Tuesday, December 6, 2011

இயக்குனராகும் கார்த்திக்!

இயக்குனராகிறார் நவரசநாயகன் கார்த்திக்.

ஒரு காலத்தில் இளம்பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் கார்த்திக். சமீபகாலமாக சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் கார்த்திக், தற்போது தனது மகன் கெளதமை, மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் அவருக்கும் டைரக்டராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதனால் மணிரத்னம் படத்தை இயக்கும்போதே, தானும் தனது மகனை வைத்து இன்னொரு படம் இயக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார் கார்த்திக். அதற்கான கதை விவாதம், கதாநாயகி தேடல் ஆகிய வேலைகளிலும் சத்தமில்லாமல் இறங்கியிருக்கிறார் நவரசம்.

No comments: