Saturday, December 31, 2011

இளைஞர்கள் போராட்டத்துக்கு வலிமை சேர்க்க வேண்டும்-சீமான்

முல்லைப்பெரியாறு அணை சம்பந்தமாக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பலர் உயிர்த்தீயாகம் செய்துள்ளனர்.

இதுகுறித்து இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் விடுத்துள்ள அறிக்கையில்,

போராட்டங்கள் பற்றி எரியலாம், ஆனால் போராளிகள் எரிந்து விடக்கூடாது. முல்லைபெரியாறு தண்ணீரில் நமக்கு வரவேண்டிய உரிமையை பறிக்கும் கேரள அரசியல்வாதிகளுக்கு நம்முடைய போராட்டத்தின் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும். போராட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டு இளைஞர்கள் வலிமை சேர்க்க வேண்டும். மாறாக, உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார் சீமான்.

No comments: