Tuesday, January 31, 2012

தலைமுறைகண்ட வைரமுத்து

1982ல் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற பாடலை எழுதியவர் வைரமுத்து. அந்த படத்தில் அறிமுகமானவர்கள்தான் கார்த்திக்-ராதா ஆகிய இருவரும். ஆனால் இப்போது அதே ராதாவின் மகள் கார்த்திகா நடிக்கும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திலும் பாடல் எழுதியிருக்கிறார் வைரமுத்து.

இது சினிமாவைப்பொறுத்தவரை இது ஒரு சிறப்பு மிக்க நிகழ்வு ஆகும். இதனால் இந்த படத்துக்கு பாடல் எழுதும்போது தான் பெருமையாகவும், அதிக உற்சாகமாகவும் எழுதியதாக சொல்கிறார் வைரமுத்து. அதோடு இப்போது கார்த்திகா நடிககும் படத்துக்கு பாட்டெழுதிய நான், அடுத்து அவர் மகள் நடிக்கும் படத்துக்கும் பாட்டெழுத வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன் என்கிறார் அவர்.

No comments: