Sunday, December 25, 2011

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேரை இடமாற்றம் செய்து அரசின் கூடுதல் தலைமைச் செயலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

1. அம்ரேஷ் பூரி (கோவை நகர ஐஜி) - சென்னை புலனாய்வு ஐஜி யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. பி.தாமரைக்கண்ணன் ( சென்னை புலனாய்வு ஐஜி) - விரிவாக்கப்பட்ட சென்னையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3. சஞ்சய் அரோரா (விரிவாக்கப்பட்ட சென்னையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்) - விரிவாக்கப்பட்ட சென்னையின் போக்குவரத்து ஐஜி/கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்

4. டி.பி.சுந்தரமூர்த்தி ( சென்னை, ஐஜி எஷ்டாபிளிஷ்மெண்ட்) - கோவை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்லார்.

5. டி.ராஜேந்திரன் (சென்னை தொழில்சேவை கூடுதல் காவல் இயக்குனர்) - சென்னை, மனித உரிமை ஆணைய கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

6. கே.பி. மஹேந்திரன் (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை கூடுதல் இயக்குநர்) - தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய கூடுதல் இயக்குனராகப் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளார்.

7. மிதிலேஷ் குமார் ஜா (தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய கூடுதல் இயக்குனர்) - சென்னை தொழில் சேவை கூடுதல் காவல் இயக்குனராகப் பதவி மாற்றப்பட்டுள்ளார்.

8. ஆர்.சேகர் ( சிபிசிஐடி கூடுதல் இயக்குனர்) - புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ரயில்வே கூடுதல் காவல் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

9. டி.கே.ராஜேந்திரன் (கூடுதல் காவல் இயக்குனர், நிர்வாகம்) - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. நரேந்தர் பால் சிங் ( சென்னை ஆயுதப்படை கூடுதல் காவல் இயக்குனர்)- சிஐடி குற்றப் பிரிவு கூடுதல் காவல் இயக்குனராக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை கூடுதல் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ளார்.

No comments: