Monday, October 31, 2011

மதுரை விமான நிலையத்தை முற்றுகையிட்டு பெயர் வைப்போம் ஸ்ரீதர் வாண்டையார்

கமுதி : ""மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தி நாங்களே பெயர் எழுதிவிடுவோம்,'' என, மூ.மு.க., மாநில தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கூறினார். கமுதி பசும்பொன்னில் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் ஜெ., தேவர் சிலைக்கு தங்ககவசம் வைப்பதாக கூறி இன்னும் நிறைவேற்றாமல் உள்ளார். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பெயரை உடனடியாக வைக்காவிட்டால் நாங்கள் விமான நிலையத்தில் முற்றுகையிட்டு தேவர் பெயரை எழுதிவிடுவோம். ஜாதி வாரியான கணக்கெடுப்பின் பின் தேவரினத்தை மிகவும் பின்தங்கிய பட்டியலில் சேர்க்க வேண்டும், என்றார்.

No comments: