Monday, October 31, 2011

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர்: திருநாவுக்கரசர் சபதம்

கமுதி : ""நான் அமைச்சராக இருந்தால் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைக்கும் கோப்பில் உடனடியாக கையொப்பமிடுவேன்,'' என, முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் கூறினார். கமுதி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அவர் கூறியதாவது: மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை வைக்க தமிழக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தி பேசுவோம். நான் அமைச்சராக இருந்தால் உடனடியாக பெயர் வைக்கும் கோப்பில் கையொப்பமிடுவேன். உள்ளாட்சி தேர்தலில் காங்., பெரும் தோல்வி அடைந்துவிட்டது என கூறுகின்றனர். காங்., பல இடங்களில் மூன்றாம் இடம் வந்துள்ளது. பொதுவாகவே உள்ளாட்சி தேர்தல் ஆளும்கட்சிக்கு சாதகமாகவே இருக்கும். தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து காங்., முடிவு செய்யும்,'' என்றார்.

No comments: