Sunday, October 30, 2011

சென்னை நந்தனம் தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு எம்.பி., சற்குண பாண்டியன், ஜெ.அன்பழ கன் எம்.எல்.ஏ. உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார், வேலுதேவர், சித்ராகிருஷ்ணமூர்த்தி, ராமசாமி. முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், நாச்சிகுளம் சரவணன், ரஞ்சன்குமார், முத்தமிழ் வைரராஜு, கலியமூர்த்தி, ராஜா, கண்ணன், தமிழக காங்கிரஸ் மாநில செயலாளர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், வக்கீல் முத்துராமலிங்கம், கராத்தே சண்முகவேல், தேவேந்திரன், கிக்பாக்சர் ராஜா உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

பா.ம.க. சார்பில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி, ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் ஜமுனா கேசவன், கன்னியப்பன், ஏழுமலை ஆகியோரும், பாரதீய ஜனதா சார்பில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல. கணேசன், தமிழிசை சவுந்தர் ராஜன், வானதி சீனிவாசன் ஆகியோரும் மாலை அணி வித்தனர்.

நடிகர்கள் விவேக், கர்னாஸ், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் சேக்தாவீது, அஷ்மத்துல்லா, தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரிஅருண், லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர், நிர்வாகிகள் எம்.எம்.ஆர்.மதன், கருணா, ராஜசேகர், ராமு, சுனில், வைத்தியநாதன் ஆகியோரும் மாலை அணி வித்தனர்.

சென்னை மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் தரமணி பன்னீர்செல்வம், நிர்வாகிகள் சந்திரபிரகாஷ், ஜெயராமன், மகளிர் அணி சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அகில இந்திய முக்குலத் தோர் பேரவை தலைவர் முருகவேல், பாலதண்டாயுத பாணி, பார் கவுன்சில் தலைவர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்தனர். மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் தியாகராஜன், பெரியசாமி, பாண்டியன், லிங்கம், பிரபு, பெரியதுரை, திருநாவுக்கரசு உள்பட மலர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியையொட்டி ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால் குடம் எடுத்து வந்தனர்.

No comments: