Sunday, October 30, 2011

பசும்பொன்னில் குருபூஜை துவக்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை இன்று காலை துவங்கியது. அவரது நினைவிடத்தில் இன்று அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்துகின்றனர். மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பல்வேறு அமைப்புகள் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. பொதுமக்களும் பெருமளவில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாலை நடக்கும் அரசு விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்கின்றனர். மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு அமைச்சர்‌ செல்லூர் ராஜூ மற்றும் தி.மு.க., பொருளாளர் மு.க.,ஸ்டாலின் மலர்மாலை அணிவித்தனர்.

No comments: