Saturday, November 22, 2014

We Are in Congress Alliance, but not Connected our Party with Congress : Actor Karthik – Thanthi TV

NOTICE : HI RELATIVES AND FRIENDS


Its my kind and humble request for you to join in the followers list, so that it would be much help for me to improve our blog and also you can give me any suggestions and comments to develop our blog . Thank you for your support.

 MAIL ME AT : venkazone@yahoo.com

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.


நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார். ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார். மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார். சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும். எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்). ( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம். நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது. கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும். மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்... இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள். சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில : துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்) ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம். திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம். மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம். அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம். தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம். இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம். வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம். மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள். பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது. பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்..!!!!!

Another addition to Thara Thappattai team


The shooting of director Bala’s upcoming film Thara Thappattai is going on in full swing. This film features Sasikumar, Varalaxmi Sarathkumar and Studio 9 producer RK Suresh in significant roles. The latest addition to the cast of Thara Thappattai is famous Bollywood actor, director and producer Satish Kaushik. The actor is expected to join Bala’s team for the upcoming schedule which will start by November end. Thara Thappattai marks Isaignani Ilaiyaraaja’s 1000th film. This film is about Karagattam, a traditional folk dance.

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்துவதால் ஏற்படும் பலன்கள்


முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்ததால் கூடுதலாக 1.5 டி.எம்.சி. தண்ணீரால் 2.8 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். அணை நீர்மட்டம் 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்ந்ததன் மூலம் கூடுதலாக 1.5 டி.எம்.சி. நீரை தேக்கலாம். ஒரு டி.எம்.சி. மூலம் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். எனினும் 2.8 லட்சம் ஏக்கரிலும் விளைந்த பயிரை காப்பாற்ற இந்த தண்ணீர் போதுமானது. இதனால் தற்போது கிடைக்கப்பெறும் 1.5 டி.எம்.சி. கூடுதல் தண்ணீரால் 2.08 லட்சம் ஏக்கரும் பயன்பெறும். 152 அடி வரை தேக்கினால் 4.5 டி.எம்.சி. தண்ணீர் தேக்கலாம். தமிழகத்துக்கு ஆண்டுதோறும் சராசரியாக 15 டி.எம்.சி. தண்ணீர் பெறப்படுகிறது. அதிகபட்சம் 30 டி.எம்.சி.யும், வறட்சி காலத்தில் 8 முதல் 10 டி.எம்.சி. வரையிலும் தண்ணீர் எடுக்கபட்டு உள்ளது. 1979 ஆண்டுக்கு பின்னர் அணை நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டதால் 10 முறை அணை நிரம்பி தண்ணீர் வீணாக வெளியேறி உள்ளது. ஒரு முறை ஒரு டி.எம்.சி முதல் 3 டி.எம்.சி. வரை தண்ணீர் இடுக்கி வழியாக கடலில் சென்று உள்ளது. 14.11.2006 முதல் 1.12.2006 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 4.2 டி.எம்.சி. வீணாக கடலுக்கு சென்று உள்ளது. 142 அடியாக உயர்த்துவதால் ஏற்படும் பலன்கள்: தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் கூடுதலாக ஒன்றரை லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். மதுரை நகரில் தற்போது ஏற்பட்டு வரும் குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும். வறண்ட மானாவாரி நிலங்கள் செழித்து வருவதும், தேனி மாவட்டத்தில் செயல்படாமல் உள்ள 18–ம் கால்வாய் முழுமையாக செயல்படும். இதன்மூலம் 46 குளங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு கம்பம் முதல் தேவாரம் வரை 4,000 ஹெக்டேர் நிலங்கள் புதிய பாசன வசதி பெறும். மதுரை மாவட்டம் 3 போக சாகுபடியும், மேலூர் முதல் கள்ளந்தரி வரை தற்போது நடைபெறும் ஒருபோக சாகுபடி, 2 போக சாகுபடியாகவும், வறண்ட ராமநாதபுரம் மாவட்டம் செழிப்படைந்து ஒருபோக சாகுபடி வசதி பெறும். விவசாய நிலங்கள் சுருங்கியதால் 5 மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான விவசாய தொழிலாளர்கள் வேலை தேடி வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் சென்றுவிட்டனர். அணையில் 142 அடியாக தண்ணீர் உயரும் பட்சத்தில் கூடுதல் விவசாய நிலங்கள் ஏற்பட்டு வெளியூரில் இருக்கும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிவரும் நிலை ஏற்படும்.

பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்.


சித்த மருத்துவத்தில் செடி, கொடி, பட்டை, வேர், தழை முதலியவற்றை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை. மற்றொன்று வீரம், பூரம்,லிங்கம்,தாளகம், துத்தம் போன்ற பாஷணாங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை. மற்றொன்று தங்கம், வெள்ளி, செம்பு, அயம், பித்தளை போன்ற உலோகங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை. மற்றொன்று வெடியுப்பு, இந்துப்பு, போன்ற உப்புக்களை கொண்டு செய்வது ஒரு முறை. நாம் ஒரு முறையை பார்ப்போம். நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். புதினா உப்பு ஓம உப்பு கட்டி கற்பூரம் இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 20கி வாங்கிக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம். சரி இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும். இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும். இப்பொழுது தைலம் தயார். இது மிகவும் வீரியமான தைலம். உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்கவேண்டும். முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும். இதனுடைய பலன் இத்துடன் நின்றுவிட வில்லை. நீங்கள் பயன் படுத்தும் பல்பொடி மற்றும் பேஸ்ட் எதுவானாலும் அதில் சுமார் பத்து சொட்டுகள் விட்டால் போதும். ஆயுளுக்கும் பல் சம்பந்தமான பிரச்சனை கிட்ட வராது. பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம் ,ஈறுகளில் சீழ் வடிதல் , வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது .இருந்தால் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும். இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15 சொட்டுக்கள் கலந்து பயன்படுத்த சாந்தமாக வேலை செய்யும்.சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும். கோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள். சுரம் உள்ளவர்கள் காபி, டீ போன்ற வற்றில் மூன்று சொட்டுகள் விட்டு குடிக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரம் பறந்தோடும். இந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது .எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்.கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்.

Friday, November 21, 2014

நாடாரின் கல்வெட்டு?


மேலே படத்தில் காணப்படும் தென்காசி கோயில் கல்வெட்டு இதை தென்காசி அரிகேசரி பராக்கிரமபாண்டிய நாடாரின் கல்வெட்டு? என்று கூறி அதை வெளியிட்டு அதன் மூலம் தம் சாணார்சாதி மக்களையும் உலகதமிழர்கள் அனைவரையும் ஏமாற்றதுடிக்கும் நாடார் வரலாற்றின் பக்கம் யெனும் இனைய தளத்தின் பதிப்பாசிரியர்கள் வண்மையாக தண்டிக்கபட வேண்டும். படத்தில் காணப்படும் கல்வெட்டில் பாண்டியநாடார் யெனும் சொல் இந்த கல்வெட்டின் எந்தபகுதியிலும் காணப்படாதபோது இல்லாத ஒன்றை பொய்யாக கூறி அதனை தமிழ் மக்களை ஏமாற்றும்நோக்கில் வெளியிடும் நாடார் வரலாற்றின் பக்கம் இனைய தளத்திற்க்கு தமிழக அரசு தடைவிதிக்கவேண்டும்.. கிபி.1422.முதல் கிபி.1463.ஆம்ஆண்டின் காலம்வரை. தென்காசிபாண்டியராக ஆட்சிசெய்த பராக்கிரம பாண்டியதேவரின் ஆட்சிகாலத்திலேயே (1429.1473 ஆம் காலம்வரையிலும் கொற்கையை கோநகரமாக கொண்டும் பின் தென்காசி பாண்டிய மன்னராக ஆட்சிசெய்தவர் சடையவர்மன் குலசேகர பாண்டியதேவன் இவரின் சகோதரரான தென்காசி பாண்டிய மன்னர் பராக்கிரமபாண்டியனே கட்டுவித்தது தென்காசி விசுவநாதர்கோயில்.. இக்கோயிலுக்கு பழுதுநேர்ந்தால் அதனை சீர் செய்து செப்பனிட தம் கிளைவழி சார்ந்த கோத்திரத்தாரை தாம் பரிவுடன் கேட்டுக்கொண்டதனை அதனை தம் ஆட்சிகாலத்தின் கல்வெட்டில் பதிவும் செய்திருந்தார் தென்காசிபாண்டியரான பராக்கிரம பாண்டியதேவர். இவருக்குபின் தென்காசி விசுவநாதர்கோயிலை சீர்செய்து அதனைசெப்பனிட்டவர் கொற்கைமாறன் சடையவர்மன் குலசேகர பாண்டியதேவன்.. தமிழ் தலைச்சங்க காலம்முதல் மறத்தமிழினத்தில் கோட்டன் மற்றும் கோட்டானியாகவும் கொற்றன் மற்றும் கொத்தன் கூட்டமாகவும் வாழ்ந்த மா மறவர்களுக்கு சொந்தமான பாண்டியர் யெனும் பெரும் புகழ்மிக்க மதுரைகாவலன் கொற்கைகாவலன் மணவூர் காவலன் திருநெல்வேலி காவலன் தென்காசி காவலன் கரிவலம்வந்த நல்லூர்காவலன் யென தமிழ் இனத்தின் தலைவனாக வாழ்ந்து பாண்டிய மா மன்னராகவே நல்லாட்சி புரிந்த எங்கள் மாமறவர்களின் கடந்த கால வரலாற்றினை அழிப்பவர்கள் யாராயினும் கண்டிப்புடன் தண்டிக்கபடவேண்டும்... தென்காசிகோயில் கல்வெட்டுவரிகள்... மனத்தால் வகுக்கவும்எட்டாத கோயில்வகுக்க முன்னின்று எனைத்தான் பணிகொண்ட நாதன் தென்காசி என்றும் மண்மேல் நினைத்து ஆதரம் செய்து தங் காவல்பூண்ட நிருபர் பதம் தனைத்தாழ்ந்து இறைஞ்சி தலைமீது யானுந்தரித்தனனே ஆராயினும் (யாராயினும்) இந்த தென்காசி மேவும் பொன்னாலயத்து வாராததோர் குற்றம் வந்தாலப்போது அங்கு வந்து அதனை நேராகவேயொழித்துப் புரப்பார்களை நீதியுடன் பாரோர் அறிய பணிந்தேன் பராக்கிரமபாண்டியனே.நானே சாத்திரம்பார்த்து இங்கு யான்கண்ட பூசைகள்தான் நடத்தி ஏத்தி அன்பால் விசுவநாதன் பொற்கோயில் என்றும்புரக்க பார்த்திபன் கொற்கைப் பராக்ரம மாறன் பரிவுடன் நம் கோத்திரம் தன்னிலுள்ளார்க்கும் அடைக்கலம் கூறினனே... இதில் எங்கேயினும் அரிகேசரி பராக்கிரம பாண்டியநாடான் என்று எதுவும் எழுதபட்டுள்ளதா.. Maravarman Kulasekara Pandian BROTHER SHARMALAN THEVAR POST

2015-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிப்பு


2015–ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– ஜனவரி 1– ஆங்கிலப்புத்தாண்டு (வியாழக்கிழமை) ஜனவரி 4– மிலாதுநபி (ஞாயிற்றுக்கிழமை) ஜனவரி 15– பொங்கல் (வியாழக்கிழமை) ஜனவரி 16– திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை) ஜனவரி 17– உழவர் திருநாள் (சனிக்கிழமை) ஜனவரி 26– குடியரசு தினம் (திங்கட்கிழமை) மார்ச் 21– தெலுங்கு ஆண்டு பிறப்பு (சனிக்கிழமை) ஏப்ரல் 1– வங்கிகள் கணக்கு முடிப்பு (வணிக–கூட்டுறவு வங்கிகள்) (புதன்கிழமை ஏப்ரல் 2– மகாவீரர் ஜெயந்தி (வியாழக்கிழமை) ஏப்ரல் 3– புனித வெள்ளி (வெள்ளிக்கிழமை) ஏப்ரல் 14– தமிழ்ப்புத்தாண்டு (செவ்வாய்க்கிழமை) மே 1– மே தினம் (வெள்ளிக்கிழமை) ஜூலை 18– ரம்ஜான் (சனிக்கிழமை) ஆகஸ்டு 15– சுதந்திர தினம் (சனிக்கிழமை) செப்டம்பர் 5– கிருஷ்ண ஜெயந்தி (சனிக்கிழமை) செப்டம்பர் 17– விநாயகர் சதுர்த்தி (வியாழக்கிழமை) செப்டம்பர் 24– பக்ரீத் பண்டிகை (வியாழக்கிழமை) அக்டோபர் 2– காந்தி ஜெயந்தி (வெள்ளிக்கிழமை) அக்டோபர் 21– ஆயுத பூஜை (புதன்கிழமை) அக்டோபர் 22– விஜயதசமி (வியாழக்கிழமை) அக்டோபர் 23– முகரம் (வெள்ளிக்கிழமை) நவம்பர் 10– தீபாவளி (செவ்வாய்க்கிழமை) டிசம்பர் 23– மிலாதுநபி (புதன்கிழமை) டிசம்பர் 25– கிறிஸ்துமஸ் (வெள்ளிக்கிழமை)

காதில் பூச்சி நுழைந்து விட்டால் எடுப்பது எப்படி.??


காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும். தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும். பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும். ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்..

Thursday, November 20, 2014

உடல் நலக்கோளாறில் இருந்து குணமாகி மீண்டும் நடிக்க வருவேன்: மனோரமா


ஆச்சி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் சிறந்த நடிகை மனோரமா. 19 வயதில் தொடங்கிய இவரது திரையுலக வாழ்க்கை 50 ஆண்டுகளை கடந்தும் இன்றும் கம்பீரமாகவே காட்சியளிக்கிறது. தமிழ் சினிமாவில் இவர் போடாத வேஷங்கள் இல்லை. மேடை நாடகங்களில் நடித்து வந்த மனோரமாவை ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் கவியரசு கண்ணதாசன் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். அஞ்சலை என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர் இதுவரை 1200 படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘பேராண்டி’ படத்தில் நடித்து வரும் மனோரமா எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என தமிழ் சினிமா ஜாம்பவான்கள் மட்டுமின்றி இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகையாக கோலோச்சிய அவர் குணச்சித்திர வேடங்களிலும் தன்னை மிஞ்ச ஆள் இல்லை என்று பல படங்களில் நிரூபித்துள்ளார். பல படங்களில் தாய் வேடமானாலும் சரி, அக்காள் அல்லது தங்கை வேடமானாலும் சரி. அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் மனோரமா கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். சர்க்கரை நோயுடன் மூட்டு வலியும் சேர்ந்து அவரை வாட்ட தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றார். தற்போது 2 மூட்டுகளிலும் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுநீரக கோளாறு உள்ளது. டயாலிசிஸ் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மனோரமா வீட்டிலேயே தங்கி இருந்து ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில்தான் நடிகர் மன்சூர்அலிகான் தனது மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக மனோரமா வீட்டுக்கு சென்றார். அப்போது மனோரமாவின் நிலை குறித்து அவர் உருக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இந்நிலையில் மனோரமா எப்படி இருக்கிறார் என்பதை அறிவதற்காக தி.நகர் போக் ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றோம். பிரபல நடிகையின் வீடு என்ற எந்தவித பரபரப்பும் இல்லாமலேயே மனோரமாவின் வீடு காட்சி அளித்தது. வீட்டுக்குள் சென்றதும் அவரது மகன் பூபதி அழைத்து சென்றார். சிறிது நேரத்தில் சினிமாவில் நாம் கம்பீரமாக பார்த்து பழக்கப்பட்ட மனோரமா கொஞ்சம் நடை தளர்ந்த நிலையில் கண்களில் நீர் மல்க வந்து அமர்ந்தார். நா தழுதழுத்த நிலையில் மனோரமா மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:– சினிமாவுக்கு வந்து 50 ஆண்டை தாண்டி விட்டேன். சிங்கள படம் ஒன்றில்தான் முதலில் நடித்தேன். அந்த வசனம் என்ன என்பது எனக்கு இப்போது ஞாபகம் இல்லை. பேராண்டி என்ற புதுப்படத்திலும், இன்னொரு தமிழ்ப்படத்திலும் நடித்து வருகிறேன். கடந்த சில மாதங்களாகவே வெளியில் எங்கும் செல்லாத நான் எஸ்.எஸ்.ஆர். இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்ததும் அவரது வீட்டுக்கு சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன். நான் உடல் நிலை சரியில்லாததை கேள்விப்பட்டு போனிலும் நேரிலும் பலர் உடல் நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர். எம்.ஜி.ஆர். நினைவு இல்லம், சிவாஜியின் வீட்டுக்கு வரும் ரசிகர்கள் எனது வீட்டுக்கும் வந்து என்னை பார்த்து விட்டு செல்கிறார்கள். இது எனக்கு மிகுந்த ஆறுதலாக உள்ளது. என்னை பார்க்க வரும் அனைத்து ரசிகர்களிடமும் சிறிது நேரம் பேசி விட்டுத்தான் நான் செல்கிறேன். திரையுலகைச் சேர்ந்த பலர் போனிலும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். கமல் பிறந்த நாள் அன்று போனில் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். அப்போது அவர் தாயில்லாத குறையை நீங்கள்தான் நிவர்த்தி செய்கிறீர்கள் என்று கூறினார். பிறந்த நாள் வாழ்த்து கூறியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். தற்போது படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறேன். இப்போது எனது பொழுது போக்கு டி.வி. பார்ப்பது மட்டும்தான். நான் பாடிய பாடல்கள், நடித்த காட்சிகள் ஆகியவற்றை பார்க்கும் போது பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது. குறிப்பாக ‘‘மஞ்சள் குங்குமம்’’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது சென்னையில் உள்ள கற்பகம் ஸ்டூடியோவில் வைத்து உடை மாற்றும் அறையில் புகுந்த பாம்பு ஒன்று என்னை கடித்து விட்டது. பின்னர் அந்த பாம்பை அடித்துக் கொன்றதும், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதும் இப்போதும் என் மனதில் அப்படியே இருக்கிறது. எனது மகன் பூபதி பின்னால் நடப்பதை முன் கூட்டியே கணித்து சொல்வான். அவன் பாம்பு கடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அம்மா உனது உடலில் விஷம் ஏறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கூறி இருந்தான். அவன் கூறியபடியே நடந்தது. அதே போல ‘‘மாலையிட்ட மங்கை’’ படத்தில் சுடலை என்ற கதாபாத்திரத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் நடித்திருப்பார். அவர் ஒரு காட்சியில் ‘துப்பாக்கியால் உன்ன சுடல’ என்று வசனம் பேசுவார். அஞ்சலை என்ற கேரக்டரில் நடித்த நான் ‘அதற்கு நான் அஞ்சல...’ என்று சொல்வேன். அந்த காட்சியும் இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது. சினிமாவில் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ள இந்த இடைவெளி தற்காலிகமானதுதான். உடல்நிலை தேறியதும் மீண்டும் பழைய வேகத்தில் சினிமாவில் நடிப்பேன். ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பு நெகிழ வைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். மனோரமா பேட்டியளித்துக் கொண்டிருந்த போது அவரை பார்ப்பதற்காக தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரேவதி, தேன்மொழி ஆகிய 2 ரசிகைகள் அங்கு வந்தனர். அவர்கள் மனோரமாவை பார்த்து விட்டு சென்ற சிறிது நேரத்தில் மலேசியாவில் இருந்து வந்த ரசிகைகள் தீபா, லட்சுமி, ஆனந்தவல்லி, ரசிகர் கார்த்திக் ஆகியோர் மனோரமாவை சந்திக்க ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். அவர்கள் அனைவரும் மனோரமாவின் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டதுடன் மனோரமாவுடன் சேர்ந்து தங்கள் செல்போனில் போட்டோவும் எடுத்துக் கொண்டனர். ரசிகை தீபா கூறும்போது, ‘‘எனது தாய் எம்.ஜி.ஆர்., சிவாஜி, மனோரமா ஆகியோரின் தீவிர ரசிகை. இன்று மனோரமாவுடன் நான் எடுத்துக் கொண்ட போட்டோக்களை அவரிடம் சென்று காண்பித்தால் மிகவும் சந்தோஷப்படுவார். பழம் பெரும் நடிகையான அவரை சந்தித்ததில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்’’ என்றார். தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரேவதி கூறும்போது, ‘‘மனோரமாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அவர் ரசிகர்களிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைக்கிறார். அவரது கண்களில் இருந்து வரும் கண்ணீரே அதனை உணர்த்துகிறது’’ என்றார். பின்னர் மனோரமாவிடம் உங்களுக்கு எத்தனை வயதாகிறது என்று கேட்டோம். அதற்கு பலமாக சிரித்துக் கொண்டே என்ன... 16 வயது இருக்குமா? என்று எதிர்கேள்வி கேட்டார். இந்த உற்சாகமும், சிரிப்புமே ஆச்சி மனோரமாவை இன்னும் நீண்ட நாட்கள் வாழ வைக்கும் என்பதில் ஐயமில்லை.

Anegan to kick-start the 2015 festivities ?


The harvest festival in Tamilnadu also includes big time movie-watching in theatres. Post Christmas, Pongal time will be the day for star-studded films to hit the theatres and it looks like the AGS Entertainment produced Anegan, directed by K.V.Anand with Dhanush as the lead, is one such festival treat. Sources close to the production house hinted about this development and the producers would love to bank on the holidays and have a great opening. Thanks to Harris Jayaraj, the hit songs have made enough noise.

Vadivelu to play Vikram Prabhu’s uncle


Vadivelu, who made a comeback to films with Tenali Raman a few months ago, was said to be keen on doing only lead roles. Recently, he had signed on Yuvraj Dayalan's Eli, in which he plays the lead. Now, the actor has decided to take up comedian roles in films that have other actors in the lead as well. Vadivelu has been confirmed for a comic role in an untitled project starring Vikram Prabhu. Says a source, "Vadivelu will be the comedian in the film, which has Vikram Prabhu in the lead. He will commence shoot for this family entertainer from February. He will be essaying the role of Vikram's maternal uncle." The film will be directed by Ravi Murugayya, who has assisted director Ezhil.

GOWTHAM KARTHIK "RANGOON" FIRST LOOK POSTER


The first look of 'Rangoon' starring Gautham Karthik in the lead role has been revealed. The shoot of the film directed by Rajkumar Periasamy, a former associate of director AR Murugadoss kick starts today. Young actor Gautham Karthik is excited to be part of the film jointly produced by AR Murugadoss's ARM Productions and Fox Star Studio. Revealing the first look AR Murugadoss tweeted, "My production venture #Rangoon directed by my assistant @rajkumar_kp feat. @gautham_karthik kick starts today." Meanwhile an excited Gautham Karthik twwetd, "Rangoon first day shoot today. Excited to be part of a new project with a new team!!"

சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார்?


"சமீபத்தில் செல்சியாவின் அருங்காட்சியகத்தில் 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு பிரிட்டன் படையினர் இரண்டாம் உலகப்போரின் போது யுத்தம் செய்ததை பட்டியலிட்டனர். இதில் 5 யுத்தங்கள் இடம் பெற்றிருந்த தேர்வில், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினருடன் நடைபெற்ற யுத்தமே பிரிட்டன் படையினர் போரிட்ட மிகப்பெரிய யுத்தமாக தேர்வு செய்யப்பட்டது. இந்த யுத்தம் மணிப்பூர் தலைநகர் இம்பாலிலும், நாகலாந்து தலைநகர் கொஹிமாவிலும் நடைபெற்றது இப்போரில் ஜப்பான் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தினரில் 53,000 வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது பிரிட்டன் படையை சேர்ந்த 16,500 வீரர்களும் கொல்லப்பட்டனர்.” வெள்ளையன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இனியும் தாக்குப் பிடிக்க முடியாது என்று முடிவெடுத்த காரணம் இதுதான். ஆனால் போரிட்டவர்களை அழைத்து சுதந்திரம் கொடுத்தால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அவமானம் என்று அகிம்சையால் மட்டும் சாத்தியமானது என்று கூறி நாட்டை விட்டு வெளியேறியது. இதுவே உண்மை. வேண்டுமென்றே காங்கிரஸ்கார்கள் நேதாஜியின் வீரத்தை இருட்டடிப்பு செய்து காந்திஜியால் மட்டுமே சுதந்திரம் பெற்றோம் என்று ஆட்சியை பிடித்து ஏனைய போராளிகளை உலகம் மட்டுமல்ல இந்தியர்களே அறியாமல் செய்துவிட்டனர் இதைவிட வெட்கக்கேடு எதுவும் இருக்க முடியாது..

Wednesday, November 19, 2014

No Director Or Producer Wanted Me To Act: SJ Surya


SJ Surya was in the news recently when his upcoming movie Isai's album featured in iTunes India's list of top 10 album. It is a rare feat that has been achieved by the director turned music composer as it is hard to point out a music director whose maiden album has featured in the top 10 list of iTunes India. Isai's music album has received positive reviews from critics as well as from fans and thus has heightened the expectations of the movie. Dedicating the success to AR Rahman, SJ Surya has revealed that it was AR Rahman who insisted him to learn music and to compose it himself for his film. He also had revealed in many interviews before that he actually came into the industry with dreams of making it big as an actor. But unfortunately when no director or producer wanted him as an actor, he became a director and a producer just to cast himself in his movies, he has admitted. He has also said that nobody else could've carried the role of a deaf and dumb character so stylishly other than thala Ajith. "When you look at him in the movie (Vaali), you might want to be a stylish deaf and dumb like him" he said. "If there is one person in the industry whom I would like to thank, it would be Ajith sir for giving me a break through Vaali", he added. With his movie Isai all set to hit silver screens shortly, the director-actor-music director has revealed that Isai is about a musician's life and his jealousy towards his contemporary music director who makes it big in the industry.

Bharathi Raja Praises Vennila Veedu Director Vetri Mahalingam...!!!


சபரிமலை


அரெஸ்ட் வாரண்ட் வரைக்கும் போன விஜய் சேதுபதி பட பஞ்சாயத்து!


தமிழ்சினிமாவில் மிக முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜே.எஸ்.கே சதீஷ். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘தங்க மீன்கள்’ போன்ற தரமான படங்களை துணிச்சலாக வாங்கி வெளியிட்டு வருபவர். சூப்பர் படத்தையும் சுமாரான படமாக்குகிற ஆட்கள் புழங்குகிற அதே ஏரியாவில்தான், சுமாரான படங்களையும் சூப்பராக ஓட வைக்குமளவுக்கு விளம்பர புலியாகவும் இருந்தார் சதீஷ். இவ்வளவு நல்ல குவாலிட்டிஸ் இருந்தாலும், பண விஷயத்தில் குணம் கெடாமலிருப்பது அரிய செயலாச்சே?

இவருக்கும் விநியோகஸ்தர் மணிகண்டன் என்பவருக்கும் ‘ரம்மி’ படம் வாங்கிய வகையில் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்து. (ரம்மி படத்தை மொத்தமாக வாங்கி வெளியிட்டவர் ஜே.எஸ்.கே சதீஷ்) இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக சதீஷிடம் இருந்து காசோலை ஒன்றை வாங்கியிருந்தாராம் மணிகண்டன். அது பேங்கிலிருந்து போன வேகத்தில் திரும்பிவிட்டது. உடனே சதீஷ் மீது வழக்கு தொடர்ந்தார் மணி. பல காலம் இழுத்தடித்த இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்திற்கு வந்தது. உடனடியாக சதீஷுக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

அதிருக்கட்டும்… இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டாரல்லவா? அது ஏன் என்று தெரிந்தால், ‘தம்பி நல்லாயிருப்பா…’ என்று ஆளாளுக்கு தும்பிக்கை உயர்த்தி ஆசிர்வதிப்பீர்கள். ஏன் தெரியுமா? ரம்மி கதையை அப்படத்தின் டைரக்டர் பாலகிருஷ்ணன் வந்து விஜய் சேதுபதிக்கு சொன்ன நேரம் நல்ல நேரமா? கெட்ட நேரமா? தெரியாது. ஆனால், விஜய் சேதுபதியின் நண்பரும், பிரச்சனைக்குரிய ‘வசந்தகுமாரன்’ படத்தின் இயக்குனருமான ஆனந்திற்கு நல்ல நேரம். தன் தங்கையின் திருமணத்திற்கு பணம் புரட்ட முடியாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தாராம் அந்த நேரத்தில். நண்பனின் கவலையை பார்த்த விஜய் சேதுபதி ‘உனக்கு எவ்வளவு பணம் வேணும்?’ என்று கேட்க, ‘பதினாறு லட்சம் இருந்தா கல்யாணத்தை ஜாம் ஜாம்னு முடிச்சுருவேன்’ என்றாராம் ஆனந்த்.

உடனடியாக ரம்மி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் சேதுபதி, வாங்கிய அட்வான்ஸ் தொகை 16 லட்சத்தை அப்படியே ஆனந்த் கையில் கொடுத்து அனுப்பி வைத்தாராம். ஒரு படத்தால் ஒருவருக்கு பணப்பிரச்சனை. இன்னொருவருக்கு மனசே குளிர்ந்தது. என்னவொரு தத்துவம்டா இது?!

பட்… நண்பனின் கவலையை போக்கிய விஜய் சேதுபதிக்கு காலம் கடந்த பாராட்டுகள்!

Tuesday, November 18, 2014

3 kids died in sivagangai cause of sand mafia


மூ.மு.க மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்


சிவகங்கையில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மூ.மு.க மாநிலப் பொருளாளர் எஸ்ஆர். தேவர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முத்துச்சாமி, பழனிக்குமார், ஏனாதிமுருகன், பிள்ளையார்பட்டி சுப. வைரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எம். போஸ் வரவேற்றார். மூ.மு.க. நிறுவனர் தலைவர் டாக்டர் என். சேதுராமன், மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். இசக்கிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளர் மா.குருசாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் கேசி. கண்ணன், மாநில அமைப்புச் செயலாளர் கருப்பையா மற்றும் நிர்வாகி கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெ டுப்பு குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி அறிவிக்கவேண்டும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன்தேவர் பெயரை சூட்ட வேண்டும், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றித்óதர மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. வரும் டிசம்பர் 25-ம் தேதி வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவு நாளை முப்பெரும் விழாவாக சிவகங்கையில் கொண்டாடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Monday, November 17, 2014

DIrector Bala’s humorous responses at Pisasu motion picture 1st look press fulfill Mysskin


http://www.420tamilcinema.com/2014/11/16/director-balas-humorous-responses-at-pisasu-motion-picture-1st-look-press-fulfill-mysskin/

தெரிந்து கொள்ளுங்கள் பயனுள்ள தகவல்கள் ……


. மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார். பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும். உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான். மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன. பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது. பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை. நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும். ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும். தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன். முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை – தேன்சிட்டு. தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது. மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன. புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் – சுறாமீன். நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் – சுறாமீன். தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால் ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி. துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை. பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி. ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது. சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது. ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும். குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது. சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர். சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது. பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும். நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க… ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது. தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை. காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும். மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம். “லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது. தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம். இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம். காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும். குளிர் காலத்தில் குயில் கூவாது. எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார். அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர். லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர். அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும். 👉கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும். 👉யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம். 👉கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம். 👉1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான். 👉ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு. 👉வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார். 👉ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள். 👉பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும். 👉ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது. 👉தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ. 👉சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது. 👉விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும். 👉சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும். 👉யானை குதிரை நின்று கொண்டே தூங்கும். 👉நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும். 👉டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும் 👉புழுக்களுக்கு தூக்கம கிடையாது. 👉நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது

வாழ்வா சாவா என்று இருந்தபோது என்னை தூக்கி விட்டவர் எஸ்.ஜே.சூர்யா: விஜய்


எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘இசை’. இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சாவித்திரி நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜும் இணைந்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய், தனுஷ், முருகதாஸ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். ஏ.ஆர். முருகதாஸ் பேசும்போது, எஸ்.ஜே. சூர்யாவை பற்றிப் பேசும்போது சீரியல் அளவுக்குப் பேச முடியும். 17 ஆண்டுகால நட்பு எங்களுடையது. 'குஷி' படத்தில் அவருடனும் விஜய் சாருடனும் வேலை பார்த்ததைக் கணக்கு பார்த்தால் 'கத்தி' எனக்கு விஜய் சாருடன் மூன்றாவது படம். கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் சூர்யா திறமை அபாரமானது. நான் கதாபாத்திரத்தை வடிவமைக்கும்போது அவரை மனதில் வைத்துக் கொண்டுதான் உருவாக்குவேன். அவரது இசையார்வம் அளவிட முடியாதது. பிரபலமான பாடல்களை எல்லாம் பாடிக் காட்டுவார். பாடகர்களின் குரல்களை எடுத்துவிட்டு இசையை ஓடவிட்டு தானே பாடுவார். 'கத்தி' படப்பிடிப்பில் 'இசை' படம் பற்றி விஜய் சாரிடம் கூறினேன். அவர் 'சூர்யாவின் படம் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. எனக்கும் ஆவலாக இருக்கிறது'. என்றார். அதுவும் சத்யராஜ் நடித்த காட்சிகளைப் பார்த்து படம் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது."என்றார். விஜய் பேசும்போது, ‘‘எனக்கு 'குஷி'க்கு முன் வாழ்வா சாவா என்ற நிலை இருந்தது. இந்தப்படமும் ஓடவில்லை என்றால் என்னாகும் என்ற கேள்வி இருந்தது. அந்த நேரத்தில் 'குஷி' என்கிற வெற்றிப்படம் கொடுத்து என்னை தூக்கி விட்டவர் சூர்யா. இப்போது அதற்கு நன்றி சொல்கிறேன். 'குஷி' ரிலீசானவுடன் விக்ரமன் சார் கேட்டார், எப்படி விஜய் இதை ஏற்றுக் கொண்டு நடித்தீர்கள். கதை என்ன இருக்கு? கதையே இல்லையே? என்றார். நான் சொன்னேன் சரிதான் ஆனால் எஸ்.ஜே.சூர்யா என்று ஒருத்தர் இருக்கிறார் என்றேன். அவர் கதை சொல்லிக் கேட்க வேண்டும். அப்படி அசத்துவார். நம்மை அப்படியே வசியம் செய்துவிடுவார். 'நண்பன்' சமயம் 'இசை' படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நன்றாக இருந்தது. அவர் தனித்தன்மையான டைரக்டர். இசையமைப்பாளராகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்’’ என்று மனம் திறந்து பேசி நன்றியுடன் பாராட்டினார்.

Saturday, November 15, 2014

3 மாதத்தில் தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சி – க்ரஞ்சஸ் பயிற்சி.!


இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம். செய்முறை: முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும். அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்

Friday, November 14, 2014

மறவர் எழுச்சி மாநாடு காவல்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது


முதன்மை தகவல் : இராஜபாளையம் மறவர் எழுச்சி மாநாடு காவல்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதி மன்ற கிளையில் முறையிட்டும் அனுமதி கிடைக்கவில்லை. இன்று மாலை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ்நாடு மறவர் பேரவை தலைவர் இரா.ஜெயசந்திர தேவர் அவர்கள் மாநாடு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.. மேலதிக தகவலுக்கு.... இரா.ஜெயசந்திரத் தேவர். பேச : 94424 18543.

புதுமலர் பிரபாகரன்


திரை நடிகர், அண்ணன் மு.கார்த்திக் அவர்கள் மீது நான் வைக்கும் 'எதிர்கருத்து' யாவையும் அவரது 'செயல்பாடின்மை' குறித்த ஆதங்கம் தான். அதே போல, திரைத்துறையினர் எந்த வடிவிலும் அரசியல் தலைமை ஏற்பதை ஏற்பதில்லை என்பதில் இன்றளவும் உறுதியுடன் இருக்கிறேன். விருதுநகர், இராஜபாளையம் பகுதியில் மறவர் மாநாட்டிற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்ட தருணத்தில் 'அப்பகுதி மக்களிடம் கார்த்திக் நீக்கமற நிறைந்திருப்பதை' உணர முடிகிறது. இப்பெருந்திரள் இளைஞர்களின் விசுவாசம் என்பது முத்துராமனின் மகன் என்கிற நிலையிலேயே தேங்கி விடுவது கார்த்திக் அவர்களின் ஆளுமை தோல்வியே ! அதைவிட, தொடர்ந்து ஊடகங்கள் 'அவரை குழப்பவாதியாகவும், அரசியல் காமெடியாளராகவும் சித்தரித்து வருவதை அப்பட்டமாக உணர' முடிகிறது. அவரை தொடர்ந்து இப்படியே வைத்திருப்பதில் 'பல உளவியல்கள்' கவனமாக இருக்கின்றனர். அவரது திரை பலம் தேவராக திரண்டு விடக்கூடாது என்பதில்... அவரும் 'எதையும் அறியாதவராக தொடர்ந்து நடை போடுவது' மீண்டும் பத்திரிக்கை செய்தியாவதற்கே பயனளிக்கும் புதுமலர் பிரபாகரன்

மறவர் எழுச்சி மாநாடு


ராஜபாளைத்தில் 16:11:2014 வரும் ஞாயிற்றுக்கிழமை ..நம் வீரவம்சம் "மறவர் எழுச்சி மாநாடு" முக்குலத்து இளைஞர் படையே வருக வருக ...இவண் ஓம்பிரகாஷ்..

S.J. Suryah, a full-time music director!


The director turned actor is now, producer turned music director. S. J. Suryah was once the most sought-after director in the industry. He then got into a spree of acting commitments. After a hiatus, the story-teller is back with Isai, a project that has taken years to complete. Directors like Vijaya T. Rajendhar, Bhagyaraj, Perarasu, Praveen Gandhi have already taken up music direction at sometime in their career. Now S.J. Suryah joins the bandwagon of directors taking up the task of scoring music for their own films. Composing music is no simple task. All of Suryah's films with Deva and AR Rahman had blockbuster songs in it. Suryah confesses, his days with Rahman were the reason behind his transformation into a music director. Having had some first hand access on the songs from Isai, the tracks sound ambitious and original. The compositions are professionally treated with an intent to comprehend the story that is touted to be horror. We should wait for his background score to make further comments. Way to go S.J. Suryah!

10 tips to protect your Android device


Android is the most popular mobile platform in India as well as the world. One of the major reasons for its popularity is the flexibility it offers in terms of customization and the abundance of third-party apps. Apps can even be side-loaded, bypassing Google’s Play Store app marketplace. However, all this also makes Android vulnerable to security threats and malware. Moreover, with our increasing reliance on smartphones and tablets, we’re storing more private data than ever before, leaving us more vulnerable to data thefts. So how do you protect yourself from losing precious personal and work data accessed via Android devices? Here are 10 tips to help you secure your Android gadgets: 1. Use a screen lock The most basic security measure for every Android device, a screen lock allows you to guard the device by using a pattern, PIN or password. The lock can be activated through the Android device’s Security Settings. Following the activation of the lock, the device can be set to lock automatically after a specific time period or by pressing the Power key. 2. Encrypt your device Android allows you to encrypt all the data on your device. You’ll need to key in a password or PIN each time the device is turned on to decrypt all the data. If the phone gets into the wrong hands, there’s no way to access the data without a password or PIN if the device is restarted. This way, your sensitive data stays safe though the device becomes a little slow. It can be activated through the Android device’s Security Settings. 3. Using personal device for work? Talk to IT According to security solutions firm ESET, around 30-40% of devices in workplaces are vulnerable to threats unless users are educated about risks. If you plan to use your personal device for work, check with your workplace’s IT team before configuring it to access and store work related data. 4. Activate Google’s Android Device Manager Even if you lose your device, the Android Device Manager feature allows you to track a (connected) device on Google Maps. It also enables you to ring the device at full volume for five minutes and even erase all the data. To verify if it’s enabled, you can go to the Settings menu on your device and tap on Security. It can be enabled through the Device Administrators setting under Security Settings. 5. Don’t store sensitive data on SD cards Make sure you don’t store sensitive information such as copies of credit cards and personal IDs on external storage cards since it is easy to remove them and access the data stored. If you need to store important information, keep it on internal storage. 6. Don’t install apps from unknown sources While apps on the Google Play Store are not curated as diligently as Apple’s App Store, it is still the safest place to download and install apps on Android platform. Installation files (APKs) sourced from third-party sites should be dealt with caution as they might hide malware or spyware. 7. Install locks for apps You can use additional protection for apps like Gallery and Messaging to protect private data. A number of apps are available on Play Store that offer an additional level of protection for individual apps. Such apps ask you to set up a password or PIN code that needs to be entered whenever you open the particular protected apps. 8. Don’t root your phone By rooting your phone, you can install custom Android ROMs and even some incompatible apps. However, apps with root access get unhindered access to your device’s file-system, exposing it to more damage in case a malicious app is installed. It also voids your phone’s warranty. 9. Keep your device software up to date Google releases software updates that also include several security patches. Check for software updates using the device Settings, where you’ll find a System Updates option in the About Device menu. 10. Sign out or use incognito mode while browsing Remember to sign out of Chrome while browsing the web on an Android device or use incognito mode, especially if you share devices and PCs. Chrome records your search and browsing history and syncs it across all devices on which you’ve signed-in.

Thursday, November 13, 2014

'என்னை அறிந்தால்' படத்தில் ஒரே கெட்டப்பில் அஜித், விவேக்


நடிகர் அஜித் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் விவேக்கும் அஜித் போலவே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றவுள்ளார். இந்த செய்தியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விவேக் பகிர்ந்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் 'என்னை அறிந்தால்'. படம் குறித்த சிறு சிறு தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. தற்போது, இத்திரைப்படத்தில் அஜித் உடன் நடித்து வரும் நடிகர் விவேக், தானும் அஜித்தும் ஒரே கெட்டப்பில் தோன்றவுள்ளதாகக் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில், இது அஜித்தின் யோசனை. நாங்கள் இருவரும் ஒரே கெட்டப்பில் தோன்றுகிறோம். இதற்கு மேல் இதைப் பற்றி எதுவும் சொல்ல இயலாது என பகிர்ந்துள்ளார். மேலும் அந்தக் கெட்டப்பில் தனது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 2001-ம் ஆண்டு கவுதம் மேனனின் முதல் திரைப்படமான 'மின்னலே' வெளியானது. இதில் விவேக் நடித்திருந்தார். படத்தில் அவரது நகைச்சுவைப் பகுதி படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

NAVARASAM BOOK - SUBSCRIPTION DETAILS


P.K.MOOKIAH THEVAR niruviya silai.


1971 andru P.K. Mookiah Thevar avaraal nirruvapattu, andraya inda janaadhibathi aaga irrundhaa V.V.GIRI avargalaal thirraka patta aiya Devar (pasumpon muthuramalinga devar) sillai....... THEVAR ai than vaalvin irruthi varai than sayalilum paachilum valikaatiyvar P.K.MOOKIAH thevar mattumee... Kalaingarum illai.. jayalalithavum illa... Varu yandha orru ARASIYAL THALAIVARGALUM ILLAI.... than guru vin ninaivaaga P.K.MOOKIAH THEVAR niruviya silai.

வளர்ச்சியை தடுக்க சதி: விஜய்சேதுபதி அறிக்கை


நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழ் திரையுலக பத்திரிக்கை நண்பர்களுக்கும், தமிழ் திரை உலகிற்கும் எனக்கு ஆதரவு அளித்து வரும் தமிழ் ரசிகர்களுக்கும் எனது அன்பான வணக்கம். ஆர்.கே.சுரேசின் ஸ்டுடியோ 9 என்ற நிறுவனத்தில் ‘‘வசந்தகுமாரன்’’ என்ற திரைப்படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மையே. ஆனால் ஆர்.கே.சுரேசின் தவறுதலான நடவடிக்கைளின் காரணமாகவும் அவரின் தகாத வார்த்தைகளின் காரணமாகவும் நான் வசந்தகுமாரன் திரைப்படத்திலிருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே விலகி கொள்வதாகவும் நான் வாங்கிய ரூ. 9 லட்சம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து தருவதாகவும் அன்றே கூறி விட்டேன். ஆனால் ஆர்.கே.சுரேஷ் என்னிடம் பல கோடி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்தார். மேலும் சில மர்ம நபர்கள் மூலம் எனக்கு மிரட்டல்களும் வந்து கொண்டு இருந்தன. இதை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் புகார் அளித்தேன். அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தபோது என்னுடைய தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து வசந்தகுமாரன் திரைப்படத்தில் இருந்து முழுவதுமாக என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன். இதே கருத்தை வலியுறுத்தி நடிகர் சங்கத்தில் மீண்டும் ஒரு புகார் கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளேன். இந்நிலையில் இன்றைய தினம் நாளிதழ் ஒன்றில் நான் நடிப்பதாக வசந்தகுமாரன் திரைப்படத்தின் விளம்பரம் வந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற செயல்கள் எனது வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடனே திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதாக அறிகிறேன். நான் தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘‘புறம்போக்கு’’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் தயாரிப்பில் ‘‘நானும் ரவுடிதான்’’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன். இந்நிலையில் வசந்தகுமாரன் திரைப்படம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக வந்துள்ள செய்தியை கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இது போன்ற செயல்களில் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்து ஈடுபடுவாரேயானால் அவர் மீது சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பிரச்சினையில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் என்னை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன். இவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி அதில் கூறியுள்ளார்.

Friday, November 7, 2014

வீரத்தந்தை நேதாஜி பவுன்டேசன்


சாதி வெறியர்களின் முகத்தில் எல்லாம் தார் பூசிய சந்தோசம் : இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை நெல்லை மாவட்டம் தாழையுத்து நேதாஜி அறகட்டளை நண்பர்களால் நடந்த படுகிறது , இது தொடங்க பட்ட 3 மாதத்தில் இருந்து இன்று வரை 100 க்கும் மேற்பட்டோர் உயிரை காப்பாற்றும் கடவுளாய் இயங்கி வருகிறது . இதில் அணைத்து சமூகத்தினரும் பயன் பெற்று இருகின்றனர் . சொல்ல போனால் அதிகபட்சம் தேவர் இனம் அல்லாதவர்களுக்கு தான் இது உபயோகமா இருந்து இருக்கு . தேவர் இனத்தை சாதி வெறியர்கள் என்று சித்தரித்த சாதி வெறியர்கள் முகத்தில் தார் பூசிய சந்தோஷத்தில் தாழையுத்து மற்றும் நெல்லை தேவர் சமுதாய மக்கள் .