Monday, December 12, 2011

கேரள அரசை கண்டித்து புளியரையில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 8 பேர் கைது

முல்லைபெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசை கண்டித்து புளியரையில் நேற்று நாம் தமிழர் கட்சியினர் கேரள அரசு பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் புளியரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர்.

செங்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர் ஆறுமுகம், மற்றும் கட்சியை சேர்ந்த ரமேஷ், கார்த்திக்கேயன், பசும்பொன், தங்கவேலு, பரமதாசன், கார்த்திக், ராமராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

No comments: