங்கிலேயர்கள் இது அநாவசியமெனக் கருதினார்கள். ஆங்கிலம் படித்த இந்தியர்களும் அதைப்பின் பற்றினார்கள்.
தற்போது விஞ்ஞானம் என்ன சொல்லுகிறது? சூரியன் உதயமானபின் ஏற்படுகிற உஷ்ணத்தால் பூமியிலிருந்து விஷக் கிருமிகள் உற்பத்தியாகி மூன்றடிக்குக் கீழ்ப்பட்ட உயரத்தில் சஞ்சரிக்கிறது. அது வீட்டின் வாயிலில் நுழைந்தால் மக்களின் சுவாசத்தில் புகுந்து நோயை உண்டாக்கும். அதைத் தடுப்பதற்கு பினாயில் தெளித்தால் அவைகள் அத்தனையும் அழிந்து போகும். பினாயிலுக்குள்ள குணம் இந்தியர்கள் கையாண்டு வருகிற சாணத்திற்கும் இருக்கிறது என்று சொல்கிறது.
பினாயில் வாசனை வீசும் காசுக்கு வாங்க வேண்டும். சாணத்திற்கு இது இரண்டும் கிடையாது. சும்மாவும் கிடைக்கும். சுகாதாரமும் கூட இம்மாதிரி நடைப் பழக்கத்திலுள்ள பல சான்றுகள் காணக்கிடக்கின்றன சரித்திரத்தில் பிற்கால நாகரிகத்தில் அத்தனையும் வியாதிகளை விருத்தி செய்யும் என்றார்...
பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர்

Wednesday, March 25, 2020

சீனாவிடம் இருந்து சமீபத்திய மருத்துவ அறிவுரைகள்.....

1) இந்த வைரஸ் சுவாசக் கால்வாயில் தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைக்கிறது.
2) மருந்தின் மூலம் சிகிச்சை செய்வதற்கு அடைப்புகள் நீக்கப்பட்டு, சுவாசப் பாதை திறக்கப்படவேண்டும். இப்படி அடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை திறப்பதற்கு குறிப்பிட்ட நாட்கள் தேவை.
கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கான சீன மருத்துவர்களின் பரிந்துரைகள் பின்வருமாறு:
1) சூடான நீராகாரங்களை அடிக்கடி எடுங்கள் - தேநீர், காபி, சூப், வெந்நீர் போன்றவை. அத்துடன், 20 நிமிடத்திற்கு ஓர் தடவை ஓரு மிடறு வெந்நீரை உள்கொள்வது வாயை ஈரலிப்பாக வைத்திருக்க உதவுவதுடன், வைரஸை (வாய்க்குள் இருந்தால்) உணவுக் கால்வாய் வழியாக கழுவி வயிற்றை அடைந்து சமிபாட்டு தொகுதியினால் நடுநிலையாக்கப்படும்.
2) இயலுமானவரை, ஒவ்வொருநாளும் வெந்நீராலும், உப்பு அல்லது எலுமிச்சம் சாறு அல்லது வினிகர் கொண்டு தொண்டையையும், வாயையும் அலசுங்கள்
3) covid-19 வைரஸ் உடையிலும், மயிரிலும் ஒட்டிக் கொள்ளும் வண்ணம் உள்ளது. எந்த சவர்க்காரமும் அல்லது கழுவுதிரவமும் covid-19 ஐ கொல்லக் கூடியது. எனவே, வெளியில் சென்று வீடு திரும்பியவுடன், நேரடியாக குளியல் செய்யுங்கள் அல்லது உடையை அலசுங்கள்.
4) நாள்தோறும் உடைகளை கழுவி வெய்யிலில் உலர்த்துங்கள்.
5) உலோக மேற்பரப்புகள் மற்றும் தொடு பரப்புகளை (metalic surface) மிகவும் கவனமாக கழுவுங்கள். ஏனெனில், உலோக தொடுப்பரப்புக்களில் 9 நாட்கள் வரைக்கும் இந்த வைரஸ் தாக்கு பிடிக்க கூடியது.
6) கைபிடி சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றில் கவனமெடுத்து, தொடுவதை தவிருங்கள் அல்லது தவிர்ப்பதற்கான முறைகளை (கையுறை) கடைப்பிடியுங்கள். உங்கள் வீடுகளின்கைபிடி சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருங்கள்.
7) புகை பிடிப்பதை தவிருங்கள்.
8) உங்கள் கைகளை 20 நிமிடத்திற்கு ஓர் தடவை நுரைக்கும் சவர்க்கரத்தினால் 20 நொடி கழுவுங்கள்.
9) மரக்கறி மற்றும் பழவகைளை உட்கொள்ளுங்கள். விற்றமின் C மாத்திரமின்றி, உங்கள் நாக தாது (Zinc) ஊட்டச்சத்தை தரக்கூடிய அல்லது கூட்டக்கூடியதாக இருக்கும் வழிமுறைகளை கையாளுங்கள்.
10) மிருகங்கள் covid-19 ஐ மனிதருக்கு கடத்துவதில்லை. மனிதனில் இருந்து மனிதனுக்கே கடத்தப்படுகிறது.
11) இயலுமானவரை தடிமன் காய்ச்சலை தவிர்ப்பதற்கு முயற்சியுங்கள். குளிரான உணவுகளை தவிருங்கள்.
12) எதாவது தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு வருவதற்கன அறிகுறிகளோ அல்லது உணர்வோ தென்பட்டால், மேற்கூறியவற்றின் மூலம் தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
13) covid-19 தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு மூலம் தொற்றி, 3-4 நாட்கள் வரை தொண்டையில் தங்கி இருந்து, சுவாசப் பாதை வழியாக நுரையீரலை சென்றடையும். எனவே தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு மேற்கூறிய படிமுறைகள் மூலம் எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
14) உங்களில் கவனமெடுப்பதுடன், ஏனையோருக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

I_support_CAA - #காவல்துறைவாகன_சோதனையில் #ஜப்பானியா்களிடம்_இந்திய_ஆதாா்காா்டுகள்.

குமிடிப்பூண்டி அடுத்த எளாவூா் ஏழுகிணறு பகுதியில் வருவாய் துறையினா், போலீஸாா் 21.3.20 சனிக்கிழமை நடத்திய வாகன சோதனையில் காரில் வந்த 3 ஜப்பானியா்களிடம் அவா்களது பெயரில் இந்திய ஆதாா்காா்டு வைத்திருப்பதை கண்டு பிடித்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் விலியாகியுள்ளது.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலா் கந்தசாமி தலைமையில் டி.எஸ்.பி ரமேஷ், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் குமாா், வட்டார மருத்துவ அலுவலா், டாக்டா்:கோவிந்தராஜ் இணைந்து #கொரோனாதடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனா்

அப்போது அவ்வழியே வந்த காா் ஒன்றை சோதனை செய்தபோது, காரில் பெண் உள்ளிட்ட 3 ஜப்பானியா்கள் இருந்ததைக் கண்டு போலீஸாா் அவா்களிடம் விசாரித்துள்ளனர்

விசாரணையில் அவா்கள்
ஷின்யா ஹராடா (43),
நசாரு நகஜிமா (57) மற்றும்
நஹுமி யமாஷிடா (40) என்ற பெண் என்பது தெரியவந்தது

அவா்கள் தமிழக எல்லையை ஒட்டிய ஆரம்பாக்கம் அருகே வசித்து வாசிப்பதும்

இவா்கள் புதுவாயல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மகேந்திரா சிட்டியில் பணிபுரிவதாகவும் அறியப்பட்டுள்ளது

மேலும் விசாரணையில் அவா்களிடம் பெங்களுா் மற்றும் ஹரியானா குா்கான் பகுதி முகவரியில் #ஆதாா்அட்டைகள் வைத்திருந்தது தெரியவந்தது!!!

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்

இதனை தொடா்ந்து மூவரையும் கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்து, இதுகுறித்து மேலும் தீவிர விசாரணை நடந்து வருகின்றனர்

பொருளாதார வலிமையான ஜப்பான்காா்களே இந்தியாவில் சட்ட விரோதமாக தங்க நினைக்கிறாா்கள் என்றால், பஞ்ச நாடான பங்களாதேசிக்காரா்களும், ரோகிங்கியாவினரும் ஏன் வரமாட்டாா்கள்???.
சிந்தியுங்கள்!. மக்களே!!!..

Image may contain: 3 people

Tuesday, March 24, 2020

வீ.எஸ்.நவமணி Ayya facebook post


2000 -07- 09 ல் மதுரை கரிமேடு சண்முகம் பிள்ளை காளியம்மாள் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் கூட்டத்தில் பி.என்.வல்லரசு அவர்களுக்கு மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டது. கரிமேடு ஆ.பெ.அரசு. மீனாம்பாள்புரம் ஆர்.ஏ.எம்.மணிகண்டன்‌.எஸ்‌.பி‌மகாராஜன்‌ .வீ.எஸ்.நவமணி. உசிலை வக்கீல் சுகுமாறன்.கீரிபட்டி அன்னக்கொடித்தேவர்.
Vsnavamani Maran

Monday, March 23, 2020

கருணாஸ்தேவர்

சட்டசபையில் தனி ஆளாக கச்ச தீவின் தமிழர் உரிமைக்காக பேசிய கருணாஸ்தேவர் ஒரு பெரிய திராவிட இயக்கத்தை எதிர்த்து பேசி தன்னை தனி ஆளுமையாக நிறுபித்துள்ளார்.
முக்குலத்தோர் உரிமைகளை பொது வெளியில் பேசவவே அச்சபடுகிற சூழ்நிலையே இன்று திராவிட இயக்கங்களும் மீடியாக்களும் உருவாக்கிவருகின்றன. அதற்க்கு மாற்றாக கருணாஸ்தேவர் பொது வெளியில் தன் சமுதாயத்திற்கு அங்கிகாரம் பெற முயற்ச்சிக்கிறார்.
அவர் தனியாளாகாவே திராவிட இயக்கங்களிடம் தன் இருப்பை தன் உழைப்பால் உறுதி செய்துள்ளார்.
முக்குலத்தோர் சமுகம் பெரும்பாண்மையாக சட்டசபைக்குள் செல்லக் கூடிய வாய்ப்பையும் உருவாக்கி விட்டார் என்றே சொல்லலாம். முக்குலத்தோர் சமுதாய இயக்கங்கள் கருணாஸ்தேவர் தலமை ஏற்று ஓரணியில் திரள்வதன் மூலம் தேவர் சமுதாய அரசியல் சக்தி வலிமை பெறும் என்பதில் மாற்று கருத்து இல்லை...!

லஞ்சம் குறைவாக கொடுத்ததால் வந்த விளைவு

Image may contain: car and outdoorImage may contain: outdoor



 K4 அண்ணாநகர் - சென்னை போலிஸ் ஸ்டேஷன் - டிராபிக் எஸ்.ஐ லட்சுமணன் பெருமாள் கூட்டணி‌யின் அட்டூழியம் மக்கள் பார்வைக்கு.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு வெளியிட விரும்பினேன். தொழில் பணிச்சுமை நேரமில்லை. ஊடகங்கள் செய்தி வெளியிட தயாராகிவிட்ட நிலையில் காரின் புகைப்படங்கள் இல்லாமல் தாமதமானது. இன்று டாட்டா நிறுவனத்தாரே புகைப்படங்கள் எடுத்து அனுப்பியதால் ஆதாரப்பூர்வமாக பதிவிட விரும்புகிறேன்.
மிகப்பெரிய திருட்டுத்தனம் அரங்கேறியதை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லும் அளவு என்ற போராட்டம் கொரோனா முன்னிட்டு முகநூலில் தொடங்குகிறது‌
தனியார் மருத்துவர் செய்த தவறுக்கு நியாயம் கேட்கப்போய் அது கிடைக்கவில்லை. அதனால் அங்கிகாரம் இல்லாத மருத்துவமனையை அடித்து உடைத்தேன். ஆனால் அன்றைய மணல் திருடர்கள் கூட்டணி + கலப்பட எண்ணெய் நிறுவன கூலி உதயசூரியன் எனும் டிஎஸ்பி பிசிஆர் வழக்கில் கைதுசெய்து நான் 2 மாதமும் எனது கார் 7 மாதம் சிறைபட்டது.
அதிலிருந்து மீட்டு வந்த மறுநாள் என் நண்பர் பாலமுருகன் சென்னையில் வாகனம் ஓட்டிச்செல்லும்போது ஏற்பட்ட காயமில்லாத, சேதமில்லாத விபத்தை காரணம்காட்டி இப்படி ஒரு அநியாயம் செய்துவிட்டார் எஸ்.ஐ பெருமாள்.
சிக்னலை மீறி பைக்கில் வந்த பையன் மோதி கீழே சாய்ந்தான்‌. அவனே எழுந்து போயிட்டான். இதை ஒரு காரணம் காட்டி 100 க்கு போன் வந்ததாக தியேட்டர் வாசலில் நின்ற காரை தூக்கிட்டு போனிங்க..
விபத்துன்னு வழக்குப் போட உடையாத முகப்பு விளக்கினையும் உடைத்தாச்சு. தூக்கிட்டு வந்த வண்டிக்கு வாடகை என்று என்கிட்டயே 3500 வாங்கியாச்சு.
வாகன ஓட்டுனர் ஆவணங்கள் பார்த்துவிட்டு சட்டத்திலேயே இடமில்லாத ஒரு நடைமுறையை கூறி ஓட்டுனருக்கு ஸ்டேசன் பெயிலுக்கு ரூ.5000 புடுங்கியாச்சு.
அடுத்து பிரேக் டெஸ்ட் எடுக்க பெரம்பூர் போனா அங்கே நம்ம திருநெல்வேலி ஆர்டிஓ. உண்மையை சொன்னோம் எதுவும் எதிர்பார்க்காமல் வேகமாக வாகனத்தை ஓட்டியதுக்கு நீதிமன்றத்தில் அபராதம் கட்டுங்கனு மனுசன் முடித்து அனுப்பிட்டாரு.
அப்பயாவது கட்டவச்சிட்டு விட்டிங்களாடா... படுபாவிகளா... ஆர்டிஓ நேரடியா கேட்கமாட்டாரு ஏட்டயா மூலமாதான் போகும்னு சொல்லி ஸ்டேசன்ல இருக்கும் எல்லாரையும் கவனிக்க சொன்னிங்களே... அப்போதாவது கோர்ட்ல காரை ஒப்படைத்து எவ்வளவு அபராதம் காட்டனுமோ அதை கட்டவைத்து உங்க எச்சை புத்தியை அடுத்ததாக பார்த்திருக்கலாம் அல்லவா?
வாழ்க்கையில் நமக்கான வேலை நிறையா இருக்குனு நான் எடுத்த பொறுமை முடிவு தவறானதோ?
அந்த காரில் எது உறுத்தியது புரியவில்லை. பூலித்தேவர் விழாவிற்கு போய் திரும்பும்போது கட்டியிருந்த தேவர் பேரவை கொடியா? விதைத்துக்கொண்டே இரு என்ற நம்மாழ்வார் வாசகமா? உனக்கு சோறுபோடும் உழவன் வாசகமா? துணிவே துணை வாசகமா?
இல்ல பல லட்சம் மதிப்புள்ள காரில் நல்லா கறவை செய்யலாம் என்ற பிச்சைக்கார புத்தியா?
காரை ஏன் கோர்ட்டில் ஒப்படைக்கவில்லை என்று 5 மாதம் கழித்து கேட்டால் அடிபட்டவனுக்கு டாக்டர் சர்டிபிகேட் இல்லையாம்.கொடுக்க முடியலனு வாட்ஸ்அப்பில் அனுப்பிவிடுகிறார். அடிபட்டாதானே டாக்டர் கொடுப்பார்? உங்க அஞ்சுபத்து கொள்ளைக்கு அவர் எப்படி கூட்டணி வருவார்? 

Sunday, March 22, 2020

உலகின் மிக சிறந்த அமைச்சர் "விஜயபாஸ்கர்"..! கொரோனா பயத்தை விட.. மக்கள் பணி தான் முக்கியம்..!

நம்மை கொரோனா தாக்கி விடுமோ என நாம் அஞ்சும் அதே வேளையில் மக்களுக்காக ஓடோடி உழைத்து வருகிறார் அமைச்சர்.
காலையில் ஒரு இடத்திலும் ... மத்திய வேளையில் வேறு ஒரு இடத்திலும்.. மாலையில் நேரத்தில் அடுத்தடுத்து பல இடங்களுக்கு சென்று சோதனை செய்கிறார்...
மற்ற மாநில ஊடகங்களும் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து பெருந்தன்மையாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு படி மேலே சென்றால் கொரோனா வந்த பிறகு உலக அளவில் இந்த அளவுக்கு மிக சிறப்பாக செயல்பட்ட அமைச்சர் என்றால் அது விஜயபாஸ்கராகத்தான் இருக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் சார்பாக அவருக்கு
நன்றியினை தெரிவிப்போம்

காளப்பன்பட்டி சிங்கத்திற்கு வீரவணக்கம்

Image may contain: 1 person, text

Saturday, March 21, 2020

ஸ்டாக் பழசு... விலையோ புதுசு!’- வணிக நிறுவனத்துக்கு அபராதம் விதித்த நெல்லை நுகர்வோர் நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவு நகல் https://bit.ly/2UurxvE CC/77/2018 Chokendra Pandian Vs The Manager, Saravana Selvarathinam, Dated 2020-02-24
-----------------------------
நெல்லை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவருபவர், சொக்கேந்திர பாண்டியன். அவர், கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி, நெல்லையில் உள்ள தனியார் கடையில் தீபஜோதி லேம்ப் ஆயில் வாங்கியுள்ளார். அதன் விலை 102 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் பேக்கிங் செய்யப்பட்டிருந்ததில், ரூ.95 எனக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், இந்தியாவிற்கு வெளியே விற்பனை செய்யும் விலையாக ரூ.100 என அச்சிடப்பட்டிருந்தது. ஆயில் நிறுவனம் குறிப்பிட்டிருக்கும் விலையைவிடவும் ஏழு ரூபாய் கூடுதலாக கடையில் வசூல்செய்திருப்பது பற்றி அந்தக் கடையின் மேலாளர் மற்றும் உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார்.
ஆனால், வணிக நிறுவனத்தினர் கூடுதலாக வசூலித்த பணத்தைத் திரும்பத் தராததால், நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்குத் தொடர்ந்தார். அதில், ``வழக்கறிஞராகப் பணியாற்றும் நான் சரவணா செல்வரத்தினம் கடையில் ஆயில் வாங்கினேன். அதில் குறிப்பிட்டிருந்த தொகையைவிட ஏழு ரூபாய் கூடுதலாக வணிக நிறுவனத்தின் சார்பில் எடுத்தார்கள்.
கூடுதலாக வசூலித்த ஏழு ரூபாயை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டதற்குத் தர மறுத்த வணிக நிறுவனத்தினர், கடைக்கு வந்திருந்த பொதுமக்கள் முன்னிலையில் என்னை அவதூறாகப் பேசினார்கள். என்னுடைய மரியாதைக்கும் மதிப்புக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதால், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன். என்னால் தொழிலில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது.
அதன் பின்னர், நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் நியமன அலுவலரை நேரில் சந்தித்து, எனக்கு ஏற்பட்ட சேவைக் குறைபாடு பற்றி முறையிட்டேன். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர், தன் கடமையை தட்டிக் கழித்துவிட்டு, `நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்துக்குச் சென்று முறையிடுங்கள்’ எனத் தெரிவித்தார்.
இதுபற்றி ஆயில் நிறுவனத்திடம் முறையிட்டேன். அந்த கம்பெனி சார்பாகப் பேசிய கஸ்டமர் சப்போர்ட் அலுவலர், `நாங்கள் எந்த ஸ்டிக்கரையும் ஒட்டவில்லை. நாங்கள் அச்சிட்டிருப்பதுதான் எங்களுடைய விலை. அதில் கடைக்காரர்கள் முறைகேடு செய்தால் நாங்கள் பொறுப்பல்ல’ என்று தெரிவித்ததுடன், `புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் பாக்கெட்டின் விலைக்கு பழைய ஸ்டாக்கை அந்த நிறுவனம் விற்றிருக்கிறது’ என்று தெரிவித்தார்.
அதனால் பழைய ஸ்டாக்கை புதிய விலைக்கு விற்பனை செய்து, வணிக நிறுவனம் என்னை ஏமாற்றியிருக்கிறது என்பதை அறிந்து, வணிக நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன். அவர்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை. அதனால் நுகர்வோராகிய எனக்கு இந்த நீதிமன்றம் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட நுகர்வோர் மன்றத் தலைவர் தேவதாஸ், உறுப்பினர் முத்துலட்சுமி மற்றும் சிவமூர்த்தி ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதில், ``எதிர்தரப்பினர் செய்தது முறையற்ற வாணிபம். அதனால் வணிக நிறுவனத்தின் மேலாளரும் உரிமையாளரும், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.15,000 மும், வழக்குச் செலவுக்கு ரூ.5000 மும் வழங்க வேண்டும்.
மனுதாரரிடம் எம்ஆர்பி-யை விடவும் கூடுதலாக வசூலித்த ஏழு ரூபாயையும் சேர்த்து, மொத்தம் 20 ,007 ரூபாயை ஒரு மாத காலத்துக்குள் கொடுக்க வேண்டும். தவறினால், 6 சதவிகித வட்டியுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.
Source: vikatan
-------------------
எம்.ஆர்.பி-யைவிட அதிகவிலைக்கு பொருள் விற்பனை! சரவணா செல்வரத்தினம் கடைக்கு அபராதம்:
https://www.facebook.com/trduraikamaraj/posts/1280040118806536
-----------------
ரூ.7 -க்கு 7 ஆயிரம் அபராதம்! கடையை அதிரவைத்த நீதிமன்றம்!
https://www.facebook.com/trduraikamaraj/posts/1581750631968815
-------------
நெல்லை வழக்கறிஞர் அ.பிரம்மா அவர்கள் வெற்றி கண்ட சில நுகர்வோர் குறைதீர் வழக்குகளின் தொகுப்பு:
https://www.facebook.com/trduraikama…/posts/1325266607617220


Bose TV India


https://www.youtube.com/watch?v=SduUQZUzoTA

வணிகம் செய்யும் நாடார்களால " மன்னர் பரம்பரை ? வரலாற்றை திரிந்து பேசும் தமிழக துனை முதல்வர் Ops -சிற்கு எதிர்ப்பு
சொந்த சமுதாய வரலாற்றுகளை ஓட்டிற்க்காக மறைத்துபேசுவது சரியா ?

முருகபாண்டியண்சீர்மரபினர்கூட்டமைப்பு

The Eyes of Darkness

A book named The Eyes of Darkness was published in 1981, in which it is written that the carona virus was made by China in a lab in his city of Wuhan, the most hidden, later China will use it to reduce the population of its poor people. That it is easy to become a super power, and in this book the name of Carona virus is named after Wuhan 400. In this book it has already been told that China will use this virus later as a bio logical weapon.
Author name Dean Koontz
Pages 353 to 356 of the book
Dean Koontz’s book The Eyes Of Darkness is getting a lot of renewed attention now, despite being nearly 40 years old. The book mentions a deadly virus called the “Wuhan 400,” which he described as a “severe pneumonia-like illness” that spreads attacking “the lungs and bronchial tubes” and “resisting all known treatments.”
He’s not the only person who seemed to have predicted the virus — or just had a good imagination to come up something which happened to partially overlap with actual events. So-called “psychic” Sylvia Browne supposedly predicted something like the coronavirus in her End Of Days book that, apparently, some of the Kardashians have read and recently quoted.

Image may contain: one or more people and text

வெள்ளைசாமிதேவர்

ஒரு முறை சென்னை சாலிகிராமத்தில் இயக்குனர் திரு எஸ் கே உதயன் சித்தப்பா கம்பெனியில் நான் வேலை பார்த்த போது பாசமிகு அண்ணண் திரு குணசேகரன் அவர்கள் என்ன அழைத்து தம்பி பாண்டி நாளைக்கு சென்னை நந்தனம் தேவர் சிலை முன்பு ஆர்பாட்டம் தலைவர் வெள்ளைசாமிதேவர் உங்களையும் உங்களை சார்ந்த நண்பர்களையும்
வரசொன்னார் தம்பி என்றார்.
சரி அண்ணண் தலைவர் சொன்னா நாங்க எங்கு வேண்டுமானலும் வருவோம் என்றோம்...
அதை போல காலை 10 மணி நந்தனம் கோவில் வந்தோம்
நேரம் ஆக ஆக மக்கள் வெள்ளம் கூடியாது எங்க பாண்டிய நாட்டு தங்கமும் வந்தார்.....
போலீஸ் படையும் வந்தது
ஆர்பாட்டத்தின் நோக்கம்
பாரதிராஜாவுக்காக....காரணம் பாரதிராஜாவுக்கும் ரஜினி க்கு சின்ன பிரச்சனை பாரதிராஜா ஆபீஸ் மீது கல்வீச்சு ....
ரஜினி ரசிகர்களை தூண்டி விட்டு ரஜினி ஆடிய ஆட்டத்துக்கு பதிலாடி கொடுக்க பாரதிராஜா சொன்ன கருத்து என் சாதிகாரன் பவர் என்ன என்று நாளைக்கு பாருங்கடா என்க...
தகவல் அறிந்து வெள்ளைசாமிதேவர் நாளைக்கு பாடம் புகுட்டுவோம் என்றார் ராஜாவிடம்...
போராட்டம் துவக்கும் முன் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் வந்தார் வெள்ளைசாமிதேவரே கட்டி பிடித்து மகிழ்ந்தார் பின் பாரதிராஜா சகோதரரும் வந்தார் போராட்டம் தொடங்கியது தேவர் ஐயாவுக்கு மாலையிட்டு .....
ஊடகம் அனைத்திலும் மறுநாள் செய்தி சென்னையில் ரஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து தேவர் சமுதாயம் வெள்ளைசாமிதேவர் தலைமையில் ஆர்பாட்டம்.என்று.....மிரட்டல் மிகவும் கெத்து......
ஆனால் அப்பம் பாரதிராஜா வெள்ளைசாமிதேவரிடம் போனில் பேசினார் தேவமாருனா சும்மாவா என்று மகிழ்ச்சி வெள்ளைத்தில் சிரித்தார்.....நன்றி தம்பி என்றார்.
அப்பம் வெள்ளைசாமிதேவர் சொன்னார் இந்த பிரச்னை உங்களுக்கு இல்லை நம் சமுதாயத்தில் யாருக்கு நடந்தாலும் நான் வருவேன் என்றார்
சொன்ன இடத்தில் வெள்ளைசாமிதேவர் சமுதாய உணர்வுடன் வாழ்கிறார் தெய்வமாக...
ஆனால் பாரதிராஜா சமுதாய பற்று மறந்து தமிழ்தேசிய முகமூடி அணிந்து திருமா கூட பற்று வைத்து வாழ்கிறார் கச்சாநத்தம் உறவில்......
தேவருக்கே வெளிச்சம்.
கழகத்தின் மூத்த முன்னோடி நெல்லை பாண்டித்தேவர் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து......

நேற்று அன்னாரின் நினைவு நாள்.

Image may contain: 1 person, text

மயிலாப்பூர் மூர்க்கத்தை மட்டுப்படுத்தி
டெல்லியின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி
தமிழ்தேசிய சுடரை அணையவிடாமல் காத்திட்ட திரையே
வடவனுக்கும் திரை செலுத்தும் அடிமை உன்னை பார்த்து மாபியா என்னும் பொழுது ஒரு விடயம் புரிகிறது
ஈழத்தில் ஆயுதம் எதிரி தூக்கினான் நாம் எதிர் ஆயுதம் தூக்கி சமநிலை கண்டோம்
தமிழ்த்தாய் தமிழ்நாட்டில் வடவனின் வாலும் வாளுமாகிய நாடக திராவிட குமபலின் பெரும்பணத்திற்கெதிராக பெரும்பணத்தை தூக்கி அணைபோட்ட சூழ்நிலையில்திருட்டு திராவிடம் மாஃபியா என்று கதறியது
சின்னமேள ஊழல் பண சேமிப்பு அரசியல் தொழிலை அதே பாணியில் தடுத்திட அரசியல் ஆளுமையே
அதிமுக கட்சியில் பெயரில் மட்டும் திராவிடம் ஒட்டி இருந்தது அது உங்கள் திட்டமே
தமிழ்சமூக ராஜதந்திரியே இன்னும் நீ போட்ட மாயக்கோட்டை திராவிடமும் வடமும் அழிக்க போராடுகிறது

கொடை வள்ளல் - நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தவர்

நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தவர்
Born:21 March 1867
Died: 2 Dec 1911
"செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!" என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத் தேவர்.
'சேது சமஸ்தானம்' என அழைக்கப்பட்ட ராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத் தேவர், வள்ளல் பொன்னுசாமி - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867, மார்ச் 21ம் தேதி ராமநாதபுரத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் உக்கிர பாண்டியன். நாடறிந்த பெயரே பாண்டித்துரைத் தேவர்.
பொன்னுசாமி தேவர் இறந்தபோது பாலகராக இருந்த பாண்டித்துரைத் தேவரை வளர்க்கும் பொறுப்பை ஏஜண்ட் சேஷாத்திரி அய்யங்கார் ஏற்றார். அழகர் ராஜு எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார். சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர், தந்தையின் அரண்மனையை அடுத்து மாளிகை ஒன்றைக் கட்டினார். சிவபெருமான் மீதான பக்தி காரணமாக அம்மாளிகைக்குச் 'சோமசுந்தர விலாசம்' என்று பெயரிட்டார்.
1901ம் ஆண்டு சொற்பொழிவாற்றுவதற்காக வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மதுரை வருகை தந்தார். அப்போது, 'திருக்குறள் பரிமேலழகர் உரை' நூலை, விழா ஏற்பாடு செய்த அமைப்பாளரிடம் கேட்டார் தேவர். எங்கு தேடியும் அந்நூல் கிடைக்காதது கண்டும், பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் கண்டு முத்தமிழ் வளர்த்த மதுரையில், திருக்குறள் பரிமேலழகர் உரை கிடைக்காதது கண்டும், தமிழ்ப் பற்றுள்ள தேவரின் மனம் வருந்தியது.
தேவர் உடனடியாக, தமிழ் வளர்த்த மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் வெளியிட விரும்பினார். தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார் தேவர். பாண்டித்துரைத்தேவர் தலைமையில் 1901ம் ஆண்டு மே 24ம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது.
நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர், தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து, தமிழ் மணம் வீசியது. அந்நாளில்தான் பழந்தமிழ்க் கருவூலமாக, பாண்டியன் நூலகமும் உருவானது. 'தமிழ் ஆய்வு மையம்' அமைத்த பாண்டித்துரைத்தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில், ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும் புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல் "செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச் செய்தார். அந்த 'செந்தமிழ்' ஏடு நூற்றாண்டு விழா கண்ட ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.
சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய- தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், இரா.ராகவையங்கார், மு.ராகவையங்கார், அரசன் சண்முகனார், ராமசாமிப்புலவர், சபாபதி நாவலர், சிங்காரவேலு முதலியார், நாராயண அய்யங்கார், சுப்பிரமணியக் கவிராயர், சிவஞானம் பிள்ளை, சிவகாமி ஆண்டார், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், புலவர் அப்துல்காதிர் ராவுத்தர், எட்டயபுரம் சாமி அய்யங்கார், பரிதிமாற்கலைஞர், அரங்கசாமி அய்யங்கார், சி.வை.தாமோதரம் பிள்ளை - ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான 'செந்தமிழ்' ஏடே உதவியது.
சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவர் அமைத்த மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தையே சாரும்! மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டவர் பரிதிமாற்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. "தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள்.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய வ.உ.சி யின் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார். சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில் இரட்டை மணிமாலை, ராஜ ராஜேஸ்வரி பதிகம், தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார் பாண்டித்துரைத் தேவர்.
தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட (1911, டிச. 2 ) செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.

Friday, March 20, 2020

முக்குலத்தோர் புலிப்படை

திருவாரூர் மாவட்ட வலங்கைமான் ஒன்றிய பொறுப்பு அறிவித்தல்

*டெல்டா மண்டல பொறுப்பாளர் திரு. டெல்டா வீரா* அவர்கள் பரிந்துரைப்படி
திருவாடானை சட்டமன்ற உறுப்பினர்,
முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் தேவரினத்தின் ஒருங்கிணைப்பாளர்
மனிதநேயர்
*வீரத்தமிழர் சேது கருணாஸ் MLA* அவர்கள் ஒப்புதலோடு
திரு. வீரா
வலங்கைமான்
ஒன்றிய செயலாளர்
மேற்கு 8870729618.
திரு. மகேந்திரன் திருவாரூர் மாவட்ட தகவல் தொழிற்நுட்பம்
பிரிவு 8754363360.
திரு. திவாகர் ஒன்றிய துணைசெயலாளர் 9159630292
திரு. திவாகரன் ஒன்றிய இளைஞரணி செயலாளர் மேற்கு. 9500255179.
திரு. ஜெய்
ஒன்றிய மாணவரணி செயலாளர் மேற்கு. 9003676307.
திரு. பாலா மாவட்ட தகவல்
தொழிற்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் 9159682208.
திரு. கணேஷ் ஒன்றிய தகவல் தொழிற்நுட்ப பிரிவு அமைப்பாளர்
9994225916
இன்று முதல் பொறுப்பாளராக
நியமிக்கப்படுகிறார்
*பணி* *சிறக்க* *வாழ்த்துக்கள்*
*மாநில* , *மண்டல* , *மாவட்ட* , *ஒன்றிய* , *நகர* , *கிளைகழக* *நிர்வாகிகள்* மற்றும் *உறவுகள்* அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வழக்கறிஞர்
*M.தாமோதர கிருஷ்ணன்*
*பொதுச் செயலாளர்*
*முக்குலத்தோர் புலிப்படை*
*தமிழ் நாடு*
20.03.2020

Truly commendable job from this man

Image may contain: 1 person, meme, possible text that says 'THIS MAN IS DOING EVERYTHING IN HIS POWER IN TAKING PREVENTIVE MEASURES TO STOP CORONA VIRUS SPREADING TO PEOPLE HEALTH MINISTER OF TAMIL NADU DR.C. VIJAYABASKAR'

பெருங்காமநல்லூர் கள்ளர் வரலாறு

How to #SelfQuarentine if you are affected by #CoVid19 ~

Image may contain: 1 person, text

கொரோனா வைரசும் தமிழன் மறந்த தமிழர் நோய்த்தடுப்பு_மரபுகளும்

1. இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது.
2. வாசல் முற்றத்தில் நீரில் கால் கழுவி பிறகு வீடுநுழைந்தது.
3. மாவிலை தோரணங்கள் கட்டியது.
4. மஞ்சள் பூசி குளித்தது தெளித்து விளையாடியது.
5. உணவில் மிளகு சுக்கு மஞ்சள் சேர்ந்தது.
6. வாழை இலையில் உணவு பரிமாறியது .
7. வேப்பங்குச்சி உப்பு கரி கொண்டு பல் துலக்கியது.
8. வேப்பம் இலையில் புகை போட்டது.
9. மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது.
10. வருடம் ஒரு முறை வீட்டிற்கு வெள்ளை அடித்தது.
11.எலுமிச்சம் பழம் காய்ந்த மிளகாய் படிகாரம் உத்திரசங்கு இவைகளை தலை வாசலில் தொங்க விட்டது.
12. நெரிசல் மிக்க இடங்களில் இருந்து திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது. பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது.
13. வெற்றிலை பாக்கு போடுவதும்.
14. கசாயம் ஊறல் குடிப்பதும்.
15. வெள்ளாவியில் உடை வெளுத்தது.
16.மரண வீட்டிற்கு சென்றுவந்தால் மஞ்சள் நீர் தெளித்து நீராடி வீட்டிற்குள் செல்லுதல்.
17.இறந்த பிரேதத்தை எரித்தது.
18. அம்மை வந்தால் வெப்பம் பத்திரம் போடுதல்.
19. வீட்டு முற்றத்தில் துளசிச் செடியை நாட்டி வைத்தல்.
20. மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி ஏற்றி புகை போட்டது.
இவை அனைத்துமே கிருமியை தடுப்பதும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் சுத்தமாக வாழ்வதுக்கு மட்டுமே தமிழனால் உருவாக்கப்பட்ட மரபு என்பது புரியாமல் இன்று நடக்கும் பெரு அழிவில் பங்காளர்களாக இருக்கிறோம்

விவசாயம் காப்போம்...

ஏசி குளிரூட்டப்பட்ட ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
ஆடம்பர வசதிகள் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
திரையரங்குகள் மூடப்பட்டன. திரைப்படங்கள் இல்லாமலும் நம்மால் வாழ முடியும் என்பதை இது உணர்த்தியது.
ஆடம்பர மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டன.ஆடம்பரப் பொருட்கள் இல்லாமலும் நம்மால் வாழ முடியும் என்பது இதன் மூலம் கற்றுக் கொண்டோம்.
விலை உயர்ந்த நகை மற்றும் பொருட்கள் விற்கும் கடைகள் மூடப்பட்டன.இவை இல்லாமலும் நம்மால் வாழ முடியும் என்பதை கற்றுக் கொண்டோம்.
ஆனால் இன்று மக்கள் கூட்டம் எங்கே இருக்கிறது தெரியுமா?
மளிகை கடைகளிலும் காய்கறி கடைகளிலும்...காரணம் ஆடம்பரங்கள் இல்லாமல் வாழலாம் ஆனால் உணவு இல்லாமல் வாழவே முடியாது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தருணம்.
உணவை உற்பத்தி செய்யும் விவசாயி எவ்வளவு முக்கியமானவன் என்பதை இந்த சின்ன கொரோனா வைரஸ் நமக்கு காட்டிக் கொண்டிருக்கிறது.
நீங்கள் என்றுமே நன்றிக்கடன் செலுத்த வேண்டிய ஒரு ஆள் *விவசாயி* தான்....
விவசாயம் காப்போம்...

நில அளவைகள் [சர்வே] பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...!

சர்வே” பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 சங்கதிகள் :-
1. சர்வே இரண்டு பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது.
1. நில அளவை துறை
2. நில வரிதிட்ட துறை
2. புலப்படம், கிராம வரைபடம் எல்லாம் நில அளவை துறையினால் தயாரிக்கப்படுகிறது.
3. “அ” பதிவேடு (A. Register) நில வரி திட்ட துறையினரால் உருவாக்கப்படுகிறது.
4. மாநில அரசின் நில அள வைகளை நகர நில அளவை , நத்தம் நில அளவை, மலை கிராம நில அளவை, மறு நில அளவை, வட்ட அளவில் நாள் தோறும் நடைபெறும் பட்டா மாறுதல் சம்மந்தமான நில அளவைகள் என பிரிக்கப்படுகிறது.
5. 1. கிராம வரைபடம்,
2. D ஸ்கேட்ச் ( நன்செய், புன்செய், மானவளி, நத்தம், புறம்போக்கு பகுதிகளை பிரித்து காட்டும் வரைபடம்)
3. புலப்படம்
4.சர்வே கற்கள் பதிவேடு
5. டிப்போ பதிவேடு ( கிராமத்தில் இருக்கும் ஸ்டாக் வைக்கப்பட்ட கற்கள், நில அளவை சங்கிலி உட்பட
உபகரணங்கள் இருக்கும் டிப்போ ) போன்ற ஆவணங்ள் கிராம நில அளவையில் இருக்கும்.
6. ஒவ்வொரு நில உரிமையாளரும் சர்வே செய்து போடப்பட்ட கற்களை பராமரிக்க வேண்டும். எல்லை கல்லை பாதுகாப்பது , அந்த கல் தொட்டு கொண்டு இருக்கும் புலன்களுடைய பட்டாதரரின் கூட்டு பொறுப்பு ஆகும்.
7. மத்திய அரசினால் ஆறுகள், ஏரிகள், மலைகள், சாலைகள் கோவில்கள் விளக்கி காட்டி ஸ்தல சர்வே செய்வார்கள், இவை கனிம வள ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்படும்.
எப்பொழுதெல்லாம் நிலத்தில் சர்வே செய்யப்படும்...?
1. நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது, இறுதியாக 1984 ல் இருந்து 1987 வரை நடந்தது.
2. பிறகு நத்தத்தில் நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது , இறுதியாக 1990 களில் நடந்தது.
3. சர்வே புலத்தில் புதிய சர்வே புலம் அமைக்கும் போதும், சர்வே புலத்தின் எல்லையில் மாற்றம் செய்ய நேரிடும் போதும்.
4. கிராம வரைபடம் வரையும் போது திருத்தம் கண்டுப்பிடிக்கப்பட்டு எல்லை மாற்றம் செய்யப்படும் பொழுதும்.
5. புறம்போக்கு நிலத்தில் எல்லைகள் மாறுதல், புறம்போக்கு தரிசாக மாறும் பொழுது, தரிசு புறம்போக்காக மாறும் பொழுதும்.
6. நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்யும் போது நிலத்தின் உட்பிரிவுகளை ஒன்றாக்கி புறம்போக்காக மாற்றும் பொழுது.
7. அளவுப்பிழை, விஸ்தீரணப் பிழை, உருவப்பிழை பட்டாதரரின் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை சரி செய்யும் பொழுது.
8. பராமரிப்பு பணிகளின் போது புதிய சர்வே புலம் அமைக்க வேண்டி இருந்தால் நில அளவை, சர்வே செய்யப்படும்.
9. இரண்டு நில உரிமையாளருக்கு நில அளவுகளில் தகராறு வரும்பட்சத்திலும் நிலத்தை சர்வே செய்ய வேண்டி இருக்கும்.
சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :-
1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.
2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).
3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.
4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.
5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.
6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.
7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.
நிலத்தை அளக்கும் அளவு முறைகள் பற்றி...!
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்...!
ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.
1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,
2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை
3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்.
பாரம்பரிய வழக்கம், நம் மண்ணில் ஆரம்ப காலம் தொட்டு புழக்கத்தில் இருக்கிறது. பிரிட்டிஸ் அளவுகள், வெள்ளைகாரன் நாட்டை ஆண்டபோது நில நிர்வாகத்தை 90% அவர்கள் உருவாக்கியதால், அதன் அளவு முறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.
உலகம் முழுக்க ஒரே அளவுகள் கொண்டுவந்தால் வியாபாரத்தில் வசதியாக இருக்கும் நோக்கில் மெட்ரிக் அளவுமுறையும் பயன் படுத்தி கொண்டு இருக்கின்றோம்.
• இன்றைக்கும் விருதுகள், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் வீட்டுமனைகள் குழி கணக்கில் தான் விற்பனை செய்யபடுகிறது.
• கொங்கு பகுதிகளில் சென்ட் என்றும், சென்னையில், கிரவுண்டு என்றுமே வீட்டுமனைகள் புழக்கத்தில் இருக்கிறது.
• நாட்டு வழக்கு அளவுகளில் பிரிட்டிஸ் அளவு முறைகளில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் பரிமாற்றங்கள் நடக்கின்றன.
• ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.
வேலி

• 1வேலி – 2௦ மா
• 1வேலி – 6.17 ஏக்கர்
• 1வேலி – 5காணி
மா

• 1மா – 1௦௦ குழி
• 2௦மா – 1வேலி
• 3மா – 1ஏக்கர்
• 3மா – 1௦௦ சென்ட்
• 7மா – 1ஹெக்டேர்
சதுமீட்டர்

• 1௦,௦௦௦ சதுர மீட்டர் – 1ஹெக்டேர்
• 4046.82 சதுர மீட்டர் – 1ஏக்கர்
• 4௦.5 சதுர மீட்டர் – 1சென்ட்
• 222.96 சதுர மீட்டர் – 1கிரவுன்ட்
• 1சதுர மீட்டர் – 1௦.76391 சதுர அடி
• ௦.௦929 சதுர மீட்டர் – 1 சதுர அடி
• 1௦௦ சதுர மீட்டர் – 1ஏர்ஸ்
• ௦.8361 சதுர மீட்டர் – 1குழி
• 1௦1.17 சதுர மீட்டர் – 121 குழி
செயின்
• 1செயின் – 66அடி
• 1செயின் – 1௦௦ லிங்க்
• 1௦செயின் – 1 பர்லாங்கு
• 1செயின் – 22 கெஜம்
ஏக்கர்
• 1ஏக்கர் – 43,56௦ சதுர அடிகள்
• 1ஏக்கர் – 1௦௦ சென்ட்
• 1ஏக்கர் – 16௦ square Roads
• 1ஏக்கர் – 1.1834 Square Arpents
• 1ஏக்கர் – 1௦ Square Chains
• 1ஏக்கர் – 16௦ Perches
• 1ஏக்கர் – 16௦ Poles
• 1ஏக்கர் – 4௦46.82 சதுர மீட்டர்
• 2ஏக்கர் 47சென்ட்- 1 ஹெக்டேர்
• 1ஏக்கர் – ௦. 4௦469 ஹெக்டேர்
• 1.32ஏக்கர் – 1 காணி
• 64௦ஏக்கர் – 1 சதுர மைல்
• 2.5ஏக்கர் – 1 லட்சம் சதுர லிங்ஸ்
• 6.17ஏக்கர் – 1 வேலி
• 1ஏக்கர் – 3 மா
• 1ஏக்கர் – ௦. 4௦4694 ஹெக்டேர்
• 1ஏக்கர் – 4௦.5ஏர்ஸ்
• 1ஏக்கர் – 4840 சதுர கெஜம்
• 64௦ ஏக்கர் – 1 சதுர மைல்
• 8.64ஏக்கர் – 1வள்ளம்
கெஜம்
• 1கெஜம் – 3அடி
• 22கெஜம் – 1 செயின்
• 22கெஜம் – 66 அடி
• 1கெஜம் – ௦.9144 மீட்டர்
• 1.௦93613 – 1மீட்டர்
ஏர்ஸ்
• 1௦ ஏர்ஸ் – ௦2471 சென்ட்
• 1ஏர்ஸ் – 1௦76 சதுர அடி
• 1ஏர்ஸ் – 2. 47 சென்ட்
• 1ஏர்ஸ் – 1௦௦ ச.மீ
• 1௦௦ ஏர்ஸ் – 1ஹெக்டேர்
• ௦. 4௦5 ஏர்ஸ் – 1 சென்ட்
ஹெக்டேர்
• 1ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட்
• 1ஹெக்டேர் – 1௦,௦௦௦ ச.மீ
• 1ஹெக்டேர் – 1௦௦ ஏர்ஸ்
• ௦௦4௦ ஹெக்டேர் – 1சென்ட்
• 1ஹெக்டேர் – 247 சென்ட்
• 1ஹெக்டேர் – 1௦7637.8 சதுர அடிகள்
• ௦. 4௦5 ஹெக்டேர் – 1ஏக்கர்
சென்ட்
• 1சென்ட் – 435.சதுரஅடிகள்
• 1சென்ட் – 4௦.5 சதுர மீட்டர்
• 1சென்ட் – 3குழி
• 1சென்ட் – 48.4 சதுர குழி
• 1௦௦ சென்ட் – 484௦ சதுர குழி
• 1 சென்ட் – ௦௦4௦ ஹெக்டேர்
• 1 சென்ட் – ௦. 4௦5 ஏர்ஸ்
• 1சென்ட் – 4௦. 46 சதுர மீட்டர்
• 2. 47 சென்ட் – 1ஏர்ஸ்
• 1 சென்ட் – 1௦௦௦ சதுர லிங்ஸ்
• 5.5 சென்ட் – 1கிரவுன்ட்
• 1.5 சென்ட் – டிசிமல்
• 1சென்ட் – ௦.௦௦4௦47 ஹெக்டேர்
• 1௦ சென்ட் – ௦.௦4௦47 ஹெக்டேர்
• ௦.௦2471சென்ட் – 1 ஏர்ஸ்
• ௦.௦2471சென்ட் – 1௦ ஏர்ஸ்
• 5.5 சென்ட் – 24௦௦ சதுர அடிகள்
• 5.5 சென்ட் – 1 மனை
• 33.௦6சென்ட் – 1 மா
• 6.61 சென்ட் – 1 வேலி
• ௦.7 சென்ட் – 1 குழி – 3௦௦ சதுர அடி ( மதுரை)
• ௦.7. சென்ட் – 3௦௦ சதுர அடிகள் ( மதுரை )
சென்ட்
• 11.௦ சென்ட் – 4800 சதுர அடிகள்
• 11.௦ சென்ட் – 2மனை
• 56 சென்ட் – 1குருக்கம்
• 56 சென்ட் – 24,௦௦௦ சதுர அடிகள்
• 2. 47 சென்ட் – 1௦76 சதுர அடிகள்
• 4.7 சென்ட் – 1வீசம்
கிரவுண்ட்
• 1கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
• 1கிரவுண்ட் – 24௦௦ சதுர அடிகள்
• 1கிரவுண்ட் – 5.5 சென்ட்
மீட்டர்
• 1 மீட்டர் – 3.281 அடிகள்
• 161௦ மீட்டர் – 1 மைல்
• 1௦௦௦ மீட்டர் – 1கி.மீ
• 1௦௦௦ மீட்டர் – ௦.62 மைல்
• ௦.9144 மீட்டர் – 1 கெஜம்
• 1 மீட்டர் – 39.39 இஞ்ச்
• 2௦1.16 மீ – 8 பர்லாங்கு
• 1 மீட்டர் – 1.௦93613 கெஜம்
• ௦.3௦48 – 1அடி
• 1௦ மீட்டர் – 32. 8௦84 அடிகள்
அடி சதுர அடிகள்
• 435.6 சதுர அடிகள் 1சென்ட்
• 24௦௦ சதுர அடிகள் 1கிரவுண்ட்
• 57,6௦௦ சதுர அடிகள் 1காணி
• 3.28 அடி 1மீட்டர்
• 1அடி 12 இன்ச்
• 1அடி 3௦. 48 செ. மீ
• 528௦ அடி 1 மைல்
• 328௦ அடி 1கி. மீ
• 1௦76 சதுர அடிகள் 1 ஏர்ஸ்
• 1௦.76391 சதுர அடிகள் 1சதுர மீட்டர்
• 1சதுர அடி ௦.௦929 சதுர மீட்டர்
• 24௦௦ சதுர அடிகள் 1 மனை
• 1 சதுர அடிகள் 144 சதுர அங்குலம்
• 43,56௦ சதுர அடிகள் 1 ஏக்கர்
• 1 சதுர அடி 144 சதுர அங்குலம்
• 1௦89 சதுர அடிகள் 33 அடி
• 1௦7637. 8 சதுர அடிகள் 1 ஹெக்டேர்
• 33 அடி 1 குந்தா
• 66௦ அடி 1 பர்லாங்கு
• 66௦ அடி 22௦ கெஜம்
• 66 அடி 1 செயின்
• 66 அடி 1௦௦ லிங்க்
• ௦.66 அடி 1 லிங்க்
• ௦.66 அடி 7.92 அங்குலம்
• 3 அடி 1 கெஜம்
• 1௦76 சதுர அடிகள் 2. 47 சென்ட்
• 66 அடி 22 கெஜம்
• 3.28 அடி 1.௦93613 கெஜம்
• 1 அடி ௦.3048 மீட்டர்
• 3.28௦84 அடி 1 மீட்டர்
• 32. 8௦84 1௦ மீட்டர்
• 1 சதுர அடி ௦.௦929௦ சதுர மீட்டர்
• 1௦ சதுர அடிகள் ௦.929௦ சதுர மீட்டர்
• 1௦௦ சதுர அடிகள் 9.29௦ சதுர மீட்டர்
• 2௦௦ சதுர அடிகள் 18.58௦ சதுர மீட்டர்
• 5௦௦ சதுர அடிகள் 46. 45 சதுர மீட்டர்
• 1௦7.6939 சதுர அடிகள் 1௦ ச. மீ
• 215.278 2௦சதுர மீட்டர்
• 538.195 சதுர அடிகள் 1௦௦ சதுர மீட்டர்
• 4,356 சதுர அடிகள் 1௦ சென்ட்
• 48௦௦ சதுர அடிகள் 1 மிந்திரி
• 24, 4௦௦ சதுர அடிகள் 1குறுக்கும்
• 144 சதுர அடிகள் 1குழி.
நன்றியுடன் களஞ்சியம் விவசாயிகள் சங்கம்..
குழுவில் இணைய
https://www.facebook.com/groups/421324108337633/