Thursday, February 17, 2011

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை. அ.தி.மு.க. கூட்டணியில் மூவேந்தர் முன்னணி கழகம்- கார்த்திக் கட்சிக்கு தலா ஒரு இடம்; நாளை அறிவிப்பு வெளியாகிறது

சென்னை, பிப். 16-

அ.தி.மு.க. கூட்டணியில் மூவேந்தர் முன்னணி கழகம், கார்த்திக் கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்படும் என தெரிகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய குடியரசு கட்சிக்கு ஒரு இடமும் நேற்று ஒதுக்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் ஆகியோர் நேற்று சந்தித்து தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மேலும் சில கட்சிகளுக்கு அடுத்த கட்டமாக நாளை தொகுதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. டாக்டர் சேதுராமன் தலைமையிலான அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்துக்கு ஒரு தொகுதியும், நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதியும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: