Monday, October 17, 2011

கூடங்குளம் பாதுகாப்பு: அப்துல்கலாம் அறிவுரையை ஏற்க வேண்டும்; டாக்டர் சேதுராமன் கருத்து

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மக்களின் சந்தேகங்களுக்கு விரிவாக விளக்கம் தர அப்துல்கலாம் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. அப்துல்கலாம் அணுசக்தி துறையில் நீண்ட காலம் அணுபவமிக்கவர். மக்கள் மீது அதிக அன்பு கொண்டவர். அப்துல்கலாம் அறிவுரையை ஏற்று கூடங்குளம் அணுமின்நிலையம் செயல் பாட்டை அரசு தீர்மானிக்க வேண்டும். அரசு அவரின் அறிவுரையை ஏற்பதைப் போல, இடிந்த கரை பகுதி போராட்டக்குழு வினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments: