Wednesday, April 1, 2020

பெருங்காமநல்லூர்_துயரம்


இன்னும் இரண்டு தினங்களே உள்ளன...#ஏப்ரல்_3

இந்தியாவின் மிகப்பெரிய துயரம் நடந்து #100_ஆண்டுகள் ஆகிறது..

செங்குருதிகளால் எழுதப்பட்ட கள்ளிக்காட்டு இதிகாசம் தான் #பெருங்காமநல்லூர்_படுகொலை

நீங்கள் சொல்லும் காட்டுமிராண்டிகளாகிய எங்களின் இரத்த சரித்திரம் அது...

கரும்பை சீவி பார்த்திருக்கும் இந்த தலைமுறைக்கு தனது கட்டை விரலையே கரும்பைப் போல் சீவிய கூட்டத்தைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்...

தென்னிந்தியாவின் ஜாலியன் வாலாபாக் என்று சொல்லப்படும் #கள்ளர்களின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்...

ஜாலியன் வாலாபாக்கில் கூட சுடும் பொழுது கூட்டம் ஓடியது... இங்கு எமது #பூர்வகுடிகள் சுடுடா... என்று நெஞ்சை காட்டி முன்னோக்கி வந்த வரலாறு....

கொள்ளையனின் கொடூரமான சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட மக்கள் புரட்சி அது...

கொள்ளையடிக்க வந்த கும்பினிப் படையினரால் குற்றப் பரம்பரை எனச் சுமத்தப்பட்டு அவ்வீர மறவர்களின் மீது நடத்தப்பட்ட கோரமான தாக்குதல் அது.

துப்பாக்கிகளுக்கு எதிராக தீரத்துடன் கற்களையும் கம்புகளையும் கொண்டுவந்த கூட்டம் அது...

கட்டைவிரலை வெட்டிக் கொள்வோம்.. ஆனால் கைநாட்டு வைக்க முடியாதுடா என்ற இடிமுழக்க நிகழ்வு அது....

இந்த நிலத்தின் பூர்வகுடிகள் மீது அந்நியர்களால் நடத்தப்பட்ட இன்னொரு செவ்விந்திய தாக்குதல் அது...

100 ஆண்டுகள் கடந்தும் எம் தியாகிகளின் 17 ஆன்மாக்கள் எதிரிகளை இன்றும் கருவறுக்க காத்துக் கிடக்கிறது...

அதுதான் கள்ளன்....இந்த நிலத்தின் முன்னோடி..‌ #M130 Y க்கு சொந்தக்காரன்....
பெருமையாகச் சொல்லுவோம் நாம் பெருங்காமநல்லூர் பரம்பரை என்று.

No comments: