Monday, October 31, 2011

மக்கள் உணர்ச்சிகளை ஜெ., பொருட்படுத்தவில்லை : வைகோ ஆவேசம்

கமுதி : ""மக்கள் உணர்ச்சிகளை ஜெ., பொருட்படுத்தவில்லை,'' என, ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ கூறினார். கமுதி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் அவர் கூறியதாவது: கடந்த 36 ஆண்டுகளாக தொடர்ந்து பசும்பொன்னிற்கு வந்து கொண்டு இருக்கிறேன். ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற மூவரின் தண்டனையை குறைக்க ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்க்கிறது. ஆனால் மக்களின் உணர்வுகளை மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தொடர்ந்து போராடி தண்டனையை ரத்து செய்ய சபதம் ஏற்போம். தமிழன் என்ற உணர்வு கொண்ட கட்சி ம.தி.மு.க., மட்டுமே. இந்தியாவிலேயே ஒரு தலைவருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பக்தர்களாக வணங்கும் இடம் பசும்பொன். தலைவர் முத்துராமலிங்க தேவர், என்றார்.

No comments: