Monday, October 31, 2011

போலீசாருடன் வாக்குவாத

காரியாபட்டி : திருச்சுழி அருகே உள்ள செம்பொன்நெருஞ்சியை சேர்ந்த சிலர், மதுரையில் உள்ள மூக்கையாத்தேவர் சிலைக்கு சென்றுவிட்டு ஜோதியுடன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவுக்கு சென்றனர். காரியாபட்டியிலிருந்து பி.புதுப்பட்டி, திருச்சுழி வழியாக பசும்பொன்னிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வந்தவர்கள் எங்கள் ஊர் இப்பகுதியில் இருப்பதால், இந்த வழியாக செல்ல அனுமதிக்க வேண்டும் என ஒரு மணி நேரமாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டனர். காரியாபட்டியில் நான்கு ரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அருப்புக்கோட்டை வழியாக செல்வதாக கூறி கலைந்து சென்றனர்.

No comments: