Saturday, December 17, 2011

5 மாவட்டங்களில் ஒரே நாளில் கடையடைப்பு

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாகக் கேரளாவைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் கடையடைப்புகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வணிகர்கள் கூறும் போது கேரளாவைக் கண்டித்து ஆங்காங்கு பல்வேறு பகுதிகளில் தனித்தனியாகக் கடையடைப்பு நடைபெற்று வருகிறது. அவற்றை ஒருங்கிணைத்து வரும் 22 ஆம் தேதி தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஒரே நாளில் கடையடைப்பு நடத்தப் போவதாகக் கூறினார்கள்.

இக்கடையடைப்பு நடுவண் அரசுக்கும், கேரளாவிற்கும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் நடத்தப்படுகிறது என்றனர்.

No comments: