Monday, August 15, 2011

சீமானின் அணுகுமுறை தாதாவைப்போல் உள்ளது!- சர்ச்சையை கிளப்பிய சேரன்

சீமானின் அணுகுமுறை தாதாவைப்போல் உள்ளது!- சர்ச்சையை கிளப்பிய சேரன்

இலங்கைத்தமிழர் விவகாரத்தில் சீமானின் அணுகுமுறை தாதாவைப்போல் இருக்கிறது என்று டைரக்டர் சேரன் சொன்ன கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சரத்குமாரின் மீடியாவாய்ஸ் என்ற பத்திரிகையில கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, இலங்கைத்தமிழர் விவகாரத்தில் சீமானின் செயல் தாதாவைப்போல் இருக்கிறது. அவர் முதலில் இங்கிருக்கும் தமிழர்களின் நலன்குறித்து பேசட்டும். இலங்கைத்தமிழர்களின் பிரச்சினையை அப்புறம் பார்க்கலாம் என்று பதிலளித்திருந்தார் சேரன்.

விளைவு? கொந்தளித்து விட்டனர் சீமானின் படைத்தளபதிகள். சேரனுக்கு போன் போட்டு மிரட்டல் விடுத்து வருகிறார்களாம். இதனால் தேவை இல்லாமல் வம்பில் மாட்டிக்கொண்ட சேரன், சீமானை நேரில் சந்திக்க விரும்பி அவரை தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் சீமானோ, சேரனிடம் எதையும் பேச விரும்பாமல் போனை கட் பண்ணி விட்டாராம். ஆனால் சீமானின் அபிமானிகள் சிலர், முதலில் பத்திரிகைகளை கூட்டி நான் சீமானைப்பற்றி அப்படி எதுவும் சொல்லவில்லை என்று பேட்டி கொடுங்கள். அப்போதுதான் அவர் சாந்தமடைவார் என்று சேரனுக்கு அட்வைஸ் செய்து வருகிறார்களாம். விழி பிதுங்கி நிற்கிறார் சேரன்.

No comments: