Friday, December 30, 2011

மண்டல வாரிய மக்கள் குறை கேட்பு திட்டம்

மதுரை மாநகராட்சி, முதல் முறையாக மண்டல வாரிய மக்கள் குறை கேட்பு திட்டத்தை துவக்கியுள்ளது. மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு அறிவதன் மூலம் மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியும் என்ற நோக்கில், இத்திட்டத்தை துவக்கியுள்ளதாக மேயர் ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

திட்டம் துவக்கப்பட்ட முதல் நாளன்று, மதுரை கே.புதூர் பகுதி வடக்கு மண்டலம் 27,45,46 வார்டு மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இத்திட்டத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

No comments: