Tuesday, January 31, 2012

முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் மகன் திருமணம்: கருணாநிதி - மத்திய மந்திரிகள் வாழ்த்து

முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் - ஜெயந்தி தம்பதியின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனுக்கும் சென்னை நொளம்பூரை சேர்ந்த தொழிலதிபர் சார்லஸ்மோகன் - சி.ஷீலா தம்பதியின் மகள் உதயா என்கிற டாக்டர் சி.ராகாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இவர்களின் திருமணம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மங்கள நாணை கருணாநிதி எடுத்து கொடுக்க அதை மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோர் தொட்டு ஆசிர் வகித்தனர்.

இதையடுத்து மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். மண விழாவில் கருணாநிதி பேசியதாவது:-

மாநகரத்தை விட்டு வானகரம் வரும் வழியிலே கொடிகளையும் வாழ்த்து விளம்பர பலகைகளையும் நான் வியந்து பார்த்தேன். அதில் இருந்து இது மணவிழாவா அல்லது மாநாடா என்று வியந்தேன்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் திருநாவுக்கரசர் எதை செய்தாலும் சிறப்பாக செய்வார். தமிழக துணை சபாநாயகராக இருந்தார். மத்திய மந்திரி பதவிகளையும் வகித்தனர். இப்பவும் எல்லா நிலைகளிலும் தன்னிலை மாறாமல் செயல்படுபவர் திருநாவுக்கரசர்.

எனக்கு இருக்கும் மிக சிறந்த நண்பர்களில் இவரும் ஒருவர். இந்த திருமண விழாவில் நான் கண்டது புதுமையானது. புரோகிதர் வைத்து நடக்கும் திருமணமா? பெரியார், அண்ணா வழியில் நடக்கும் திருமணமா? என்று எண்ணிப் பார்த்தேன். கலப்பு திருமணம் கூட வேறுபாடுகளை களைந்து நடக்கும். மனம் ஒன்றுபட்டு நெஞ்சம் ஒன்றுபட்டு நடக்கும் திருமணமாக இது அமைந்துள்ளது. மணமக்கள் எதிலும் மனம் தளராமல் எந்நாளும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கருணாநிதி பேசினார்.

திருமண விழாவில் முன்னாள் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி, பா.ஜனதா தலைவர்கள் வெங்கையாநாயுடு, இல.கணேசன், சி.பி.ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, மாலைமலர் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், கராத்தே தியாகராஜன், கவிஞர் காசி முத்து மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரபாண்டியன், முரளி, நாங்குநேரி ஒன்றிய தலைவர் லக்கான், வாஞ்சிநாதன், வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரோசையா, நடிகர் ரஜினிகாந்த், மத்திய இணை மந்திரி நாராயணசாமி, அண்ணாமலை பல்கலைக்கழக இணை வேந்தர் எம். ஏ.எம்.ராமசாமி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

தலைமுறைகண்ட வைரமுத்து

1982ல் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற பாடலை எழுதியவர் வைரமுத்து. அந்த படத்தில் அறிமுகமானவர்கள்தான் கார்த்திக்-ராதா ஆகிய இருவரும். ஆனால் இப்போது அதே ராதாவின் மகள் கார்த்திகா நடிக்கும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திலும் பாடல் எழுதியிருக்கிறார் வைரமுத்து.

இது சினிமாவைப்பொறுத்தவரை இது ஒரு சிறப்பு மிக்க நிகழ்வு ஆகும். இதனால் இந்த படத்துக்கு பாடல் எழுதும்போது தான் பெருமையாகவும், அதிக உற்சாகமாகவும் எழுதியதாக சொல்கிறார் வைரமுத்து. அதோடு இப்போது கார்த்திகா நடிககும் படத்துக்கு பாட்டெழுதிய நான், அடுத்து அவர் மகள் நடிக்கும் படத்துக்கும் பாட்டெழுத வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன் என்கிறார் அவர்.

Tuesday, January 24, 2012

REPUBLIC DAY GREETING

பாரதிராஜாவின் துணிச்சல்

காலம்காலமாக முதலாளி வர்க்கம்தான் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலியை முடிவு செய்வார்கள். ஆனால் சினிமா உலகில் அப்படியல்ல, தொழிலாளர்கள்தான் தங்களது கூலியை நிர்ணயிக்கிறார்கள். அதோடு எங்களுக்கு இந்த அளவு சம்பளம் தர வேண்டும் இல்லையேல் படப்பிடிப்பே நடத்த முடியாது என்றும் மிரட்டல் விடுக்கிறார்கள். அதோடு மட்டுமா? ஒரு படத்துக்கு தேவையான தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளவும் தயாரிப்பாளர்களுக்கு உரிமை இல்லை. கண்டிப்பாக இத்தனை தொழிலாளர்களை தேவையே இல்லையென்றாலும் அழைத்து செல்ல வேண்டும். உரிய சம்பளத்தை வழங்க வேண்டும். இதெல்லாம் நீண்டகாலமாக பெப்சி அமைப்பு என்கிற பெயரில் தமிழ்த்திரையுலகில் நடந்து வரும் ஒரு அமைப்பின் அதிகாரம்.

இத்தனை காலமும் பல்லைக்கடித்துக்கொண்டு சகித்து வந்த தயாரிப்பாளர் சங்கம் தற்போது விழித்துக்கொண்டுள்ளது. வீட்டை அடமானம் வைத்து, சொத்துக்களை விற்று நாங்கள் படமெடுக்கிறோம். லாப நஷ்டங்களுக்கு நாங்களே பொறுப்பு ஏற்கிறோம். அதோடு மட்டுமின்றி உலகில் எந்த தொழிலாளர்களுக்கும் இல்லாத வகையில் மூன்று வேளையும் சாப்பாடு தருகிறோம். இப்படி தேவையானதை செய்து வேலை கொடுத்தால் எங்களை மிரட்டுவதா? என்று சிலிர்த்தெழுந்து விட்டனர்.

இந்த விசயத்தை பொறுத்தவரையில் , நேற்று கூடிய தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி முடிவு காரணமாக பெப்சி அமைப்பானது கடும் அதிர்ச்சியில் ஆடிப்போயிருக்கிறது. காரணம், இனி பெப்சிக்கும், எங்களுக்குமிடையேயான ஒப்பந்தம் தொடராது. நாங்கள் விருப்பம் போல் யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பை நடத்திக்கொள்வோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில் அறுபது சதவீதம் ஊதிய உயர்வு கேட்டு மிரட்டி வந்த பெப்சி அமைப்பும் இன்று கூடியுள்ளது. இதில் இதுசம்ப்நதமான தாங்கள் நீதிமன்றத்தை நாடுவதாக அவர்கள் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் எந்தமிரட்டலுக்கும் அஞ்சாத பாரதிராஜா, அன்னக்கொடியும் கொடிவீரனும் படப்பிடிப்பை பெப்சி தொழிலாளர்கள் இலலாமல், தனக்கு தேவையான நபர்களை வைத்து அழகாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார். பாரதிராஜாவின் இந்த துணிச்சல் இபபோது மேலும் சில தயாரிப்பாளர்களுக்கும் வரத தொடங்கியிருக்கிறது.

எதிர்கட்சி ஆளும் மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது: இயக்குனர் சீமான் ஆவேசம்

புதுவை நாம் தமிழர் கட்சியின் சார்பில் தானே புயலால் பாதிக்கப்பட்ட புதுவையை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த நிவாரண உதவியை மேலும் உயர்த்த வேண்டும். நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் சீமான் தலைமை வகித்தார். வேலுச்சாமி வரவேற்றார். புதுவை நிர்வாகிகள் அன்பு தென்னரசன், லோகு அய்யப்பன், தந்தைபிரியன், அருமைதாசன், வத்சலா, கவுரி, ரமேஷ், கலைச்செல்வம், இளங்கோ, அய்யநாதன், நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து இயக்குனர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் புயலினால் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவு பாதிப்பு ஏற்பட்டது. கடலூரில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.500 கோடியை இடைக்கால நிவாரணமாக அறிவித்துள்ளது சரியான தல்ல. மத்திய அரசு மாநில அரசு கோரிய தொகையில் 50 சதவீதமாவது தந்தால் தான் நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும்.

மத்திய அமைச்சர் சிதம்பரம் புதுவையில் பார்வையிட்டார், கடலூருக்கு செல்ல வில்லை. மத்தியக்குழுவும் வந்து பார்வையிட்டு சென்றது. இவர்கள் என்ன சொன்னார்கள்? என தெரியவில்லை. கடமைக்கு வந்து பார்வையிட்டு சென்றதுபோல் உள்ளது.

மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு தனது கட்சி ஆளும் மாநிலங்கள் மற்றும் கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் சலுகைகள் தருகிறது. வேறு கட்சிகள் ஆளும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை வஞ்சிக்கும் நோக்கில் செயல்படுவது தவறானது, கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Rajinikanth website runs without Internet

It may sound like another Rajinikanth joke, but a new website dedicated to the superstar runs ‘without an Internet connection’!

Visitors to www.allaboutrajni.com are greeted with a warning that “He is no ordinary man, this is no ordinary website. It runs on Rajini Power” and are advised to switch off their Internet connection to enter the website.

Only when the web is disconnected, one is allowed to explore the site. Netizens can trace the story of the legend from the beginning, read inside scoops from his films and get a glimpse of behind-the-scenes action, while browsing through famous Rajini jokes about impossible feats only he can achieve.

“The unbelievable spectacle of running a website without the Internet is a tribute to Rajinikanth’s larger-than-life image,” claimed Webchutney’s creative director Gurbaksh Singh.

With a heady mix of foot-tapping music, vibrant splash of colours, quirky quotes and illustrations, and icons in true Rajini style and lingo, the unique website reflects Rajini’s signature style.

Singh told PTI that the website is based on a complex algorithm running in the back-end that keeps an eye on the propagation of data packets between two terminals. Magic kicks in soon as the Internet speed is down to zero, which is the basic premise on which the site and the concept has been constructed.

The humour element on the website is accentuated by the error message in typical Rajini style that appears if a visitor attempts to reconnect the internet. “Aiyyo! That was unexpected. To keep browsing, switch off your Internet,” reads the message.

“The website has received a phenomenal response and has gone viral with several thousand hits and counting, along with innumerable shares and mentions across the web, especially on popular social networking sites like Facebook and Twitter,” Mr. Singh said.

“After a few iterations and TESTing, we cracked the code required to build the world’s first website that runs without the Internet — a website that runs offline — which is as awesome and unbelievable as miracles and stunts associated or performed by Rajini himself,” he said.

Saluting Sivaji and his films

It was 50 years ago, on Pongal day that the film 'Parthal Pasi Theerum', starring Sivaji Ganesan in the lead role, was released. To commemorate that, the Nadigar Thilagam Film Appreciation Society organized a meeting in Chennai on Sunday.

In his address, Y Gee Mahendra, president of the society, said, "It is impossible to forget a great actor like Sivaji Ganesan. We have launched this society to make sure that Nadigar Thilagam and his work continues to remain relevant in this day."

The society formed in October, 2011, with Y Gee Mahendra as its president, plans to screen classic films of the legendary actor once in two months on a Sunday. The annual subscription is Rs 750 for two and Rs 500 for one person.

Others took part in Sunday's function include Sivaji's eldest son Ramkumar, veteran actress Sowcar Janaki and veteran script writer Aroor Das.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 115வது பிறந்த நாள் விழா இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டாடப்பட்டது.

நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நடைபெற்ற நேதாஜியின் பிறந்த நாள் விழாவிற்கு நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் மீரா குமார் தலைமை தாங்கினார்.

பாஜக மூத்த தலைவரும், காங்கிரஸ் கட்சித் தலைவர் கிரிஜா வியாஸ் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு, நேதாஜியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கன்னட மண்ணில் தமிழுக்கு பல்கலைக்கழக இருக்கை கிடைக்குமா? கர்நாடக தமிழர்கள் ஏக்கம்

கன்னட மண்ணில் தமிழுக்கு பல்கலைக்கழக இருக்கை கிடைக்குமா என்று கர்நாடக தமிழர்கள் ஏங்கி வருகின்றனர்.

திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற முதுமொழிக்குத் தக்கவர்களாக உலகம் முழுவதும் பரந்து வாழும் இனத்தவர் தமிழர்கள். இதற்கு கர்நாடகமும் விதிவிலக்கல்ல.

தென் கர்நாடகத்தின் பெங்களூர் நகரம், பெங்களூர் ஊரகம், ராமநகரம், மைசூர், கோலார், ஹாசன், மண்டியா, சாமராஜ்நகர், வட கர்நாடகத்தின் ஷிமோகா, பெல்லாரி, ஹூப்ளி போன்ற மாவட்டங்களில் 10-ம் நூற்றாண்டு முதல் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

காலங்காலமாக கர்நாடகத்தில் பிறந்து வாழ்ந்திருந்தாலும், தமிழையும், அதன் பெருமையையும் என்றைக்கும் மறவாமல் இதயமுற்றத்திலும், இல்லமுற்றத்திலும் உயிர்ப்புடன் அடைகாப்பவர்கள் தமிழர்கள்.

பெங்களூர், கோலார் மாவட்டங்களில் தமிழர்களின் ஆதிக்கமும், தமிழின் வீச்சும் பரவலாகக் காணப்பட்டது. காலவெள்ளத்தில் இதில் வீழ்ச்சி தென்பட்டாலும், எழுச்சி குறையவில்லை என்பதற்கு தமிழர்கள் இன்னும் வீடுகளில் தமிழ் பேசுவதே சாட்சி.

கர்நாடக தமிழர்கள் அண்மைக் காலமாக எதிர்கொண்டுள்ள கேள்வி, அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டு சேர்ப்பது எப்படி என்பதுதான். இதற்கு ஒரே பதில் தமிழ்மொழியை ஒருமொழிப்பாடமாக கற்பிப்பதுதான்.

ஆரம்பப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழே இல்லாத பட்சத்தில் இது எப்படி சாத்தியமாகும். இதற்குத் தீர்வாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை நிறுவ வேண்டுமென்று பெங்களூர் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் நீண்ட காலமாக கோரி வருகின்றன.

சில கல்லூரிகளில் தமிழ்த்துறைகள் செயல்பட்டாலும், முதுகலைப்பட்டம் படிக்க, ஆராய்ச்சி மேற்கொள்ள வழியில்லாததால் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் படிக்க ஆர்வம் கொண்டவர்கள் குறைந்து வருகிறார்கள்.

தமிழர்களுக்கு குறைவில்லை என்றாலும், தமிழுக்கு இடமில்லாதபோது தமிழ் எப்படி தழைக்கும் என்று கேள்வி எழுப்புகிறார் பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ்ப் பேராசிரியர் ஒருவர்.

தமிழக அரசு நிதியுதவி செய்தால் தமிழ்த்துறை தொடங்குவதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கினால் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்குவதில் தடையிருக்காது என்கிறார்.

பெங்களூர் தமிழ்ச்சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்க வேண்டுமென்பது எங்கள் நீண்ட நாளைய கோரிக்கை. கர்நாடக தமிழர்கள் நலனைக் கருத்தில் கொண்டு பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்க தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக ஆட்சியில் வழி பிறக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கினால், அது பல நூற்றாண்டுகளாக நீண்டு கொண்டிருக்கும் தமிழர்-கன்னடர் உறவில் புதிய மைல் கல்லாக அமையும். இதற்கு தமிழக அரசு மனது வைக்க வேண்டுமே என்று ஏங்குகிறார்கள் கர்நாடகத் தமிழர்கள்.

சங்கரன்கோவில் தொகுதி-தேர்தலைப் புறக்கணிக்க முடிவு

"இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஒருங்கிணைத்த அம்பேத்கர் கூட ரிசர்வு தொகுதிகள் ஒதுக்கீடுகள் பத்தாண்டுகளுக்கு இருந்தால் போதுமென்றுதான் கோரிக்கை வைத்தார். ஆனால் கடந்த 1967 முதல் தொடர்ந்து 45 வருடங்களாக சங்கரன்கோவில் தனித் தொகுதியாகவே இருந்து வருகிறது. கடந்த பல வருடங்களாக சங்கரன்கோவிலை பொதுத் தொகுதியாக அறிவிக்க வேண்டுமென மறத்தமிழர் சேனை உள்ளிட்ட பெரும்பான்மை சமூக இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், தற்பொழுது முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மறைவையொட்டி சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.


இத்தொகுதியில் வாழுகின்ற 17 சதவிகிதமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மீதமுள்ள 83 சதவிகித பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூக மக்களின் அரசியல் உரிமைகளை அடியோடு 50,60 வருடங்களுக்கு தகர்த்தெறிவதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் எங்கள் மீது மறைமுகத் தீண்டாமையை திணித்து வருகிறது. 'அரசியல் பொருளாதார நிலைகளில் உயர்வடைய' என்ற காரணத்தினால் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கையின் மூலம் கருப்பசாமி நான்கு முறையும் இனி சிவப்புசாமி ஏழுமுறையும் எம்.எல்.ஏ., வாக இருந்துவிட்டால் மட்டும் சமூக நீதி ஏற்பட்டுவிடுமா?



ரிசர்வு தொகுதிகளை எதிர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல. தாழ்த்தப்பட்ட சமூகம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமென்றாலும் ரிசர்வு தொகுதி ஏற்பாடுகளை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் ஒரே தொகுதி நீண்டகாலம் தனித்தொகுதியாகவே இருப்பது நியாயமல்ல. ஒவ்வொரு தேர்தலுக்கும் ரிசர்வு தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் தான் சமூகங்களுக்கிடையே பகைமை ஏற்படாது. தாழ்த்தப்பட்டோரின் அரசியல் தளமும் விரிவடையும்.



தற்போதைய சூழலில் 1947 க்கு பின்பு சுதந்திர இந்தியாவில் பிறந்த தாழ்த்தப்பட்டவர் அல்லாத எந்த குடிமகனும் இந்த தொகுதியில் எம்.எல்.ஏ., ஆக இயலாது என்பது, இது ஒரு சாதி, சமய சார்பற்ற சனநாயக நாடுதான் என்கிற நிலையை கேலிக்குரியதாக மாற்றியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இதைவிட கொடுமை இந்த தொகுதியை பொறுத்த வகையில் நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்தையுமே தனித்தொகுதிகளாக வைத்திருப்பதுதான்.


தனித்து களம் கண்டாலே வெற்றி பெற்றுவிடக் கூடிய அளவில், எங்கள் இனமக்கள் அதிகமாக பரவி வாழக்கூடிய சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த, அருகருகேயுள்ள இரண்டு தொகுதிகளையும் தொடர்ந்து தனித்தொகுதிகளாகவே வைத்திருப்பதன் மூலம் ஜமீன்களாகவும், மன்னர்களாகவும், போர்ப்படை தளபதிகளாகவும் உலவிவந்த சொந்த மண்ணிலேயே, எங்களை அடிமைகளாக ஆக்க முயலுகிறார்கள். எங்களின் நியாயமான உரிமைகளையும், உணர்வுகளையும் சிதைத்துவிட்டு இடைத்தேர்தலை நடத்திவிடலாம் என்று தேர்தல் ஆணையம் செயல்படுமேயானால் நாங்கள் ஒட்டுமொத்தமாக 'தேர்தலை புறக்கணித்து' வாக்குசாவடிகளுக்கு செல்லமாட்டோம். தேர்தல் நாளன்று வீடுகள் தோறும், கிராமங்கள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி எங்கள் எதிர்ப்புகளை கடுமையாக தெரிவிப்போம்."

THANKS : DEVARTV.COM

Monday, January 23, 2012

Netaji Subhash Chandra Bose Birthday January 23-1-2012 - Jayanti Subhash Chandra Bose - Jan 23rd 2012 Subhash Chandra Bose 116th Birth Anniversary Jayanthi

Netaji Birthday:
Netaji Subhash Chandra Bose 116th birthday is on January 23 2012 (Monday). Netaji took birth on Jan 23, 1897 at Cuttack, Orissa.


Subhas Chandra Bose was initially with Congress and even served as the party President twice. Netaji then started All India Forward Bloc as he believed Gandhiji's non-violence is not sufficient to root out British. He was sent to jail 11 times by British Empire.





His famous quote "Give me blood and I will give you freedom" inspired many to join Azad Hind Fauj i.e., Indian National Army (INA) to fight British Empire and secure freedom.


INA, started at Singapore, made great progress and set foot on Indian Soil on March 18 ,1944 after crossing the Burma Border. There is contradiction on the belief that Netaji died in a plane crash at Taiwan on 18 August 1945



நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்

இந்திய தேசத்தின் விடுதலைக்கு வித்திட்ட தலைவர்களில் நேதாஜி என அழைக்கப்படுபவர் சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி என்றால் இந்தியில் (respectable leader) மரியாதைக்குரிய தலைவர் என பொருள்.அந்த மரியாதைக்குரிய ஒப்பற்ற தலைவரின் 115-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவர்களி்ல் நேதாஜியின் பங்கினை மறக்கமுடியாது. வரலாற்றில் மறைக்கவும் முடியாது. 1897-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி ஒடிசாவின் , கட்டாக்கில், ஜானகிநாத் போஸ், பிரபாவதிதேவி தம்பதியருக்கு 9-வது மகனாக பிறந்தார் சுபாஷ் சந்திரபோஸ், படிப்பில் சுறுசுறுப்புடன் விளங்கினார். மேல்படிப்பிற்காக இங்கிலாந்துக்கு சென்று. அங்கு பிரிட்டீஸ் அரசுப்பதவிக்காக ஐ.சி.எஸ். (indian civil service ) (இன்றைய படிப்பான ஐ.ஏ.எஸ் ) படிப்பினை கற்றார். எனினும் பிரிட்டீஸார் வழங்கிய அரசுப்பதவி, பட்டத்தை உதறி விட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
1938-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் காந்தியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடினால் பிரிந்து, 1939-ம் ஆண்டு அகிலஇந்திய பார்வர்டுபிளாக் கட்சியை துவக்கினார். இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டீஸ் அரசுக்கெதிராக இந்திய தேசிய ராணுவத்தினை ஏற்படுத்தினார். ‘தனது ராணுவத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களை திரட்டினார். ‘ ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்துடன் பிரிட்டீஸாரை எதிர்த்து போர் தொடுத்தார்.

கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தைவான் சென்ற விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறந்ததாக கூறப்படுகிறது. எனினும் இவரது மரணம் குறித்த மர்மம் இன்று வரை நீடிக்கிறது. இவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

இவரது மரணம் குறித்து விசாரிப்பதற்காக 1956-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போது ‘ஷாநவாஸ்’ கமிஷனும், 1970-ம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது ‘கூஸ்லா’ கமிஷன், 1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , ‘முகர்ஜி கமிஷன்’ , என மூன்று கமிஷன்கள் நியமிக்கப்பட்டது. இதில் முகர்ஜி கமிஷன் அறிக்கை 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதில் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் ஜப்பானில் உள்ள ரேங்கூஜி நகர் அருங்காட்சியகத்தில் இவரது அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அஸ்தி நேதாஜியினுடையது இல்லை எனவும் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுதந்திர ‌போராட்ட வரலாற்றில் நீங்காத இடம் பெற்ற ‌நேதாஜி இந்தியர்களின் நெஞ்சில் என்றும் நிறைந்துள்ளார்.

நான் தீவிர காங்கிரஸ்காரன்: பாரதிராஜா

நான் தீவிர காங்கிரஸ்காரன் என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கூறினார்.

மாநில ஐஎன்டியுசி பொதுச்செயலரும், காங்கிரஸ் மாநிலத் துணைத்தலைவருமான கே.எஸ்.கோவிந்தராஜன் எழுதிய "திரும்பிப் பார்க்கிறேன்' நூல் வெளியீட்டு விழா மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் நூல் முதல் படியை பெற்றுக்கொண்ட அவர் பேசியதாவது:

""வயது மட்டுமே மனிதர்களை நிதானமாக வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. எனது தாத்தா, தந்தையர் என பாரம்பரியமாகவே காங்கிரஸ்காரர்கள். எனக்கு கட்சியுடன் முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம். தாய், தந்தைக்கு இடையேயும், சகோதரர்களுக்கு இடையேயும் முரண்பாடு ஏற்படாமல் இருக்குமா? கருத்து மாறுபாட்டால் முரண்பட்டு மோதலாம்.

தமிழகத்தில் மூன்று முதலமைச்சர்களோடு நான் முரண்பட்டிருக்கிறேன். ஆகவே காங்கிரஸ் எனும் பாரம்பரியத்தில் நம் நாட்டு கலாசாரத்தோடு வாழ்ந்துவரும் சோனியா காந்தி படம் பொறித்த அழைப்பிதழில், எனது படத்தையும் பொறித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். மறைந்த மூப்பனார் எனது மதிப்புக்குரியவர்.

நான் தீவிர காங்கிரஸ் கட்சிக்காரனாக கடந்த 1957 முதல் 1962-வரையில் இருந்தேன். காங்கிரஸ் வேட்பாளருக்காக மேடையில் ஏறி தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபட்டேன். எனது தாயின் நகைகளை விற்று காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர் எனது தந்தை.

பெருந்தலைவர் காமராஜர் தேர்தலில் தோற்றபோது, எனது வீட்டில் மூன்று நாள் உணவு சமைக்கவில்லை. அந்த அளவுக்கு காமராஜர் தோல்விக்காக எனது தந்தை வருத்தப்பட்டார். நான் அரசியல்வாதியாகியிருப்பேன். காமராஜர் தோல்வியே என்னை அரசியலுக்கு வரக்கூடாது என முடிவெடுக்கவைத்தது. அவரைத் தோற்கடித்துவிட்டார்களே என்ற ஆதங்கம் ஏற்பட்டது.

நான் கலைஞன். மென்மையானவன். ஆகவே எல்லோரிடமும் பற்றும், பாசமும் கொண்டுள்ளேன். என்னை அரசியலுக்கு வருமாறு தமிழகத்தின் மூன்று முதலமைச்சர்களும் அழைத்தனர். ஆனால் வர மறுத்துவிட்டேன். காமராஜர், கக்கன் போன்றோரை நேசித்தேன். ஜீவானந்தம், கல்யாணசுந்தரம் போன்றோரை யோசித்தேன். பெரியார், அண்ணா போன்றவர்களை வாசித்தேன்.

காமராஜரும், மூப்பனாரும் காழ்ப்புணர்ச்சி இல்லாத, வாய்ப்பு வந்தும் பொறுப்புகளை தூக்கியெறியும் நாகரிகம் நிறைந்த, தன்மானமிக்கவர்களாக இருந்தனர். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. திரைப்பட மாயையில் நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

தாய்வீடு, மொழி, இனம் காணாமல் போக அனுமதிக்க விடக்கூடாது. அவை காணாமல் போவது தாயைத் தொலைப்பது போன்றதாகும். ஆகவே மக்கள், மொழிக்கு ஏதாவது ஆபத்து எனில் காங்கிரஸ் தலைவர்களாகிய நீங்கள்தான் காப்பாற்றவேண்டும். அது உங்கள் கடமை.

தமிழன் எல்லாவற்றையும் இழக்கக்கூடாது. அதற்குண்டான பலம் காங்கிரஸ்காரர்கள் கையில்தான் உள்ளது.

இப்போதெல்லாம் நாம் முன்பு பார்த்த பொன்வண்டு, அத்திப்பழம், சிட்டுக்குருவி ஆகியவற்றை பார்க்க முடியவில்லை. காலமாற்றத்தில் எதுவும் வெற்றி பெற முடியாது.

ஆகவே எதிர்ப்பு சக்தியைக் காட்டாவிட்டால் எதிலும் வெற்றி பெறமுடியாது. அந்த எதிர்ப்பு சக்தியைக் காட்டியே காங்கிரஸ் தலைவர்கள் மக்களுக்கு பணியாற்ற வேண்டும்'' என்றார்.

Sunday, January 22, 2012

காங்கிரஸில் சேர வேண்டும்: பாரதிராஜாவுக்கு ஞானதேசிகன் அழைப்பு

பாரதிராஜா போன்றவர்கள் காங்கிரஸில் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் ஞானதேசிகனும், சுதர்சன நாச்சியப்பன் எம்பியும் கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பாரதிராஜா பேசியதாவது:

நான் தீவிர காங்கிரஸ்காரன். காங்கிரஸுக்காக மேடையில் ஏறி தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறேன். என் தாயின் நகைகளை விற்று காங்கிரஸுக்காக என் தந்தை பாடுபட்டுள்ளார். நேரு போன்ற பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இன்று சோனியா தலைவராக இருக்கிறார். இதனால் காங்கிரஸில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு. அந்த கருத்து வேறுபாடு அப்பா- அம்மா, அண்ணன்-தம்பிக்கு இடையேயான கருத்து வேறுபாட்டைப் போன்றது நான் கலைஞனாகவே இருக்க விரும்புகிறேன் என்றார்.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசுகையில், தமிழகத்தில் எந்த இயக்கத்திற்கும் காங்கிரஸ் சளைத்தது அல்ல. பெரியார் பிரச்னையாகட்டும், மீனவர் பிரச்னையாகட்டும், அணுமின் நிலையமாகட்டும். தமிழக மக்களின் நலனுக்காக காங்கிரஸ் போராடும்.

வருகிற பிப்ரவரி 4-ம் தேதி திருநெல்வேலியில் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் என்றார்.

பின்னர் பேசிய ஞானதேசிகனும், சுதர்சன நாச்சியப்பன் எம்பியும் பாரதிராஜா போன்றவர்கள் காங்கிரஸில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர்

நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது : சசிகலா நடராஜன் வருத்தம்

தஞ்சாவூரில், மருதப்பா அறக்கட்டளை சார்பில் நடந்து வரும் தமிழர் கலை இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் (சசிகலா) பேசியதாவது: இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்துள்ளார். இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்; இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன். தன் மகள் திகார் சிறையில் இருந்து விடுபட, முல்லைப் பெரியாறு பிரச்னையில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க கருணாநிதி தயங்குகிறார். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னை என, அனைத்து பிரச்னைகளிலும், தமிழகத்துக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துள்ளது. கருணாநிதி, காங்கிரஸ் உறவை விலக்கிக் கொண்டால் தமிழகம் வாழ்த்தும்; இல்லையென்றால் உங்களை வீழ்த்தும். நீங்கள், "முடிவெடு' என்கிறீர்கள். நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது. அதை மாற்றியது மக்கள். மக்கள் சக்தியை திரட்டினால் மாற்றம் வரும். வரும் எம்.பி., தேர்தலிலும் அது எதிரொலிக்கும். முடிவு எடுத்துவிடலாம். அதனால், தமிழகத்தின் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. என் மனைவி மீது வழக்கு உள்ளது; அதனால், பொறுமையாக இருக்கிறேன். தற்போதுள்ள இடர்பாடுகளை பார்த்து, யாரும் அச்சப்பட வேண்டாம். மற்றவர்களை போல் பொறுப்பற்ற முறையில் என்னால் பேச முடியாது; அவசரப்பட முடியாது. "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!' இவ்வாறு நடராஜன் பேசினார். இனி, சொந்த காரை பயன்படுத்தாமல், பொது காரை பயன்படுத்துவதாகவும், தூக்கு தண்டனையை, இந்தியாவில் ரத்து செய்ய வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் நடராஜன் தெரிவித்தார்.

தஞ்சை அருகே, விளார் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணம், பழ.நெடுமாறனிடம் வழங்கப்பட்டது.

Saturday, January 21, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு: கார்த்திக் கட்சி அறிவிப்பு

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாலமுருகன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சங்கரன்கோவில் தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. இந்த தொகுதியில் தனித்து போட்டியிட்டபோதே நாங்கள் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றோம். கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது அ.தி.மு.க.வை ஆதரித்தோம். அதேபோல் சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் முத்துச்செல்வியை வெற்றிபெற செய்யவேண்டும் என்று எங்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அதன்படி அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம். அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக கார்த்திக் பிரசாரம் செய்வார். அவரது பிரசாரதேதி தேர்தல்தேதி அறிவித்தபிறகு தெரிவிக்கப்படும். அடுத்த பொதுத்தேர்தலின்போது சங்கரன்கோவில் தொகுதியை பொதுத்தொகுதியாக மாற்றவேண்டும் என்று வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, January 17, 2012

SafeComputingTips.com

This site is designed to help you be more comfortable and productive while using your computer. It will also help you reduce your risk of experiencing painful and disabling injuries or disorders such as CTS, RSI & MSD.

SafeComputingTips.com provides suggestions to minimize or eliminate identified problems and allows you to create your own "custom-fit" computer workstation. Many people experience greater comfort and productivity when following these suggestions.

பசும்பொன்னில் " சுய மரியாதை உணவு" ?

"உலக வரலாற்றில் ஒரு புனிதருக்கு ஒரே நாளில் எவரது அழைப்பும் இன்றி பலலட்சம் மக்களை வரவழைக்கும் சக்தியை உடைய பசும்பொன் முருகன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் கோவில் அமைந்துள்ள பசும்பொன்னில் சோறு அரசியல் செய்யும் சிலரது போக்கை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு வரும் ஆண்டு அங்கே ' சுய மரியாதை உணவகம்" ஒன்றை அமைக்க உள்ளோம். அதற்கான இடம் பசும்பொன்னில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒருலட்சம் பேருக்கு அன்னதானம் என்ற வாசகத்தை மட்டுமே பெரிதாக்கி வெறும் சோற்றுக்கு கூடும் கூட்டமாக தேவரினத்தை காட்டி சாப்பிட வரும் கூட்டத்தை படமெடுத்து அரசியல் வியாபாரம் செய்யும் போக்கினை தடுக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மண்ணாசை , பொன்னாசை, பெண்ணாசை துறந்த தெய்வீக திருமகன் மண்ணில் பெண்களை வைத்து குத்தாட்டம் போடவைக்கும் சிலரது புத்திக்கு தக்க பாடத்தை தேவரின இளையோர்கள் காட்ட வேண்டும். இந்த " சுய மரியாதை உணவகத்தில் " இரண்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை உணவுகள் விற்கப்படும். இந்த உணவுகள் தாய் புலிகள் இயக்கத்தினரின் மேற்பார்வையிலும் "தேவர் கோவில் பக்த குழு சுவாமிகள் " முழு ஒத்துழைப்போடும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த சுய மரியாதை உணவகத்தில் பங்கெடுக்க விரும்புவோர்கள் உங்கள் விவரத்தினை "thevarist@gmail.com" என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் தகவலையும் கருத்துக்களையும் தெரிவிக்கவும்.

KAMUDHI KOTTAI

NATARAJAN ARTICLE

Sunday, January 15, 2012

டேம் 999 இன் விளைவுகளுக்கு நடுவண் அரசே பொறுப்பு – சீமான்

டேம் 999 திரைப்படத்தைத் தமிழக அரசு தடைவிதித்ததை எதிர்த்து அதன் இயக்குநரால் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அது நேற்று உச்சநீதிமன்றம் வந்த போது தன் கருத்தைத் தெரிவித்த நடுவண் அரசின் வழக்கறிஞர் ‘எந்த ஒரு திரைப்படத்தையும் திரையிடத் தணிக்கை குழு ஒப்புதல் அளிக்கும் போது அதைத் தடை செய்ய எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை’ என்றார். அந்தக் கருத்திற்கு இப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவிக்கும் போது,

தமிழக அரசுடன் கலந்து பேசி, இரு மாநில மக்களுக்கு இடையே பிரச்சனை ஏதும் ஏற்படா வண்ணம் வாக்குமூலம் தாக்கல் செய்யாமல், பிரச்சனையை உண்டாக்கும் நோக்குடன் மத்திய அரசு வழக்குரைஞர் வாதிட்டிருப்பது கண்டனத்திற்குரிய செயலாகும்.

டேம் 999 திரைப்படம் தயாரிக்கப்பட்ட நோக்கத்தையும், அதன் பின்னணியில் உள்ள கேரள அரசின் சதித் திட்டத்தையும் சரியாகப் புரியவைக்க மத்திய அரசு தவறும் காரணத்தினால், அத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை உச்ச நீதிமன்றம் நீக்குமானால், அதனால் ஏற்படும் விளைவுகள் அனைத்திற்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்

Saturday, January 14, 2012

பொங்கல்



பொங்கல் பூஜை எவ்வாறு செய்ய வேண்டும்?

பொங்கல் வைக்க உகந்த நேரம்: காலை 7.30 மணி முதல் காலை 9 மணிக்குள்; பொங்கல் வைத்து, பரப்பிரும்மத்தின் பிரத்யக்ஷ ஸ்வரூபமாக விளங்கும் சூரிய பகவானை வணங்குங்கள்!

பொங்கல் திருவிழா ஏன் கொண்டாடப்படுகிறது என்றால், பொங்கலுக்கு முதல் நாளான போகிப்பண்டிகையின் போது நம்மிடமுள்ள கெட்ட குணங்கம் போகின்றன.பொங்கல் பண்டிகையன்று நம்மிடம் நல்ல குணங்கள் பொங்கிப் பெருக ஆரம்பிக்கின்றன. மறுநாள் காணும் பொங்கல் எதிர்வரும் (காணும்) காலங்களில் நல்ல எண்ணங்கள் எங்கும் எதிலும் நீடித்து நிற்க இறைவன் அருள்புரிய கொண்டாடப்படுகிறது.

ஆரோக்கியம் தரும் ஆதித்தன்: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. உலகில் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லாவிட்டால் செல்வத்தால் பயனில்லை. சுவரை வைத்துத் தானே சித்திரம் என்றும்கூட சொல்வதுண்டு. அதனால் மனிதவாழ்விற்கு மன, உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம். இதற்குரிய தெய்வமாக சூரியன் இருக்கிறார். இவருக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் செந்தாமரை மலரிட்டு வணங்கினால் ஆரோக்கியம் உண்டாகும். கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யாதே என்பது சூரியனின் பெருமையை எதிர்மறையாகக் கூறுவதாகும். இப்பழமொழி கண் பெற்ற பயனே சூரியனைக் கண்டு மகிழ்வதற்கு என்று குறிப்பிடுகிறது.

பொங்கல் பூஜை செய்வது எப்படி?

இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக்காரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து போவது முறையானதல்ல. மேலும், இளைய தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.

வீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைந்து பொங்கல் வைக்க வேண்டும். கோயில்களையும் தேர்ந்தெடுக்கலாம். பால் பொங்கும் போது, சூரிய நமஸ்காரம் செய்து, பொங்கலோ பொங்கல் என ஒரு சேர முழக்கமிட வேண்டும். ஏனெனில், இது ஒரு ஒற்றுமைத் திருவிழா. தேரோட்டம் என்ற நிகழ்ச்சியை ஊர் ஒற்றுமை கருதி எப்படி நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி சென்றார்களோ, அதுபோல பொங்கலும் மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்கும் விழா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே வீட்டுக்குள் காஸ்ஸ்டவ், மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றில் பொங்கல் வைப்பதைத் தவிர்த்து வீதியில் வைக்க வேண்டும். நகரங்களாக இருந்தாலும் கூட, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புஅளிக்கும் வகையில், அங்கிருந்து பனை ஓலை அல்லது தென்னை ஓலை தருவித்து பொங்கலிட வேண்டும்.

பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து, வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்துவிளக்கேற்றி, அதன் முன் ஒரு வாழை இலையைப் போட வேண்டும். அதன் இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை) வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும். கரும்பின் ஓலையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைக்க வேண்டும்.

பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டியபிறகு, உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்ட வேண்டும். பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும், ஒரு தேங்காயை உடைத்து, அதன் நீரை பானையில் விட வேண்டும்.

சுத்தப்படுத்திய பச்சரிசியை நன்றாகக் களைந்து, அந்த தண்ணீரை பானையில் விட வேண்டும். அடுப்புக்கும், பொங்கல் பானைக்கும் தூபம் (பத்தி) காட்டி, பற்ற வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால் பொங்கும் போது குலவையிட வேண்டும். குலவை தெரியாதவர்கள் பொங்கலோ பொங்கல் என முழங்க வேண்டும். பின்னர் பானையிலுள்ள சுடும் நீரை, அரிசி வேகும்அளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு, மீதியை முகந்து விட வேண்டும். அரிசியை போட்டு, வெந்ததும் அவ்வப்போது அகப்பையால் கிண்டி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பாத்திரத்தின் அடியில் பிடித்து விட வாய்ப்புண்டு. பொங்கலை இறக்கிய பிறகு, சர்க்கரைப் பொங்கல் வைக்க வேண்டும்.

இலையின் முன்னால் இந்த பானைகளை இறக்கி வைத்து, திருவிளக்கிற்கும், சூரியனுக்கும் பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். மற்றவர்கள் சூரியன் குறித்த தமிழ் பாடல்களைப் படிக்கலாம். பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு, குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன்பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். பின், காய்கறி வகைகள் சமைத்து வெண்பொங்கலை மதிய வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் முன்னோரை நினைத்து, இனிப்பு வகைகள், புத்தாடை வைத்து வணங்க வேண்டும். புத்தாடையை தானமாக கொடுத்து விட வேண்டும்.

சென்னை - பெங்களூரு ஆறுவழிப் பாதைக்கு ஜப்பான் உதவி

சென்னை-பெங்களூரு இடையே ஆறுவழிப்பாதை அமைக்க, ஜப்பானிய அரசு உதவி செய்ய முன்வந்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், சென்னையிலிருந்து மூன்று மணி நேரத்தில், பெங்களூரு சென்றடையலாம்.

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோஷியுடன், ஜப்பான் போக்குவரத்து துறை அமைச்சர் தக்கேஷி மேத்தா, நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் அதிகாரிகள் கூறுகையில், "சென்னைக்கும், பெங்களூருக்கும் இடையே, ஆறுவழி சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு நிதி உதவி அளிக்க, ஜப்பான் அமைச்சர் முன்வந்துள்ளார். இந்த ஆறுவழிப் பாதைக்கான திட்ட அறிக்கையை, ஜப்பானிய கம்பெனி ஒன்று தயாரித்து வருகிறது. இரண்டு மாதங்களில் திட்ட அறிக்கை தயாராகிவிடும். அதற்கு பின், மத்திய அரசு எவ்வாறு திட்டத்தை செயல்படுத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கும். இந்த ஆறுவழிச்சாலை ராணிபேட்டை, சித்தூர், பலமநேர், கோலார் வழியாக, பெங்களூரைச் சென்றடையும்' என்றனர்.

திரிவேதியுடன் சந்திப்பு: ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியையும், ஜப்பான் அமைச்சர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஜப்பானில், "புல்லட்' ரயில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து, ரயில்வே உயர் அதிகாரிகள் கடந்த ஆண்டு, ஜப்பானுக்குச் சென்று ஆய்வு நடத்தினர். இந்திய "புல்லட்' ரயில் திட்டங்களுக்கு, ஜப்பான் எவ்வாறு உதவி செய்ய முடியும் என்று, ஜப்பானிய அமைச்சர், தக்கேஷி மேத்தா, ரயில்வே அமைச்சர், திரிவேதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நாட்டில், ஆறு ரயில் பாதைகளில், "புல்லட்' ரயில் இயக்க ரயில்வே "போர்ட்' முடிவு செய்துள்ளது. இதில், புனே-மும்பை-ஆமதாபாத், கோல்கட்டா-கல்தியா, டில்லி-ஆக்ரா-லக்னோ-வாரணாசி, சென்னை-விஜயவாடா-ஐதராபாத் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க நிபுணர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. ஆனால், சென்னை- பெங்களூரு-கோவை-திருவனந்தபுரம் பாதையில், "புல்லட்' ரயில் இயக்க நிபுணர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. "புல்லட்' ரயில் திட்டத்தை அமல்படுத்த, ஒரு தனி வாரியம் அமைக்கப் போவதாக, ரயில்வே அமைச்சர் திரிவேதி, ரயில்வே மானியக் கோரிக்கை மீது, லோக்சபாவில் நடந்த விவாதத்திற்கு பதில் அளிக்கையில் அறிவித்திருந்தார். ஆனால், அறிவிப்பு வெளிவந்து ஒரு ஆண்டு ஆகியும், இந்த திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவையில் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இவ்வாறு, ரயில்வே அதிகாரிகள் கூறினார்.

Gangai Amaran works with Bharathiraja

It didn't take place though many expected that Bharathiraja would work with his good friend maestro Ilayaraja after a long time, for 'Annakodiyum Kodiveeranum'. The film went on floors with young gun G V Prakash Kumar as music composer.

But the Isaignani's younger brother Gangai Amaran is a vital part of the movie. The actor-director-composer has penned lyrics for songs in 'Annakodiyum Kodiveeranum'. "Vairamuthu and Gangai Amaran have taken care of all the numbers in the movie," sources say.

Interestingly, it was Gangai Amaran who penned lyrics for all the songs in Bharathiraja's 'En Uyir Thozhan', which hit the screens in 1990. The film which had Babu and Rama in lead roles dealt with the life of an innocent slum dweller.

"Gangai Amaran is happy to work with Bharathiraja again," sources say, recalling the deep friendship between Ilayaraja brothers and the director, which dates back to more than three decades. 'Annakodiyum Kodiveeranum' has Ameer, Iniya and Karthika in lead roles.

GUD ONE.....

Bala picks Uma Riyaz to play Atharva's mum

Impressed by Uma Riyaz's performance in 'Mounaguru', National Award winning director Bala has asked the actress to play Atharva's mother in his forthcoming venture, which has been tentatively titled 'Eriyum Thanal'.

"I would have sure denied playing the protagonist's mom if the offer was from someone else. Since it is Bala, who is one of the great filmmakers of the industry, I have sought time from him to take a decision," says the 39-year-old actress.

Natarajan may bare all on his and wife Sasikalaa’s ouster

There is more political excitement on the cards if associates of M Natarajan, Sasikala's husband, are to be believed. Expelled along with his wife and other relatives, Natarajan has threatened to bare all, at least his version of what led to the expulsions that shook AIADMK's power corridors.

Sources say Natarajan will speak on the controversial issue during the three-day Pongal celebrations he holds every year in Thanjavur. This will be the first public appearance for some of Sasikala's family members after their high profile expulsions. Party supremo J Jayalalithaa had expelled at least 15 family members besides her friend Sasikala from the party's primary membership and stripped them of their posts. She also indicated at a party forum that she will not go back on her decision.

Sasikalaa's brother V Divakaran is expected to attend the Pongal festivities. While Natarajan organises such a function every year, this time it gains significance coming as it does in the wake of the expulsions. Natarajan is likely to explain his stand on the final day on January 17, a close aide said. The function is also said to provide a moral boost for members of the Thevar community, from which Sasikalaa hails.

"We expect Natarajan to speak about the sacrifices her wife made for Jayalalithaa and for the party. He himself has criticised some of the expelled family members' role in the past," a close friend of Natarajan said.

Natarajan will organise the 'Tamilar Kalai Ilakkiya Thiruvizha' in a marriage hall owned by him. "He has invited many of his friends and community people for the function," said the friend. The event is touted to be a muscle-flexing exercise for Natarajan to show his strength in the Thevar community.

On the second day, a conference titled "Mullaperiyar: History, Problems and the Solution" will be held. On the final day (January 17), three books written by Natarajan will be released. Pro LTTE leaders Pazha Nedumaran and Kasi Anandan are expected to attend the function.

Thursday, January 12, 2012

இங்கிலாந்திலும் பிரபாகரன் அஞ்சல் தலை

ஃபிரான்ஸ் நாட்டின் அஞ்சல் துறை அமைச்சகத்தின் மூலம் தமிழ் ஈழத் தேசியத் தலைவரும், விடுதலைப்புலிகளின் தலைவருமான பிரபாகரன் மற்றும் தமிழ் ஈழத் தேசிய சின்னங்களை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கனடா, இங்கிலாந்து நாடுகளும் வெளியிட்டன என்று கூறப்பட்டது.

இப்போது இங்கிலாந்து நாட்டின் அஞ்சல் துறை மூலம் வெளியிடப்பட்ட பிரபாகரன் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலை பயன்பாட்டிற்கு வந்துள்ளது எனத் தெரிகிறது.

ஏற்கனவே ஃபிரான்ஸ் நாடு வெளியிட்ட அஞ்சல் தலைகளையே புறக்கணிக்கப் போவதாக அறிவித்த சிங்கள அரசு இப்போது இதனால் கடும் எரிச்சலுக்கு ஆளாகியிருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள சிங்கள அரசின் தூதரிடம் இது குறித்து பேசி வருகிறது

வருகிறார் எஸ்.ஜே.சூர்யா

வாலி, குஷி உள்பட சில படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. அந்த படங்களுக்குப்பிறகு கள்வணின் காதலி, வியாபாரி, நியூ, அஆ ஆகிய படங்களில் கதாநாயகனாகவும நடித்தார். ஆனால் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் அவரது மார்க்கெட் கவிழ்ந்து போனது. இப்போது ஷங்கர் இயக்கியுள்ள நண்பன் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்த சூட்டோடு மீண்டும் தனது மார்க்கெட்டை உயர்த்த, ஒரு படத்தை தானே இயக்கி நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதோடு இந்த படத்திற்கு அவரே இசையும் அமைக்கிறார். தற்போது அப்படத்துக்கான லேட்டஸ்ட் மெட்டுக்களை உருவாக்கி வருகிறார் அவர்.

Wednesday, January 11, 2012

ராஜபக்சே மைத்துனருக்கு அடிஉதை பரபரப்பு

ராமசுவரம் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சவின் தங்கை கணவரை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க.,வினர் அவரை அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ராஜபக்சவின் தங்கை கணவர் நடேசன் குமரனை தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்வதற்காக ராமேஸ்வரம் வந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த நாம் தமிழர் கட்சி ம.தி.மு.க, வை சேர்ந்தவர்கள் கோயிலை முற்றுகையிட்டனர்.அதோடு ராமேஸ்வரம் கோயிலை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று நடேசனை முற்றுகையிட்ட அவர்கள்; நடேசனை அடித்து உதைத்தனர்.இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து நடேசனை மீட்டு அழைத்து சென்றனர்.மேலும் நடேசன் குமரனை வெளியேற்றுமாறு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது

Tuesday, January 10, 2012

தானே புயல் நிவாரண நிதி திரட்ட நடிகர், நடிகைகள் நட்சத்திர கலைநிகழ்ச்சி: டைரக்டர் பேரரசு வற்புறுத்தல்

சினிமா டைரக்டர் பேரரசு அளித்த பேட்டி வருமாறு:-

தானே புயலால் கடலூர், புதுவை மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தமிழ், திரையுலகம் ஏற்கனவே ஈழத்தமிழர் பிரச்சினைக்காக போராடி உள்ளது. காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து உள்ளது.

நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என சினிமா சார்ந்த அனைவரையும் வாழவைப்பது தமிழக மக்கள்தான். மூட்டை தூக்கும் தொழிலாளிகள்கூட கூலி பணத்தில் டிக்கெட் எடுத்து சினிமா பார்த்து திரையுலகினரை வாழ வைக்கிறார்கள்.

எனவே தானே புயலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ வேண்டியது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரின் கடமையாகும். சினிமாவில் பல்வேறு சங்கங்கள் உள்ளன. எல்லோரும் இணைந்து எப்படி உதவலாம் என்று யோசித்து முடிவுகள் எடுக்கவேண்டும்.

நடிகர், நடிகைகளின் நட்சத்திர கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் வசூலாகும் தொகையை முதல்-அமைச்சரின் தானே புயல் நிவாரண நிதிக்கு வழங்கலாம் அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கைகள் மூலம் உதவலாம்.

தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் திரையுலகினரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு இயக்குனர் பேரரசு கூறினார்.

muthuramalinga thevar statue in karaikudi

Samantha: Mani Ratnam's 'Pookadai' lady!

Lady luck is working overtime for Samantha, what with the promising ventures that she is bagging with each passing day. The latest is that Samantha will be the lead lady of Mani Ratnam's forthcoming, 'Pookadai'! Can a budding actress ask for more?

Sources close to the actress have confirmed this news to IG. In fact, earlier she had given a screen test with Mani Ratnam but it failed to click. But Mani is said to have called her back to play the female lead as she fits the bill well.

'Pookadai' is the acting debut of Karthik's son Gautham in Tamil cinema and also stars 'Action King' Arjun and Lakshmi Manchi in important roles with music by Isai Puyal AR Rahman.

Samantha currently has a trilingual with her mentor Gautham Menon, which is touted to be a romantic treat to movie goers all over the country this Valentines Day.

With a string of promising ventures in her kitty, Samantha is definitely here to stay! Great going girl...

Sunday, January 8, 2012

DINAMALAR 8/1/12 ARTICLE

சசிகலா நீக்கத்தால் "ஜாதி பிரச்னையை' சீண்டும் தி.மு.க.,: ஜெ., மீது மட்டுமே விசுவாசம்

அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதால், அ.தி.மு.க.,வுக்கு முக்குலத்தோர் ஓட்டுகள் பாதிக்கும் என்பது போன்ற பிரமையை சிலர் ஏற்படுத்துகின்றனர். அவ்வாறு எந்த பாதிப்பும் ஏற்படாது என, தென் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் கூறுகின்றனர்.

தமிழக அளவில், 1960களில், முக்குலத்தோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்கள் என்ற நிலையை, தி.மு.க., ஏற்படுத்தியது. இதற்கு மாற்றாக, அ.தி.மு.க., உருவான பின், எம்.ஜி.ஆர்., காலம் தொட்டு, முக்குலத்தோர் அதிகமுள்ள தென் மாவட்டங்கள், மதுரை, தேனி, பெரியகுளம் மற்றும் டெல்டா மாவட்டங்களில், அ.தி.மு.க., மிகப்பெரிய அடித்தளத்தை ஏற்படுத்தியது. கள்ளர், மறவர், அகமுடையாரின் ஆதரவு, அ.தி.மு.க.,வுக்குத்தான் என கருதப்பட்டது. பிற கட்சிகளில் அவர்கள் இருந்தாலும், அ.தி.மு.க., மீது அச்சாயம் பூசப்பட்டது.சசிகலா குடும்பத்தினர் வரவு, தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் சம்பவம் போன்ற காரணங்களால், 1996ல் அ.தி.மு.க., ஆட்சியை இழந்தது.அதற்கேற்ப, முக்குலத்தோர் அதிகம் உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, மதுரை, பெரியகுளம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் நடக்கும் முக்குலத்தோர் விழாக்களில் அவ்வப்போது சசிகலாவின் கணவர் நடராஜன் தலைகாட்டியும், விளம்பரங்கள் மூலமும் முன்னிறுத்தப்பட்டார். அ.தி.மு.க.,வால் நடராஜன் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், விழாக்களில் அவர் தலைகாட்டுவது, தாழ்த்தப்பட்ட மக்களிடையே, அ.தி.மு.க., மீது சிறு வெறுப்பை ஏற்படுத்தியது.தென்மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோர் ஆதரவு கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றோர், அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாடு எடுத்ததாலும், தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் ஜாதிய பிரச்னைகள் பெரிய அளவில் இல்லாததாலும், அ.தி.மு.க., மீதான முக்குலத்தோர் சாயம் பெரும்பாலும் கரைந்தோடிவிட்டது.இச்சூழலில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் முழுமையாக நீக்கப்பட்டதால், அக்கட்சிக்கு முக்குலத்தோரின் ஓட்டுகள் பாதிக்கும் என்ற கருத்து பரப்பப்படுகிறது.

இதுபற்றி, தென் மாவட்டத்தில் தேவர் அமைப்பில் முக்கிய பொறுப்பில் செயல்படும், பெயர் வெளியிட விரும்பாதவர் கூறியதாவது:

ஆரம்பத்தில் அ.தி.மு.க., என்றால், எம்.ஜி.ஆர்.,தான். அதன்பின், ஜெயலலிதா தான். சசிகலா அல்ல; சசிகலா வரவால், எங்களுக்கு ஒரு பலம் வந்ததாக நாங்கள் கருதினோம். பெரிய கட்சியில், பெரிய பொறுப்பில் உள்ளவருடன் சசிகலா, அவரது குடும்பத்தார் உள்ளதால், அவர்கள் எங்கள் பகுதிக்கு வரும்போது, அவர்களை வரவேற்பதை கவுரவமாக நினைத்தோம்.சசிகலா நீக்கப்பட்டது எங்களுக்கு சற்று வருத்தம்தான். அதற்காக, அ.தி.மு.க.,வையோ, ஜெயலலிதாவையோ நாங்கள் வெறுக்கவில்லை. சசிகலா எங்கள் உறவினர் என்றாலும், ஜெயலலிதாவுக்கு நாங்கள் விசுவாசிகள். ஜெயலலிதா பின்னால்தான் முக்குலத்தோர் சமுதாயம் நிற்கும்.சசிகலா, நடராஜன், தினகரன் மட்டுமின்றி, முன்பு கருப்பசாமிபாண்டியன், தற்போது ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன் போன்றோர் முக்குலத்தோராக இருந்தாலும், மறவர், கள்ளர், அகமுடையார் என்ற சமூகத்துக்காக எதையும் அவர்கள் செய்யவில்லை. சசிகலா, நடராஜன், தினகரன் போன்றோர் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் வளர்த்துக் கொண்டனர். எங்கள் சமூக பலத்தை, தங்களுக்கான பாதுகாப்பாக கருதினர். கருப்பசாமி பாண்டியன், நயினார் நாகேந்திரன், பன்னீர்செல்வம் போன்றோர், கட்சியில் தாங்கள் வளரவும், தங்களுக்கு பின்னால் முக்குலத்தோர் உள்ளனர் என்பதை காண்பித்து பதவிகளை பெற்றனர்.

முக்குலத்தோர் விழாக்களில் இவர்கள் பங்கேற்று இருக்கலாம். குலத்துக்காக, குலத்தின் ஒதுக்கீடு, படிப்பு, முன்னேற்றம், கல்வி நிறுவனங்கள், பண ரீதியான உதவி என ஏதும் செய்யவில்லை. ஜாதிய மோதலில், வழக்குகளில் நாங்கள் சிக்கியபோது எங்களை பார்த்தது கூட இல்லை.கொடியங்குளம் சம்பவத்தின்போது, எங்களுக்கு பலமாக இருந்தது, அ.தி.மு.க.,வும், ஜெயலலிதாவும்தான். சசிகலா, நடராஜன் போன்றோர் வந்து கூட பார்க்கவில்லை. அச்சம்பவத்துக்குமுன், யார் என்றே தெரியாத நிலையில் இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி, அந்த ஒரே சம்பவத்தால், ஒட்டப்பிடாரத்தில் எம்.எல்.ஏ.,வானார். தென்காசி எம்.பி., தொகுதியில் அதிகளவில் ஓட்டு பெற்றார். அதற்குக்காரணம், அச்சம்பவத்தின்போது அவர் அம்மக்களுடன் இருந்தார்.அதுபோல, முக்குலத்தோருடன் தென் மாவட்டம், சோழ மண்டலத்தில் யாரும் இருக்கவில்லை. எனவே, எங்கள் சமுதாயமும், ஓட்டுகளும் ஜெயலலிதா பின்னால்தான் செல்லும்.தற்போதைய சூழலில் இதுபோன்ற ஜாதிய பிரச்னையை, தி.மு.க.,வினர் எழுப்பி வருகின்றனர். அ.தி.மு.க.,வுக்கு எதிராக அது திரும்பும் என எண்ணுகின்றனர். சசிகலா, நடராஜன், தி.மு.க., என அனைவரையும் நாங்கள் அறிந்ததால், நாங்கள் ஜெயலலிதா பக்கம் உள்ளோம். எப்போது தேர்தல் வைத்தாலும், அது வெளிப்படும்.எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தென் மாவட்டம், சோழ மண்டலம், மதுரை, தேனிப்பகுதியில் உள்ளவர்கள். அவர்களிடம் பேசியபோது, இதே கருத்தைத்தான் அவர்களும் தெரிவித்தனர்.சசிகலா, நடராஜன் போன்ற பல பெயரைக்கூறி, பலர் பதவி பெற்றனர். உண்மையான அ.தி.மு.க., விசுவாசிகள் இன்றும் தொண்டனாகவே இருக்கின்றனர். அவர்கள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

IPL5 SCHEDULE

பி.சி., எம்.பி.சி. மாணவர் விடுதிகளில் டி.வி.க்கு தடை

தேர்வுகள் நெருங்கி வருவதை ஒட்டி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகல் உள்ள டி.வி.களில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு கல்வியாண்டில் விடுதியில் தங்கிப் பயிலும் 95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகள் உள்ளன. அந்த விடுதிகளில் 77 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். கிராமப்புறங்களில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்கள் இந்த விடுதிகளால் பயன்பெற்று வருகின்றனர்.

தொலைக்காட்சிகளுக்குத் தடை: மாணவர்களின் பொழுதுபோக்கிற்காக பெரும்பாலான விடுதிகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நெருங்கிவிட்ட காரணத்தால் தொலைக்காட்சிப் பெட்டிகளை இயக்கக் கூடாது என்று விடுதி நிர்வாகிகளுக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நடப்பு கல்வியாண்டில் 95 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்புப் பயிற்சி: விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களின் கற்கும் திறனுக்கு ஏற்ப அவர்களை மூன்று வகையாகப் பிரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களை "ஏ' வகையாகவும், 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எனில் "பி' வகையாகவும், 40 சதவீதத்துக்கு குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்களை "சி' வகையாகவும் பிரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதில், "ஏ' பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சிகளை அளித்து அவர்கள் அதிக மதிப்பெண்களை பெற வழிசெய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்குப் பள்ளிகளில் அளிக்கப்படும் பயிற்சிகளுடன் சிறப்புப் பயிற்சிகளை கொடுக்க வேண்டும் என விடுதி காப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கூடுதல் இடங்கள் ஒதுக்க நடவடிக்கை: விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட இடங்களுடன் மேலும் 10 சதவீதம் அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதை ஒவ்வொரு கல்வியாண்டும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்ற முடிவை அரசு எடுக்கவுள்ளது.

வருமானச் சான்று எப்போது தேவை? விடுதிகளில் விண்ணப்பிக்கும் போதே குடும்பத்தின் வருமானச் சான்றினை அளிக்க வேண்டும் என்ற விதி இப்போது உள்ளது. அதைத் தளர்த்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, விடுதியில் சேர தேர்வு செய்யப்பட்ட பின் வருமானச் சான்று அளித்தால் போதுமானது என்ற முடிவை அரசு எடுத்துள்ளது.

இதன்மூலம், விண்ணப்பிக்கும் போதே வருமானச் சான்றைப் பெற மாணவர்கள் அலைய வேண்டிய அவசியம் இருக்காது. விடுதியில் சேருவது கட்டாயம் என்று தெரிந்த பிறகே அந்தச் சான்றினை அளித்தால் போதும் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மாயாவதி சிலைகள் மூடப்படும்: குரேஷி

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள மாயாவதியின் சிலைகள் திரையிட்டு மூடப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தது: உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அந்த மாநில முதல்வர் மாயாவதியின் சிலைகளையும், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சிலைகளையும் திரையிட்டு மூடுவதென தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்த விவகாரம் தேர்தல் நடத்தை விதிமுறைகளோடு தொடர்புடையது என்பதால் மிக விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும். எந்த அரசியல் கட்சிக்கும் அரசியல் ஆதாயம் ஏற்படக் கூடாது என்பதால், தேர்தலின்போது அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் படங்கள், அரசியல் கட்சிகளின் காலண்டர்கள் கூட அகற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிட அந்த மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தேர்தல் ஆணையக் குழுவிடம் பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. சில அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. இது குறித்து முழுமையாக ஆய்வு செய்தபின்பு முடிவெடுக்கப்படும்.

ஏற்கெனவே மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அரசியல் சார்பு, கறுப்புப் பணம், மதுபானம் மற்றும் பணப் பரிவர்தனை ஆகியன குறித்தும் கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. மதம் சார்ந்த இடங்களில் செய்யப்படும் அவதூறு பிரசாரங்கள் குறித்தும் புகார்கள் வந்துள்ளன. மாநில காவல்துறையினருக்கு பதிலாக மத்தியப் படைகளை பயன்படுத்துமாறும் அரசியல் கட்சிகள் கோரியுள்ளன.

தேர்தல் முறையாகவும், நடுநிலையோடும் நடைபெறும் என்று அரசியல் கட்சிகளுக்கு ஆணையம் உத்திரவாதம் அளித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளை நடுநிலையோடு கடைபிடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ.7.5 கோடிக்கு கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள், ஹோட்டல்கள் போன்ற இடங்களிலும், ஹவாலா வழிகளிலும் நடைபெறும் பணப் பரிமாற்றத்தை கண்காணிக்கும் பணியில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் குரேஷி தெரிவித்தார்.

Saturday, January 7, 2012

அகதிகளாக வந்தவர்களை சிறையில் அடைத்தது தவறு: சீமான்

மிழகத்துக்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்களை சிறையில் அடைத்தது தவறு என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கையின் வட பகுதியிலுள்ள புங்குடு தீவில் பிழைப்பிற்கு வழியின்றி புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாபட்டினம் கடற்கரையில் அகதிகளாக வந்திறங்கிய ஈழத் தமிழ்ச் சொந்தங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்திருப்பது மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகும்.

தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் நாட்டில் தனது உயிருக்கும், உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்று கருதி, வேறொரு நாட்டிற்கு அடைக்கலம் தேடி வருபவர்கள் அகதிகளாக ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பையும், மனிதாபிமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைப் பிரகடனம் வலியுறுத்துகிறது. 1948ஆம் ஆண்டில்

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா. மனித உரிமைப் பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், அந்த பிரகடனத்திற்கு எதிராக, மனிதாபிமானமற்ற வகையில் தமிழக காவல் துறை செயல்ப்பட்டுள்ளது.

காவல் துறையின் இந்த நாகரீகமற்ற நடவடிக்கையை தமிழக அரசு தடுத்தி நிறுத்தி சிறையில் அடைக்கப்பட்ட நம் சொந்தங்கள் 8 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tamil Kolaveri di sri lanka Version


http://www.youtube.com/watch?v=aaHwOUtKu6Y

Budget session postponed

As scheduled earlier the TN budget session will not be held on January 18 but has been postponed to January 30. The reason for postponing the assembly session is not known. Governor Rosaiah issued the notification and he will deliver the opening address on January 30.



The Raj Bhavan press release made it clear that the date has been postponed to January 30 instead of January 18.

Coimbatore Collector Karunagaran removed from post

COIMBATORE: Confirming speculations doing round in the political and bureaucratic circles of Coimbatore for more than a week, the AIADMK government on Friday removed district collector M Karunagaran from the post. Allegedly a close confident of Sasikalaa Natarajan, the friend-turned-foe of chief minister J Jayalalithaa, Karunagaran's further posting has been put on hold and his wife and deputy police commissioner Hema Karunagaran is also facing the marching orders.

T N Hariharan, managing director of Tamil Nadu Housing Board and former collector of Ramanathapuram district, has been appointed as the new collector of Coimbatore and the order came into force by Friday evening. The news reached Karunakaran when he was holding a meeting with members of the Estimates Committee of State Assembly.

The new collector, who hails from Chennai, went to the temple town of Tirupathi in Andhra Pradesh in a thanks giving visit as soon as he got the information. He is likely to take charge on Monday.

The sacking of Karunakaran takes place hardly a couple of days after city Corporation's deputy mayor N Chinnadurai was forced to resign for his close proximity to Sasikalaa. Two zonal chairmen of the city corporation are also likely to be removed.

A down to earth and approachable collector, Karunagaran was always the target of his rivals both in politics and bureaucracy ever since he took charge hardly six months ago. Though he was not a relative of Sasikalaa, there was a huge campaign branding him as a cousin brother of the controversial power-broker. When Karunagaran's wife Hema was appointed as deputy police commissioner, their adversaries dubbed that also as the handiwork of Sasikalaa to appease her 'close relative'.

According to sources close to the collector, he or his wife never had any relationship with Sasikalaa and they were just members of the same Thevar community to which Sasikalaa belongs to.

Sources also blamed a senior minister from Western Tamil Nadu for all the troubles now haunting the collector.

Interestingly, Karunagaran won no bad mark during his brief stint as collector and he was approachable to all. He travelled every nook and corner of the district to find a solution to the grievances of the people. His earlier sting as district revenue officer was also controversy-free. On Thursday, he released the new electoral roll of the district. But for the last one fortnight, he was prevented from taking any crucial decisions by higher-ups from Chennai.

A law graduate, the new collector had earlier worked in rural development and water conservation areas. It was only very recently, he was made MD of the housing board.

Thursday, January 5, 2012

Vivek to wield megaphone

Time has come for Vivek to don the avatar of a director. The top comedian will soon wield the megaphone for a film, which has story, screenplay and dialogues by him. Remember Vivek used to pen script for comedy portions in his movies.

Says the 'Chinna Kalaivanar', "The shooting will start in the month of April. The film is about a carefree youngster in a village, who later realizes his responsibility and becomes a popular personality who is admired by everyone."

Besides taking care of script and direction, Vivek is playing the lead role as well. "The selection process is on for other members of the cast and crew. The movie will strike a perfect balance between comedy and romance," Vivek says.

He adds: "Though I have written comedy portions in the past with the help of my friends, this is for the first time I am writing a full-fledged script for a feature film. It's a totally different experience, I must say."

Wednesday, January 4, 2012

8-ம் தேதி உண்ணாவிரதம்

முல்லைப்பெரியாறு பிரச்சினையில் கேரள அரசுக்கு ஆதரவாக அங்குள்ள நடிகர்-நடிகையர் மற்றும இயக்குனர்கள் ஆதரவு தெரிவித்த போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு ஆதரவாக இயக்குனர் பாரதிராஜா தலைமையில் வருகிற 8-ம் தேதி முல்லைப்பெரியாறு அணை அருகில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ் சினிமா இயக்குனர் சங்கம் சார்பில் இயக்குனர்கள் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள்.

அதோடு, பெப்சி மற்றும் தமிழ் சினிமா நடிகர்-நடிகைகளும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்திருக்கிறார்.

Tuesday, January 3, 2012

Hot new options

hoose from a basket of options for a career in International Business, Retail and Marketing, Online MBA, Management for working professionals and Engineering.

India Today

by Deepshikha Punj - 37 mins ago

1. International Business

Qualification: Graduate
Duration: Two year full-time
Cost of course: Rs 7,50,000
Starting salary: Rs 6 lakh-Rs 12 lakh p.a.
Institute: Asia-Pacific Institute of Management, New Delhi (www.asiapacific.edu)

Asia-Pacific Institute of Management, New Delhi, has started the admission process for its post graduate diploma in management with dual specialisation in international business.

The course is NBA (National Board of Accreditation) accredited and AIU (Association of Indian Universities) recognised and is equivalent to MBA. It will admit graduates having an essential score of a competitive examination (CAT /MAT / XAT / CMAT / GMAT) with a minimum composite score of 450.

The last date for admissions is January 31, 2012. On completion of the course, graduates can expect to earn anything between Rs 6 lakh to Rs 12 lakh per annum including international placement opportunities.

2. Retail and Marketing

Qualification: Graduate in any discipline with 50 per cent
Duration: Two year full-time
Cost of course: Rs 4,15,000
Starting salary: Rs 3 lakh-8 lakh p.a. onwards
Institute: Jagan Institute of Management Studies, Delhi (www.jimsindia.org)

According to a research report named 'Retail Sector in India' by Research and Markets website, Indian retail sector accounts for 22 per cent of the country's gross domestic product. It also contributes to eight per cent of the total employment.

In keeping with the growing demand, Jagan Institute of Management Studies, Delhi, has started a two-year full-time post graduate diploma in retail and marketing management. The course will enroll graduates with a minimum of 50 per cent in any discipline. They will be selected on the basis of their CAT/MAT scores. The last date for application is January 31, 2012.

3. Online MBA

Qualification: Graduate in Business Management
Duration: Two years
Cost of course: Rs 16,00,000
Starting salary: N/A
Institute: GLOIN Institute of Higher Education, Switzerland (www.gliononline.com)

For students looking for a foreign degree without having to leave the country, GLOIN Institute of Higher Education, Switzerland, has launched an online MBA. The course is for working professionals with a bachelor's degree in a business related field, work experience and English language certificate proficiency (TOEFL and IELTS).

The programme is for approximately 27 months and will enroll 15 to 20 students. Students can access study material online and the course offers flexibility of time to all interested.

4. Technology management

Qualification: Graduate with minimum of five years of work experience
Duration: 18 months
Cost of course: Rs 32,000 per unit
Starting salary: N/A
Institute: Chifley Business School, Australia (www.chifley.edu.au)

Chifley Business School, Australia, has launched an international distance MBA with specialisation in technology management for Indian students starting January 2012.

The programme offers complete online support through e-communities and can be finished in a minimum of eight months and a maximum of four years. Each programme has 12 units and each unit costs Rs 32,000. Graduates with a minimum of five years of work experience are eligible to apply for the course. The last date to apply is January 20, 2012.

5. Engineering

Qualification: 10+2 with at least 65 per cent
Duration: Four year
Cost of course: Rs 1,50,000
Starting salary: Rs 1.8 lakh-Rs 2.4 lakh p.a. onwards
Institute: Manav Rachna University, Faridabad (www.mriu.edu.in)

Manav Rachna International University, Faridabad, is offering a bachelor of technology in civil engineering. The four-year programme will enroll 1,590 students (720 in the first shift and 870 in the second shift).

Merit list shall be prepared on the basis of AIEEE scores and seats remaining vacant shall be filled on the basis of Manav Rachna National Aptitude Test. All applicants can also fill in an online application form.

Students with 65 per cent in 10+2 (55 per cent for second shift) in five subjects including physics, mathematics and English as compulsory subjects along with either chemistry, biotechnology, computer science or biology are eligible.

நார்வே தமிழ்த் திரைப்பட விழா 2012

சர்வதேச அளவில் தமிழ்த் திரைப்படங்களுக்காக நடத்தப்படும் நார்வே தமிழ்த் திரைப்பட விழா, நார்வே தலைநகரான ஆஸ்லோவில் வரும் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி தொடங்குகிறது.

ஏப்ரல் 25 முதல் 29-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஐந்து நாள் திரைப்பட விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திரைப்படங்கள் கலந்துகொள்ளும். அவற்றில் 15 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழர் விருது வழங்கப்படும்.

தமிழ் மொழி, கலை, கலாசாரம் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் படங்கள், தமிழ்ச் சமூகத்தை நல்வழிப்படுத்தும் கருத்துகளை உள்ளடக்கிய படங்கள், தமிழ் வரலாறு சார்ந்த படங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

திரைப்படங்களின் கால அளவு மூன்று மணி நேரத்துக்குள்பட்டதாக இருக்க வேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் படங்கள் 01.01.2011 முதல் 31.12.2011 தேதிக்கு முன் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் அனைத்துப் படங்களும் ஆங்கில சப் டைட்டில்களுடன் இருக்க வேண்டும்.

அதே போல போட்டியில் பங்கேற்க விரும்பும் குறும்படங்கள் 25 நிமிடங்களுக்குள்பட்டதாகவும் இதுவரை வேறு எங்கும் வெளியிடப்படாததாகவும் இருக்க வேண்டும்.

மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களும் வேற்று மொழியில் இருந்து தழுவி எடுக்கப்பட்ட படங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்களுடைய திரைப்படங்கள் அல்லது குறும்படங்களின் இரண்டு டி.வி.டி.க்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

படங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.02.2012.

அனுப்ப வேண்டிய முகவரி NORWAY TAMIL FILM FESTIVAL, Tante Ulrikkes Vei 11, 0984 Oslo 9, NORWAY. மேலும் தகவல்களுக்கு 00 47 913 70 728 என்ற தொலைபேசி எண்ணையும் www.ntff.no என்ற இணையதளத்தையும் அணுகலாம்.

ஜல்லிக்கட்டு வீரர்கள் மதுரையில் ஊர்வலம்

மதுரை :ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கான டெபாசிட் பணத்தை அரசு ஏற்க வலியுறுத்தி மதுரையில் மாடுபிடிவீரர்கள் ஊர்வலம் சென்றனர். ஜல்லிக்கட்டு விளையாட்டை சுப்ரீம் கோர்ட் நிபந்தனைகளுடன் நடத்த அரசு அனுமதித்துள்ளது. நிகழ்ச்சியை நடத்துவோர், டெபாசிட் ரூ. 2 லட்சம் செலுத்த வேண்டும். மாடுகளை பிராணிகள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் உட்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மதுரை உட்பட சுற்றியுள்ள ஆறு மாவட்டங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள், ஆர்வலர்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டனர். தெப்பக்குளத்திலிருந்து வீரவிளையாட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலம் வந்து மனு கொடுத்தனர்.
அவர்கள் கூறுகையில், ""டெபாசிட் ரூ. 2 லட்சத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது அரசு ஏற்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் பட்டியலில் 5 கிராமங்கள் உள்ளன. 37 கிராமங்களில் நிகழ்ச்சி நடக்கிறது.
அனைத்து ஊர்கள் மட்டுமின்றி பிறமாவட்டங்களிலும் நடத்த அனுமதிக்க வேண்டும். காளைகளை பிராணிகள் நல வாரியத்தில பதிவு செய்வதில் உள்ள சட்ட சிக்கல் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

Sunday, January 1, 2012

எம்.ஜி.ஆரை வைத்து 16 படங்கள் எடுத்த தேவர்

'கொங்கு நாட்டுத் தங்கம்' படத்தை அடுத்து, 'தாய் சொல்லைத் தட்டாதே' என்ற படத்தைத் தயாரிக்க சின்னப்பா தேவர் திட்டமிட்டார். அதற்கான கதை -வசனத்தை ஆரூர்தாஸ் எழுதி முடித்துவிட்டார்.
இந்தப் படத்திற்கான பாடல்கள், சாரதாஸ் ஸ்டூடியோவில் பதிவாகிக் கொண்டிருந்தன. தேவர் அங்கே இருந்தார்.


அப்போது ஒரு படப்பிடிப்புக்காக, எம்.ஜி.ஆர். அங்கே வந்தார். தேவரும், எம்.ஜி.ஆரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இருவரும் ஒரு கணநேரம் திகைத்து நின்றனர். பின்னர் கட்டித்தழுவிக் கொண்டனர். சுமார் 4 ஆண்டுகள் பிரிந்திருந்த நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனர்.

தேவர் பிலிம்ஸ் படங்களில் தொடர்ந்து நடிக்க எம்.ஜி.ஆர். சம்மதித்தார். 'தாய் சொல்லை தட்டாதே' படத்தில் எம்.ஜி.ஆரையும், சரோஜாதேவியையும் நடிக்க வைக்க தேவர் தீர்மானித்தார். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி, கதை- வசனத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

'தாய் சொல்லை தட்டாதே' படம் ஒரே மாதத்தில் தயாராகியது. 7-11-1961-ல் வெளியான இப்படம் நூறு நாள் ஓடியது. இதை அடுத்து 'தாயைக் காத்த தனயன்' படத்தை தேவர் தயாரித்தார். இந்தப் படத்திலும் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி நடித்தார். இந்தப்படம் 20 நாட்களில் தயாராகி வெற்றி பெற்றது.

பின்னர் குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், நீதிக்குப்பின் பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, கன்னித்தாய், முகராசி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, தேர்த்திருவிழா, காதல் வாகனம், நல்ல நேரம் ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் வெற்றிப் படங்களை எடுத்தவர் என்ற பெயர் தேவருக்கு கிடைத்தது. தேவர் பிலிம்ஸ் தயாரித்த 16 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். எம்.ஜி.ஆரை வைத்து அதிகப்படங்கள் தயாரித்தவர் தேவர்தான்.

குறுகிய காலத்தில் நிறைய படங்களில் நடித்தது, எம்.ஜி.ஆருக்கும் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தியது. 'நாடோடி மன்னன்' படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, எம்.ஜி.ஆரை நெருங்கவே பட அதிபர்கள் பயந்தனர். இனி எம்.ஜி. ஆர். பிரமாண்டமான படங்களில்தான் நடிப்பார். அவரேதான் டைரக்ட் செய்வார்' என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது.

இதை பொய்யாக்க, குறைந்த பட்ஜெட் படத்திலும் நடிக்கலாம் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். நடிகை மாலினி நடித்த 'சபாஷ் மாப்பிள்ளே' என்ற படத்தில் நடித்தார். அந்தப்படமும், அதன் பிறகு நடித்த 'மாடப்புறா' என்ற படமும் சரியாக ஓடவில்லை.

இந்த சமயத்தில்தான் தேவருடன் நட்பைப் புதுப்பித்துக் கொண்டு, தேவர் பிலிம்ஸ் படங்களில் நடிக்கலானார். அவை குறைந்த செலவில், குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றன.

இதன் காரணமாக, 'எம்.ஜி.ஆர். குறித்த காலத்தில் படத்தை முடிக்க பட அதிபருக்கு ஒத்துழைப்பார்' என்ற பெயர் பரவியது. பட அதிபர்களுக்கு எம்.ஜி.ஆர். ஒத்துழைப்பு தருவதில்லை என்ற வதந்தி பொய்யாகியது.

கோடம்பாக்கத்தில் தொடங்கப்படும் படக்கம்பெனிகளில் பெரும்பாலானவை, பூஜை போடுவதோடு சரி; சில கம்பெனிகள், பாதி படத்தோடு, பணத்தட்டுப்பாடு காரணமாக கம்பெனியை மூடிவிடுவார்கள். சிலர், படம் ரிலீஸ் ஆன பிறகும், நடிகர்- நடிகைகளுக்கு பேசிய பணத்தை கொடுக்கமாட்டார்கள்.

இதில் முற்றிலும் மாறுபட்டவராக தேவர் விளங்கினார். நடிகர்- நடிகைகளுக்கு பேசிய பணத்தை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒரே தவணையில் மொத்தமாக கொடுத்து விடுவார். மற்ற கலைஞர்கள், ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கிடைக்கும்.

எம்.ஜி.ஆரைப் பொறுத்த வரை, படத்துக்கு உரிய பணத்தை மொத்தமாகக் கொடுப்பதுடன், அடுத்த படத்துக்கு உரிய பணத்தையும் சேர்த்துக்கொடுத்து விடுவார், தேவர். அதாவது, ஒரு படத்துக்கான தொகை அட்வான்சாகவே இருந்து கொண்டிருக்கும்.

இதன் காரணமாக ஒரு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் அன்றே, அது ரிலீஸ் ஆகும் தேதியையும் தேவர் அறிவித்து விடுவார். அதே தேதியில் படம் நிச்சயம் ரிலீஸ் ஆகிவிடும்.

தேவர் படங்களிலேயே எம்.ஜி.ஆர். நடித்துக்கொண்டிருந்த போது, சில பெரிய படக்கம்பெனி அதிபர்கள், எம்.ஜி.ஆரை அணுகி, தங்களுடைய படங்களிலும் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்கும் `கால்ஷீட்' கொடுக்கவேண்டிய கட்டாயம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

எனவே, எம்.ஜி.ஆர். இல்லாமல் சில படங்களைத் தயாரிக்க தேவர் முடிவு செய்து, அதற்கென்றே 'தண்டாயுதபாணி பிலிம்ஸ்' என்ற படக்கம் பெனியைத் தொடங்கினார். இந்தப் படக்கம்பெனி சார்பில் பல்வேறு படங்கள் தயாரிக்கப்பட்டாலும், பக்தி கலந்த சமூகப்படங்கள் பெரிய வெற்றி பெற்றன.

இவற்றில் ஏவி.எம்.ராஜன், சவுகார்ஜானகி நடித்த துணைவன் (1969), ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா நடித்த 'தெய்வம்' (1972), சிவகுமார், ஜெயசித்ரா நடித்த 'வெள்ளிக்கிழமை விரதம்' (1974) ஆகியவை மாபெரும் வெற்றிச் சித்திரங்கள்.

'தெய்வம்' படத்தில், பக்தர் பிரமுகர் கிருபானந்தவாரியார் நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைப்பில், பெங்களூர் ரமணி அம்மாள், மதுரை சோமு, டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய இசைக் கலைஞர்கள் பாடினார்கள்.

எம்.ஜி.ஆருக்கும், தேவருக்கும் இருந்த நட்பு ஆழமானது. எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவர் பிழைத்து வீடு திரும்புவாரா, மீண்டும் படங்களில் நடிப்பாரா என்று பட அதிபர்கள் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தபோது, தேவர் அகஸ்தியர் கோவிலில் பூஜை செய்துவிட்டு பிரசாதத்தை எம்.ஜி.ஆரிடம் கொண்டுபோய் கொடுத்து, 'முருகா! என் அடுத்த படத்தில் நீங்கள்தான் நடிப்பீர்கள். இதோ அட்வான்ஸ்!' என்று கூறியபடி லட்சக்கணக்கில் பணம் கொடுத்துவிட்டு வந்தார்.

தேவரின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தார், எம்.ஜி.ஆர்.

காலாண்டரின் வரலாறை தெரிந்து கொள்வோமா?

கிரேக்கர்கள்தான் முதன்முதலில் காலண்டரை உருவாக்கினர். அவர்களிடம் இருந்து ரோமானியர்கள் இதைக் கற்றுக்கொண்டனர். ஆரம்ப காலத்தில் இன்றுள்ள ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இல்லை. மார்ச் முதல் டிசம்பர் வரையான பத்து மாதங்களும், 304 நாட்களுமே இருந்தன.

கி.மு.700-ல் ரோமானிய மன்னர் நூமா பாம்பிளியஸ் ஜனவரி, பிப்ரவரி மாதங்களைச் சேர்த்து 12 மாதங்களாக்கினார். ஆனால், இந்த இரண்டு மாதங்களும் ஆண்டின் கடைசி இருமாதங்களாக (11,12-வது மாதங்கள்)இருந்தன.

கி.மு.46-ல் ஜுலியஸ் சீசர் சில திருத்தங்கள் செய்து, ஜனவரி, பிப்ரவரியை ஆண்டின் முதல் இருமாதங்களாக ஆக்கினார். இது ஜுலியன் காலண்டர் என்றழைக்கப்பட்டது. இதில்தான் சாதா ஆண்டு, லீப் ஆண்டு முறையை கொண்டு வந்தார்கள். இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலண்டர் முறையே கிரிகோரியன் காலண்டர்.

பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆணைப்படி, அலோயிஷியஸ் லிலியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 இல் ஜூலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார்.

ஏசு கிருஸ்துவின் பிறந்ததினத்தை அடிப்படையாகக் கொண்டே இக்காலண்டரின் வருடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டது ஜூலியன் காலாண்டரை முன்மாதிரியாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த காலண்டரில் ஒரு ஆண்டு என்பது 365 நாட்கள் 5 மணிநேரம் 49 நிமிடங்கள் 12 நொடிகளை கொண்டது.

கிரிகோரியன் காலண்டர் கணக்குபடி ஜனவரி 1-ம் தேதி ஒரு ஆண்டு துவங்கும் நாள் என்றும் டிசம்பர் 31-ம் தேதி ஆண்டின் கடைசி நாள் என்றும் குறிப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து மற்றும் அதன் காலனி நாடுகளில் 1752-ம் ஆண்டில் இருந்து ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடும் வழக்கம் துவங்கியது. மேலும் அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆங்கிலேய ஆட்சி உள்ள எல்லா நாடுகளிலும், கிரிகோரியன் காலண்டர் முறை பயன்பாட்டிற்கு வந்தது. டெயில் பீஸ் - ஜூலியன் காலண்டர் வழக்கத்திற்க்கு வரும் முன் கடைப்பிடிக்கப்பட்ட சில காலண்டர்களின் படி மார்ச் 21ம் தேதியை தான் புத்தாண்டாக கொண்டாடி வந்திருக்கின்றனர்.

1582 -ல் ஏற்பட்ட காலாண்டர் பிரச்சினை

இன்று பிறந்துள்ள 2012-ம் ஆண்டு லீப் ஆண்டாகும். பொதுவாக ஓர் ஆண்டு என்பது 365 நாட்கள் ஆகும். லீப் வருடத்தில் மட்டும் 366 நாட்கள் ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி லீப் வருடம் வரும். லீப் வருடத்தில் மட்டும் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் இருக்கும்.

பூமி ஒரு தடவை சூரியனை சுற்றி முடித்தால் அது ஓர் ஆண்டு ஆகும். மிகத்துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனில் சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகள் ஆகிறது. இந்த அடிப்படையில் ஆண்டைக் கணக்கிட முடியாது. அதனால் 365 நாட்கள் மட்டும் எடுத்துக் கொண்டு கணக்கிட்டு வருகிறோம்.

மீதமுள்ள நேரத்தை (அதாவது 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகள்) நான்கு ஆண்டிற்கு ஒரு முறை கணக்கிலெடுத்துக் கொண்டு அதை ஒரு நாளாக கணக்கில் கொள்கிறோம். அதைத்தான் லீப் ஆண்டில் சேர்த்துக் கொள்கிறோம். 366 நாட்கள் உள்ளதை லீப் ஆண்டு என்கிறோம்.

இந்த ஆண்டில் வரும் அந்த ஒரு நாளை எதில் சேர்ப்பது? என்ற குழப்பத்திற்கு நானிருக்கிறேன் என்றபடி வரிந்து கட்டிக் கொண்டு பிப்ரவரி இருக்க, அதில் கொண்டு போய் சேர்த்தார்கள். லீப் ஆண்டு வருகையில் பிப்ரவரி மாதம் 29 நாட்களை கொண்டிருக்கும். சரி, இந்த மீதமுள்ள நேரத்தை (அதாவது 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகள்) கணக்கில் கொள்ளாமல் விட்டால் அது பல நாட்களை சேர்த்துக் கொண்டு போய் முடியும். அப்புறம் ஆங்கிலப்புத்தாண்டு பிப்ரவரியில் ஆரம்பிக்கும். அதனால் 1582- அக்டோபரில் ஒரு பிரச்சினையே நிகழ்ந்திருக்கிறது.

கிரிகோரியர் காலத்தில் ஜூலியன் காலாண்டர் முறைப்படி வருடத்திற்கு 365.25 நாட்கள் என கணக்கிட்டதால் 10 நாட்கள் அதிகமாகிப்போனது. இதை சரி செய்ய 1582 ஆம் வருடத்தின் அக்டோபர் மாதத்தில் 5-ம் தேதியிலிருந்து 14-ம் தேதி வரை உள்ள 10 நாட்கள் காலாண்டரிலிருந்தே நீக்கப்பட்டது. இதன் மூலம் 10 நாட்கள் பிந்தி வருவது சரிசெய்யப்பட்டது. அதன் பிறகே லீப் வருடத்தைக் கணக்கிட புதிய முறை கையாளப்பட்டது.

ஆங்கில மாதங்களின் பெயர்க்காரணங்கள்...

ஜனவரி, பிப்ரவரி என வரிந்து கட்டிக் கொண்டு வரும் ஆங்கில மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் பெயர்க்காரணம் இருக்கிறது. அவைகளை இங்கே காண்போம்:-

ஜனவரி: ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் இந்த மாதம் அமைந்தது. இவருக்கு கடந்தகாலம், எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருந்தனவாம்.

பிப்ரவரி: ரோமானியர்கள் இந்த மாதத்தின் 15ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று பெயரிட்டனர். இதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள். அதைக் குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். இதுவே பிப்ரவரி என மாறியது.

மார்ச்: ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் மார்ஸ். ஈட்டி, கேடயத்துடன் காட்சியளிக்கும் இவரது பெயரால் தோன்றியது மார்ச். ஏப்ரல்: ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு திறந்து விடு எனப்பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழிபிறக்கும் மாதம் என்பதால் இந்தச் சொல்லில் இருந்து ஏப்ரல் மாதம் தோன்றியது.

மே: உலகத்தை சுமக்கும் அட்லஸ் கடவுளின் மகளே மையா என்ற தேவதை. மையாவின் பெயரால் தோன்றிய மாதம் மே. ஜூன்: ஜுனோ என்னும் தேவதையை இளமையின் சின்னமாக ரோமானியர்கள் வழிபட்டனர். இந்தப் பெயரால் வந்தது தான் ஜுன். ஜூலை: ஆரம்ப காலத்தில் இது ஐந்தாவது மாதமாக இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். மார்க் ஆண்டனி இந்தப்பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று பெயர் சூட்டினார். 19ம் நூற்றாண்டு முதல் ஜுலை என்றானது.

ஆகஸ்ட்: ஆரம்பத்தில் இது ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர். ஜுலியஸ் சீசர் இதை எட்டாவது மாதமாக்கிய பிறகு ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் அகஸ்ட்ஸ் என பெயரிட்டனர். அதுவே ஆகஸ்ட் என மாறியது.

செப்டம்பர்: மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில் செப்டம் என்றனர்.ஆனால், புதிய அமைப்பின்படி ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழையபெயரே நிலைத்து விட்டது.

அக்டோபர்: அக்ட்டோ என்றால் எட்டு. ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது. இதுவும் பெயர் மாற்றம் செய்யப் படாமல் பத்தாவது மாதமாகி விட்டது.

நவம்பர்: நவம் என்றால் ஒன்பது. ஒன்பதாம் மாதமாக ஆரம்பத்தில் இதைக் கணித்தனர். 11ம் மாதமாக மாறிய பிறகும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.

டிசம்பர்: டிசம் என்றால் பத்து. பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், 12ம் மாதமான பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப்பட்டது.