Saturday, January 21, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு: கார்த்திக் கட்சி அறிவிப்பு

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாலமுருகன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சங்கரன்கோவில் தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. இந்த தொகுதியில் தனித்து போட்டியிட்டபோதே நாங்கள் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றோம். கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது அ.தி.மு.க.வை ஆதரித்தோம். அதேபோல் சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் முத்துச்செல்வியை வெற்றிபெற செய்யவேண்டும் என்று எங்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அதன்படி அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம். அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக கார்த்திக் பிரசாரம் செய்வார். அவரது பிரசாரதேதி தேர்தல்தேதி அறிவித்தபிறகு தெரிவிக்கப்படும். அடுத்த பொதுத்தேர்தலின்போது சங்கரன்கோவில் தொகுதியை பொதுத்தொகுதியாக மாற்றவேண்டும் என்று வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: