Friday, December 23, 2011

அணைக்காகப் பாரதிராஜா பேச்சு

முல்லைப் பெரியாறு அணைக்காக இன்று மே 17 இயக்கம் ஏற்பாடு செய்த செய்தியாளர்களைச் சந்தித்திப் போது திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் தங்கர்பச்சான் ஆகியோர் தண்ணீருக்கான தங்கள் கருத்தை வெளிப்படுத்தினார்கள்.

அப்போது பேசிய திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, வரும் 30 ஆம் தேதி தேனி, கம்பம் பகுதியில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும் அவர் கூறும் போது, தேசியம் எனும் ஒரு சொல்லில் எங்கள் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்டுள்ளது என்றார். அதனால்தான் 2 இலட்சத்திற்கும் கூடுதலான தொப்புகள் கொடி உறவான தமிழர்கள் சாகும் போது பார்த்துக் கொண்டு இருந்தோம் இப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்றார்.

No comments: