Tuesday, December 20, 2011

ஏப்ரல் 1 இல் மின்கட்டணம் உயர்கிறது

தமிழ்நாடு அரசு அண்மையில் பேருந்துக் கட்டணம் மற்றும் பால் விலை ஆகியவற் உயர்த்தியது. அப்போதே மின் கட்டணமும் விரைவில் உயர்த்தப்படும் என்றும் அது பற்றி மக்கள் கருத்து கேட்கப்படும் என்றது.

இந்நிலையில் இன்று சென்னையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கபிலன் கூறும் போது, மின்சாரக் கட்டண உயர்வு குறித்து சென்னையில் பிப்ரவரி மாதத்தில் மக்களின் கருத்து கேட்கப்படும் என்றும் அதே போல் நெல்லை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பகுதியில் ஜனவரியில் கூட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, பொதுமக்கள் கட்டண உயர்வு குறித்து மின்னஞ்சல், மடல் மூலமாகத் தங்கள் கருத்துகளை டிசம்பர் 31 க்குள் அனுப்பினால் ஆணையம் அதை ஆராயும் என்றார்.

இறுதியாக இதற்கான உயர்நிலை குழுவிடம் ஆய்வு செய்தப் பின் வரும் 2012 ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் என்றார்.

No comments: