Tuesday, October 4, 2011

செங்கோட்டை நகராட்சி வார்டு கவுன்சிலராக அமைச்சர் செந்தூர் பாண்டியன் மகன் போட்டியின்றி தேர்வு

செங்கோட்டை நகராட்சி பகுதியில் 24 வார்டுகள் உள்ளன. 10வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு அமைச்சர் செந்தூர்பான்டியனின் மகன் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா அதிமுக சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதே வார்டில் பசீர் அப்துல்கரீம், செய்யது ஆகிய இருவரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான நேற்று இந்த வார்டில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த பசீர்அப்துல்கரீம், செய்யதுஅலி ஆகிய இருவரும் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதனையடுத்து இந்த வார்டில் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா கவுன்சிலராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன்மூலம் செங்கோட்டை நகராட்சியில் கவுன்சிலர் பதவிகளில் அதிமுக முதல் வெற்றியை போட்டியின்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பாவுக்கு அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments: