Monday, October 31, 2011

பெயர் வைப்பதில் கருணாநிதி ஏமாற்றிவிட்டார் ஜெ., நிறைவேற்றுவார்: டாக்டர் சேதுராமன்

கமுதி : ""மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்காமல் கருணாநிதி ஏமாற்றிவிட்டார். ஆனால் ஜெ., அதை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது'' என, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் கூறினார். கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் அவர் கூறியதாவது: அடுத்தாண்டு 50வது குருபூஜை விழாவின் போது கும்பாபிஷேகம் நடத்தி மேலும் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜெயலலிதா வந்தபோது தேவர் நினைவு இடத்தில் தங்க கவசம் வைப்பதாக கூறினார். அதை நான் மீண்டும் முதல்வரிடம் ஞாபகப்படுத்துவேன். அடுத்தாண்டு கும்பாபிஷேகத்திற்கு முன்பாக ஒரு நிகழ்ச்சி நடத்தி தங்ககவசம் வைக்க ஏற்பாடு செய்யப்படும். மதுரை விமான நிலையத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பெயர் வைக்க உறுதியளிக்கப்பட்டது. இதற்காக ஐந்து முறை போராட்டம் நடத்தி சிறை சென்றோம். ஆனாலும் கருணாநிதி நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டார். அவர் கனிமொழியை விடுதலை செய்வதில்தான் அதிக அக்கறையுடன் உள்ளார். முதல்வர் ஜெ., தங்க கவசம் வைத்து நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது, என்றார். பொது செயலாளர் இசக்கிமுத்து உட்பட கட்சியினர் உடனிருந்தனர்.

No comments: