Saturday, October 29, 2011

கோமா நிலையில் சிகிச்சை: நடிகை மனோரமா கவலைக்கிடம்

நடிகை மனோரமா கடந்த மாதம் குடும்பத்துடன் காளகஸ்தி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்குள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்தார். இரவில் பாத்ரூம் சென்ற போது மனோரமா திடீரென வழுக்கி விழுந்தார். நெற்றியில் பலத்த அடிபட்டது. தைலம் போட்டு தேய்த்து சகஜ நிலைக்கு வந்தார்.

சென்னை திரும்பிய அவர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். சில நாட்களுக்கு முன் நெற்றியில் அடிபட்ட இடத்தில் மீண்டும் வலி ஏற்பட்டு துடித்தார். உடனடியாக தேனாட்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர் அவரை பரிசோதித்த போது நெற்றியில் ரத்தக்கட்டு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்தக் கட்டை கரைக்க மருந்து கொடுக்கப்பட்டது. தற்போது திடீரென மயக்கமாகி கோமா நிலைக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.

No comments: