Friday, October 28, 2011

நந்தனத்தில் 30-ந்தேதி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்

முதல் -அமைச்சர் ஜெயலலிதா வருகிற 30-ந்தேதி சென்னை நந்தனத்தில் உள்ள முத்து ராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தேவர் திருமகனாரின் 104-வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி அளவில் சென்னை நந்தனம், அண்ணாசாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் உருவசிலைக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: