Monday, October 31, 2011

உசிலம்பட்டி கல்லூரி மாணவர்கள் ஜோதி ஏந்தி தொடர் ஓட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மாணவர்கள் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தை நோக்கி ஜோதி ஏந்தி தொடர் ஓட்டம் மேற்கொண்டனர் .
உசிலம்பட்டி ஐந்து கல் ராந்தாவில் உள்ள தேவர் சிலை முன் சிறப்பு பூஜையை பாரதீய பார்வர்டு பிளாக் நிறுவனத் தலைவர் முருகன்ஜீ நடத்தினார்.
ஜோதி ஏந்தி தொடர் ஒட்டத்தை கல்லூரி முதல்வர் என்.பாலுச்சாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கள்ளர் கல்விக் கழகத் தலைவர் எஸ்.மாசாணம் முன்னிலை வகித்தார். கல்லூரிப் பேராசிரியர்கள் அக்கினி, விஜயன், ராமன், சுப்புராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர் குபேந்திரன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பி.கே.மூக்கையாத் தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து உலக சமாதானம் குறித்து சபதம் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஜோதி ஏந்தி செக்கானூரணி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து அய்யணன் அம்பலம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் பசும்பொன் தேவர் நினைவிடம் சென்றனர்.

No comments: