Monday, October 31, 2011

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்: நெல்லையில் சீமான் பேட்டி

நெல்லையில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் கூடன்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சி நிறுவனத்தலைவர் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடன்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக நடந்த பிறகும் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவே இல்லை. இந்த போராட்டத்தை திசைதிருப்ப மத்திய அரசு முயல்கிறது. இது ஒரு குறிப்பிட்ட பகுதிமக்களுக்கான போராட்டம் என்றும், வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று கொண்டு அணு உலையை எதிர்க்கிறார்கள் என்றும் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள். இது அணு உலையை விட ஆபத்தானது.

மத்திய அரசுக்கு தமிழக மக்கள் உயிர் பற்றி கவலையில்லை. ஏற்கனவே தமிழக மீனவர்கள் கொலையில்,எல்லை தாண்டுகிறார்கள் என்று கூறி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட அரசு நாளை அணு உலை வெடித்தால் இந்த மக்களை எப்படி காப்பாற்றும்.

இப்போது தீவிரவாதிகளின் பார்வை கூடங்குளம் அணுமின்நிலையம் பக்கம்தான் உள்ளது. இந்த அணு உலை ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கான பேரழிவு. எனவே நாங்கள் அணுமின் நிலையத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். இது போன்ற அணு உலைகளை தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலாவது நிறுவ முடியுமா?. எனவே நாம் தமிழர் கட்சி இறுதி வரை மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கும்.

அணு உலை பணிகளை நிறுத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அதனை கண்டுக்கவே இல்லை. அணு உலை போராட்டமானது குறிப்பிட்ட பகுதியில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.

விரைவில் சென்னை,கோவை, மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராகபோராட்டம் நடத்தப்படும்.

SALEM

COIMBATORE THEVAR JEYANTHI


தி.நகர் சரவணா ஸ்டோர், சென்னை சில்க்ஸ் கடைகளுக்கு சீல்

சென்னை; சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின்(சிஎம்டிஏ) அனுமதி பெறாத சரவணா ஸ்டோர், சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தெற்கு ஆசியாவில் ஷாப்பிங் மால்கள் நிறைந்த இடங்களில் சென்னை தி.நகர் குறிப்பிடத்தக்கது.
இங்கு உள்ள வணிக நிறுவனங்கள் முறையான கட்டிட அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன என்பது நீண்டநாளாக இருந்து வரும் புகார்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் பல்வேறு பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.
இவற்றின் மீது சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இறுதியாக கடந்த 2007-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் 64 கடைகளை இடிக்க உத்தரவிடப்பட்டது.
இதை தவிர்க்க கடந்த ஆட்சியில் கடைகளை இடிப்பதை தவிர்க்க சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே அவை இடிக்கப்படாமல் தடுக்கப்பட்டன. இப்போது அந்த சட்டம் முடிவுக்கு வந்து விட்டது.
இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் விளைவாக முறையாக அனுமதி பெறாத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது,
அதன் அடிப்படையில் நேற்று இரவே இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. அதிகாலை 4 மணிக்கு சைதாப்பேட்டை போலீஸ் உதவி ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு தொடர்பாக கூட்டம் நடைபெற்றது.
கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் போது எதிர்ப்பு எழும் என்பதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக நடைபெற்றது.
பின்னர் அதிகாலை 5 மணிக்கு மாநகராட்சி அதிகாரிகள், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் குழுவினர் போலீஸ் பாதுகாப்புடன் தி.நகர் விரைந்தனர்.
உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ், குமரன் சில்க்ஸ், ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர், ரத்னா ஸ்டோர், ஜெயசந்திரன் டெக்ஸ்டைல், டெக்ஸ்டைல் இந்தியா உள்ளிட்டவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
7 கடைகள் மீது சி.எம்.டி.ஏ., அதிகாரிகளும், 25 கடைகள் மீது மாநகராட்சி அதிகாரிகளும் சீல் வைத்துள்ளனர். அடுத்த கட்டமாக 32 கடைகளுக்கும் சீல்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டமாக சீல்வைக்கப்பட்ட கட்டிடங்கள் உரிமையாளர்கள் தங்கள் கட்டிடத்தில் அனுமதி பெறாத பகுதிகளை இடிக்க வேண்டும். அதன்பின்னரே அவை இயங்க அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.

ஊழியர்கள் பதற்றம்

32 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் அந்த கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். கடைகள் தொடர்ந்து இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இடிப்பதற்கு உச்சநீதிமன்றம் சென்று தடைவாங்குவது குறித்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

கூடன்குளம் அணுமின் திட்டம்: சீமான் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை: தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாபிற்கும் மிகுந்த அச்சுருத்ததலாக இருக்கும் கூடன்குளம் அணுமின் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி நாள (31-10 -2011) நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நெல்லை மாவட்டம் பாளை பேருந்து நிலையம் அருகே ஜோதிபுரம் திடலில் நடைபெற்றும் இந்த ஆர்ப்பாட்டம், காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடிபெறுகிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

தமிழகத்தில் தி.மு.க.வின் கூடாரம் காலியாகி வருகிறது : அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேச்சு

கடையநல்லூர் : தமிழகத்தில் திமுகவின் கூடாரம் காலியாகி வருவதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். நெல்லை புறநகர் வடக்கு மாவட்டத்தில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற யூனியன் தலைவர்கள் செல்லம்மாள், முருகையா, பானுமதி, தங்கமாரி மற்றும் டவுன் பஞ்.,துணைத் தலைவர்கள் தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியனை சந்தித்து சால்வை அணிவித்தனர். அதிமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செந்தூர்பாண்டியன் கூறியதாவது:- உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் அதிமுகவிற்கு மிகுந்த நம்பிக்கையுடன் அமோக ஆதரவை அளித்துள்ளனர். மக்கள் நலத்திட்டங்களுக்கும், மக்களுக்கான பணிகளை மேற்கொள்வதற்கும் தமிழகத்தில் அதிமுகதான் தகுதி வாய்ந்த இயக்கம் என கருதிய தமிழக மக்கள் சட்டசபை தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றியை அளித்துள்ளனர்.

இந்த வெற்றியை பொறுத்தவரை கடந்த 4 மாத அதிமுக அரசின் சாதனைக்கும், அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதற்கும் மக்கள் அளித்த நற்சான்றிதழ் ஆகும். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை சட்டசபை தேர்தலில் திமுகவை அடியோடு மக்கள் புறக்கணித்த நிலையில் உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவிற்கு மீண்டும் அதே முடிவினை தந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளிலும் மக்கள் விரோத நடவடிக்கை தான் கையாளப்பட்டதன் காரணமாகத்தான் திமுகவிற்கு இதற்கான பதிலை மக்கள் உள்ளாட்சி தேர்தல் மூலம் தந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக கரைய துவங்கியவிட்டது. திமுக கூடாரம் காலியாகி வருகிறது. அந்த கட்சியில் காணப்படும் சர்வாதிகார சக்திகளை எதிர்த்து திமுகவினரே புகார்களை கூறி வெளியேறி வருவதை தமிழக மக்கள் பார்க்க துவங்கிவிட்டனர். குடும்பம் தான் கட்சி என கருணாநிதி செயல்படுவதாக திமுகவினரே புகார் கூறும் அளவிற்கு திமுகவின் நிலை பரிதாபமாக காணப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் அளித்த நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் நலத்திட்ட பணிகள் நெல்லை மாவட்டத்தில் சிறப்பாக அமைவதற்கு அனைத்து நடவடிக்கையும் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் வெள்ள சேதத்தினை தவிர்க்க முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சருடன் சாம்பவர்வடகரை டவுன் பஞ்.,துணைத் தலைவர் வி.பி.மூர்த்தி, மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் இலஞ்சி சண்முகசுந்தரம், தொகுதி செயலாளர் மாரியப்பன், இணை செயலாளர் நடராஜன், நகராட்சி தலைவர் வக்கீல் மோகனகிருஷ்ணன், நகர செயலாளர் கிட்டுராஜா, கவுன்சிலர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, செங்கோட்டை குருசாமி உடனிருந்தனர்.

NAVAMANI AYYA PAYS RESPECT TO OUR LEADER

உசிலம்பட்டியில் தேவர் ஜயந்தி, குருபூஜை விழா

உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 104-வது பிறந்த நாள் விழா மற்றும் 49-வது குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கள்ளர் கல்விக் கழகத்தின் தலைவர் மாசாணம் தலைமையில் கல்லூரி முதல்வர் பாலுச்சாமி, பேராசிரியர்கள் விஜயன், அக்னி, வைரமணி, மணிகண்டன், ராமன் ஆகியோர் கலந்து கொண்டு உசிலம்பட்டியில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் முருகன்ஜீ தலைமையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், ரெட்காசி, சங்கிலி, ரகு, மாவீரன், அக்னி பிரதாப் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பால் அபிஷேகம் செய்தனர்.
நேதாஜி சேனைத் தலைவர் ஓ.கே.ராமதாஸ், நிர்வாகிகள் பழனி, ராஜபாண்டி, வீரணன் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர்.
தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ஏ.கே.டி.ராஜா தலைமையில் வழக்குரைஞர் ரவிச்சந்திரன், நகரச் செயலர் மொக்கச்சாமி, ஒன்றியச் செயலர் சுரேஷ், அழகுராஜா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
காங்கிரஸ் சார்பில் நகரத் தலைவர் தீபா பாண்டி, முன்னாள் புறநகர் மாவட்டச் செயலர் விஜயகாந்தன், வட்டார காங்கிரஸ் முத்துக் கண்ணன், சேவா தளம் அய்யாவு ஆகியோரும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பிரமலைக் கள்ளர் இளைஞர் பேரவைத் தலைவர் ராஜபாண்டி, மாநிலச் செயலர் பூபதி ராஜா வினோத். சுந்தர், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் ஐ.ராஜா, வழக்குரைஞர் மணிகண்டன், பாலுச்சாமி, பரமத்தேவர், மலைச்சாமி, பாஸ்கர பாண்டியன் மற்றும் பலர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பொதுமக்கள் பலர் முடிகாணிக்கை செலுத்தி வணங்கினர். பின்னர் அவர்கள் பசும்பொன் நோக்கிச் சென்றனர்.

உசிலம்பட்டி கல்லூரி மாணவர்கள் ஜோதி ஏந்தி தொடர் ஓட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மாணவர்கள் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தை நோக்கி ஜோதி ஏந்தி தொடர் ஓட்டம் மேற்கொண்டனர் .
உசிலம்பட்டி ஐந்து கல் ராந்தாவில் உள்ள தேவர் சிலை முன் சிறப்பு பூஜையை பாரதீய பார்வர்டு பிளாக் நிறுவனத் தலைவர் முருகன்ஜீ நடத்தினார்.
ஜோதி ஏந்தி தொடர் ஒட்டத்தை கல்லூரி முதல்வர் என்.பாலுச்சாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கள்ளர் கல்விக் கழகத் தலைவர் எஸ்.மாசாணம் முன்னிலை வகித்தார். கல்லூரிப் பேராசிரியர்கள் அக்கினி, விஜயன், ராமன், சுப்புராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர் குபேந்திரன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பி.கே.மூக்கையாத் தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து உலக சமாதானம் குறித்து சபதம் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஜோதி ஏந்தி செக்கானூரணி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து அய்யணன் அம்பலம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் பசும்பொன் தேவர் நினைவிடம் சென்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த இடத்தை சுற்றுலா தலமாக அறிவிக்கவேண்டும்

கோவில்பட்டி : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த இடத்தை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென கோவில்பட்டியில் பசும்பொன் தேசிய கழக நிறுவனத்தலைவர் தெரிவித்தார்.பசும்பொன் தேசிய கழகத்தின் சார்பில் முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி விழா பசும்பொன்னில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதுகுறித்து கோவில்பட்டியிலுள்ள பசும்பொன் தேசிய கழக தென்மண்டல அலுவலகத்தில் கழக நிறுவனத்தலைவர் வெள்ளை ச்சாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டு பொதுமக்களால் தெய்வீகத்திருமகன் என்றழைக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் தேசிய கழகத்தின் சார்பில் லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான அன்னதான பந்தல் இன்று (அக்.29) பசும்பொன்னில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கழகத்தின் சார்பில் தொடர்ஜோதி ஓட்டம், முளைப்பாரி ஊர்வலம் துவங்கி ஜெயந்தி விழா நடைபெறும் தேவர் நினைவிடத்திற்கு நாளை (அக்.30) வந்தடைகிறது. தேவர்ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதுதவிர நீண்டநாள் கோரிக்கையாக இருக்கும் மதுரை ஏர்போர்ட்டிற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டுவது, மறவர், கள்ளர், அகமுடையார் ஆகியோரை தேவரினம் என்று அறிவிக்கவும், முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் முத்துராமலிங்க தேவர் பிறந்த பசும்பொன் கிராமத்தில் தியான மண்டபம், தெப்பக்குளம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென பசும்பொன் தேசிய கழக நிறுவனத்தலைவர் வெள்ளைச்சாமித்தேவர் தெரிவித்தார். அப்போது பசும்பொன் தேசிய கழக பாண்டிச்சேரி மாநில தலைவர் மகாலிங்கம், தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துராஜ், தூத்துக்குடி மேற்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், மாநில தொழிற்சங்க செயலாளர் உதயாநாராயணன், மாநில பொருளாளர் ராமர், மாநில தொண்டரணி தலைவர் ஜஸ்டின், கோவில்பட்டி நகர செயலாளர் சங்கர் உட்பட பலர் இருந்தனர். இந்நிலையில் நாளை (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்கு பாண்டிச்சேரி மாநில தலைவர் மகாலிங்கம் தலைமையில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் அருகேயுள்ள தேவர் சிலைக்கும், கோவில்பட்டி அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள தேவ ர் சிலைக்கும் மாலை மரியா தை செய்துவிட்டு ஏராளமான பசும்பொன் தேசிய கழகத்தினர் பசும்பொன் கிராமத்திற்கு புறப்பட்டு செல்கின்றனர்

நெல்லையில் தேவர் ஜெயந்தி விழா கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

திருநெல்வேலி : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை ஜங்ஷனில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 104வது ஜெயந்தி விழா நேற்று நெல்லையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

காங்கிரஸ் : நெல்லை ஜங்ஷனில் உள்ள தேவர் சிலைக்கு காங்,. எம்பி., ராமசுப்பு தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கவுன்சிலர் விஜயன், காங்., நிர்வாகிகள் சரவணன், ஜெகநாதராஜா, சிந்தா சுப்பிரமணியன், ரமேஷ் செல்வன், வேணுகோபால், சண்முகராஜ், முருகேசன், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாஜ., : நெல்லை மாவட்ட பாஜ., சார்பில் மாவட்ட தலைவர் கட்டளை ஜோதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஜங்ஷனில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கவுன்சிலர் அழகுராஜ், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ரமேஷ், நத்தம் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேமுதிக., : நெல்லை மாநகர் மாவட்ட தேமுதிக., சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் முகமது அலி, மாவட்ட அவைத் தலைவர் தலைமையில் கட்சியினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் மாவட்ட வக்கீல் அணி பொருளாளர் ஜெயபாலன், துணை செயலாளர் ஜெயசந்திரன், தொழிற்சங்க தலைவர் தேவதாஸ், பகுதி செயலாளர்கள் சுந்தரராஜன், சேக், கவுன்சிலர் தானேஸ்வரன், ஆனந்தமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மதிமுக., : நெல்லை மாவட்ட மதிமுக., சார்பில் ஜங்ஷனில் உள்ள தேவர் சிலைக்கு புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். இதில் மாநில மாணவரணி செயலாளர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் டேனியல் ஆபிரகாம், சரோஜினி, ஜோசப், பகுதி செயலாளர்கள் ஜெயின் உசேன், மணப்படை வீடு மணி, வடிவேல் பாண்டியன், பொன்.வெங்டேஷ், ஜமால், கல்லத்தியான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாமக., : பாமக., கட்சி சார்பில் ஜங்ஷனில் உள்ள தேவர் சிலைக்கு மாநகர மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். இதில் மாநகர இளைஞரணி துணை செயலாளர் லிங்கம், மாவட்ட இளைஞரணி தலைவர் சேந்திமங்கலம் சேவியர், பகுதி செயலாளர்கள் அழகர், விஸ்வநாதன், யூனியன் செயலாளர் சேதுபதி, யூனியன் தலைவர் சேவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மூ.மு.க., : நெல்லை மாவட்ட மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு தாழையூத்து ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இதில் துரைராஜ், சண்முகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் : நெல்லை மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாவட்ட தலைவர் பாலு தலைமையில் கைலாசபுரத்திலிருந்து பால் குட ஊர்வலம் நடந்தது. நிறைவாக ஜங்ஷனில் உள்ள தேவர் சிலைக்கு நிர்வாகிகள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் நிர்வாகிகள் கருணாகரபாண்டியன், சண்முகையா பாண்டியன், தங்கபாண்டியன், ராஜவேலு, இசக்கி பாண்டி, சுப்பையா, மருதுபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி : அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் துர்க்கை முத்து கட்சியினருடன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

போலீசாருடன் வாக்குவாத

காரியாபட்டி : திருச்சுழி அருகே உள்ள செம்பொன்நெருஞ்சியை சேர்ந்த சிலர், மதுரையில் உள்ள மூக்கையாத்தேவர் சிலைக்கு சென்றுவிட்டு ஜோதியுடன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவுக்கு சென்றனர். காரியாபட்டியிலிருந்து பி.புதுப்பட்டி, திருச்சுழி வழியாக பசும்பொன்னிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வந்தவர்கள் எங்கள் ஊர் இப்பகுதியில் இருப்பதால், இந்த வழியாக செல்ல அனுமதிக்க வேண்டும் என ஒரு மணி நேரமாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டனர். காரியாபட்டியில் நான்கு ரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அருப்புக்கோட்டை வழியாக செல்வதாக கூறி கலைந்து சென்றனர்.

மக்கள் உணர்ச்சிகளை ஜெ., பொருட்படுத்தவில்லை : வைகோ ஆவேசம்

கமுதி : ""மக்கள் உணர்ச்சிகளை ஜெ., பொருட்படுத்தவில்லை,'' என, ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ கூறினார். கமுதி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் அவர் கூறியதாவது: கடந்த 36 ஆண்டுகளாக தொடர்ந்து பசும்பொன்னிற்கு வந்து கொண்டு இருக்கிறேன். ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற மூவரின் தண்டனையை குறைக்க ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்க்கிறது. ஆனால் மக்களின் உணர்வுகளை மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தொடர்ந்து போராடி தண்டனையை ரத்து செய்ய சபதம் ஏற்போம். தமிழன் என்ற உணர்வு கொண்ட கட்சி ம.தி.மு.க., மட்டுமே. இந்தியாவிலேயே ஒரு தலைவருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பக்தர்களாக வணங்கும் இடம் பசும்பொன். தலைவர் முத்துராமலிங்க தேவர், என்றார்.

பெயர் வைப்பதில் கருணாநிதி ஏமாற்றிவிட்டார் ஜெ., நிறைவேற்றுவார்: டாக்டர் சேதுராமன்

கமுதி : ""மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்காமல் கருணாநிதி ஏமாற்றிவிட்டார். ஆனால் ஜெ., அதை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது'' என, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் கூறினார். கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் அவர் கூறியதாவது: அடுத்தாண்டு 50வது குருபூஜை விழாவின் போது கும்பாபிஷேகம் நடத்தி மேலும் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜெயலலிதா வந்தபோது தேவர் நினைவு இடத்தில் தங்க கவசம் வைப்பதாக கூறினார். அதை நான் மீண்டும் முதல்வரிடம் ஞாபகப்படுத்துவேன். அடுத்தாண்டு கும்பாபிஷேகத்திற்கு முன்பாக ஒரு நிகழ்ச்சி நடத்தி தங்ககவசம் வைக்க ஏற்பாடு செய்யப்படும். மதுரை விமான நிலையத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பெயர் வைக்க உறுதியளிக்கப்பட்டது. இதற்காக ஐந்து முறை போராட்டம் நடத்தி சிறை சென்றோம். ஆனாலும் கருணாநிதி நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டார். அவர் கனிமொழியை விடுதலை செய்வதில்தான் அதிக அக்கறையுடன் உள்ளார். முதல்வர் ஜெ., தங்க கவசம் வைத்து நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது, என்றார். பொது செயலாளர் இசக்கிமுத்து உட்பட கட்சியினர் உடனிருந்தனர்.

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர்: திருநாவுக்கரசர் சபதம்

கமுதி : ""நான் அமைச்சராக இருந்தால் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைக்கும் கோப்பில் உடனடியாக கையொப்பமிடுவேன்,'' என, முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் கூறினார். கமுதி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அவர் கூறியதாவது: மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை வைக்க தமிழக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தி பேசுவோம். நான் அமைச்சராக இருந்தால் உடனடியாக பெயர் வைக்கும் கோப்பில் கையொப்பமிடுவேன். உள்ளாட்சி தேர்தலில் காங்., பெரும் தோல்வி அடைந்துவிட்டது என கூறுகின்றனர். காங்., பல இடங்களில் மூன்றாம் இடம் வந்துள்ளது. பொதுவாகவே உள்ளாட்சி தேர்தல் ஆளும்கட்சிக்கு சாதகமாகவே இருக்கும். தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து காங்., முடிவு செய்யும்,'' என்றார்.

மதுரை விமான நிலையத்தை முற்றுகையிட்டு பெயர் வைப்போம் ஸ்ரீதர் வாண்டையார்

கமுதி : ""மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தி நாங்களே பெயர் எழுதிவிடுவோம்,'' என, மூ.மு.க., மாநில தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கூறினார். கமுதி பசும்பொன்னில் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் ஜெ., தேவர் சிலைக்கு தங்ககவசம் வைப்பதாக கூறி இன்னும் நிறைவேற்றாமல் உள்ளார். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பெயரை உடனடியாக வைக்காவிட்டால் நாங்கள் விமான நிலையத்தில் முற்றுகையிட்டு தேவர் பெயரை எழுதிவிடுவோம். ஜாதி வாரியான கணக்கெடுப்பின் பின் தேவரினத்தை மிகவும் பின்தங்கிய பட்டியலில் சேர்க்க வேண்டும், என்றார்.










VIJAYAKANTH JUST A SHOW

VIJAYAKANTH DID NOT COME TO PASUMPON NOR HAS HE GONE TO NANDHANAM TO PAY THE RESPECT.HE JUS SHOWS OFF IN HIS OFFICE BUILDING.HE NEVER RESPECTS THEVAR AYYA , EVEN IN HIS POSTERS.

THEVAR JEYANTHI 104





LAST YEAR POSTER : NOT SEEN MUCH

POSTERS


மனோரமாவிடம் நலம் விசாரித்தார் கமல்...

நடிகை மனோரமாவை நேரில் சென்று நலம் விசாரித்தார் கமல்.

தனது வீட்டு குளியலறையில் வழுக்கி வந்த மனோரமாவுக்கு தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு நாளை அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

இந்நிலையில் நேற்று அவருககு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனைக்கு நடிகர் கமல் சென்று நலம் விசாரித்தார். இவர் தவிர நடிகை அனுஷ்கா உள்பட பலரும் மனோரமாவை சந்தித்து வருகின்றனர்.

Sunday, October 30, 2011

பசும்பொன்னில் தியான மண்டபம்: அமைச்சர் அறிவிப்பு

பசும்பொன், அக்.30: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 104வது ஜெயந்தி மற்றும் 49வது குருபூஜை தினத்தை முன்னிட்டு, அரசின் சார்பிலான விழா நடைபெற்றது. இதன் பின்னர் பேசிய அமைச்சர் கோகுல இந்திரா, தமிழக சுற்றுலாத்துறையின் சார்பில் ரூ.37 லட்சம் செலவில் பசும்பொன்னில் தியான மண்டபம் ஒன்று கட்டப்படும் என்றார்.

'Thevar Jayanthi' passes off peacefully in Ramanathapuram

Madurai, Oct 30 (PTI) Hundreds paid homage today to freedom fighter and Thevar community leader Pasumpon Muthuramalinga Thevar on his 104th birth anniversary at a village in Ramanathapuram district amidst tight security arrangement. DMK Treasurer M K Stalin, who paid homage at the memorial in Pasumpon village, told reporters that Chief Minister J Jayalalithaa had promised to provide gold-plated covering for the memorial and asked "what happened" to the promise. He also criticised the Chief Minister for not visiting the memorial on the occasion of the 'Thevar Jayanthi'. From the ruling party camp, ten AIADMK ministers including Finance Minister O Panneerselvam, Municipal Administration and Rural Development Minister K P Munusamy and Corporation Minister Sellur Raju paid homage. Muvendar Munnani Kazhagam leader N Sethuraman and Muvendar Munnetra Kazhagam leader Sridhar Vandayar were among others who paid homage. About 6,000 policemen were deployed in Ramanathapuram and other southern distrists ahead of the 'Jayanthi' in light of the police firing in Paramakkudi last month, in which seven persons were killed. Police had opened fire on September 11 when a group of dalits turned violent, setting ablaze vehicles and blocking traffic following the detention of their leader, John Pandian at Vallanadu in Tuticorin district. Violence broke out after news spread that Pandian had been detained at Tuticorin en route to Paramakudi to pay homage on the death anniversary of Dalit leader Imanuel Sekar. PTI SSN ARP

சென்னை நந்தனம் தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு எம்.பி., சற்குண பாண்டியன், ஜெ.அன்பழ கன் எம்.எல்.ஏ. உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார், வேலுதேவர், சித்ராகிருஷ்ணமூர்த்தி, ராமசாமி. முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், நாச்சிகுளம் சரவணன், ரஞ்சன்குமார், முத்தமிழ் வைரராஜு, கலியமூர்த்தி, ராஜா, கண்ணன், தமிழக காங்கிரஸ் மாநில செயலாளர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், வக்கீல் முத்துராமலிங்கம், கராத்தே சண்முகவேல், தேவேந்திரன், கிக்பாக்சர் ராஜா உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

பா.ம.க. சார்பில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி, ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் ஜமுனா கேசவன், கன்னியப்பன், ஏழுமலை ஆகியோரும், பாரதீய ஜனதா சார்பில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல. கணேசன், தமிழிசை சவுந்தர் ராஜன், வானதி சீனிவாசன் ஆகியோரும் மாலை அணி வித்தனர்.

நடிகர்கள் விவேக், கர்னாஸ், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் சேக்தாவீது, அஷ்மத்துல்லா, தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரிஅருண், லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர், நிர்வாகிகள் எம்.எம்.ஆர்.மதன், கருணா, ராஜசேகர், ராமு, சுனில், வைத்தியநாதன் ஆகியோரும் மாலை அணி வித்தனர்.

சென்னை மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் தரமணி பன்னீர்செல்வம், நிர்வாகிகள் சந்திரபிரகாஷ், ஜெயராமன், மகளிர் அணி சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அகில இந்திய முக்குலத் தோர் பேரவை தலைவர் முருகவேல், பாலதண்டாயுத பாணி, பார் கவுன்சில் தலைவர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்தனர். மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் தியாகராஜன், பெரியசாமி, பாண்டியன், லிங்கம், பிரபு, பெரியதுரை, திருநாவுக்கரசு உள்பட மலர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியையொட்டி ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால் குடம் எடுத்து வந்தனர்.

"கேம்பஸ்' கொலைகள்: மாணவ சமுதாயம் செல்வது எங்கே

பத்து நாட்களுக்கு முன், மதுரை புதூர் ஐ.டி.ஐ., மாணவர் பாண்டியராஜன் கொலை, நான்கு நாட்களுக்கு முன் சென்னை இந்துஸ்தான் பல்கலை பொறியியல் மாணவர் ரஞ்சித் மத்துவார் கொலை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பொறியியல் மாணவர் த்ருபா ஜோதி துட்டா கொலை... என உயிர்பதைக்கும் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்தேறின. மூன்று உயிர்களும், சக மாணவர்களால் பறிக்கப்பட்டது தான் வேதனையின் உச்சம்.


விக்ரம் ராமசுப்ரமணியம் (மனநல டாக்டர்,ஆஹானா மருத்துவமனை, மதுரை): திடீரென்று ஒருவன் வன்முறையாளனாக மாறுவது, சினிமாவில் நடக்கும் காட்சி. நிஜவாழ்வில், சிறுவயதிலிருந்தே வன்முறையும், சீரழிவும் பழகியவர்கள் தான் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர். கல்லூரிப் பருவத்தில் "கவுன்சிலிங்' ஓரளவு கைகொடுக்கும். ஆனால் பள்ளிப் பருவம் தான், மாணவர்களை மேம்படுத்தும் சரியான பருவம். ஐந்தாம் வகுப்பிலிருந்தே, அவர்களை கண்காணிக்க வேண்டும். பெற்றோர் திட்டினால் தம்பி,தங்கையை அடிப்பது, ஆசிரியர் திட்டினால் சகமாணவரை அடிப்பது என... தங்களது பிரச்னைகளுக்கு வடிகால் தேடும் மாணவர்கள், பின்னாளில் இந்த இயல்பை மாற்றிக் கொள்ளாமல் அடிதடியில் ஈடுபடுகின்றனர்.சினிமாவில் இளைய சமுதாயத்தை சீரழிக்கும் வேலையை, மிக வேகமாக செய்து வருகின்றனர். நாலு பேரை அடித்தால் தான் "ஹீரோ' என ஆழ்மனதில் பதிய வைக்கின்றனர். போதாதற்கு, "வீடியோ கேம்ஸ்' விளையாட்டுகள், "வன்முறை சரியே' என்பது போல சித்தரிக்கிறது. ஆட்களின் மேல் காரை ஏற்றிக் கொல்லும் ரேஸ், நூறு பேரை அடிக்கும் ஹீரோ... இதை விட்டால் மாணவ சமுதாயத்திற்கு, நல்ல விஷயங்கள் எதுவும் கிடைப்பதில்லை.இவை இரண்டையும் முதலில் தடை செய்யுங்கள். இயல்பிலேயே வன்முறையை பார்த்து, வளர்ந்தவர்கள், கல்லூரிப் பருவத்தில் கட்டுப்படுத்த ஆளில்லாமல் திசைமாறுகின்றனர். அதோடு குடிப்பழக்கமும் சேர்ந்து கொள்ள... தாங்கள் செல்லும் பாதை சரியா... என்பதை யோசித்து பார்ப்பதில்லை. ஐந்தில் வளையாதது, 18ல் வளையாது. 18ல் திருத்தப் பார்க்கவேண்டும். ஆனால் ஐந்தில் இருந்தே... நல்ல பழக்கவழக்கங்களை, மனித மதிப்புகளை கற்றுத்தர வேண்டியது, பெற்றோர், ஆசிரியர்களின் கடமை

தேவர் சிலைக்கு ஜெ., மரியாதை

சென்னை: தேவர் ‌ஜெயந்தி‌யை முன்னிட்டு சென்னை நந்தனம் சிக்னலில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் ஜெ., மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவருடன் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

பசும்பொன்னில் குருபூஜை துவக்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை இன்று காலை துவங்கியது. அவரது நினைவிடத்தில் இன்று அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்துகின்றனர். மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பல்வேறு அமைப்புகள் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. பொதுமக்களும் பெருமளவில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாலை நடக்கும் அரசு விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்கின்றனர். மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு அமைச்சர்‌ செல்லூர் ராஜூ மற்றும் தி.மு.க., பொருளாளர் மு.க.,ஸ்டாலின் மலர்மாலை அணிவித்தனர்.

அடுத்த ஆண்டு தேவர் நினைவிடத்தில் கும்பாபிஷேகம்: சேதுராமன்

பசும்பொன், அக்.30: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 49வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவருடைய நினைவிடத்தில் மக்கள் கலந்துகொண்டு, மலர் அஞ்சலி, மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் தேவரின் குருபூஜையை முன்னிட்டு இன்று காலை மலரஞ்சலி செலுத்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேதுராமன், அடுத்த ஆண்டு தேவரின் 50 வது நினைவு தினத்தை ஒட்டி அவருடைய நினைவுக் கோயிலில் கும்பாபிஷேகம் செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு அக்.27ம் தேதி இந்த நிகழ்வுக்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை வந்து செல்லும் வாகனங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. 2000க்கும் மேற்பட்ட போலீஸார் மதுரை நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Saturday, October 29, 2011

devartv.com

live telecast of thevar jeyanthi...tomorrow from 7:30 a.m onwards.

பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா நெல்லையில் தீவிர கண்காணிப்பு

திருநெல்வேலி : பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா நாளை (30ம்தேதி) நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பசும்பொன் தேவர் சிலைகள், படங்களுக்கு அனைத்து கட்சிகள், இயக்க நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். கிராமங்களில் தேவர் ஜெயந்தி விழா கோலாகலமாக நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தலைவர்கள் சிலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கிராமங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ்ஸ்டாண்ட்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்புப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இரவு ரோந்துப்பணி மும்முரமாக நடக்கிறது.நெல்லை ஜங்ஷன் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க நாளை காலை முதல் மதியம் வரை 18 கட்சிகள், அமைப்புகளுக்கு தனித்தனியே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு இயக்க, கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டத்தை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ நடத்தினார்

குருபூஜை துவக்கம்

கமுதி : முத்துராமலிங்க தேவர் 104 ஜெயந்திவிழா கமுதி பசும்பொன்னில் நேற்று துவங்கியது. காலை 8 மணிக்கு லட்சார்ச்சனை, கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் யாகசாலை பூஜை நடந்தது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் தலைமை வகித்தார். நிர்வாகி ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். வாசன் கண்மருத்துவமனை, தேவர் நினைவாலய நிர்வாகம் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது. 1008 திருவிளக்கு பூஜை, முளைப்பாரி, கரகாட்டம், சிலம்பாட்டம் நடந்தது. சுற்றுப்புற கிராமப்பகுதியினர் காவடி, ஜோதி எடுத்து வந்தனர். இரவு தேரோட்டம் நடந்தது. 5,008 பால்குட விழா: முதுகுளத்தூர் தேவர் சிலைக்கு, 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர், 5,008 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் நடத்தபட்டது. ஏற்பாடுகளை மறவர் வாலிபர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம்

நடிகை மனோரமா கடந்த மாதம் குடும்பத்துடன் காளகஸ்தி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்குள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்தார். இரவில் பாத்ரூம் சென்ற போது மனோரமா திடீரென வழுக்கி விழுந்தார். நெற்றியில் பலத்த அடிபட்டது. தைலம் போட்டு தேய்த்து சகஜ நிலைக்கு வந்தார்.

சென்னை திரும்பிய அவர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். சில நாட்களுக்கு முன் நெற்றியில் அடிபட்ட இடத்தில் மீண்டும் வலி ஏற்பட்டு துடித்தார். உடனடியாக தேனாட்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர் அவரை பரிசோதித்த போது நெற்றியில் ரத்தக்கட்டு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்தக் கட்டை கரைக்க மருந்து கொடுக்கப்பட்டது. தற்போது திடீரென மயக்கமாகி கோமா நிலைக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.

Friday, October 28, 2011

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை. நடிகை மனோரமா ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா ஏற்கனவே முழங்கால் வலி காரணமாக ஆபரேஷன் செய்துகொண்டார். அதன்பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை.

வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். அவர் குளியலறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்தார். அதில் அவருடைய தலையில் பலத்த அடிபட்டது.

உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவரின் குருபூஜை விழா தொடங்கியது: புகைப்பட கண்காட்சியை கலெக்டர் அருண்ராய் தொடங்கி வைத்தார்

பசும்பொன்னில் முத்து ராமலிங்கதேவரின் குரு பூஜை விழா இன்று காலை தொடங்கியது. பசும்பொன் முத்துராம லிங்கத்தேவரின் 104-வது ஜெயந்தி விழாவும், 49-வது குருபூஜை விழாவும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் இன்று தொடங்கியது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, ராமச்சந்திரன், பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் குருபூஜை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேசுவரர் சுவாமிகள் தலைமையில் குழுவினர் யாகசாலை பூஜைகள் நடத்தினர். முதல் நாளான இன்று (வெள்ளிக் கிழமை) ஆன்மீக விழாவும், நாளை (29-ந்தேதி) தேவரின் அரசியல் விழாவாகவும், 30-ந்தேதி குருபூஜை விழா வாகவும் கொண்டாடப்படு கிறது. இன்று காலை 8 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்படும் புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் அருண் ராய் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து தேவரின பக்தர்கள் பொங்கல் வைத்து, முடிகாணிக்கை செலுத்தியும் தொடர்ஜோதி ஏந்தி வந்தும் காணிக்கை செலுத்துவார்கள். 30-ந் தேதி நடைபெறும் குரு பூஜை விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு விழாவில் தமிழக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொள்கிறார்கள்.

விழாவையட்டி பல மாவட்டங்களில் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பசும்பொன் தேவர் நினைவிடத்தில் வருகிற 30-ந்தேதி மரியாதை செலுத்த கட்சிகள் வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

காலை 4 மணி முதல் 4.30 மணி வரை சிறப்பு பூஜை. 4 1/2 மணி முதல் 5 மணி வரை அகில இந்திய பார்வர்டு பிளாக் (இல.சந்தானம்), 5 மணி முதல் 5 1/4 வரை ஜனநாயக பார்வர்டு பிளாக், 5 1/4 முதல் 5 1/2 வரை இந்திய ஜனநாயக கட்சி, 5 1/2 முதல் 5 3/4 தேவர் தேசியப் பேரவை (கே.சி.திருமாறன்), 5 3/4 முதல் 6 தேவரின கூட்டமைப்பு (செல்லத்துரை பாண்டியன்), 6 முதல் 6 1/4 அகில இந்திய பார்வர்டு பிளாக் (பி.வி.கதிரவன்), 6 1/4 முதல் 6 1/2 அகில இந்திய மருதுபாண்டியர் கழகம் (ராஜேந்திரன்), 6 1/2 முதல் 6 3/4 அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆண்டித்தேவர், ராஜேந்திரன், 7 முதல் 7 1/4 தேவரின மறுமலர்ச்சி இயக்கம் (செந்தூர் பாண்டியன்), 7 1/4 முதல் 7 1/2 மரத்தமிழர் சேனை (புதுமலர் பிரபாகரன்), 7 1/2 முதல் 7 3/4 பசும்பொன் தேர்வு ஸ்குருசியல் யூமானிட்டி வெல்பர் அசோசியேஷன் (பூபதி ராஜா), 7 3/4 முதல் 8.00 தமிழக மக்கள் பார்வர்டு பிளாக் (எஸ்.மனோகரன்), 8 முதல் 8 1/4 தேசியவாத காங்கிரஸ் (டாக்டர் ராஜேஸ்வரன்) 8 1/4 முதல் 8 1/2 மூவேந்தர் முன்னேற்றக்கழகம் (ஸ்ரீதர் வாண்டையார்), 8 1/2 முதல் 8 3/4 முத்துராமலிங்கத்தேவர் கல்வி அறக்கட்டளை (இந்தி ராணி), 8 3/4 முதல் 9 ஸ்ரீமான் தேவர் அறக்கட்டளை (எஸ்.மனோகரன்), 9 முதல் 9 1/4 அகில இந்திய மூவேந்தர் முன்னணி (டாக்டர் சேதுராமன்), 9 1/4 முதல் 10 அமைச்சர்கள், 10 முதல் 10 1/2 அ.தி.மு.க., 10 1/2 முதல் 10 3/4 அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் (கருப்பையா, அரசகுமார்), 10 3/4 முதல் 11 காங்கிரஸ், 11 முதல் 11 1/4 தேசியவாத காங்கிரஸ் (மலைச்சாமி), 11 1/4 முதல் 11 1/2 தேசிய மறுமலர்ச்சிக்கழகம் (கார்த்திகேயன்), 11 1/2 முதல் 11 3/4 பாரதீய ஜனதா, பிற்பகல் 12 முதல் 12 1/2 தி.மு.க., 12 1/2 முதல் 12 3/4 இந்திய கம்யூனிஸ்டு, 12 3/4 முதல் 1.00 நாம் தமிழர் இயக்கம், 1 முதல் 1 1/2 ம.தி.மு.க., 1 1/2 முதல் 1 3/4 மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, 1 3/4 முதல் 2 ஜனதா கட்சி (சுப்பிரமணியசாமி), 2 முதல் 2 1/4 தமிழ்நாடு சிவசேனா (தூதை செல்வம்), 2 1/4 முதல் 2 1/2 தமிழக முக்குலத்தோர் தேவர் சமூகம் (கணேச பாண்டியன்), 2 1/2 முதல் 2 3/4 பசும்பொன் தேசியக்கழகம் (வெள்ளைச்சாமி தேவர், கோவில்பட்டி,), 2 3/4 முதல் 3 பாரதீய பார்வர்டு பிளாக் (முருகன்ஜி), 3 முதல் 3 1/4 தே.மு.தி.க., 3 1/4 முதல் 3 1/2 வல்லரசு பார்வர்டு பிளாக் (அம்மாவாசி), 3 1/2 முதல் 3 3/4 பார்வர்டு பிளாக் (தினகரன்), 3 3/4 முதல் 4.00 தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவை), 4 முதல் 4 1/4 பார்வர்டு பிளாக் (நவமணி), 4 1/4 முதல் 4 1/2 தேவர் அறக்கட்டளை (பாலமுருகன், 4 1/2 முதல் 4 3/4 சரவணா நற்பணி மன்றம் தேவர் இளைஞர் நல்வாழ்வு மையம், 4 3/4 முதல் 5 தேவரின பாதுகாப்பு பேரவை, மாலை 5 மணிக்கு அரசு விழா நடைபெறுகிறது.

இத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன. ஏற்பாடுகளை கலெக்டர் அருண்ராய், டி.ஆர்.ஓ. ஜெயராமன், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கமுதி தாசில்தார் சுகுமாறன், ஆணையாளர்கள் கந்தசாமி, சத்தியமூர்த்தி மற்றும் அதி காரிகள் செய்து வருகிறார்கள்.

நந்தனத்தில் 30-ந்தேதி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்

முதல் -அமைச்சர் ஜெயலலிதா வருகிற 30-ந்தேதி சென்னை நந்தனத்தில் உள்ள முத்து ராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தேவர் திருமகனாரின் 104-வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி அளவில் சென்னை நந்தனம், அண்ணாசாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் உருவசிலைக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Executive magistrates posted for police stations

Executive magistrates had been posted for every police station in Madurai district to assist the administration and police in maintaining law and order during the Thevar jayanthi celebration on October 30.

The Collector, U. Sagayam, who chaired a review meeting of officials of Revenue Department here on Tuesday, instructed the Village Administrative Officers to inform the respective Tahsildars of the list of persons who would participate in the jayanthi celebration. The Tahsildars should ensure that executive magistrates reached their respective police stations. The VAOs should alert the officials about persons who could cause hindrance to maintenance of law and order.

According to an official press release, the Collector also instructed the VAOs to report any situation that would create a law and order problem to the Tahsildar and the control room (0452 2532501) at the Collector's office. Village assistants had been asked to keep vigil near statues of community leaders on rotation.

Thursday, October 27, 2011

தேவர் ஜெயந்தி விழா நாளை தொடக்கம்: அரசியல் கட்சி தலைவர்கள் வருகிறார்கள்

பசும்பொன் முத்துராம லிங்கத்தேவரின் பிறந்தநாள் விழாவும், அவரது நினைவு நாள் விழாவும் அக்டோபர் 30-ந்தேதி வருகிறது. தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் இந்த விழா நாளை தொடங்கி 30-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. நாளை (28-ந்தேதி) ஆன்மீக விழாவாகவும், 29-ந்தேதி அரசியல் விழாவாகவும், 30-ந்தேதி குரு பூஜை விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு சார்பில் நாளை பசும்பொன் கிராமத்தில் புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்படுகிறது.

மாவட்ட கலெக்டர் அருண்ராய் இந்த கண்காட்சியை திறந்து வைக்கிறார். 29-ந்தேதி கோவை ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றுகிறார். 30-ந்தேதி நடைபெறும் குருபூஜை விழாவில் லட்சக்கணக்கான தேவரின தொண்டர்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அ.தி.மு.க. சார்பில் தமிழக அமைச்சர்கள், தி.முக. சார்பில் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. சார்பில் வைகோ, காங்கிரஸ் கட்சி சார்பில் தங்கபாலு, திருநாவுக்கரசர், பாரதீய ஜனதா சார்பில் இல.கணேசன், பொன்.ராதா கிருஷ்ணன், தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும் 30-ந்தேதி பசும்பொன் கிராமத்திற்கு வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள்.

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன் கிராமத்தில் ஸ்ரீதர்வாண்டை யார், டாக்டர் சேதுராமன், பி.டி.அரசக்குமார் ஆகியோ ரது சார்பில் தனித்தனியாக அன்னதான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்படுகிறது. தேவர் நினைவிடத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் செய்து வருகிறார்.

தேவர் ஜெயநதி விழாவையொட்டி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பசும்பொன் கிராமத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.

Samantha fails to impress Mani Ratnam

Samantha might be the favourite choice of many top filmmakers in Tollywood but it is not the same in Kollywood. The actress, who has hit a hat trick with three consecutive films, has been rejected by maverick filmmaker Mani Ratnam for his forthcoming multilingual movie.

If reports are to be believed, Samantha gave a screen test for the upcoming movie in Chennai recently. But Mani Ratnam was not impressed by her photoshoots and decided to rethink on his planning of casting her opposite senior Tamil actor Karthik’s son Gautham, who is making his debut with the movie.

Meanwhile, she is being showered with offers in the Telugu film industry. Recently, she has signed Venkatesh and Mahesh Babu starrer film Seethamma Vakitlo Sirimalle Chettu, which is produced by Dil Raju.

Race for deputy mayor heats up in municipal corporations

MADURAI: Councillors of three municipal corporations in southern Tamil Nadu are now gearing up to elect deputy mayors, the second coveted post in the urban civic bodies.

Though, the AIADMK is set to grab the posts in all the three corporations - Madurai, Tirunelveli and Tuticorin - the fight is now among the councillors within the party. Caste dynamics are likely to play a key role in the election of the deputy mayor. In Madurai, four people are in the race while in Tirunelveli three councillors - two from the same family are vying for the post. In Tuticorin too, three councillors are in the race.

AIADMK got a majority in the Madurai corporation election and won 77 seats out of the 99 wards for which elections were held. Polls in ward 15 were postponed after AIADMK candidate SP Jebamani died due to illness just before the elections. AIADMK sources said that chief minister J Jayalalithaa has constituted a three member committee comprising state co-operatives minister Sellur K Raju, Madurai urban district secretary AK Bose and newly elected mayor VV Rajan Chellappa to shortlist the candidates for the post of deputy mayor in Madurai corporation.

The committee has already sent a list of eligible candidates to the party high command. Party sources said that 64th ward councilor ST Jayabalan, 76th ward councilor P Salaimuthu and 93rd ward councilor S Raja Sreenivasan are in the race.

ST Jayabalan belongs to the vellalar community, Salaimuthu belongs to the thevar community and Raja Sreenivasan is a brahmin. Even as the three are touted as strong contenders for the post, party men also hint that Jayalalithaa might pick someone else and spring a surprise. "The possibility of a dalit being chosen as depuity mayor is also high. In that case M Mariammal, councilor-elect of ward 35 could also be chosen,'' said a party functionary.

In Tirunelveli, 30 AIADMK councillors have been elected out of the total 55. AIADMK councillors P Jeganathan alias Ganesan, Haidar Ali and P Madhava Ramanujam are in the race for the post of deputy mayor, say party men. Here again, caste is likely to be a factor in deciding the deputy mayor. Interestingly, Jeganathan's brother Subramani, a DMK councillor is reportedly the party's candidate for deputy mayor poll.

In Tuticorin, AIADMK won 28 seats out of 60 councillors, while DMK has 17 councillors, Congress four and BJP one councillor besides ten independents. Since, mayor-elect Sasikala Pushpa belongs to the nadar community, the post of deputy mayor might go to one among Augustin, Xavier and Thitheriammal who belong to a fishing community, who have a strong presence in the region.

CM reviews security

CHENNAI:� Chief Minister J Jayalalithaa on Tuesday reviewed the security arrangements being made for the ‘Thevar Guru Pooja’ to be observed on October 30 at Pasumpon village in Ramanathapuram district to mark the birth anniversary of freedom fighter Muthuramalinga Thevar.

Chief Secretary Debendranath Sarangi, Home Secretary Rameshram Mishra, Director General of Police K Ramanujam, Additional Director General of Police (Law and Order) S George and Deputy Inspector General of Police (Intelligence) Pon Manickavel took part in the meeting.

The meeting assumes significance in the wake of the police firing at Paramakudi recently during the Guru Pooja of Dalit leader Immanuel Sekaran.

Already, the Home Secretary has convened a meeting of all top officials on the security arrangements to be made for the Thevar Guru Pooja.

Tamil Nadu crashes hopes of a DMDK-CPM combine

MADURAI: The local body polls have crashed the hopes of the DMDK-CPM combine of emerging into an alternative to the two major Dravidian parties. The two parties shunted out of the AIADMK alliance joined together just before the local body elections, but their hopes of power were crippled within a month. In fact, the DMDK lost many seats in the local bodies that it had won during the last elections. The party, that tested waters in the local body elections in 2006, barely two years after it was founded in the very same Madurai, had managed to win nine posts of councillor. But now not even one of its candidates won. Worse, most of them lost their deposit.

In ward number three, DMDK candidate K Oyyammal bagged 2,161 votes and lost by a thin margin of 137 votes to AIADMK candidate R Santhi. That was probably the only ward where a DMDK councillor came close to victory. Elsewhere, they were a distant third or fourth, faring poorer than the Congress and the MDMK.

In Madurai, DMDK's mayor candidate K Kaviarasu managed to garner 88,788 votes.

Critics point out that though Kaviarasu was the most prominent face of the party in Madurai, the votes he garnered were caste votes. "While all parties had fielded Thevar candidates, Kaviarasu is a Yadav, which enjoys a sizeable presence in Madurai. So he could consolidate and garner the community's votes,'' said a party functionary.

In the last assembly elections where Vijayakanth allied with AIADMK and steered DMDK to the position of principal opposition party in the assembly by winning 29 segments, a sizeable chunk of the winning segments were in southern Tamil Nadu. In Madurai, two assembly segments - Thiruparankunram and Madurai West were won by the party.

Besides, CPM too has a quite a following in the region and the combine was hoping to emerge as an alternative force in the state.

The only solace for the DMDK was in Tiruneveli corporation where P Thaneswaran won the post of councillor by bagging 1,055 votes. The mayor candidate in the southern town, S Kannammal, bagged 10,021 votes, lesser than A Asanpathu, an independent candidate, and lost her deposit. In neighbouring port town of Tuticorin too, the DMDK mayor candidate S Rajeswari gave a poor show with just 7,407 votes and lost her deposit.

The DMDK lost many seats in the local bodies that it had won during the last elections. The party, that tested waters in the local body elections in 2006, had managed to win nine posts of councillor.

மீண்டும் வந்தார் மனோஜ்

தமிழ்சினிமாவில் பெருமைமிகு வாரிசு என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டவர் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். வெளிநாட்டில் டைரக்ஷன் படிப்பை முடித்துவிட்டு டைரக்டராவதே லட்சியம் என காத்திருந்த இவர் தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பின் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அவ்வப்போது படம் இயக்கப் போகிறார் என்று செய்திகள் கிளம்பும். அப்புறம் அந்த செய்திகளுக்கு உயிர் இருக்காது.

எப்படியோ, தமிழ்சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் மனோஜ். பொதுவாக எதிர்மறை ஹீரோக்களுக்குதான் அதிக ஈர்ப்பு இருக்கிறது ரசிகர்கள் மத்தியில் என்பதை புரிந்து கொண்டவர், நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாராம். இந்த படத்தை அரும்பு மீசை குறும்பு பார்வை என்ற படத்தை இயக்கிய வெற்றிவீரன் என்பவர் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

Monday, October 24, 2011

தேவர் ஜெயந்தி விழாவுக்கு 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு: வாகனங்களில் மேற்கூரையில் அமர்ந்து செல்ல தடை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104-வது ஜெயந்தி விழா மற்றும் 49-வது குருபூஜை விழா வருகிற 27 முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழா தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 9 மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு தமிழக உள்துறை செயலாளர் ரமேஷ்ராம்மிஸ்ரா தலைமை தாங்கினார். டி.ஜி.பி. ராமானுஜம், கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் டி.ஜி.பி. ராமானுஜம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 9 மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த விழாவில் பாதுகாப்புக்காக ஏற்கனவே 8 போலீஸ் சூப்பிரண்டுகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கூடுதலாக 12 போலீஸ் சூப்பிரண்டுகள், 6000-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிறப்பு டி.ஐ.ஜி. தலைமையில் பாதுகாப்பு பணிகள் கண்காணிக்கப்படும். இந்த பாதுகாப்பு வருகிற 27-ந்தேதி முதலே மேற்கொள்ளப்படும்.

அதேபோல விழாவுக்கு செல்லும் மக்கள் வாகனங்கில் மேற்கூரையில் அமர்ந்து செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிற தரப்பினர் மனம் பாதிக்கும் வகையில் வாகனங்களில் செல்பவர்கள் கோஷங்கள் எழுப்பக்கூடாது.
மேலும் காவல் துறையினர் அனுமதித்துள்ள வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கி வைத்து செல்லக்கூடாது. மிகவும் பதற்றமான பகுதிகளாக கருதப்படும் இடங்களில் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடந்துவிடாமல் இருப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.

Officials gear up for a peaceful Thevar Jayanthi

MADURAI: Still facing flak from various fronts due to the firing at Paramakudi last month on Immanuel Sekaran memorial day, the entire state machinery has geared up to conduct the Muthuramalinga Thevar memorial day in a peaceful manner at Pasumpon in Ramanathapuram district on October 30.

Even as officials are working out a plan to provide foolproof security in Pasumpon, where a large number of people from the Thevar community are set to throng on the day, the police are also preparing to prevent any untoward incidents in other places in the southern region.

State home secretary Ramesh Ram Mishra and DGP K Ramanujam conducted a review meeting with collectors and police officials in southern districts on Sunday. Officials have decided not to allow wall posters to be stuck by any group or community during thevar guru pooja. Mishra instructed district collectors as well as police officers that they should be on high alert to ensure that no violence occurs from October 27 onwards.

"Police should not allow people to travel in open vehicles like trucks and tempos, to Pasumpon. People who visit Pasumpon from across the state

should adhere to the route earmarked by police. They should not be allowed to set up loudspeakers in the vehicles,'' he told the officials.

SPs and senior police officers should identify sensitive areas and deploy more police personnel for security, he said.

DGP K Ramanujam said more than 6,000 police personnel will be deployed for security for the guru pooja including 20 SPs. The Additional DGP (law and order) and IG, south zone, will monitor the security arrangements.

Madurai collector U Sagayam said people will not be allowed to carry liquor during the procession to Pasumpon.

Madurai city police commissioner Kannappan, who held a meeting on Saturday, promised to provide security to all vehicles of functionaries of the thevar outfits as well as leaders of the Forward Bloc from Madurai to Pasumpon, where the memorial of U Muthuramalinga Thevar is situated. However, they should approach the police with a request for security with details of the vehicles. In an apparent reference to the Paramakudi police firing, Kannappan said the situation this year was much different compared to previous years and said that in a bid to prevent any untoward incidents, the police would not permit processions in two-wheelers and autorickshaws.

However, Mulaipari and Pal Kudam processions would be allowed if permission was sought for them in advance. "We don't mind processions on foot and closed vehicles. But two-wheeler processions and autorickshaw processions cause a lot of hardship to participants. Sometimes, fatal accidents also happen," he said.

Similarly, flex boards would be permitted only in certain localities, he said.

Tight security for Thevar Jayanthi

MADURAI: In a bid to prevent any untoward incident during the four-day Thevar Jayanthi celebrations beginning next Thursday, 6,000 police personnel will be deployed across the state.

Director General of Police K Ramanujam told reporters on Sunday that 20 Superintendents of Police will be in charge of the additional security cover. He was speaking after attending a security review meeting chaired by Home Secretary Rameshram Mishra here.

Mishra discussed sensitive areas, vehicle arrangements and deployment of police force during the celebrations at the meeting, also attended by Additional Director General of Police S George, senior police officials and Collectors of nine southern districts.

The four-day celebration of 104th birth anniversary of Pasumpon Muthuramalingam Thevar and 47th guru puja starts on October 27.

The SPs will visit all sensitive areas on a regular basis and monitor the celebrations, said Ramanujam.

He advised police officials to maintain strict vigil and take action against those who put up posters or banners carrying offensive messages.

Collectors, SPs asked to ensure smooth 'Thevar Jayanthi'

Madurai, Oct 23 (PTI) Tamil Nadu Home Secretary, Ramesh Ram Mishra, today instructed District Collectors and Superintendents of Police from nine districts to take adequate steps to ensure the smooth conduct of the forthcoming 104th birth anniversary celebrations of freedom fighter and Thevar community leader, Pasumpon Muthuramalinga Thevar. The Home Secretary stressed at a meeting that during the 'Thevar Jayanthi,' to be held from Oct 27 to 30, those who go in a convoy of vehicles and take out processions should not raise slogans or carry placards containing writings that hurt the feelings of any person, a press release said. Open top vehicles would not be allowed, and vehicles fitted with speakers have also been prohibited. DGP K Ramanujam said 6,000 policemen had been deployed on security duty for the event. Twenty SPs would oversee the security operations at various points, he said, adding IGs would supervise the entire bandobust arrangement. PTI SSN ARP

Sunday, October 23, 2011

தீபாவளி வரை இரவில் மின்வெட்டு உண்டு: மின் துறை வட்டாரம்

தீபாவளி பண்டிகை காரணமாக, அதிக மின்தேவை ஏற்பட்டுள்ளதால், இரவு நேரத்திலும் மின்வெட்டை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. "தீபாவளி வரை இரவு நேர மின்வெட்டு தொடரும்' என, மின்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க, சென்னையில் ஒரு மணிநேரம், மாவட்டங்களில் இரண்டு மணி நேர மின்வெட்டு அமலாகிறது. இதில், இரவு நேரங்களில் மின்வெட்டை அமல்படுத்துவதில்லை. சில நேரங்களில், திடீர் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் மட்டும், இரவு நேரங்களில் மின் தடை செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் அனைத்து துணிக் கடைகள், ரெடிமேட் தயாரிப்பு நிறுவனங்கள், பரிசுப் பொருள் விற்பனை கடைகள், பரிசுப் பொருள் தயாரிப்பகங்கள், பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில், இரவு, பகல் பாராமல் பணிகள் நடக்கின்றன.சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில், வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தொழிற்சாலைகளிலும், பணிகள் சூடுபிடித்துள்ளன. அதுமட்டுமின்றி, கடைகளில், பண்டிகை கால கூடுதல் மின் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. கடைகள், ஓட்டல்கள், நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் ஆடம்பர வண்ண விளக்குகள் அதிகரித்துள்ளன. இதனால், மின்சாரத் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் முதல், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில், இரவு நேரங்களிலும் மின்வெட்டு அமலாகிறது. தீபாவளி பண்டிகை கால மின் பயன்பாடு அதிகரித்ததால், தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த ஏற்பாடு செய்துள்ளதாக, மின் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“No two-wheeler processions”

Processions in two-wheelers or auto rickshaws will not be permitted in the city during the Pasumpon Muthuramalinga Thevar jayanthi celebration on October 30, the Police Commissioner, P. Kannappan, told a meeting here on Saturday. The meeting was held with representatives of different factions of All India Forward Bloc and Mukkulathor organisations to discuss steps to be taken to ensure smooth flow of traffic and prevent untoward incidents on October 30 when a large number of people gather here to celebrate the birth anniversary of Muthuramalinga Thevar.

The participants were informed that police escort would be provided for convoys of vehicles proceeding to Pasumpon village in Ramanathapuram district from here, provided prior permission was obtained from the respective police stations. The organisers should submit an application with the details of the number of vehicles to be used. The vehicles carrying participants should only follow the escort vehicle and should not go on their own. They would be checked at two check posts on the way. Convoys would be permitted as per scheduled timings.

The Commissioner said that processions of two-wheelers or auto rickshaws would not be permitted on the occasion but traditional rallies of milk pots and sprouts would be allowed with prior permission. He cautioned that cultural shows and hoardings should not hurt the feelings of others.

Saturday, October 22, 2011

Upset Thevar panel members withdraw petition

MADURAI: Agitated over a court directive, the members of the Thevar Jayanthi Committee on Friday withdrew their petition seeking to allow them to conduct a padayatra through the traditional route from Thiruchuli Town via Muthuramalingapuram to Pasumpon Thevar samadhi on the Thevar Jayanthi day to be celebrated on October 30.

The petitioners argued that their regular route was short and used by the villagers for more than 50 years to perform padayatra during the celebrations. However, due to a clash between the dalit and non-dalits in 2008, the police closed the stretch and directed them to use another route to the memorial site. Since the route was longer compared to the traditional route, the villagers faced several problems.

However, One M Dhanushkodi of Muthuramalingapuram filed an impleading petition opposing the padayatra through the traditional route, saying that many houses in his village were ransacked by those who participated in it the padayatra in 2008. With an interim order issued in August, the Madurai bench directed the district collectors of Virudhunagar and Ramanathapuram to mediate between the two groups and also to find a solution to the issue. However, the collectors suggested that "the issue could be decided only after sometime before the festival taking into consideration of the prevailing situation."

When the matter came up for hearing before the bench comprising Justice K N Basha and Justice M Venugopal, the counsels of both sides were seen adamant. The bench advised the additional advocate general to mediate between them and report to the court. After an hour later, the AAG informed the court that both the parties were still adamant.

The judges then summoned Dhanushkodi, who in fact pleaded with the court not to grant permission to conduct the padayatra through the old route. When the judges said as part of an interim measure, it would order the police to permit hitherto the used route to undertake since 2008. Agitated over this, the petitioner's counsel withdrew the petition in a huff.

Wednesday, October 19, 2011

போராட்டத்தை தூண்டும் வகையில் பேசுவதா?- அணுசக்தி ஆணைய தலைவருக்கு சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையம் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு உலை வைக்கக் கூடியது என்பதால் அதனை மூடிவிட வேண்டும் என்று கோரி அப் பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நவம்பர் இறுதிக்குள் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க தொடங்கும் என்று இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் சிறீகுமார் பானர்ஜி அறிவித்திருப்பது, தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.

இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அணு உலைகள் தொடர்பாக அறைகுறையாக அறிந்து வைத்திருக்கும் அணு உலை எதிர்ப்பாளர்களின் தூண்டுதலே கூடங்குளத்தில் நடந்து வரும் போராட்டம் என்று சிறீகுமார் பானர்ஜி வர்ணித்திருப்பது அச்சத்தில் உள்ள மக்களை உதாசீனப்படுத்தும் வார்த்தைகளாகும். அப்பகுதி மக்களின் அச்சங்களை போக்கும் வகையில் நிபுணர் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மன் மோகன்சிங் உறுதியளித்தார்.

இதுவரை நிபுணர் குழு அமைக்கப்படவில்லை. மக்களின் அச்சத்தைப்போக்கும் வரை அணு உலை தொடர்பான அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. ஆனால் இவை எதையும் கருத்தில் கொள்ளாமல், அணு உலை இயக்கம் தொடர்பான பணிகள் சுவிட்ச்சை இயக்கி விளக்கை அணைப்பது போன்றதல்ல. அது நிறுத்தப்படாது என்று சிறீ குமார் பானர்ஜி கூறியிருப்பது போராட்டத்தை தீவிரப்படுத்தி, அதன் மூலம் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் பேச்சாகும்.

அணுமின் நிலையத்தில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டுதான் நாட்டின் மின் தேவையை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என்பது போல் பிரதமரும், அணுசக்தி அறிவியலாளர்கள் பலரும் பேசி வருவது வியப்பளிக்கிறது. இன்றுள்ள நிலையில் நமது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அணுமின் உலைகளில் இருந்து கிடைக்கும் மின் சாரத்தின் அளவு வெறும் 3 விழுக்காடுதான், 97 விழுக்காடு மின்சாரம் நீர் மின், அனல் மின் திட்டங்களில் இருந்தும், அணு உலைகளில் இருந்து கிடைப்பதை விட அதிகமாக காற்றாலைகளில் இருந்துதான் கிடைக்கிறது.

எனவே அணு மின் நிலையங்கள் இல்லை யென்றால் எதிர்காலத்தில் நமக்கு மின்சாரமே இருக்காது என்பது போல் பிரதமர் பேசுவது உண்மைக்கு முற்றிலும் புறம்பானதாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து நாளை முதல் தொடங்குகிறது

நெரிசல்களை தவிர்க்கும் வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட''நம்ம மெட்ரோ'' திட்டம் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.

தொடக்க விழாவில் கர்நாடக முதல்வர் டி.வி. சதானந்த கவுடா முன்னிலையில் ரயிலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் கமல் நாத் மற்றும் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

பெங்களூர் மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் இரயில் சேவைகள் ஏழு கி.மீ. நீட்டிக்கப்பட்டுள்ளது காலையில் இருந்து இரவு வரை மகாத்மா காந்தி சாலையில் இருந்து பய்யப்பனஹல்லி வரை இயக்கப்படுகின்றது .

Dalit contestant seeks votes by hailing Thevar

MADURAI: It’s unbelievable, but for politics. In a strange move, a Dalit contestant from the caste sensitive Pappapatti (reserved) village in Madurai district worships Thevar icon Pasumpon Muthuramalinga Thevar to win over the hearts of the Mukkulathor community to emerge victorious in the local body elections on Wednesday.� Contesting from the Caste Hindu majority hamlet, the 45-year-old candidate, T Palsamy, is in the fray for the second time, though he lost in the last local body elections, five years ago.� “I was defeated as the non-Dalits unanimously nominated another SC candidate to oppose me in 2006,” he told Express. “However, the same people have backed me this time with their chosen candidate has proven to be a poor performer,” he added.� With the Thevars extending their support for him, Palsamy has pulled up his socks to woo the dominant castes. He has printed pamphlets, which hails the Thevars as his god and praising their leader Pasumpon Muthuramalinga Thevar as temple.

In a rare gesture by any Dalit, Palsamy has also chanted “Thevar Naamam Vazhga! Thevar Pugazh Vazhga!” (Hail Thevar) through his election pamphlets. “I am quite popular among the Thevars. That’s why, despite there was stiff opposition from the Caste Hindus, few of my well wishers from the other side (Thevars) exercised their franchise in favour me in 2006,” he claimed.� Asked whether his attempts would hurt the sentiments of Dalits, Palsamy replied, “We had even pasted these bills on the walls of Dalits’ houses. Absolutely, there is no problem.” The Commerce graduate was also quick to add that he did not try the same formula to attract the Thevars in the previous elections.� Pappapatti came to the limelight when the Caste Hindus in the village refused to accept a panchayat president from the oppressed classes.� Elections were not held in the village, for five years, after it was brought under the bracket of reserved panchayat.� Agitated over the move, the Caste Hindus nominated a Dalit candidate, who would in turn withdraw his nomination, stalling the polls. Interestingly, the successful contestant in 2006 was asked to continue in his office with Palsamy contested against him as an independent.� Now, six candidates, including Palsamy, are in the fray.� Of the 1,543 total number of voters, 1,023 are Caste Hindus.

Tuesday, October 18, 2011

இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் மோதல்; அட்டவனை வெளியீடு

மும்பை: இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகளின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியைத் தொடர்ந்து மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
மேற்கு இந்திய தீவுகள் அணி இந்திய அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இதற்கான போட்டி அட்டவனையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 29ம் தேதி கட்டாகிலும், 2வது ஒருநாள் போட்டி டிசம்பர் 2ம்தேதி விசாகப்பட்டணத்திலும் நடக்கிறது.

சென்னையில்....

3வது ஒருநாள் போட்டி டிசம்பர் 5ம் தேதி அகமதாபாத்திலும், 4வது ஒருநாள் போட்டி டிசம்பர் 8ம் தேதி இந்தூரிலும், 5வது ஒருநாள் போட்டி டிசம்பர் 11ம் தேதி சென்னையிலும் நடக்கிறது. இந்த போட்டிகள் பகல் இரவு ஆட்டமாக நடக்கிறது.

GUD ONE

Monday, October 17, 2011

கூடங்குளம் பாதுகாப்பு: அப்துல்கலாம் அறிவுரையை ஏற்க வேண்டும்; டாக்டர் சேதுராமன் கருத்து

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மக்களின் சந்தேகங்களுக்கு விரிவாக விளக்கம் தர அப்துல்கலாம் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. அப்துல்கலாம் அணுசக்தி துறையில் நீண்ட காலம் அணுபவமிக்கவர். மக்கள் மீது அதிக அன்பு கொண்டவர். அப்துல்கலாம் அறிவுரையை ஏற்று கூடங்குளம் அணுமின்நிலையம் செயல் பாட்டை அரசு தீர்மானிக்க வேண்டும். அரசு அவரின் அறிவுரையை ஏற்பதைப் போல, இடிந்த கரை பகுதி போராட்டக்குழு வினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு: சோ.அய்யர் பேட்டி

சென்னை மாநகராட்சி 137-வது வார்டுக்கு உட்பட்ட நெசப்பாக்கம் ஏரிக்கரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் இன்று ஓட்டு போட்டார்.

பின்னர் அவர் பேட்டி அளித்தபோது, சட்டம் ஒழுங்கை பொறுத்த வரையில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலைப் போல் இல்லாமல், இந்த உள்ளாட்சி தேர்தல் எந்தவித சலனமும் இல்லாமல், பாதுகாப்பான முறையில் நடந்து வருகிறது.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு, வாக்கு எண்ணும் அனைத்து மையங்களிலும் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறினார்.


NOTE : சோ.அய்யர் BELONGS TO MUKKULATHOR CASTE

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: ஓட்டு போட முடியாமல் நடிகர் செந்தில் ஏமாற்றம்

அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வந்த நகைச்சுவை நடிகர் செந்தில் வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. இன்று காலை இவர் ஓட்டுப் போடுவதற்காக மனைவி மகன்களுடன் சாலிகிராமம் காவேரி பள்ளி கூடத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்றார். வாக்காளர் அடையாள அட்டையையும் கொண்டு சென்று இருந்தார்.

ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயரோ, குடும்பத்தினர் பெயரோ இல்லை. இதனால் செந்தில் அதிர்ச்சி அடைந்தார். அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாக்காளர் பட்டியல் புத்தகம் முழுக்க அலசி தேடிப்பார்த்தார்கள். ஆனால் பெயர் இல்லை. ஒரு வேளை பக்கத்து வாக்கு சாவடியில் பெயர் இருக்கும் என அதிகாரிகள் கூறினார்கள். இதனால் செந்தில் பாரதிதாசன் தெரு வாக்கு சாவடிக்கு சென்று பார்த்தார். அங்கும் அவரது பெயர் இல்லை.

2 மணிநேர அலைக்கழிப்புக்கு பிறகு நடிகர் செந்தில் ஓட்டுபோட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். இதுபற்றி நடிகர் செந்தில் கூறியதாவது:-

நான் முதல்-அமைச்சர் அம்மாவின் தீவிர விசுவாசி. அ.தி.மு.க.வுக்காக தேர்தலில் பிரசாரம் செய்து வருகிறேன். இப்போதும் தாம்பரத்தில் பிரசாரத்துக்காக செல்கிறேன். பிரசாரத்துக்கு முன்பு ஓட்டு போட்டு விட்டு செல்ல வந்தேன். ஆனால் எனது பெயர் இல்லை. இது எனக்கு வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது எனது பெயரை வேண்டுமென்றே நீக்கி உள்ளனர். எனது குடும்பத்தின் 5 ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காமல் போய் விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Steps for Thevar Jayanthi reviewed

District Collector U. Sagayam has appealed to the volunteers participating in the Thevar Jayanthi to follow the instructions on the routes to be taken by the different outfits and among others which would ensure the events passed off peacefully on October 30.

Bursting crackers during the procession is banned. The rally followed by public meetings on the occasion should be wound up by 10 p.m.

All the four-wheelers participating in the events would be permitted only when the roof-top carriers are removed. The volunteers should stop their vehicles at check-posts while entering the city. The timings specified for each group shall be strictly adhered to by the leaders. Any let up in it should be avoided. All sensitive locations have been identified and it would be given adequate strength, the police officers told the meeting.

No padayatra

While the officials have made it clear that permission would not be given to any outfit to take out a padayatra from the city to Pasumpon village, vehicles too would have to follow the routes earmarked by the authorities. From Madurai, they shall take Silaiman, Manamadurai, Parthibanoor, Abiramam. In the return direction, they may take Kamudhi, Kannarpatti junction, Keezhamaramathupatti, Mandapa salai, Aruppukottai, Kariapatti, Ring Road and enter city.

It had been decided to deploy more number of police in colonies where adi-dravidars resided. Similarly, a kind of visible police presence at all vantage locations would instil confidence among the common man.

Recovery vehicles and fire tenders would be positioned throughout the event as a precautionary measure.

தி.மு.க. கோஷ்டி மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு: ரித்தீஷ் எம்.பி.-சுப.தங்கவேலன் உள்பட 100 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம் நகரசபை தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் நாகநாதசேதுபதி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் எம்.எல்.ஏ., ரித்தீஷ் எம்.பி. ஆகியோர் தி.மு.க.வினருடன் அண்ணாநகர் பகுதியில் வாக்குகள் சேகரித்தனர். அப்போது அங்கு நகர தி.மு.க. செயலாளர் ஆர்.ஜி.ரத்தினமும் தி.மு.க. வினருடன் வந்தார். அவர்களுக்குள் திடீர் என்று வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அது கோஷ்டி மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கல் மற்றும் சோடா பாட்டிலால் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் ஆர்.ஜி. ரத்தினத்தின் தங்கை கலாராணி, சரவணன் ஆகியோரும் ரித்தீஷ் எம்.பி.யின் ஆதரவாளர் 8-வது வார்டு கிளை செயலாளர் செல்லப்பாண்டியனும் காயம் அடைந்தனர்.

பெட்ரோல் குண்டுவீச்சு மாலையில் ரித்தீஷ் எம்.பி., முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனுடன் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தேர்தல் பணி குறித்து பேசி கொண்டு இருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டை ரித்தீஷ் எம்.பி. வீட்டில் வீசினர். மேலும் சோடாபாட்டில், கற்களை வீசினர். ரித்தீஷ் எம்.பி.யின் தந்தை குழந்தைவேலுவின் கார் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், சாயல்குடி தி.மு.க. பிரமுகர் ராமர் ஆகியோரின் கார்கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு- பதட்டம் ஏற்பட்டது. மோதல் தொடர்பாக காயம் அடந்த ஆர்.ஜி. ரத்தினத்தின் தங்கை கலாராணி ராமநாதபுரம் பி-1 போலீசில் புகார் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், ரித்தீஷ் எம்.பி., கார்மேகம், நகரசபை தி.மு.க. வேட்பாளர் நாக நாதசேதுபதி, தி.மு.க. துணை செயலாளர் அகமது தம்பு, அழகிரி உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரித்தீஷ் எம்.பி.யின் ஆதரவாளர் செல்லப்பாண்டியன், கொடுத்த புகாரின்பேரில் நகர தி.மு.க. செயலாளர் ஆர்.ஜி.ரத்தினம், மருமகன் திலீப்குமார், சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோதலில் மொத்தம் 100 பேர் மீது இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்- இன்ஸ்பெக்டர் தினகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அமெரிக்க கோர்ட்டு உத்தரவால் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு புதிய நெருக்கடி

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக, அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு கோர்ட்டுகளில் முப்படைகளின் தலைவர் என்ற முறையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

ஆனால், இந்த கோர்ட்டுகளில் இருந்து அனுப்பி வைக்கப்படும் சம்மனை பெற்றுக்கொள்ளாமல், இலங்கையின் அதிபர் மாளிகை அலுவலகம் திருப்பி அனுப்பி வந்தது.

இந்த நிலையில், இலங்கையில் இருந்து வெளிவரும் இரண்டு முன்னணி பத்திரிகைகளிலும், `தமிழ்நெட்' இணைய தளத்திலும் அந்த சம்மன் பற்றி முதல் பக்கத்தில் பிரசுரிக்க உத்தரவிட வேண்டும் என்று, கொலம்பியா கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழர்கள் சார்பில் ஆஜராகும் வக்கீல் புரூஸ் பெயின் யோசனைப்படி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்டு அதற்கான உத்தரவை நீதிபதி கோ டெல்லி பிறப்பித்தார்.

அதன்படி இலங்கையில் இருந்து வெளியாகும் இரு பத்திரிகைகளிலும், இணைய தளத்திலும் சம்மன் பற்றிய விவரங்கள் பிரசுரிக்கப்பட்டு உள்ளன. இதனால், இதுவரை சம்மனை புறக்கணித்து வந்த ராஜபக்சேவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

Mukkulathor Muzhakkam

Mukkulathor Muzhakkam, an album, was released by politician Subramania Swamy on 13th October, 2011 at the Thevar Arangam, T Nagar in Chennai. Kalaipuli S Dhanu received the first copy from him.



Karunaas has done the voice over for this album which is about Muthuramalinga Thevar and Mukkulathor Samugam. Professor Kavya Shanmugam has penned the lyrics.

Bala’s choice is a novel

Bala’s next film is based on a Malayalam novel, say our sources in Kollywood. The ace director is looking to direct a family drama this time and has already zeroed in on late actor Murali’s son Adharva.

This Malayalam novel that Bala is said to be eyeing has been translated in Tamil and the director wants to make a script out of it. He is now said to be working on recruiting the other cast and crew for this venture. An announcement from Bala’s side will be made very soon, adds our source.

Thursday, October 13, 2011

THEVAR STATUE


DEVARTV.COM

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு !!!

தமிழகத்தில் நல்லாட்சி தந்து கொண்டிருக்கும் அம்மாவின் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கின்றது.

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மு.கார்த்திக் அவர்களின் ஆணையின் படி வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு முழு ஆதரவு அளிப்பது என்றும், அணைத்து மாவட்டங்களிலும் நம்முடைய கட்சியின், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளித்து அவர்களுடைய மகத்தான வெற்றிக்கு அரும்பாடு படுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்...

இவண்
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி - தலைமையகம்.

Three-tier security for Thevar Jayanthi

RAMANATHAPURAM: The district administration has decided to enforce tight security measures for the Muthuramalinga Thevar Guru Pooja to be held for three days from October 28 at Pasumpon village near Kamuthi.

Followers of freedom fighter Muthuramalinga Thevar visit Pasumpon village every year to celebrate his birth anniversary and pay homage at his memorial.� Meanwhile, the district turned volatile following an incident at Paramakudi when large number of people were proceeding to pay their homage to Dalit Immanuel Sekaran at his memorial on September 11. Six persons were killed in police firing.

Therefore, the government had to make adequate security arrangements to ensure law and order during the Thevar Jayanthi celebrations at Pasumpon village. The district administration had decided to erect six-feet high steel barricades and wooden barricades around the helipad where the VVIPs will land.

Three-tier security will be in force at the village. The VVIPs will enter through a separate route on the left side of the memorial. There is no official information whether Chief Minister J Jayalalithaa will visit the memorial.

Meanwhile, District Collector Arun Roy and Kaliraj Maheskumar, SP, Jayaraman, DRO, and other officials visited the memorial on Wednesday and reviewed the security arrangements.� The Collector instructed the officials to complete the road renovation and other repair works before the Thevar Jayanthi celebrations.� A special medical team will be deployed near the memorial to attend to emergency cases. More than 10,000 police personnel will be deployed at the venue.� Usually, the Collector will address the officials at a meeting in Kamudhi. But this year, he gave all instructions to the officials at the memorial.

Wednesday, October 12, 2011

Thevar jayanthi: ADGP holds meeting

Additional Director General of Police (Law and Order) George addressed a meeting ahead of Thevar Jayanthi celebrations scheduled for October 30.

Officers from the southern districts comprising Superintendents of Police, Deputy Inspector General of Police and Inspector General of Police attended the meeting.

According to officials, the meeting discussed arrangements at Pasumpon where the guru puju is to be held, and the strength required by the district police in Ramanathapuram and Sivaganga. Besides, security required for some other districts also figured in the discussion.

Tuesday, October 11, 2011

தேர்தலன்று அரசு விடுமுறை: தமிழக அரசு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. அன்றைய தினங்களில் விடுமுறை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை தேர்தல் நடைபெறும் அக்டோபர் 17 மற்றும் அக்டோபர் 19ம் தேதியில் விடுமுறை வழங்கப்படும் என கூறியுள்ளது.

Monday, October 10, 2011

வடிவேல் சேர்ந்ததால் தி.மு.க. அழிந்தது:அன்னூரில் சிங்கமுத்து பிரசாரம்

வடிவேலு தி.மு.க.வில் சேர்ந்ததால் அக்கட்சி அழிந்து வருகிறது என்று சிங்கமுத்து தேர்தல் பிரசாரம் செய்தார். தமிழக உள்ளாட்சி தேர்தல் வருகிற 17 மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. கட்சித்தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர் சிங்கமுத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

அன்னூரில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அவர் தேர்தல் பிரசாரம் செய்த போது பேசியதாவது:- உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஓட்டுப் போட்டால் நலத்திட்டங்கள் தவறாமல் அனைத்து வீடுகளுக்கும் வந்து சேரும். தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் உள்ளாட்சி பொறுப்புக்கு வரும் தி.மு.க.வினர் பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்காமல் செய்து விடுவார்கள். தி.மு.க.வினர் செய்த 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால் உலக அளவில் தமிழனுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். கருணாநிதியை வடிவேலு 3 முறை சந்தித்ததால் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிவேலு நடிகர் அல்ல. தி.மு.க.வை அழிக்கவே அங்கு போய் சேர்ந்திருக்கிறார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் தான் உள்ளன. சட்ட சபை தேர்தலில் தி.மு.க. 250 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பேசியவர் தான் வடிவேலு.

கருணாநிதியை நம்பி ஊர் ஊராக பேசிய வடிவேலு இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் கடனாளியாகி உள்ளனர். மேற்கண்டவாறு சிங்க முத்து பேசினார்.

மதுரை வி.சி., மேயர்வேட்பாளர் விலகல்

மதுரை:மதுரை விடுதலைச் சிறுத்தைகள் மேயர் வேட்பாளர் மூ.பசும்பொன், உட்கட்சி பூசல் காரணமாக போட்டியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.சமூக நல்லிணக்க அணியை நடத்தி வந்த இவர், சில ஆண்டுகளாக இக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலராக இருந்தார். மேயர் தேர்தலில் போட்டியிடுமாறு தலைமை கேட்டுக் கொண்டதால், போட்டியிட்டார். நேற்று முன்தினம் மதுரையில், திருமாவளவன் பிரசாரம் செய்தபோது, அதில் பங்கேற்காமல் பசும்பொன் புறக்கணித்தார்.
நமது நிருபரிடம் பசும்பொன் கூறியதாவது :பரமக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து, செப்., 20ல் மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தை முக்கிய நிர்வாகி ஒருவர், பசும்பொன் தேவர் குறித்து சில கருத்துக்களை கூறினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க, திருமாவளவனிடம் கூறினேன். இதுவரை அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.நேற்று முன்தினம் அவர் சார்ந்த சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திருமாவளவன், பிரசாரம் செய்தார். அனைத்து மக்களும் வசிக்கும் பகுதிகளுக்கு வருமாறு அழைத்ததற்கு, "உங்கள் ஓட்டுகளை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்றார். இதனால் போட்டியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகி உள்ளேன். இதுகுறித்து தேர்தல் கமிஷன், கலெக்டர் சகாயத்திற்கும் தந்தி அனுப்பி உள்ளேன், என்றார்.

Sunday, October 9, 2011

KARTHIK SON GOWTHM

கொழும்பு நகரை இழந்த்தது ராஜபட்ச கட்சி

கொழும்பு: இலங்கை உள்ளாட்சி தேர்தல்களில் பெரும்பாலான இடங்களில் ராஜபக்சே கட்சி வெற்றி பெற்ற போதிலும், தலைநகர் கொழும்பு நகரசபை தேர்தலில் தோல்வியை தழுவியது.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் உள்ளாட்சி தேர்தல் பல கட்டங்களாக நடந்து வருகிறது. இதில், அதிபர் ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. நேற்று இறுதிக்கட்ட தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், அதிபர் ராஜபக்சேயின் கட்சி கூட்டணி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

23 இடங்களில் 21-ஐ ராஜபக்சே கட்சிக் கூட்டணி பிடித்தது. எதிர்க்கட்சி ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு நகரசபையை மட்டும் தக்க வைத்துக் கொண்டது. ஆனால், கண்டி நகர சபையை இழந்தது. 60 ஆண்டு கால உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில் இங்கு இந்தக் கட்சி முதன்முறையாகத் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராசபட்ச கட்சிக் கூட்டணியில் உள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனை நகர சபையில் வெற்றி பெற்றது.

நேற்று நடந்த இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் வடக்கு கொழும்பு அருகே கோதிகாவத்தா என்ற இடத்தில் வன்முறை வெடித்தது. எதிர்க்கட்சியினர் துப்பாக்கியால் சுட்டதில் அதிபர் ராஜபக்சவின் ஆலோசகர் பாரத லட்சுமண் பிரேமசந்திரா, அவரது மெய்காப்பாளர் பிரேமசந்திரா, கட்சி தொண்டர்கள் இருவர் உயிர் இழந்தனர்.

Saturday, October 8, 2011

இமானுவேல் சேகரனை கொன்றது யார்?

காந்திஜி அந்நிய துணி எதிர்ப்பை மக்களிடம் கொண்டுசென்ற அதே கால கட்டத்தில் அரிஜன மக்களை ஆலயத்திற்குள் அனுமதி மறுக்கும் உயர் சாதியினர் செயலை கண்டித்து, "அரிஜனங்கள் ஆலய பிரவேசம் செய்ய வேண்டும், அதற்கு தேச பக்தர்கள் வழிவிடவேண்டும்" என்று முழங்கினார். அதனால் இந்தியா முழுவதும் தேச பக்தர்கள் அரிஜன மக்களை ஆலயத்திற்கும் கொண்டு செல்லும் போராட்டத்தை ஆரம்பித்தனர்.


மதுரையில் தேசபக்தர் வைத்தியநாதையர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் அரிஜன மக்களை அழைத்துச் செல்ல எண்ணினார். இதனை அறிந்த சனாதனிகள் எதிர்க்க திட்டமிட்டனர். இந்த எதிப்பை சமாளிப்பதற்காக, வைத்தியநாத ஐயர், மதுரை எட்வர்டு ஹாலில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிற்கு திட்டமிட்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தேவரை இந்த போராட்டம் வெற்றி பெற ஒத்துழைக்க வேண்டினார். பசும்பொன் தேவரும் அதற்கு உறுதியளித்தார்.

இதை அறியாத சனாதனிகள், "மீனாட்சி கோவிலில் தரிசனங்களுடன் நுழைந்தால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும்" என்ற அச்சுறுத்தல் நோட்டிசை வெளியிட்டனர். இதற்கு பதிலாக தேவர், "ஸ்ரீ வைத்தியநாத ஐயர், மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் அரிஜனங்களை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறபோது சனாதனிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ரவுடிகள் கழகம் விளைவிக்கப் போவதாக கேள்விப்படுகிறேன். ஹரிஜனங்களை பயங்கரமான ஆயுதங்களால் தாக்கி, அங்கயற்கண்ணி ஆலயத்தை ரத்தக்கறை படியச் செய்யப்போவதாக எல்லாம் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. சனாதனிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த ரவுடி கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாத ஐயர் அரிஜனங்களை அழைத்து வருகிறபோது அடியேனும் வருவேன்.ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக் கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்". என்றி துண்டுப் பிரசுரம் வெளியிட்டார்.

1939 ஜூலை 8 அன்று அரிஜன மக்களுடன் வைத்தியநாத ஐயர் சென்ற போது, அவருடன் பசும்பொன் தேவரும் சென்றார். ஆலய வாசலில் பசும்பொன் தேவரின் பற்றாளர்கள் எதற்கும் தயார் நிலையில் நின்றார்கள். ஆனால் எதிர்ப்பு தெரிவித்த சனாதனிகளும், அவர்களுடைய ரவுடிகளும் அந்த திசைப்பக்கமே தலை காட்டாமல் தப்பித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்த அரிஜனங்கள் அங்கயற்கண்ணி மீனாட்சி தொழுது மகிழ்ந்தனர். இந்நிகழ்வின் மூலமே தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக சிங்கமே வந்துவிட்டது என்பதை எதிரிகள் உணர்ந்து கொண்டார்கள்.

1954 மார்ச் மாத்தில், அன்று "சென்னை ராஜதானி" என்று அழைக்கப்பட்ட தமிழக சட்ட மன்றத்தில், " அரிஜன முன்னேற்றம்" பற்றிய விவாதம் நடந்தி. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு மார்ச் 24 அன்று தேவர் பேசியது கவனத்தில் கொள்ளத்தக்கது ஆகும். அந்த உரையில்,

"ஆதி காலத்தில் தொழிலின் பேரால் ஜாதி வகுக்கப்பட்டது எனபது தான் தமிழ்ச் சான்றுகளும், சாஸ்திரங்களும் கூறுகின்ற உண்மை. அதற்கு உதாரணம் ஆண்களை அழைக்கின்ற காலத்தில் ஒரே பெயர் பலருக்கு இருக்கிறது என்பதன் காரமமாக, ஒரே பெயருடைய பலரை கூப்பிடும் பொழுது 'இன்ன தேவர்', ' இன்ன செட்டியார்', 'இன்ன ஐயர்' என்று பெயர் வாய்த்த தமிழ் பெரியோர்கள், பெண்களை அழைக்கும் போது அந்த பெயரின் கடைசியில் வால் வைத்து கூப்பிடாமல், அதாவது, 'இன்ன பிராமனத்தி', 'இன்ன செட்டிச்சி' என்று கூப்பிடாமல், அனைவரையும், 'இந்த அம்மாள்', 'அந்த அம்மாள்' என்று கூப்பிடுவதுதான் பழக்கமாக இருந்து வருகிறது. இது நீண்ட காலமாக இந்த நாட்டில் அனுஷ்டித்து வருகிற சித்தாந்தமாகும். அப்படி இருக்கும் போது ஆண்களுக்கு மாத்திரம் தொழிலின் பெயரை பின்னால் வைத்து அழைத்து, ஒரே பெயருடைய பல நபர்கள் தொழிலின் பெயரால் வித்தியாசப்படும் பொருட்டு செய்த சகாயமாகும்'. என்றும் மனிதனில் ஏற்ற தாழ்வுகள் இல்லை என்று குறிப்பிட்டு விட்டு, பின்வரும் உதாரணத்தையும் சொல்கிறார்; அடியேனுடைய உடம்பில் இரண்டு கைகள் இருக்கிறது.

ஒன்று வலது கரம்; இது உண்ணவும், என்னுடைய எண்ணத்தை எழுத்து மூலமாக வெளிப்படுததவும் பயன்படுகிறது. இன்னொன்று இடது கரம், உடம்பிலிருந்து வெளிவரும் அசுத்தங்களை அப்புறப்படுத்தி, உடம்பை தூய்மையாக வைத்துக்கொள்ள பயன்படுகிறது.

ஆனால், இறைவனையோ, பெரியவர்களையோ வணங்குகிறபோது, இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்துதான் வணங்க வேண்டும். இதுபோல அனைத்து சமுதாய மக்களும் இரண்டு கைகள் போல இணைந்தால் தான் சமுதாயத்தில் மக்கள் அனைவரும் செம்மையாக வாழ்த்திட முடியும்."

1962 ல் பொதுத் தேர்தல் வந்தது. 14.01.1962 ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் தேவரும் இராஜாஜியும் ஒரே மேடையில் தோன்றினார்கள். "நீண்ட நாட்களாகிவிட்டன அடியேன் உங்களின் ஒருமிப்பு சக்தியில் நின்று பேசி" என்று தனது உறைய ஆரம்பித்த தேவரின் பேச்சில் உதிர்ந்த முத்துக்கள் பின்வருமாறு.

பதவியை நான் நினைத்தவனுமல்ல; அப்படி நினைத்திருந்தால் அது என்னை பொருத்தவரையில் மிக எளிது.

தேசத்திடம் பலனை எதிர் பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவனில்லை நான். தேசத்திற்கு இயன்றவரை கொடுத்து சேவை செய்யும் கூட்டத்தைச் சேர்த்தவன் நான்.

நான் யாரையும் எவரையும் எதிரியாக கருதுபவனும் அல்ல. தவறுகளை கண்டிக்கிற என்னை யாரேனும் எதிரியாக பாவித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

நான் பேசுவது, எழுவது சிந்திப்பது சேவை செய்வது எல்லாமே தேசத்திற்காகவேயன்றி எனக்காக அல்ல.

நியாயத்திற்காக எதிர் நீச்சல் அடிப்பதால் காங்கிரசஸ்காரர்களின் எதிர்ப்பிற்கு நான் ஆளாகி இருக்கிறேன்.

18 ஆயிரம் ஓட்டுகளை மட்டும் கொண்ட என் வகுப்பினர் வாழும் தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டுக்களை வாங்கும் நான் எப்படி வகுப்புவாதியாக இருக்கமுடியும்.

தம்மிடம் உள்ள வகுப்பு வாதத்தை மறைக்க பிறரை வகுப்புவாதி என்று கூறுவோரை மக்கள் தெரிந்து கொள்ளாமல் இல்லை.

எதிர்க்கட்சி என்பது ஜனநாயகத்தின் இரண்டு கண்களில் ஒன்று. இரு கண்களும் சம சக்தியோடு செயல்பட்டாலன்றி ஜனநாகயம் வலிமையோடு நடக்க முடியாது.

உங்கள் தலைவிதியை ஐந்து வருடங்களுக்கு ஒப்புவிக்கும் ஒரு கடமை அல்லவா ஓட்டுபோடுவது. காசுக்காக காத்திருக்காமல் அவரவர் வசதி, சக்திக்கு தக்கவாறு இரண்டோ மூன்றோ எடுத்துப்போய் செலவிட்டு ஓட்டுப்போடுங்கள். அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம்.

மேற்கண்டவாறு மணிக்கணக்கில் தனது பேச்சாற்றலால், மக்களின் உளங்களை தன் பால் ஈர்த்த தேவர் அவைகளின் கடைசி பேசும் அதுவே. ஆம் அதன் பின்னர் அந்த மனிதருள் மாணிக்கம் விண்ணகம் செல்லும் வரை எங்கும் பேசவில்லை.

பசும்பொன் தேவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதும், அவருக்கு வாரிசு இல்லை என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் எழுதி வைத்த இனாம் சாசனம் பற்றி எத்தனை பேர் அறிவர்?

1960 ல் புளிச்சிகுளத்தில் தனக்கு சொந்தமான எஸ்டேட்டில் தங்கி இருந்த தேவர், திருச்சுழி பதிவாளரை, தம் இருப்பிடத்திற்கு அழைத்து ஓர் இனாம் சாசனத்தை பதிவு செய்தார். அதில் தன்னுடைய சொத்துக்களை 17 பங்காகப் பிரித்து அவற்றில் ஒரு பாகத்தை தனக்கு வைத்துக்க் கொண்டு மீதி 16 பங்கை 16 பேருக்கு எழுதி வைத்தார்.அதில் பசும்பொன்னை சேர்ந்த அரிஜன வகுப்பில் பிறந்த வீரன், சந்நியாசி, என்ற இருவருக்கும் இரண்டு பாகங்களை ஒதுக்கி பசும்பொன் தேவர் பத்திரப் பதிவு செய்தார். ஆம்! தன்னுடைய சொத்துக்களை அனுபவிக்கும் உரிமையில் இரண்டு அரிசனங்களுக்கும் எழுதி வைத்த பெருந்தகையாளர் பசும்பொன் தேவர்.

பல தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், தேவர் திருமகனாரின் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி இருந்து தங்களது கல்வி உணவு உடை தேவைகளை சிறப்பாக பெற்றிருக்கிறார்கள். தேவர் திருமகனாரின் வீட்டின் சமையல் கூடத்தில் அவருக்கு உணவு படைத்ததவரும் ஒரு தாழ்த்தப்பட்டவரே. அந்த அளவிற்கு தேவர் திருமகனார் ஏழை எளிய மக்களை நேசித்தவர். தீண்டாமை என்பது நாம் செய்யும் பாவம் என்ற மகாத்மா காந்தியடிகளின் சொல்லுக்கு ஏற்ப, நான் தமிழன், நான் இந்தியன் என்று முழக்கமிட்டவர் தேவர்.

பசும்பொன் தேவர் அரிஜனகள் மீது கொண்டிருந்த அன்பை, அதுவும் பசும்பொன் தேவரை எதிர்த்து அரசியல் நடத்திய காங்கிரஸ் கட்சியில் இருந்த அதுவும் நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்த ஒருவர் சொல்லுவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

1952 ல் பசும்பொன் தேவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ஆர்.எஸ். ஆறுமுகம் சட்டமன்ற உறுபினராக இருந்தார். 1957 ல் நடந்த தேர்தலின் போது நாடாளுமன்ற இரட்டை தொகுதிக்கு பொதுத் தொகுதியில் பசும்பொன் தேவர் போட்டியிட்டார். தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில் தேவர் தம் கட்சின் சார்பில் ஒருவரை நிறுத்தினார். பசும்பொன் தேவரை எதிர்த்தும், தாழ்த்தப்பட்டோருக்கான பசும்பொன் தேவரின் வேட்பாளரை எதிர்த்தும், காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தியது. அப்படி தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில் பசும்பொன் தேவரின் வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் கட்ச்யின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் ஆர்.எஸ். ஆறுமுகம். இந்த ஆறுமுகம் சொல்கிறார்; முதுகுளத்தூரை அடுத்துள்ள தெற்கு காக்கூரில் தேவர் பேசிக்கொண்டு இருந்த போது ஒருவர் வந்து ஒரு துண்டு சீட்டை கொடுத்தார். அதை தேவர் பார்த்துவிட்டு பையில் போட்டுக்கொண்டார்.

மற்றொருவர் இன்னொரு சீட்டைக் கொடுத்தார். படித்துவிட்டு கையில் வைத்துக் கொண்டே பேசினார். கூட்டம் முடியும் நேரத்தில் ஒருவர் எழுந்து, ஆர்.எஸ். ஆறுமுகத்தைப் பற்றி பேசுங்கள் என்றார். தேவர் நிதானமாகக் கூறினார்; 'என்னிடம் கொடுக்கப்பட்ட இரண்டு சீட்டுகளிலும் ஆர்,எஸ் ஆறுமுகத்தை பற்றி பேசுங்கள் என்று தான் இருந்தது. நீங்கள் வற்புறுத்துவதால் நான் அவரைப்பற்றி கூறுகிறேன். நான் ஆர்.எஸ் ஆறுமுகத்தை நன்கு அறிவேன். ஆர்.எஸ் என்றே அவரை அழைப்பேன். அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். நல்லவர். நல்ல பண்பாளர். சிறந்த நண்பர். நமது குடும்பர் இனத்தை சேர்ந்தவர். எனது சகோதரனை போன்றவர்' என்று கூறிவிட்டு தனது பேச்சை முடித்துவிட்டு போய்விட்டார். அதுவும் அரிஜன மக்கள் அவரை சூழ்ந்து நின்று கொண்டனர். நான் அவ்வூர் போவதாக திட்டமிட்டு இருந்தேன். அவ்வூர் மக்கள் எனக்காக மாலைகள் வாங்கி வைத்து இருந்தனர். அவற்றை எல்லாம் தேவருக்கே அணிந்து மகிழ்ந்தனர்.

சிறிதுநேரம் கழித்து நான் போனேன். நடந்ததை கூறினார்கள். எனக்கு போட மாலை இல்லையே என்று வருத்தப்பட்டார்கள். ' நீங்கள் வருத்தப்படவேண்டாம். எனக்காக வாங்கிவந்த மாலையை தேவருக்கு அணிவித்ததற்காக நான் ஆனந்தப்படுகிறேன். நான் எதிர் கட்சியிலிருந்தும் என்னை பற்றி அப்படிக் கூறிய அந்த மகானுக்கு மாலை அணிவித்ததே நமக்கு பெருமை' என நான் கூறிக்கொண்டிருந்த போதே, ஒரு தேவர் மாலையோடு ஓடிவந்தார். இது தேவருக்கு போட்ட மாலை. அவரிடமிருந்து தான் நான் வாங்கி வந்தேன். நீங்கள் வந்திருக்கிறீர்கள் . அகவே, உங்களுக்கு அதை சூடுகிறேன்' என்று சூதுவாது இல்லாமல் மாலை போட்டார். நானும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன்.

ஆம்! அரிஜன வகுப்பை சேர்த்த பசும்பொன் தேவரை எதிர்த்து அரசியல் நடத்திய ஆர்.எஸ். ஆறுமுகம் சொல்லிய இந்த நிகழ்விலிருந்து பசும்பொன் தேவரின் சாதி பேதமற்ற உள்ளதை அறியலாம்.

தேவர் திருமகனார் தனது பெயருக்கு ஏற்ற படி தேவர் இனத்திற்கு மட்டும் உரியவர் என்று நினைத்திருந்தனர் சிலர். ஆனால் தேவர் திருமகன் தமிழகத்தின் தங்கம், எல்ல இனத்திற்கும் பொதுவானவர் என்பதை பின்வரும் சம்பவம் விளக்கும்.
இராமநாதபுரத்தில் ஜாதிக்கலவரம் மூண்ட போது மதுரை திலகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தேவர் திருமகன் அவர்கள், ஜெயராம் செட்டியார், எம்.எல்.சி. அவர்கள் காரில் கிளம்பிய போது, மதுரை கோரிப்பளையத்தில் வைத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் ஓடிவந்து, நாடெங்கும் கலவரம் மூண்டுவிட்டது, இந்த நேரத்தில் உங்களை கைது செய்தால், விபரீத விளைவுகள் ஏற்படாதா? என்று கேட்டார். அப்போது தேவர், "இது அரசியல் சூழ்ச்சி, இதை புரிந்து கொள்ளாமல் யாரேனும் ஏழை அரிஜன மக்களை துன்புறுத்துவார்களேயானால், அவர்கள் என்னுடைய நெஞ்சைப் பிளந்து இரத்தத்தை குடிப்பதற்க்குச் சமமாகவே கருதுவேன். மேலும் எல்லோரும் அமைதி காக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டு காவல் துறை வேனில் ஏறினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையின் கீழ் அகில பாரத பார்வர்டு ப்ளாக் கட்சியின் முன்னோடும் பிள்ளையாக விளங்கியவர். அந்த வகையில் அவர் ஒரு தேசியத் தலைவராகத் திகழ்ந்தார். தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் பல்வேறு தொழில்களின் நிமித்தம் வசித்து வந்த தமிழர்கள் பலரும் தேசிய ஆவேசத்துடன் சுபாஷின் இந்திய தேசிய ராணுவத்தில் சேருவதற்குக் காரணமாக இருந்தவர் பசும்பொன் தேவர். அந்த விதத்தில் கிழக்கு ஆசியத் தலைவர் என்கிற தகுதிக்கு உரியவரானவரும்கூட. அவர் மீது தலித்துகளின் விரோதி என்னும் பழியைச் சுமத்தி, இம்மானுவேல் என்கிற கிறிஸ்தவ தலித்தைக் கொலை செய்யத் தூண்டினார் எனக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தது அன்றைக்கு காமராஜர் தலைமையில் இருந்த தமிழக அரசு. பசும்பொன் தேவர் தண்டனை பெறுவதற்கு ஏற்ப அரசால் வழக்கு ஜோடிக்கப்பட்டது மட்டுமின்றி, முதுகுளத்தூரில் கலவரத்தை அடக்கும் சாக்கில் பல தேவர்களைக் காவல் துறை நிற்கவைத்துச் சுட்டுக்கொன்ற நிகழ்ச்சியும் நடந்தது. தேவர் சமூகத்தின் மீது மிகக் கொடிய அடக்குமுறையும் செலுத்தப்பட்டது. தேவர் தலித் மக்களிடையே பகைமை தோற்றுவிக்கப்பட்டது!

இம்மானுவேல் கிறிஸ்தவச் சர்ச்சுகளால் தூண்டப்பட்டு ஹிந்து தலித்துகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கும் ஏவுகணையாகச் செயல்பட்டு, பலிகடாவானவர். பிற்காலத்தில் மீனாட்சிபுரம் இந்து தலித்துகள் முகமதியராக மாற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டதற்கு அது ஒரு முன்னுதாரணம்!

இதன் பின் விளைவாகத்தான் தென் கிழக்கு ஆசியத் தலைவர் என்கிற உயர் தகுதியில் இருந்த பசும்பொன் தேவர் காமராஜர் ஆட்சியால் ஒரு கொலை வழக்குக் குற்றவாளியாகச் சிறைவைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். ஹிந்து தலித்துகளைத் தூண்டிவிட்டு சங்கடத்தில் ஆழ்த்திப் பிறகு அவர்களை ஒட்டுமொத்தமாகக் கிறிஸ்தவர்களாக மாற்றும் சதித் திட்டத்தை முறியடிக்க முற்பட்டதுதான் பசும்பொன் தேவர் செய்த மாபெரும் செயல்!

தேவர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான ஜாதிக் கலவரமாக அது தடம் புரண்டு வருந்தத்தக்க விளைவுகளை உண்டாக்கிவிட்டது. இந்த அடிப்படை உண்மையை காமராஜர் அரசு சாமர்த்தியமாக மறைத்துவிட்டது. பசும்பொன் தேவர் தேவமாரின் ஜாதித் தலைவராகக் குறுக்கப்பட்டார்.

இவ்வளவுக்கும் காமராஜருக்கு முதல் முதலில் விருதுப்பட்டி என்கிற பிற்கால விருதுநகரின் நகராட்சித் தேர்தலில் நிற்பதற்கான தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தவரே பசும்பொன் தேவர்தான்! ஒரு ஆட்டை வாங்கி காமராஜர் பெயரில் அதற்காக நகராட்சிக்கு வரி செலுத்தி அப்படியொரு தகுதியை காமராஜர் பெறச் செய்தார், பசும்பொன் தேவர்.

பிற்காலத்தில் காமராஜர் மாநில முதல்வர் பதவியில் அமரும் அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையில் பசும்பொன் தேவர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த நிகழ்ச்சியை மிகவும் அலட்சியமான தொனியில் பகிரங்கப்படுத்தியதைக் காமராஜரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பதிலுக்குப் பசும்பொன் தேவரை வீழ்ச்சியடையச் செய்வதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்;இம்மானுவேல் கொல்லப்பட்டது அவருக்கு வசதியாகப் போயிற்று!

ஒரு தாழ்த்தப்பட்ட அன்பரின் ஐயா பற்றிய காணொளி:
http://www.youtube.com/watch?v=dFLMkY0FLVU

ஆமாம்... இமானுவேல் சேகரனை கொன்றது யார்?

செட்டியார் இனத்தை சேர்ந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட காரணத்தால், அப்பெண்ணின் உறவினர்களின் தூண்டுதலின் பெயரால் மறவர்களால் கொல்லப்பட்டவர்தான் இந்த இமானுவேல்... ஒரு கும்பக்கார பெண்ணிடம் (கரகாட்டம் ஆடுபவர்) தொடுப்பு வைத்திருந்ததாகவும் அதனால் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைக்காகவும் இம்மானுவேல் சேகரனின் மனைவியே பரமக்குடி காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக புகார் கொடுத்து இருந்திருக்கின்றார். காவல்நிலையப் புகார் ஆவணமாக உள்ளது. உண்மை வரலாற்றை அவர்கள் ஊர் பக்கம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் அங்கே இருந்த பிராமிணர் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு அதற்கான தொகை தராமல்தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்ததும் பலருக்கு தெரிந்திருக்கின்றது. அவரது அண்ணன் துரைசாமி என்பவர் இமானுவேலுக்கு புகைப்படமே இல்லை, இப்பொழுது இருப்பது வரைந்த படமே என்கிறார். இராணுவத்தில் சேர்ந்திருக்கின்றாரே அந்த புகைப்படம் இருக்குமே என்று நாம் நமக்குள் மட்டுமே கேள்வி கேட்டுக்கொள்ள முடிகிறது. சிலர் அவர் இராணுவத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியில் வந்தவர் என்றும் உரைக்க கேட்கின்றோம். ஐம்பது ஆண்டுகள் கடந்து திடீரென்று நினைவு நாள் கொண்டாடப்படும் அரசியலும், புது புது வரலாற்று ஆக்கங்களும், அவற்றிற்கு மத சமூக அடையாளங்கள் அடிப்படையில் ஆதரித்து வரவேற்பதும் நமக்கு புரியாமல் இல்லை.

ஆக மொத்தத்தில் காமராஜ் நாடார் விதைத்த காங்கிரஸ்-பார்வர்ட் பிளாக் கட்சி மோதல், மறவர்-பள்ளர் சண்டை என பெயர் சூட்டப்பட்டு சாதி சண்டையாக உருவெடுத்து இன்று தேவர்-தலித் சண்டையாக வளர்ந்து நிற்கிறது. ஒரே மண்ணில் அதுவும் வானம் பார்த்த பூமியில் இன்றும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இருக்கின்ற இரு சமூகங்களின் வாழ்வு திசை மாறி, தொழிற்சாலைகள் எதுவும் இன்றி, கருவேல் மரம் வெட்டி பிழைப்பு நடத்தும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அருகில் உள்ள விருதுநகரும், தூத்துக்குடியும் எப்படி எதனால் முன்னேறியதோ ஆனால் முகவை மாவட்டத்தில் எந்த தொழிலும் அரசால் முன்னெடுக்கப்படவில்லை என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை. சில பல அரசு வேலைகளும், வெளிநாட்டுப் பயணங்களும் இவர்களுக்கு இன்று சாத்தியப்பட்டிருக்கின்றது. ஆனால் ஒற்றுமையைத் தான் காணோம்.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவரிடம் ஒரு புகைப்படம் கூட இல்லை என்பது தான் உண்மை. அவரது அண்ணன் துரைச்சாமி என்பவர் தான் "அவனுக்கு ஒரு போட்டோ கூட கிடையாது, இப்போது இருப்பதெல்லாம் அனுமானத்தில் வரைந்தது தான்" என்று கூறியிருக்கின்றார். ஒரு புகைப்படம் கூட இல்லாத சமீபத்தில் வாழ்ந்த ஒருவரை தேசியத் தலைவர் என்றும், இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், மக்களுக்காக போராடி சிறை சென்றவர் என்றும், பலமுறை போராட்டங்கள் நடத்தியவர் என்றும் கதை கட்டுவதை, புத்தகம் வெளியிடுவது, குருபூஜை கொண்டாடுவது, சமுதாய விடிவெள்ளி என்றழைப்பது, போராளி என்று பரப்புரை செய்வது, தேவர் ஐயாவின் அடைமொழிகளை இவருக்கு சூடி எதிர்ப்பு நிலைப்பாடு எடுப்பது போன்றவற்றை அறிவிற் சிறந்த சான்றோர் எங்ஙனம் எடுத்துக் கொள்வர் என்பதும் நமக்கு புரியாமல் இல்லை. அரசியல் சூழ்ச்சிக்கு பலியான முகவை மக்கள் இன்று வரை அதற்கு பலியாடாய் பலியாவதற்கு தற்போது நடந்துள்ள பரமக்குடி கலவரம் ஒரு கொடூரமான எடுத்துக்காட்டு. வரலாற்றில் சுவடு இல்லை என்பதற்காக உழைக்கும் மக்கள் இப்படி துவேசத்தால் தூண்டப்பட்டு தவறான பாதையில் செல்வது சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கவே காரணமாகும் என்பதில் ஐயமில்லை.

இம்மண்ணின் மைந்தர் என்ற முறையில், மக்களாட்சி அடிப்படையில், ஒட்டு மொத்த நாட்டு முன்னேற்ற அடிப்படையில் எல்லோரும் முன்னேறுவோம்; உண்மை உணர்வோம்; சமூக துவேசம் தவிர்ப்போம்; பிறந்த பொன்னாடும், தகைமைசால் தாய்மொழியும், சமூக அமைதியையும் காப்போம்!

THANX : DEVARTV.COM