Saturday, December 31, 2011

HAPPY NEW YEAR

TO MY LION KINGS ( FRIENDS AND RELATIVES )

HAVE A SUPERB AND EXCELLENT YEARS TO COME..LET US ALL JOIN HANDS TO MAKE OUR COMMUNITY AND OTHER TAMILS HAPPY AND PROUD.

Best of 2011

Best-selling Products of 2011

Electronics: Kindle Fire
Toys: Rory’s Story Cubes
Video Games: Call of Duty: Modern Warfare 3
Sports & Outdoors: Zumba Fitness Total Body Transformation System DVD Set
Home & Kitchen: Cuisinart SmartStick 200-Watt Immersion Hand Blender
Books: “Steve Jobs” by Walter Isaacson
Kindle Books: “The Help” by Kathryn Stockett
CD: “21” by Adele
Amazon MP3: “Born This Way” by Lady Gaga
DVD: “Harry Potter and the Deathly Hallows, Part 1”
Amazon Instant Video: “The Help”
Watches: Timex T5J151 1440 Sports Digital Watch
Jewelry: Designer Inspired Silver Heart Charm Toggle Bracelet
Clothing: Levi's Men's 501 Jean
Shoes: Crocs Classic Clog
Beauty: Olay Pro-X Advanced Cleansing System
Health & Personal Care: Philips 7310 Norelco Men's Shaving System
Tools & Home Improvement: Rayovac Sportsman Xtreme 300-Lumen LED Lantern
Automotive: Battery Tender Junior 12V Battery Charger
Baby: Vulli Sophie the Giraffe Teether
AmazonWireless: Samsung Galaxy S II (Verizon Wireless)
Amazon Appstore for Android: Angry Birds Rio (Ad-Free)


Best PC Action Game

Rocksteady proved with Arkham Asylum that it was possible to make a great Batman game. Arkham City expands upon its predecessor, giving Batman an open metropolis to explore and fight through. A huge cast of villains, a plot that twists in often unexpected directions, and gameplay mechanics that make you feel just like Batman create an extremely satisfying action experience. There’s plenty of content for the dedicated player, a well executed new game plus mode, gorgeous visuals and a combat system with a simple, accessible hook and a surprising amount of depth. Whether you prefer stringing together dizzyingly long strings of combos to beat down mobs of thugs or swooping through the shadows to strike at unsuspecting enemies, Rocksteady’s latest has you covered. Arkham City is a big, brilliant action epic.


Best Smartphone

Samsung faced fierce competition this year from Apple, Motorola, HTC and others, but ultimately, the Galaxy Nexus reigned supreme. It stood out not only for its great design and powerful internals, but as the first smartphone to utilize Google's updated mobile OS, Android 4.0. Ice Cream Sandwich refines and unifies the platform, making it more user-friendly and adding a laundry list of new features, including a new and improved UI, data usage management tools, expanded video and picture functions and more. Although the new OS will eventually rollout to other devices, the Galaxy Nexus will remain ahead of the pack as Google's flagship device.

Best Notebook


Known primarily for their work in PC gaming mice and keyboards, Razer's entry into the notebook development and manufacturing business earlier this year was completely unexpected, but with its new ultra-portable 17-inch gaming laptop, the Blade, the company is bringing a fresh perspective. Instead of emphasizing raw processing power, Razer is putting portability first. At less than an inch thick and only 7-pounds, the Blade is one of the thinnest and lightest gaming notebooks on the market, and with its programmable LCD keys and trackpad, it features innovative new control methods. Though carrying a premium price of $2,799, the Blade sports some great specs, including NVIDIA's GT555M, Intel's Core i7 CPU, which can be overclocked to 3.5GHz, and 8GBs of RAM.


Best song

Sexy And I Know It
LMFAO
Sorry for Party Rocking


Top Bollywood movie of 2011



Pyaar Ka Punchnama: The year's sleeper success that kept us awake for a good 2 hours with its celluloid anthem of ribtickling misogyny. Three room-mates and their troubled love relationships formed the core of the comic conflict. Every character and each episode spilled over with a delightful deja vu. Debutant director Luv Ranjan managed a 3-guys-in-a-sexist-soup comedy much better than Madhur Bhandarkar in Dil To Bachcha Hai Ji also released this year.And the director did it with untried actors. Kartik Tiwari(who is now doing the same director's next Saathi) and Divyendu Sharma(who is in David Dhawan's Chashme Buddoor) were among the best discoveries of the year.We luv you,Luv, for bringing push to shove without tripping over.

Top Sedan car in India

Mahindra Verito:

The Mahindra Logan has been restyled with changes in design and re-launched as the Mahindra Verito. The auto maker is already famous for the high performing and impressive technology it offers. The vehicle has been made available in both petrol and diesel engine variants. This is the only sedan that has been provided with three head rests in its rear seat. The vehicle comes with a 172mm ground clearance that makes the vehicle handle rough roads easily. The Verito has been equipped with the best in safety features that includes ABS along with EBD, head restraint in all its seats, Driver Airbag and a comprehensive information system for the driver. The Mahindra Verito offers all the features of a sedan though it has been priced similar to small cars. Excellent space has been offered inside the car. The Mahindra Verito base edition comes at a starting price of Rs.4.82 Lakh.

Top 10 colleges


LSR has been chosen as India's best college in the Arts stream yet again followed by St. Stephen's.

SRCC and St. Xavier's College change places winning the first and the second slot respectively for commerce

St. Stephen's College, Delhi, leads Indian colleges in the Science stream.

NALSAR, Hyderabad, beats NLSIU, Bangalore, to grab the top spot for law

AIIMS continues to excel in the field of Medicine and retains its number one slot yet again this year.

Keeping true to tradition, IITs are at the top with IIT-Kanpur leading the way for engineering

இளைஞர்கள் போராட்டத்துக்கு வலிமை சேர்க்க வேண்டும்-சீமான்

முல்லைப்பெரியாறு அணை சம்பந்தமாக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பலர் உயிர்த்தீயாகம் செய்துள்ளனர்.

இதுகுறித்து இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் விடுத்துள்ள அறிக்கையில்,

போராட்டங்கள் பற்றி எரியலாம், ஆனால் போராளிகள் எரிந்து விடக்கூடாது. முல்லைபெரியாறு தண்ணீரில் நமக்கு வரவேண்டிய உரிமையை பறிக்கும் கேரள அரசியல்வாதிகளுக்கு நம்முடைய போராட்டத்தின் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும். போராட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டு இளைஞர்கள் வலிமை சேர்க்க வேண்டும். மாறாக, உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார் சீமான்.

மணிரத்னம் படத்தில் அக்ஷரா?

ராவணன் படத்துக்குப்பிறகு மணிரத்னம் இயக்கும் படம் பூக்கடை. இந்த படத்தில் கார்த்திக்கின் மகன் கெளதம் நடிப்பதாக உறுதியாகி விட்டது. அவருடன் அர்ஜூன், பசுபதி, லால் உள்ளிட்ட சில முக்கிய நடிகர்களும் நடிக்கிறார்கள்.

ஆனால் கதாநாயகி விசயத்தில் ரொம்ப குழப்பத்தில் இருந்து வருகிறார் மணிரத்னம். லட்சுமி மஞ்சு என்ற புதுமுக நடிகையை ஏற்கனவே புக் பண்ணி விட்டவர், படத்தின் முக்கிய நாயகி வேடத்துக்கு தொடர்ந்து கமல் மகள் அக்சராவை அழைத்து வருகிறார். டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் அவர் இருப்பதால் பூக்கடை படத்தின் நாயகி ஆவதா? வேண்டாமா? என்று தனது முடிவை சொல்லாமல் இழுத்தடித்து வருகிறார். இருப்பினும் அக்சராவை நடிக்க வைத்தே தீருவது என்று கடைசிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் மணிரத்னம்.

Friday, December 30, 2011

மண்டல வாரிய மக்கள் குறை கேட்பு திட்டம்

மதுரை மாநகராட்சி, முதல் முறையாக மண்டல வாரிய மக்கள் குறை கேட்பு திட்டத்தை துவக்கியுள்ளது. மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு அறிவதன் மூலம் மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியும் என்ற நோக்கில், இத்திட்டத்தை துவக்கியுள்ளதாக மேயர் ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

திட்டம் துவக்கப்பட்ட முதல் நாளன்று, மதுரை கே.புதூர் பகுதி வடக்கு மண்டலம் 27,45,46 வார்டு மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இத்திட்டத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்

கோவை: ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும், மத்திய அரசு பணிகளுக்கு, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பது, குறைந்து வருகிறது. ஐ.டி., துறையை விட, அதிக சம்பளம் தரும் இப்பணிகளுக்கு, மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க வேண்டும் என, ஸ்டாப் செலக்ஷன் கமிஷன், தென் மண்டல இயக்குனர் பாக்யதேவி ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் "தினமலருக்கு' அளித்த பேட்டி: மத்திய அரசுக்குத் தேவையான, 60 சதவீத பணியாளர்களை, ஸ்டாப் செலக்ஷன் கமிஷனும், 40 சதவீத பணியாளர்களை, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனும் தேர்வு செய்கிறது. பெண்களுக்கு, விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 18 வயது முதல் 25 வயது வரையிலான எவரும், விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவத்தினருக்கு, வயது வரம்பு இல்லை. தமிழகத்தின் முக்கிய நகரங்களில், தேர்வு மையங்கள் உள்ளன. ஆனாலும், தென் மாநிலங்களை பொருத்தவரையில், இப்பணிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், விண்ணப்பிப்பது குறைவாகவே உள்ளது. கடினமாக உழைத்தால், இத்தேர்வுகளில் எளிதில், வெற்றி பெற்று விடலாம். மத்திய பணியாளர் தேர்வாணையத்தில், 2010 முதல் நிறைய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இனி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஹால் டிக்கெட்டையும், ஆன்லைனில் பெற முடியும். தேர்வு முடிவுகள் வெளியான பின், பெற்ற மதிப்பெண்கள், ஓ.எம்.ஆர். அட்டையின் நகல் உட்பட அனைத்து விவரங்களையும் காணலாம். அனைத்தும் வெளிப்படையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள தேர்வுகளின் பட்டியல் தேதிவாரியாக வெப்சைட்டில் உள்ளது.


தென் மண்டலத்தில், 90 சதவீத விண்ணப்பங்கள், ஆந்திராவில் இருந்து வருகின்றன. 10 சதவீத விண்ணப்பங்கள் மட்டுமே, தமிழகத்தில் இருந்து வருகின்றன. 2010-11ல், இந்தியா முழுவதும் 40.85 லட்சம் பேர், விண்ணப்பித்தனர். இதில், தென் மாநிலங்களைச் சேர்ந்த, 2.51 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். அதற்கு முந்தைய ஆண்டிலும், இதே போன்ற விகிதாச்சாரம் தான். ஆகவே, தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், அனைத்து மத்திய அரசு பணிகளுக்கும் விண்ணப்பிக்க முன்வர வேண்டும்.

இன்ஜி.,பணியாளர்கள் அதிகரிப்பு: ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும், பணிகளுக்கு கடந்த ஆண்டு, விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில், 500 பேர் இன்ஜி., பட்டதாரிகள். டி.சி.எஸ்.,இன்போசிஸ் உள்ளிட்ட பிரபல ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிவோரும், இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது அதிகரித்து வருகிறது. இரவு முழுவதும் கண் விழித்து பணிபுரிந்தால் கிடைக்கும் சம்பளத்தை, வாரம் இருநாள் விடுமுறையுடன், அரசுப் பணியில் சம்பாதித்து விடலாம். எங்களுக்கு நல்ல திறமையான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். டேடா என்ட்ரி துறையிலும், நிறைய பணியாளர்கள் தேவை. ஐ.டி., மட்டுமே முடிவு அல்ல. தவறான எண்ணத்தால் நல்ல அரசு பணி வாய்ப்புகளை, தமிழக மாணவர்கள் தவற விடுகின்றனர். இவ்வாறு, பாக்யாதேவி கூறினார்.

அசம்பாவிதங்களை தடுக்க "ஹெல்ப் லைன்' எண்

துரை:ரயில்களில் அம்பாவிதங்களை தடுக்க கட்டணமில்லா "ஹெல்ப் லைன்' மொபைல் போன் (எண்: 99625 00500) குறித்து ரயில்வே போலீசார் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ரயில்வே போலீஸ் மற்றும் வோடோ போன் நிறுவனம் இணைந்து இந்த எண்ணை ஒதுக்கியுள்ளன. தெற்கு ரயில்வேயில் எப்பகுதியில் ரயில்களில் ஏதாவது பிரச்னை எனில் இந்த எண்ணில் பயணிகள் தகவல் தெரிவித்தால், அங்கிருந்து ரயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, சம்பவயிடத்திற்கு விரைவர். இதன் மூலம் அசம்பாவிதங்களை தவிர்க்க வாய்ப்பு ஏற்படும்.இந்த எண் குறித்து ரயில்வே ஸ்டேஷனில் நேற்று டி.எஸ்.பி., விநாயகம், வோடோபோன் நிறுவன இயக்குனர் நூருல் ருதா, எஸ்.ஐ.,க்கள் கண்ணன், விமலா, சிவகாமி மற்றும் போலீசார், பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்டிக்கர்களை ஸ்டேஷன் மற்றும் ரயில் பெட்டிகளில் ஒட்டினர்.

Thursday, December 29, 2011

'Kumki': Between Bomman and Alli

Director Prabhu Solomon is happy with the way his forthcoming film 'Kumki' is taking shape. His happiness is double that he is launching the legendary Sivaji Ganesan's grandson Vikram Prabhu in this movie, as the protagonist.

"Kumki is a love story between Bomman (played by Vikram Prabhu), a caretaker of elephants and Alli (played by Mollywood actress Lakshmi Menon), a tribal girl. Vikram Prabhu did enough homework to fit himself to the role," says the 'Mynaa' maker.

"Besides shedding light on love and life in the forest, the film will have enough importance for comedy. It's going to be a very good entertainer and we are planning to wind up the shooting as soon as possible," Solomon adds.

Answering a popular question, why his last two films are set in the backdrop of jungle, the director of 'King', 'Lee' and 'Laadam' says, "I got the spark for Kumki when I was shooting for Mynaa. There are no other specific intentions."

உயிர்த்தியாகம் செய்ய வேண்டாம்: சீமான் வேண்டுகோள்

சென்னை, டிச.29: முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக யாரும் உயிர்த்தியாகம் செய்ய வேண்டாம் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரள அரசின் அடாவடித்தனமான அரசியலால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் காரணமாக தான் உயிர் தியாகம் செய்வதாகக் கூறி, தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த சின்னராசின் மகன் ராமமூர்த்தி விஷம் அருந்தி உயிர் துறந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

கொண்ட கொள்கைக்காக உயிரைத் துறப்பது என்பது தமிழினத்தின் தனித்தன்மையாகும். அந்த அடிப்படையில் தமிழனின் உரிமை முல்லைப் பெரியாறு அணையில் பறிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சி, அதனை தன் உயிரைத் தந்தாதவது தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடனேயே ராமமூர்த்தி விஷம் அருந்தி தனது இன்னுயிரை ஈந்துள்ளார் என்று அறியும்போது அவருக்காக வணக்கம் செலுத்துகிறது நாம் தமிழர் கட்சி.

கேரள அரசும், அம்மாநில அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொண்டுவரும் திட்டமிட்ட பரப்புரையே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் இரண்டு உயிர்கள் பறிபோகக் காரணமாகும். கடந்த 19ஆம் தேதி தேனியில் ஜெயப்பிரகாசு என்று இளைஞர் தனது உடலில் தீயை மூட்டிக்கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து கடந்த 22ஆம் தேதி ராசபாளையம் ஒன்றியம், சீலையம்பட்டியைச் சேர்ந்த தே.மு.தி.க. தொண்டர் சேகர் விஷம் அருந்தி உயிர்த் தியாகம் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து இப்போது ராமமூர்த்தியும் உயிர்த் தியாகம் செய்துள்ளார். தென் தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும் வாழ்விற்கும் அடிப்படை ஆதாரமாகவுள்ள முல்லைப் பெரியாறு ஆற்று நீரை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள் என்று தங்கள் இன்னுயிரை ஈந்து நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள் இந்த தியாகிகள். எனவே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில், தமிழனின் உரிமை மீட்கும் அந்தப் போராட்டத்தில் நாம் வென்றே தீர வேண்டும். அதே நேரத்தில் நாம் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தை வெற்றி பெறும் வரை ஓயாது நடத்த வேண்டிய நிலையில், இப்படிப்பட்ட தன்னலம் பாரா தமிழர்கள் தங்கள் உயிரை இழப்பது வேதனையைத் தருகிறது. தென் தமிழ்நாட்டிலுள்ள ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதரத்தைக் காக்க மறியல், ஆர்ப்பாட்டம், பொருளாதாரத் தடை என்று பல்வேறு வழிகளில் நம்மால் போராடி வெற்றி பெற முடியும். நம் போராட்டம் தீ பற்றி எரியலாம் தவிர, போராளிகள் எரிந்துவிடக் கூடாது.

முல்லைப் பெரியாற்றில் நம் உரிமையை பறித்து நம் மக்களின் வயிற்றில் அடிக்க முற்பட்டுள்ள கேரள அரசியல்வாதிகளுக்கு அவர் மொழியிலேயே பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இங்கிருந்து செல்லும் பொருட்கள் பெருமளவிற்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாற்று அணைத் திட்டத்தை கைவிடும்வரையும், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு நீர் தேக்கும் வரை நமது போராட்டம் தொடரும்.

அப்படிப்பட்ட போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று வலிமை சேர்க்கவே இளைஞர்கள் தயாராக வேண்டுமே தவிர யாரும் உயிரை இழக்க வேண்டியதில்லை.

முல்லைப் பெரியாறு அணையை உடைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுவரும் கேரள அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சியைக் கண்டு அரண்டு போயுள்ளார்கள். நாம் தோற்கவும் மாட்டோம், அணையை விட்டுத் தரவும் மாட்டோம். உயிரைக் காக்கவே நாம் போராடுகிறோம். அதற்கு உயிரைத் தியாகம் செய்யத் தேவையில்லை, உணர்வுடன் நின்று போராடினாலே நம் உரிமையை வென்றெடுத்துவிட முடியும்.

Wednesday, December 28, 2011

புயல் சென்னையை நெருங்கியது; இன்று இரவு முதல் பலத்த மழை பெய்யும்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கியது. இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகம் பெய்துள்ளது. இந்த வாரத்தில் மழை பருவ காலம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தென் கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம், நேற்று புயலாக மாறியது.

இதற்கு 'தானே' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 800 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்த “தானே” புயல் சிறிது சிறிதாக நகர்ந்து 700 கி.மீ. தூரத்தில் இருந்தது. இன்று காலை நிலவரப்படி வங்க கடலில் சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு புயல் நெருங்கி வந்துள்ளது. இன்று இரவுக்குள் மேலும் நெருங்கிவிடும்.

“தானே” புயல் சென்னை நெருங்குவதன் காரணமாக, இன்று இரவு முதல் மழை பெய்யத் தொடங்கும். சென்னை-புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் புயல் கரையை கடக்கும் வரை தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் காரணமாக கடல் சீற்றமாக காணப்படும்.

50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, பாம்பன், எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு வருகிறது.

Tuesday, December 27, 2011

Pasupathi, Lal in Mani's next?

Every passing day there is a fresh update about Mani Ratnam's forthcoming film. The latest is that veterans Pasupathi and Lal will be part of the movie, which is set in the backdrop of fishermen in and around Rameswaram.

"While Pasupathi will play a minuscule character which will be of high importance, Lal will do a full-length role. Both actors are happy about working with Mani Ratnam, one of the top directors of the country," say sources.

'Action King' Arjun and Tollywood actress-producer Lakshmi Manchu are already on board this romantic flick, which has Karthik's son Gautham as the protagonist. The leading lady is yet to be finalized, though various names are doing rounds.

AR Rahman, who was introduced to cinema by Mani Ratnam in 'Roja' is composing the music and he has in fact composed a melody number already. "Vairamuthu has penned the lyrics and it has come very good," add sources.

Sunday, December 25, 2011

கேரளாவில் 44 நதிகள் இருக்கின்றன..அவற்றில் வெறும் எட்டு சதவீத நீரைத்தான் கேரளமே பயன்படுத்துகிறது..மீதம் உள்ள 92 விழுக்காடு நீர் வெறுமனே கடலில் கலக்கிறது..
முல்லை பெரியார் ஆணை மூலம் கிடைக்கும் நீர் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
மேலும் இந்த பெரியாறு ஆணை மூலம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் நீர்தான் அவர்களுக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களுக்கு ஜீவநாடி...



மலையாளிகள் உண்ணும் சோறும்,குழம்புக்கு காய்கறியும்,தின்னும் பழமும், பூஜை மலரும் அவ்வளவு ஏன் கறிவேப்பிலை கூட தமிழகத்தில் இருந்து தான் போகிறது..
உண்மையில் மலையாளிகள் செய்ய வேண்டியது வீணாகும் 92 விழுக்காடு நீரை தமிழகத்தில் உள்ள உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு கொடுத்து அதற்குரிய விலையை பெற்று எல்லா பொருட்களையும் கிடைக்க பெறனும்..

இதை சொன்னவர் பிரபல மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா..

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேரை இடமாற்றம் செய்து அரசின் கூடுதல் தலைமைச் செயலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

1. அம்ரேஷ் பூரி (கோவை நகர ஐஜி) - சென்னை புலனாய்வு ஐஜி யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. பி.தாமரைக்கண்ணன் ( சென்னை புலனாய்வு ஐஜி) - விரிவாக்கப்பட்ட சென்னையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3. சஞ்சய் அரோரா (விரிவாக்கப்பட்ட சென்னையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்) - விரிவாக்கப்பட்ட சென்னையின் போக்குவரத்து ஐஜி/கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்

4. டி.பி.சுந்தரமூர்த்தி ( சென்னை, ஐஜி எஷ்டாபிளிஷ்மெண்ட்) - கோவை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்லார்.

5. டி.ராஜேந்திரன் (சென்னை தொழில்சேவை கூடுதல் காவல் இயக்குனர்) - சென்னை, மனித உரிமை ஆணைய கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

6. கே.பி. மஹேந்திரன் (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை கூடுதல் இயக்குநர்) - தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய கூடுதல் இயக்குனராகப் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளார்.

7. மிதிலேஷ் குமார் ஜா (தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய கூடுதல் இயக்குனர்) - சென்னை தொழில் சேவை கூடுதல் காவல் இயக்குனராகப் பதவி மாற்றப்பட்டுள்ளார்.

8. ஆர்.சேகர் ( சிபிசிஐடி கூடுதல் இயக்குனர்) - புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ரயில்வே கூடுதல் காவல் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

9. டி.கே.ராஜேந்திரன் (கூடுதல் காவல் இயக்குனர், நிர்வாகம்) - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. நரேந்தர் பால் சிங் ( சென்னை ஆயுதப்படை கூடுதல் காவல் இயக்குனர்)- சிஐடி குற்றப் பிரிவு கூடுதல் காவல் இயக்குனராக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை கூடுதல் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ளார்.

Saturday, December 24, 2011

Bharathiraja packs off Iniya and Karthika

Bharathiraja had signed up Iniya and Karthika as the leading ladies for Anna Kodiyum Kodi Veeranum and the shooting is progressing in Theni district. The recent Mullai Periyar issue has now come as a rider on this film progress.

According to sources, Bharathiraja has asked Iniya and Karthika, who are both natives of Kerala, to pack off to their homes as he has no intention of shooting their portions until the Mullai Periyar issue is settled down.

With this issue still unresolved and no sign of compromise for either of the two states involved – Kerala and Tamil Nadu – looks like Bharathiraja is in for a long wait.

P.R.P EXPORTS EXPO


டிச-25 அன்று வீர மங்கையர் தினம்


வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான்: வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.

சிவகங்கை சீமை ஆண்ட வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் 215 வது நினைவேந்தல் விழா, வருகின்ற டிச-25 அன்று சிவகங்கை நினைவிடத்தில் நடைபெற உள்ளது. அந்தநாளை அனைத்து இயக்கங்களும் "வீர மங்கையர் தினம்" மாக கொண்டாடி வருகிறது.

Friday, December 23, 2011

அணைக்காகப் பாரதிராஜா பேச்சு

முல்லைப் பெரியாறு அணைக்காக இன்று மே 17 இயக்கம் ஏற்பாடு செய்த செய்தியாளர்களைச் சந்தித்திப் போது திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் தங்கர்பச்சான் ஆகியோர் தண்ணீருக்கான தங்கள் கருத்தை வெளிப்படுத்தினார்கள்.

அப்போது பேசிய திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, வரும் 30 ஆம் தேதி தேனி, கம்பம் பகுதியில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும் அவர் கூறும் போது, தேசியம் எனும் ஒரு சொல்லில் எங்கள் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்டுள்ளது என்றார். அதனால்தான் 2 இலட்சத்திற்கும் கூடுதலான தொப்புகள் கொடி உறவான தமிழர்கள் சாகும் போது பார்த்துக் கொண்டு இருந்தோம் இப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்றார்.

மு.க.ஸ்டாலின் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதி

சென்னை, டிச.23: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இதயம் தொடர்பான பிரச்னை காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ராமச்சந்திரா மருத்துவமனைக்கு திமுக மூத்த தலைவர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

Thursday, December 22, 2011

PROTEST

AR Rahman's tunes a duet song for Mani Ratnam

Oscar Award winner AR Rahman has started the music composition for Mani Ratnam's next movie, which is tentatively tiled Pookadai. In fact, the musician is ready with a romantic-duet track, which is penned by poet-lyricist Vairamuthu.

Vairamuthu has confirmed and said that he has penned the lyrics for the song. In his words, the number is drenched in melody and he is confident that it will garner a huge audience's attention. But the writer refuses to reveal further details and assures that the album will top the chart.

Pookadai directed by Mani Ratnam is the launchpad of actor Karthik's son, Gautham. While Action King Arjun Sarja plays the antagonist, the hunt for the female lead is on. The only other available detail about the crew is that Rajeev Menon is handling the camera for the forthcoming movie.

உசிலம்பட்டியில் உண்ணாவிரதப் போராட்டம்

உசிலம்பட்டி : முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் , கேரள அரசை கண்டித்து தென் மாவட்டங்கள் முழுவதும் கடையடைப்பு, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மதுரையில் செயல்பட்டு வரும் கடைகள், ஹோட்டல்கள், பெரிய வர்த்தக நிறுவனங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவைகள் அடைக்கப்பட்டுள்ளன. மடீட்சியா மற்றும் தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கங்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்று வருகிறது. லோயர்கேம்ப் பகுதியில், விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய பார்வார்ட் பிளாக் கட்சி சார்பில் அதன் தலைவர் முருகன்ஜி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

VAIRAMUTHU - KAMAL

நடிகர் கமல்ஹாசனுக்கும், கவிஞர் வைரமுத்துவுக்கும் எப்போதுமே ஒரு நட்பு உண்டு. அந்த வகையில் தனது படங்களில் வைரமுத்துவுக்கு தவறாமல் பாடல கொடுத்து வருகிறார் கமல். இப்போதுகூட விஸ்வரூபம் படத்தில் ஒரு பாடல் எழுத சொல்லியிருக்கிறார். தான் சொன்னது போலவே அவர் அற்புதமாக எழுதிக்கொடுத்ததால் வியந்து போனாராம் கமல்.

அதோடு ஒரு பேனாவை கமல் பரிசளித்திருக்கிறார். அது சாதாரண பேனா அல்ல. இத்தாலியின் எரிமலை குழம்பிலிருந்து தயாரிக்கப்பட்டதாம். ஜி8 மாநாட்டில்கூட இந்த பேனாவில்தான் கையெழுத்துப்போடுவார்களாம் உலக தலைவர்கள். அத்தகைய பெருமை வாய்ந்த பேனாவை வைரமுத்துவுக்கு பரிசளித்திருக்கிறார் கமல்.

Tuesday, December 20, 2011

ஏப்ரல் 1 இல் மின்கட்டணம் உயர்கிறது

தமிழ்நாடு அரசு அண்மையில் பேருந்துக் கட்டணம் மற்றும் பால் விலை ஆகியவற் உயர்த்தியது. அப்போதே மின் கட்டணமும் விரைவில் உயர்த்தப்படும் என்றும் அது பற்றி மக்கள் கருத்து கேட்கப்படும் என்றது.

இந்நிலையில் இன்று சென்னையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கபிலன் கூறும் போது, மின்சாரக் கட்டண உயர்வு குறித்து சென்னையில் பிப்ரவரி மாதத்தில் மக்களின் கருத்து கேட்கப்படும் என்றும் அதே போல் நெல்லை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பகுதியில் ஜனவரியில் கூட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, பொதுமக்கள் கட்டண உயர்வு குறித்து மின்னஞ்சல், மடல் மூலமாகத் தங்கள் கருத்துகளை டிசம்பர் 31 க்குள் அனுப்பினால் ஆணையம் அதை ஆராயும் என்றார்.

இறுதியாக இதற்கான உயர்நிலை குழுவிடம் ஆய்வு செய்தப் பின் வரும் 2012 ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் என்றார்.

சின்ன அம்மை நோய் பரவாமல் தடுக்கும் சூரிய ஒளி: புதிய ஆய்வில் தகவல்

“சின்னஅம்மை நோய் பரவாமல் தடுக்கும் சக்தி சூரிய ஒளிக்கு உண்டு” என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. சின்ன அம்மை நோய் ஒருவித வைரஸ் கிரிமியால் பரவுகிறது. அதை தடுக்க ஊசி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அந்த நோய்க்கு சூரிய ஒளி சிறந்த மருந்து என தெரிய வந்துள்ளது.

லண்டனை சேர்ந்த நிபுணர்கள் குழு சின்னஅம்மை நோய் தாக்கியவர்களிடம் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அவர்களை நீண்ட நேரம் சூரிய ஒளியில் நிற்க வைத்தனர். அவர்களுக்கு அந்த நோயின் தாக்கம் குறைந்தது. அது மேலும் பரவவில்லை. ஏனெனில் அது வைரஸ் கிருமிகளை அழித்து அவற்றின் நோய் பரப்பும் தன்மையை கட்டுப்படுத்துவதாக கருதப்படுகிறது.

எனவே சின்ன அம்மை நோயை கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக சூரிய ஒளி திகழ்வதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

NAAM THAMILAR IN SHENCOTTAH

ஜாதகம் கணித்த விவகாரம்: சசிகலா குடும்பத்தினர் வெளியேற காரணம்

சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றால், அடுத்த முதல்வரை யாரை நியமிப்பது என, சசிகலா உறவினர்கள் ஜோதிடம் பார்த்த தகவல் மற்றும் சசிகலா, இளவரசிக்காக சட்ட நிபுணரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது, தி.மு.க., குடும்பத்தினரிடம் மறைமுக தொடர்பு வைத்த விவகாரம் போன்றவை தெரிய வந்ததால், மன்னார்குடி குடும்பத்தினருக்கு கூண்டோடு கல்தா கொடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா குடும்பத்தினர்முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள், கட்சி நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, முதல்வரின், "குட்புக்'கிலிருந்து அவர்களை வெளியேற்றுவதில் சசிகலாவின் உறவினர்களின் முக்கிய பணியாக இருந்தது.முதல்வர் ஜெயலலிதாவை தினமும் யார் சந்திக்க வேண்டும், எந்தெந்த கடிதங்கள் அவரது பார்வைக்கு அனுப்ப வேண்டும், எந்தெந்த பைல்களை அனுப்பி கையெழுத்து பெற வேண்டும் போன்ற பணிகளை சசிகலா செய்து வந்தார்.அவரது கண் அசைவு இன்றி, போயஸ் கார்டன் வீட்டில் எந்த காரியமும் நடக்காது.சர்வ வல்லமையுடன் கோலோச்சி வந்த சசிகலாவை, கட்சியிலிருந்து நீக்குவதற்கு அவரது குடும்ப அதிகார மையமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சசிகலாவின் உறவினர் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளார். அவருக்கும், தி.மு.க., குடும்பத்தினர் சிலருக்கும் மறைமுக நட்பு இருந்துள்ளது. தி.மு.க., குடும்பத்தினருக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பதவிகளில் நியமிக்க வைப்பதில், அவரது கைங்கர்யம் உண்டு.

குடும்பத்தினரை காப்பாற்ற முயற்சி : முதல்வருக்கு அரசியல் ஆலோசனை கூறும் முக்கிய பிரமுகர் ஒருவரின் உறவினர் கட்டிய கட்டடத்திற்கு, சி.எம்.டி.ஏ., அனுமதி பெறுவதற்கு சசிகலா உறவினர் ஒருவர் பணம் கேட்ட தகவல், முதல்வருக்கு தெரிய வந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சகிகலா குடும்பத்தினரை மட்டும் காப்பாற்றுவதற்காக, சட்ட நிபுணர் ஒருவர் மூலமாக, முன்னாள் நீதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய தகவலும் கிடைத்துள்ளது.சமீபத்தில் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராவதற்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூரு சென்றனர். அப்போது, அங்கு சசிகலாவின் குடும்பத்தினர் அனைவரும் சென்றுள்ளனர். முதல்வர் பெங்களூரு கோர்ட்டிற்கு சென்ற போது, சசிகலா குடும்பத்தினர் யாரும் வரவில்லை; இதுவும் முதல்வருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த முதல்வர் யார்?தி.மு.க., குடும்பத்தினர் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவர் நடத்தும் மதுபான நிறுவனங்களுக்கு, டாஸ்மாக் கடைகளில் விற்பதற்கான ஏற்பாடுகளை சசிகலா உறவினர்கள் செய்துள்ளனர். பிரபல மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த தகவலை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.இவை அனைத்தும் விட மிக முத்தாய்ப்பாக, சொத்து குவிப்பு வழக்கில் முதல்வருக்கு எதிரான தீர்ப்பு கிடைக்குமானால், அடுத்த முதல்வர் யாரை நியமிக்கலாம் என்பதை ஜோதிடர் மூலம் சசிகலாவின் உறவினர்கள், பிரபல ஜோதிடர் ஒருவரை சந்தித்து, மூத்த அமைச்சர் ஒருவரின் ஜாதகத்தையும், ஜூனியர் அமைச்சர் ஒருவரின் ஜாதகத்தையும் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மூத்த அமைச்சரின் ஜாதகத்தை ஜோதிடர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், ஜூனியர் அமைச்சரை தேர்வு செய்யலாம் என ஜோதிடர் தெரிவித்த தகவலும் கசிந்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் புகார்:வட மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர், தங்களை மத்திய அரசு பணிக்கு அனுப்பி வையுங்கள் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கான காரணங்கள் குறித்து முதல்வர் கேட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது, தி.மு.க.,வுக்கு வேண்டிய அதிகாரிகளுக்கு, முக்கிய பதவி கொடுப்பதற்கு சசிகலா உறவினர்கள் படாத பாடு படுத்திய விவரங்களையும் அதிகாரிகள், முதல்வரிடம் பட்டியலிட்டுள்ளனர். கடந்த பார்லிமென்ட், சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் சீட் வழங்கப்பட்டதில், சசிகலாவின் உறவினர்கள் பல கோடிகளை வசூலித்த புகாரும் மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் பலர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள். அவர்களை முதலில் மாற்ற வேண்டும். அவர்களில் சிலர், தம் மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளனர். பாதுகாப்பு பணி போலீசாரின் சகோதரர் ஒருவர், எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். எங்களை, "சின்னம்மா போலீஸ்' என வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

டாஸ்மாக்கில் ஆதிக்கம், கவுன்சிலர்கள் வேட்பாளர்கள் தேர்விலும், மண்டலக் குழுத் தலைவர்கள் நியமனத்திலும், மாவட்ட நிர்வாகிகள் நியமனத்திலும் வசூல் வேட்டை, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில், தி.மு.க., ஆதரவாளர்கள் நியமனம், ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்த நடவடிக்கை குறித்து தகவல் பரிமாற்றம் செய்தது, கட்சிக்குள் கோஷ்டிப் பூசலை வளர்த்தது, அதிகார மையங்களின் அராஜகச் செயல் போன்றவை தான், சசிகலாவின் குடும்பத்தினரை வெளியேற்றுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.இவ்வாறு அவர் கூறினார்.

Monday, December 19, 2011

Jayalalithaa expels companion Sasikala from AIADMK

Chennai: Tamil Nadu Chief Minister J Jayalalithaa has expelled her close aide, Sasikala Natarajan, and 11 of her relatives from her party, the AIADMK. No reason has officially been given for the drastic step. Those who've been handed the pink slip include Sasikala's husband, Natarajan; her nephew and former MP T T V Dinakaran; and Sudhakaran, Jayalalithaa's estranged foster son.

Sasikala has long served as Jayalalithaa's companion, and lives with her. She is one of the main accused in a case that alleges the Chief Minister misused her office from 1991-1996 to collect assets worth 66 crores that cannot be accounted for.

That case is being tried by a Bangalore court to ensure a fair trial. Jayalalithaa objected to being summoned by that court, but was ordered by the Supreme Court to appear in person to answer questions. Sasikala travelled with her for those hearings in a special plane from Chennai.

Sasikala has for three decades been acknowledged as a power centre in the AIADMK because of her proximity to Jayalalithaa. Insiders say that her opinions counted towards the selection of ministers and party candidates. But her alleged interference in the postings of senior bureaucrats may have prompted the break-up that was announced today.

In 1996, when Jayalalithaa was beleaguered by a slew of corruption charges, she had a brief falling out with Sasikala, who belongs to the strong Thevar community, traditionally AIADMK loyalists.


Read more at: http://www.ndtv.com/article/india/jayalalithaa-expels-companion-sasikala-from-aiadmk-159136&cp

தமிழக-கேரள எல்லையில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்-500 பேர் கைது

செங்கோட்டை: நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று போராட்டம் நடத்தத் திரண்டபோது போலீஸார் அனைவரையும் தடுத்துக் கைது செய்தனர்.

முல்லை பெரியாறு அணை பிரச்சனை நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இதனால் தமிழகத்துடன் கேரளாவை இணைக்கும் 13 பாதைகளில் பெரும் பாலான பாதைகளில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வாகனமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் முரண்டு பிடிக்கும் கேரளாவுக்கு பொருளாதார தடை மூலம்தான் பாடம் புகட்ட முடியும் என பல்வேறு அமைப்புகள் உறுதியுடன் நம்பி தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அத்திவாசிய பொருட்கள் கொண்டு செல்ல தொடர் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் தற்போது அதிகளவிலான பாதுகாப்புடன் உள்ள செங்கோட்டை புளியரை சாலையில் சராசரியாக 4 ஆயிரம் வாகனங்கள் கேரளா நோக்கி சென்று வருவதால் இப்பாதையில் பொருளாதார தடை மறியல் போராட்டத்தினை நடத்திட முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்பு குழு அமைக்கப்பட்டு இன்று காலை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புளியரையில் காலை 11 மணி அளவில் நாம் தமிழர் இயக்குனர் சீமான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

சீமான் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் முழக்கமிட்டபடி முன்னேறினர். உம்மன் சாண்டியின் கொடும்பாவியையும் கொளுத்தினர். இதையடுத்து போலீஸார் அனைவரையும் கைது செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் அப்பாவித் தமிழர்களை தாக்குவது கண்டிக்கத் தக்கது. தமிழர்களை தாக்குபவர்களை நாங்கள் திருப்பி தாக்குவோம். அணை விவகாரத்தை நாம் தமிழர் இயக்கம் முன்னெடுத்துச்செல்லும் என்றார்.

பதற்றம் நீங்கியது

புளியரையில் சீமான் போராட்டம் காரணமாக காலை 5 மணியில் இருந்து இருமாநில எல்லைகளிலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தற்போது போராட்டம் முடிந்ததை அடுத்து பத்து மணி நேர பதற்றம் முடிவுக்கு வந்தது.

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை: ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் வசித்து வந்தார். சமீபகாலமாக சசிகலா மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று திடீரென சசிகலா மீதும், அவரது குடும்பத்தினரும் மீதும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அ.தி.மு.க.வில் இருந்து அவர்களை விலக்கி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

1. வி.கே.சசிகலா (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்)

2. ம.நடராஜன்

3. திவாகர் (மன்னார்குடி)

4. டி.டி.வி. தினகரன்

5. வி. பாஸ்கரன்

6. வி.எம்.சுதாகரன்

7. டாக்டர் எஸ்.வெங்கடேஷ்

8. எம்.ராமச்சந்திரன்

9. ராவணன்

10. மோகன் (அடையாறு)

11. குலோத்துங்கன்

12. ராஜராஜன்

13. மகாதேவன்

14. தங்கமணி

ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

DR.SETHURAMAN

FORWARD BLOC

Dam row did not deter them from getting hitched

COIMBATORE: The simmering discontent among Tamils and Malayalis over the Mullaperiyar dam issue failed to deter them from their resolve to live together. They disregarded not just language differences but also the physical deformities to unite in marriage.

It was the unusual love and care for a childhood friend that prompted T Prabhu of Kurichi to marry his neighbor R Lalitha Devi, who has been physically challenged since childhood because of polio. Prabhu belongs to Thevar community while Laitha Devi's parents hail from Kerala. Prabhu remained solid in his decision despite opposition from both families in terms of language difference and physical deformities.

"They asked me the rational of marrying a Malayalee with no capability to even walk around. But we thought beyond language and mobility, there was pure love in our minds. So I married her on December 11 ignoring opposition from both the families,'' said a proud Prabhu, who started living with Lalitha Devi in a rented home at Machampalayam near Sundarapuram.

"Prabhu is my childhood friend and we never found the language differences as a valid reason to remain apart. He is in fact an epitome of love and always liberal in helping others. Right from the beginning, he was eager in boosting my morale to overcome the inferiority caused by the disability. It is my fortune that Prabhu became part of my life," said Lalitha.

Though the polio crippled her, Lalitha was very eager to pursue higher education. Prabhu was her classmate in Kurichi Government High School from class 1 to 10. As neighbours, it was the task of Prabhu to take Lalitha to school and bring her back home. "We were good friends from the beginning but love started growing in our minds just two years ago,'' Lalitha said. After passing class 12, Lalitha turned to tailoring and took tuitions to school children. After working with a private company for about a decade, Prabhu started working with an insurance company recently.

As both families refused to conduct the marriage, they approached Periyar Dravida Kazhagam to conduct the marriage in a most radical way. The marriage held on December 11 and it was formally registered on December 13 at the registrar office. At the rented home, Lalitha is not sitting idle. She resumed her tuition classes for school children. But there is a complex issue for the couple to deal with. Both of them are not proficient in cooking. They are now learning rudimentary of cooking using an induction stove.

Sunday, December 18, 2011

''ெவறி பிடித்த அரசியல்வாதி இனி யாரும் ேவண்டாம்!' ெவடிக்கிறார் பாரதிராஜா




USILAMAPATTI PASUMPON COLLEGE

DR.SETHURAMAN

seeman

மாநிலத்தில் 43 புதிய திட்டங்கள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு...

சென்னை, நவ.14:- மாவட்ட ஆட்சியர்களின் கோரிக்கைகளை ஏற்று, மாநிலம் முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்கள், சிற்றூர்களில் 43 புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மேலும், மக்கள் நலத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் குழுவுடன் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் மாதந்தோறும் விவாதிக்க இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டை முடித்து வைத்து அவர் பேசியது:

ஒரு நல்லாட்சி என்பது வலுவான மற்றும் சிறந்த கூட்டு முயற்சியின் மூலம் மட்டுமே சாத்தியப்படும். மாவட்ட ஆட்சியர்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளேன். மக்களின் விருப்பங்கள் மிகப்பெரிய அளவில் உள்ளது. அவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டும். எனவே, எனது எதிர்பார்ப்புகளை நீங்கள் நிறைவு செய்வீர்கள் என நம்புகிறேன்.

வேளாண்மைக்கு முக்கியத்துவம்:-எனது அரசில் வேளாண்மைக்கு முதன்மையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. வேளாண்மைக்குத் தேவையான அனைத்து இடுபொருள்களையும் உரிய காலத்தில் வழங்கிட வேண்டும். உரம் போன்ற பொருள்களைத் தேவையின்போது வழங்காமல் பின்னர் வழங்கினால் அது வீணானதாகும். எனவே, இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர்கள் சாதுர்யமாகச் செயலாற்றிட வேண்டும்.

விவசாயிகள் தங்கள் கிராமங்களைவிட்டுச் செல்கிறார்களா? அவர்களின் வாழ்வில் அமைதி, நிம்மதி ஏற்படுகிறதா? உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா போன்ற அம்சங்களைக் கண்காணிக்க வேண்டும்.

குழந்தைகள்-இளைஞர்கள்:-தனிப்பட்ட முறையில் என்னுடைய விருப்பமான துறை குழந்தைகள் மற்றும் இளைஞர் நலனாகும். ஒவ்வொரு குழந்தையும் சரியான கல்வி வாய்ப்பு, சிறந்த சுகாதாரம் ஆகியவற்றைப் பெற்றிட வேண்டும். குழந்தைகளை சமுதாயத்தின் மதிப்புமிக்க சொத்துகளாக உருவாக்க வேண்டும்.

மகளிர் நலனிலும் ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, மகளிரின் சுகாதாரம், கல்வி, வருவாயைப் பெருக்கும் வழிமுறைகளுக்கு ஆட்சியர்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பொது விநியோகத் திட்டம்:-பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருள்கள் ரேஷன் கடைகளில் சரியாக இருப்பு வைக்கப்படுகிறதா, சரியாக வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்திட வேண்டும். பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் மகளிர் சுகாதார வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதுபோன்ற கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் செயல்பாடுகளை வாரத்துக்கு ஒருமுறை கண்காணிக்க வேண்டும்.

மக்களுக்குக் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். வீட்டு வாசலுக்கே குடிநீர் வசதி கிடைக்காவிட்டாலும், அருகிலாவது கிடைப்பதற்கு வழி செய்திட வேண்டும். நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவுக்குக் குடிநீர் குழாய்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அமைத்துள்ளது. அதில், எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் கண்காணிப்பது அவசியம்.

அரசுக்குச் சொந்தமான நிலங்கள் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும். கோயில் நிலங்கள், உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான நிலங்கள், மத்திய அரசின் புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு ஏதும் இல்லாதபடி தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் அங்குள்ள வேளாண்மைப் பணிகள், குறிப்பாக, அறுவடைக்குப் பிந்தைய பணிகள், உணவு தானியம் வீணாவதைத் தடுப்பது, உணவுப் பொருள்களின் திருட்டைத் தடுப்பது போன்றவற்றில் யுக்திகளைக் கையாள வேண்டும்.

கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், மீன்வளத் துறையின் திட்டங்கள் தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, குப்பை கொட்டும் தளங்கள், நீர் நிலைகள் பாதுகாப்பு ஆகியவற்றில் தங்களது கவனத்தைச் செலுத்திட வேண்டும்.

43 புதிய திட்டங்கள்:-மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களின் குழுவுடன் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் மாதந்தோறும் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளேன். அப்போது, மாவட்டங்களில் உள்ள சத்துணவுக் கூடங்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் விடுதிகள், சுகாதார வளாகங்கள், கிராமச் சாலைகள், ரேஷன் கடைகள் உள்ளிட்ட காட்சிகளை ஆட்சியர்கள் காண்பித்து அதன் செயல்பாடுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதன்பின்பு, 43 புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக, தூத்துக்குடியில் புதிய சரக்கு முனையம் அமைப்பது, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள், மேம்பாலங்கள் அமைப்பது, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர், பிரிண்டருடன் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

உத்தரவுகளை வெளியிட வேண்டும்:-பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும் கேட்டுக் கொண்ட கோரிக்கைகளின் படி புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதை, சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்கள் உறுதி செய்து உரிய உத்தரவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.


திட்டங்களின் விவரம்






* கோவையில் உள்ள மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவிநாசி சாலை, பொள்ளாச்சி சாலை, சத்தியமங்கலம் சாலைகள் மேம்படுத்தப்படும்.

* உக்கடம், ஆத்துப்பாலம், வடக்கு சுற்றுச்சாலை ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும்.

* ராமநாதபுரம் மாவட்டம் ஆழ்கடல் மீன்பிடிப்பு இனி, டோக்கன் முறை மூலம் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் அனுமதிக்கப்படும்.

* அரியலூர் மாவட்டத்தில் சேதம் அடைந்துள்ள 42 கி.மீ. நீளமுள்ள சாலை சீரமைக்கப்படும்.

* கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் சாலைகள் அமைப்பது தொடர்பாக அந்த மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

* ஈரோடு மாவட்டம் மாரியம்மன் கோயில் அருகே புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.

* ஈரோடு மாவட்டம் சி.எஸ்.ஐ. தேவாலயம் அருகே சாலை விரிவுபடுத்தப்படும்.

* காரமடை வழியாக உதகைக்குப் புதிய வழித்தடம் குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

* தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்தைக் குறைக்கும் வகையில் புதிய சரக்கு முனையம் அமைக்கப்படும்.

* பெரியகுளம் - கொடை ரோடு சாலையை விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்படும்.

* நாகப்பட்டினத்தில் மீன்வள தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.

* பொன்னேரி வருவாய் கோட்டம் பிரிக்கப்பட்டு, அம்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் அமைக்கப்படும். அதில், அம்பத்தூர், மாதவரம் தாலுகாக்கள் இருக்கும்.

* சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.

* திருவண்ணாமலையில் நடைபெறும் மகாதீப திருவிழாவுக்கு மாநில அரசின் பங்கான 50 சதவீதம் 70 சதவீதமாக உயர்த்தப்படும்.

* சித்ரா பௌர்ணமி தினம் மதப் பண்டிகையாக அறிவிக்கப்படுகிறது.

* வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.

* வேலூரில் சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* பட்டாசு ஆலைகளில் பணியாற்றுவோருக்கான பயிற்சி முகாம், சிவகாசியில் அமைக்கப்படும்.

* நாமக்கல் புறநகர்ப்பகுதியில் பஸ் கட்டுமானத்துக்கான பிரிவு தொடங்கப்படும்.

* கடலில் மீனவர்கள் காணாமல் போகும் நேரங்களில் தேவையின் அடிப்படையில் ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்படும்.

* தேடுதல் பணியில் ஈடுபடும் கடலோர போலீஸôருக்கு அதிவேக படகுகள் வழங்கப்படும்.

* தூத்துக்குடி நகருக்கு கூடுதல் தண்ணீர் அளிக்கப்படும்.

* தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம்.

* தூத்துக்குடி வி.வி.டி. சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.

* பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் பயிற்சி சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்படும். அந்தக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கப்படும்.

* எஸ்.எம்.எஸ். முறை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆசிரியர்களின் வருகை பதிவு கணக்கிடப்படும்.

* கடலூர் மாவட்டத்துக்கென ஒரு பெருந்திட்ட வளாகத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* புதிதாக கட்டப்படும் அரசு விடுதிகளில் சூரிய மின் சக்தி அமைப்புகள் நிறுவப்படும்.

* மேட்டூர் அணையில் இருந்து ஜூனில் தண்ணீர் திறக்கப்படுகிறது. அதற்கு முன்பாக, அங்குள்ள கால்வாய்களைத் தூர்வாரும் பணிக்கான நிர்வாக ஒப்புதல் ஜனவரியிலேயே அளிக்கப்படும்.

* திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கால்வாய்களில் தண்ணீர் சீராகச் செல்லும் வகையில் ஒருங்கிணைந்த அளவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் 12 கிலோ மீட்டர் நீளத்துக்கு இணைப்புச் சாலை திட்டம் செயல்படுத்தப்படும். இந்த மலைப்பகுதியில் சுற்றுலா தலமாக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்கும்.

* கிருஷ்ணகிரியில் உள்ள தோட்டக் கலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், அங்குள்ள மாம்பழங்களை கொள்முதல் செய்து, மாம்பழக் கூழுடன் பால் சேர்த்த கலவையை மதிய உணவுத் திட்டத்தில் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆவின் நிறுவனம் மேற்கொள்ளும்.

* அரியலூர் மாவட்டம் மருதயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.

* மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டவுடன் அனைத்து கால்வாய்களையும் பராமரிக்கும் பணி தொடங்கப்படும். அணை ஜுனில் திறக்கப்படும் போது, அவை நல்ல முறையில் இருப்பதற்கு வழி செய்யப்படும்.

* தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் சிறிய வெங்காயத்தையும் சேர்த்து, அவற்றை பயிரிடும் விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* பெரம்பலூர் மாவட்டத்தில் ஒழுங்கு முறை விற்பனை சந்தை அமைக்கப்படும்.

* திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்படும். இதன்மூலம், 60 கிலோமீட்டர் பயணம் செய்து சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருவது தவிர்க்கப்படும்.

* மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயதின் அளவு 45-லிருந்து 18 ஆகக் குறைக்கப்படும்.

* அனைத்து மாவட்டங்களிலும் சட்டப் பிரச்னைகளை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு தனி உதவியாளர் நியமிக்கப்படுவார்.

* கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பிரிண்டருடன் இணைந்த லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.

* தூத்துக்குடி மாவட்டம் கோரப்பள்ளம் கண்மாய் தூர்வாரப்பட்டு, அதன் கரைகள் பலப்படுத்தப்படும்.

* கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் பெரிய அளவில் உள்ளன. எனவே, அவை மறுசீரமைப்பு செய்யப்படும்.

* கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை பொதுப்பணித் துறை மேற்கொள்ளும்.

டிரைவிங் லைசன்ஸ் ஆன்லைன் அப்ளிகேஷன்

ஒவ்வொரு RTO அலுவுலகத்திலும் இப்பொழுது என்ன நம்பர் சீர்யல் ஓடுகிறது TN - 13 - XX - /**//**//**/X , என்ன வி ஐ பி நம்பர் இருக்கிறது, லைசன்ஸ் ஆன்லைன் அப்ளிகேஷன், உங்களின் டிரைவிங் லைசன்ஸ் தற்போதைய நிலமை, ஒவ்வொரு வாகனத்திற்க்கும் ரோடு டாக்ஸ் ஆன்லைனில் செலுத்துதல், கன்டக்டர் உரிமம் புதுபித்தல், புது வாகன் ரிஜிஸ்ட்ரேஷன் அப்ளிகேஷன், ஒட்டுனர் உரிமம் ரோடு டெஸ்ட் ஆன்லைன் அப்பயின்ட்மென்ட், மற்றூம் லோன் ஹைபோதிகேஷன் ஆர் சி புக்கில் இருந்து எடுக்க எந்த ஆர் டி ஓ ஆபிசுக்கு நீங்கள் செல்ல வேண்டும் மற்றூம் வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் டீட்டேயில்ஸ் எல்லாம் இனிமே நம் கையில், இனிமே புரொக்கர் வேண்டவே வேண்டாம், இந்த சேவை தான் நாம் எதிர்பார்த்த சேவை...........

1.ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு - Learners License Online Application - http://tnsta.gov.in/transport/appoin...b1732731085482

2.தொடக்க வாகன பதிவு எண் - Today What Number Series in your RTO -http://tnsta.gov.in/transport/rtoStartNoListAct.do

3.வாகன வரி விகிதங்கள் - Tax Rates Details - Vehicle Wise -http://www.tn.gov.in/sta/taxtables.html

4.நிர்வாக எல்லை அறிய - Know your RTO by Postcode -http://tnsta.gov.in/transport/know_RtoLoad.do

5. ஓட்டுனர் உரிமம் டிரைவிங் லைசன்ஸ் ஆன் லைன் அப்பயின்ட்மென்ட் - Online Appointment Booking for Road Test -http://tnsta.gov.in/transport/appointment.do?_tq=51da2bc262553b8d4f4adb3a40eb2af 1

6.பொது நிர்வாக விசாரிப்புகள் - General Enquiries -http://tnsta.gov.in/transport/contacts.do

MUKKULATHOR ELUCHI KALAGAM

Saturday, December 17, 2011

5 மாவட்டங்களில் ஒரே நாளில் கடையடைப்பு

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாகக் கேரளாவைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் கடையடைப்புகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வணிகர்கள் கூறும் போது கேரளாவைக் கண்டித்து ஆங்காங்கு பல்வேறு பகுதிகளில் தனித்தனியாகக் கடையடைப்பு நடைபெற்று வருகிறது. அவற்றை ஒருங்கிணைத்து வரும் 22 ஆம் தேதி தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஒரே நாளில் கடையடைப்பு நடத்தப் போவதாகக் கூறினார்கள்.

இக்கடையடைப்பு நடுவண் அரசுக்கும், கேரளாவிற்கும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் நடத்தப்படுகிறது என்றனர்.

Lakshmi Prasanna in Maniratnam's film!

There was a lot of speculation happening recently as to who would get to act as the heroine in Maniratnam's upcoming film. However, it looks like Lakshmi Prasanna has booked a berth in the movie.

The actress who is absolutely thrilled to have grabbed the role is reported to be looking forward to shoot the film. Lakshmi Prasanna confirmed this news on a microblogging site it is official that she will be seen in Mani's next venture.

This soon-to-be-titled film will see actor Karthik's son Gautham debuting as hero. This will be Lakshmi's first movie in Tamil. The actress is also producing a film which will see her brother Manoj debuting as hero.

Friday, December 16, 2011

வைரமுத்து சாடல்?

சென்னையில் இன்று விதார்த் நடித்த கொள்ளைக்காரன் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குனர் தங்கர்பச்சான் பேசுகையில், இதுபோன்ற ஆடியோ விழாக்களெலலாம் தேவையே இல்லை என்று பேசத் தொடங்கியவர், தமிழனுக்கு எங்குமே மரியாதை இல்லை. முல்லை பெரியாறு பிரச்சினையில் அரசாங்கமும், கட்சிகளும் பேசி வருகின்றன. ஆனால் எதுவுமே நடக்கப்போவதில்லை. இனி நாமே எதிர்ப்பை காட்ட வேண்டியதுதான். அதை வெளிப்படுத்தும் வகையில் இதுவரை நாம் வாங்கிய தேசிய விருதுகளை அவர்கள் முகத்தில் விட்டெறிய வேண்டும். நானெல்லாம் தேசிய விருது வாங்கியிருந்தால் அதை செய்திருப்பேன் என்று செம சூடாக பேசினார்.

ஆனால் இதன்பிறகு பேசிய கவிஞர் வைரமுத்து, இதுபோன்ற விழாக்கள் அவசியம் வேண்டும். அப்படி இல்லையென்றால் தங்கர்பச்சான் போன்றோர்களின் பேச்சை எங்குபோய் கேட்டுத்தொலைப்பது என்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். காரணம், ஏற்கனவே பலமுறை தேசிய விருதுகள் வாங்கியவர் வைரமுத்து. அவர் இருக்கிற மேடையில் இப்படி வாங்கிய தேசிய விருதுகளை விசிறியடிக்க தங்கர்பச்சான சொன்னதால் ஆவேசமாக விட்டார் வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

Vivek’s explanation

Vivek plays a baddie in Vazhipokkan, a film that is being made in Tamil and Kannada. This sudden transition from comedian to villain has raised a query on why the actor opted for it. Answering this question, Vivek said that when the role was offered to him, he felt that he must do it.

The role is etched out very differently and it will be impossible for the audiences to guess the character, said Vivek. The comedian added that he always wanted to try out something new and this opportunity came up with Vazhipokkan.

Wednesday, December 14, 2011

WEBSITE FOR TAMILNADU POLICE DEPARTMENT

www.tnpolice.gov.in

இன்று அமெரிக்காவில் தமிழீழ அரசு கூடுகிறது

இன்று (டிசம்பர் 14) அமெரிக்காவின் நியூயார்க்கில் நாடுகடந்த தமிழீழ அரசின் மூன்றாவது பாராளுமன்ற அமர்வு நடைபெற உள்ளது.

தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற உள்ள இதில், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான பல்வேறு செய்திகள் கலந்தாய்வு செய்யப்பட இருப்பதாகவும், இந்த அமர்வில் நாடு கடந்த தமீழீழ அரசோடு தோழமை கொண்டுள்ள பிற நாடுகளின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிகிறது. இதில், 2012 ஆம் ஆண்டில் தமிழீழப் போராட்டத்தை முன்னிறுத்தி, உலக அரங்கில் பல்வேறு முனைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் நா.க.த.அ கூறியுள்ளது.

மேலும், ஈழத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள், காணமல் போதல், சிங்களக் குடியேற்றங்கள் போன்ற பல்வேறு அநீதிகளை, உலகத்தின் கண்களின் முன் கொண்டுவருவது குறித்து கலந்தாய்வு செய்யப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

Sonam Kapoor in 'Pookadai'?

Mani Ratnam's films are usually surrounded by guesses and speculation as the ace filmmaker likes to keep every detail, including his lead actors, under wraps and present the film as a surprise package to audience.

It was earlier reported that his next film, 'Pookadai', which is said to throw light on the fisherfolk in Tamil Nadu, will roll with Karthik's son Gautham and Radha's daughter, Thulasi, in the lead roles. But grapevine is now abuzz that B-town star, Sonam Kapoor is being considered for this role!

Inside birdies have it that Mani Ratnam is keen on casting Sonam Kapoor as his lead lady. The film will go on floors early 2012 and is a full on romantic entertainer.

அடுத்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் 1 முதல் 8-வது வகுப்புவரை கிரேடு முறை: அரசாணை வெளியீடு

பள்ளி மாணவர்கள் மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறையை மாற்றி அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை (கிரேடு சிஸ்டம்) கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்தது. அதாவது தற்போதைய தேர்வுமுறை மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே அமைந்துள்ளது.

மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாக்களும் மாணவர்கள் எளிதாக கண்டறியும் வகையிலேயே உள்ளன. இதன் காரணமாக, மாணவர்களால் பாடத்தை தாண்டி வெளியே படிக்க முடியவில்லை. அரசு பொதுத் தேர்வுகளாலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், தேர்வில் தோல்வி காரணமாக தவறான முடிவு எடுப்பதற்கும் இட்டுச் செல்கிறது.

இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு முறை கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது. மேலும், கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் இந்த முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

இந்த முறையின்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டும் 3 பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜுன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 2-ம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மூன்றாம் பருவம். இந்த பருவங்களில் உடனடி மதிப்பீடு, பருவ இறுதி மதிப்பீடு என இரண்டு வகையான மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்களும் பருவ இறுதி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்பட வேண்டும். கற்பனைத்திறனை வளர்க்கும் நடவடிக்கைகளான விளையாட்டு, நாடகம், பாடல்கள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், தேர்வுகள் பருவ இறுதி மதிப்பீட்டிலும் இடம்பெற வேண்டும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடு வழங்கப்பட வேண்டும்.

55 முதல் 60 மார்க் வரை - ஏ 1 கிரேடு (பாயிண்ட் 10)

49 முதல் 54 வரை - ஏ 2 கிரேடு (பாயிண்ட் 9)

43 முதல் 48 வரை - பி 1 கிரேடு (பாயிண்ட் 8)

37 முதல் 42 வரை - பி 2 கிரேடு (பாயிண்ட் 7)

31 முதல் 36 வரை - சி 1 கிரேடு (பாயிண்ட் 6)

25 முதல் 30 வரை - சி 2 கிரேடு (பாயிண்ட் 5)

19 முதல் 24 வரை - டி கிரேடு (பாயிண்ட் 4)

13 முதல் 18 வரை - இ 1 கிரேடு (பாயிண்ட் இல்லை)

12 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் - இ 2 கிரேடு (பாயிண்ட் இல்லை)

மூன்று பருவங்களின் முடிவில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் கிரேடு சராசரி அடிப்படையில் ஆண்டு இறுதியில் கிரேடு வழங்கப்படும். தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் வரும் கல்வி ஆண்டு முதல் (2012-13) ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் கிரேடு முறையை கொண்டுவர அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tuesday, December 13, 2011

forward bloc

It's Karthi or Vishal for Seeman?

Director Seeman is a busy man. He has penned his next script and is working on the casting. Well the director has two actors' names in his mind: Vishal and Karthi. Seeman might approach one hero at a time to see and finalize who between these two will become the hero of his next venture. The pre-production works for this yet-to-be-titled film is touted to begin soon.

The script for this film is about things happening around an angry young man. This project, sources reveal might be titled as 'Kobam.' Karthi is at the moment busy with his film 'Saguni,' a political satire and Vishal is doing 'Samaran' with Thiru and Trisha.

Earlier there were talks between Seeman and Vijay to do a film titled 'Pagalvan.' But talks did not prove fruitful. But the director seems to have no regrets because at the moment he is giving his all for this script for which he will finalize his hero soon.

தீர்ப்பைத் தமிழில் தர வேண்டும் - சசிகலா

சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர் மீதும் வருமானத்திற்குக் கூடுதலாகச் சொத்துக் குவித்ததாக வழக்குத் தொடரப்பட்டு அது கர்நாடாகவின் பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 08) அன்று நீதிமன்றம் வந்தது. அப்போது சசிகலாவின் வழக்கறிஞர் சந்தானக் கோபாலன் நீதிபதியிடம் சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட வினாக்களைத் தமிழில் மொழிபெயர்த்து தரக்கோரினார்.

இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வழக்கின் மீதான தீர்ப்பு நாளை அளிக்கப்படுவதாகத் தெரிகிறது. அந்தத் தீர்ப்பைத் தமிழில் வழங்க வேண்டும் என்று சசிகலா வேண்டியுள்ளார்.

Mullai Periyar Dam - The Real Story - A Documentary Film(Tamil) full

http://www.youtube.com/watch?v=63ygMwahQqE&feature=player_embedded

Monday, December 12, 2011

MADURAI MEENAKSHI MISSION - RAMESH

CRICKET : INDIA TO AUSTRALIA

கேரள அரசை கண்டித்து புளியரையில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 8 பேர் கைது

முல்லைபெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசை கண்டித்து புளியரையில் நேற்று நாம் தமிழர் கட்சியினர் கேரள அரசு பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் புளியரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர்.

செங்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர் ஆறுமுகம், மற்றும் கட்சியை சேர்ந்த ரமேஷ், கார்த்திக்கேயன், பசும்பொன், தங்கவேலு, பரமதாசன், கார்த்திக், ராமராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

MADURAI MAYOR TO GOTO DELHI

மதுரை: டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் நடத்தும் கூட்டத்தில், மதுரை மேயர் ராஜன் செல்லப்பா பங்கேற்கிறார். இந்தியாவில் 63 நகரங்களில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகள், இத்திட்டத்தில் இடம்பெற்றன. இத்திட்டம் மூலம் மதுரைக்கு, 2006 ஜூன் 20ல் 2,496.98 கோடி ரூபாய் வழங்க மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் இரண்டாவது பாகத்தை தொடங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாளை, டில்லியில் பிரதமர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், 63 நகரங்களின் மக்கள் பிரதிகள் பங்கேற்கின்றனர். நிதி ஆதாரமின்றி தவிக்கும் மதுரை மாநகராட்சிக்கு, ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத்திட்டத்தின் இரண்டாம் பாகம் கிடைத்தால், கிடப்பில் கிடக்கும் பலதிட்டங்கள் உயிர் பெறும்.

Sunday, December 11, 2011

Mani Ratnam's 'Pookadai' - Latest tidbits

Kollywood grapevine is abuzz that ace director Mani Ratnam has finalized on the cast and crew for his next, titled 'Pookadai'. This film will see Karthik's son, Gautham along with Radha's second daughter Thulasi.

One of the reasons for this casting by Mani is because both Gautham and Thulasi have been kept away from the eyes of the media and he'll be able to weave fresh magic, and wow audience with these debutants in his film.

It is also said that Mani Ratnam held a test shoot to test the chemistry between his lead stars which turned out well. He has also asked his lead stars to not speak about this film; 'Pookadai' will go on floors shortly in the rural areas of Tamil Nadu.

Meanwhile Mani's fans are already all eyes for everything about this project as Mani Ratnam, through this film, will be back to what he is best, romantic stories which will smitten one and all.

Tunes will be composed by AR Rahman.

Saturday, December 10, 2011

இயக்குனராகும் விவேக்!

காமெடி நடிகர் விவேக்கும் இயக்குனராகிறார்.

வடிவேலுவைத் தொடர்ந்து விவேக்கின் சினிமா மார்க்கெட்டும் சரிந்து கொண்டிருக்கிறது. அதனால் மார்க்கெட் இருக்கும்போதே தனது இயக்குனர் ஆசையையும் நிறைவேற்றிக்கொள்வோம் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார் விவேக்.

அதாவது, இளையதலைமுறையினருககு பசுமை சூழலின் முக்கியத்துவதை விளக்கும் வகையில் அப்படத்தை இயக்குகிறார் விவேக். என்றாலும் டாகுமெண்டரி படம் போல் இல்லாமல் வழக்கமான காமெடி, மசாலா அயிட்டங்களையும் கலந்தே இப்படத்தை இயக்கிறாராம் விவேக்.

அவரிடம் இதில் உங்களுக்கு என்ன வேடம்? என்றால்,

நான் காமெடியனோ, இல்லை கதாநாயகனோ எந்த முடிவையும் எடுக்கவில்லை. சில தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்த படம் பற்றி பேசி வருகிறேன். அது முடிவானதும் நான் என்ன வேடத்தில் நடிக்கிறேன் என்பதும் முடிவாகும் என்கிறார் விவேக்.

Friday, December 9, 2011

What did Mani tell Gautham?

Mani Ratnam's next movie, with Karthik's son is soon expected to go on floors. Now, Mani is busy performing test shoots on the film's hero Gautham. As it seems, Gautham has impressed Mani and the rest of the crew members during the test shoots.

A source that was present at the test shoots told us that Mani couldn't stop praising Gautham for his acting skills. And the crew members also congratulated Gautham for his performance stating that he has the potential to nail the tough role Mani has in store for him. That's one chip of the old block, we think.

Wednesday, December 7, 2011

Vivek launches Green Kalam

Tuesday was a memorable day for Vivek, for the top comedian of Tamil cinema launched a website in Chennai, urging the need for green cover in the country to protect the environment from the ill-effects of global warming.

The website was click-started by Vivek in the presence of Ponraj, an associate of former Indian President A P J Abdul Kalam. "We will soon launch a short film on planting of saplings," Vivek said,

"Green Kalam is an initiative to increase awareness about our dependence on trees for survival. It is Kalam sir's dream to make people to understand the importance of a tree which dedicates every part of its life to every living being," Vivek added.

He further said: "With the help of several NGOs and well-wishers we achieved beyond the target of sapling plantation. Now we go further by taking a step ahead by making it billion trees for billion people. Kalam is taking part in a function in this regard at Cuddalore in January."

மொட்டையடித்த பாலா!

200 பேருக்கு மொட்டையடித்துள்ளார் டைரக்டர் பாலா.

அவன் இவன் படத்தையடுத்து பாலா இயக்கும் புதிய படம் எரியும் தணல். இந்த படத்தில் அதர்வா நடிக்கிறார். தனது ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகளை முன்நிறுத்தி படமாக்கும் பாலா, இந்த படத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினையை கையிலெடுக்கிறார். அதோடு அந்த ஏரியா மக்களைப்போன்று சுமார் 200 பேர்களை இந்த படத்தில் நடிக்க வைக்கிறார்.

அந்த 200 பேரையும் தேடிப்பிடித்து கொண்டு வந்து விட்ட பாலா, அவர்கள் அனைவருக்கும் முன்தலையில் மொட்டையடித்திருக்கிறார். முடி வளர்ந்தாலும் திரும்பத்திரும்ப இந்த மொட்டை அடிக்கப்படுமாம். அதனால் தனது படம் முடியுற வரைக்கும அவர்களை வேறு எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று கண்டிசன் போட்டிருக்கும் பாலா, அவர்களுக்கு 3 படங்களில் நடிக்கும் அளவுக்கு சம்பளமும் கொடுத்திருக்கிறார்.

Tuesday, December 6, 2011

இயக்குனராகும் கார்த்திக்!

இயக்குனராகிறார் நவரசநாயகன் கார்த்திக்.

ஒரு காலத்தில் இளம்பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் கார்த்திக். சமீபகாலமாக சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் கார்த்திக், தற்போது தனது மகன் கெளதமை, மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் அவருக்கும் டைரக்டராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதனால் மணிரத்னம் படத்தை இயக்கும்போதே, தானும் தனது மகனை வைத்து இன்னொரு படம் இயக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார் கார்த்திக். அதற்கான கதை விவாதம், கதாநாயகி தேடல் ஆகிய வேலைகளிலும் சத்தமில்லாமல் இறங்கியிருக்கிறார் நவரசம்.

Monday, December 5, 2011

political drama.....

ராசுமதுரவனின் மைக் செட் பாண்டி!

முத்துக்குமுத்தாக படத்தை இயக்கிய இராசு மதுரவன் அதன்பிறகு மயில்சாமியின் மகன் அருமைநாயகத்தை நாயகனாக வைத்து பார்த்தோம் பழகினோம் என்ற படத்தை இயக்கி வந்தார். ஆனால் படம் பாதி கிணற்றை கடந்த நேரம் என்ன பிரச்சினையோ படத்தை கிடப்பில் போட்டு விட்டார்.

இப்போது மார்க்கண்டேயன் படத்தில் நடித்த சபரிக்ஷ்-சுனேனாவைக்கொண்ட மைக் செட் பாண்டி என்றொரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலும் அவரது படங்களில் வழக்கமாக நடிக்கும் சிங்கம்புலி, தம்பிராமைய்யா உள்பட ஒரு நகைச்சுவை பட்டாளமே நடிக்கிறது.

Thursday, December 1, 2011

Vairamuthu announces Mani Ratnam’s film!

The official announcement for Mani Ratnam’s next comes from poet Vairamuthu. He has said that Mani Ratnam’s next has commenced with him penning the lyrics. The first song has been completed and AR Rahman has been roped in to score the music for this film.

The buzz around this film is that it is a romantic flick which will mark the debut of Karthik’s son Gautham. Let’s wait for more info on this project!