Thursday, December 22, 2011

உசிலம்பட்டியில் உண்ணாவிரதப் போராட்டம்

உசிலம்பட்டி : முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் , கேரள அரசை கண்டித்து தென் மாவட்டங்கள் முழுவதும் கடையடைப்பு, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மதுரையில் செயல்பட்டு வரும் கடைகள், ஹோட்டல்கள், பெரிய வர்த்தக நிறுவனங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவைகள் அடைக்கப்பட்டுள்ளன. மடீட்சியா மற்றும் தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கங்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்று வருகிறது. லோயர்கேம்ப் பகுதியில், விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய பார்வார்ட் பிளாக் கட்சி சார்பில் அதன் தலைவர் முருகன்ஜி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

No comments: