Friday, July 29, 2011

58 கிராம கால்வாய் திட்டப்பணிகள் ஆய்வு

உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதி வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் சகாயம், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கதிரவன் ஆகியோர் பார்வையிட்டனர். உசிலம்பட்டியின் நீராதாரத்திற்காக நடைபெறும் 58 கிராம கால்வாய் திட்ட பணிகளை பார்வையிட்டனர். உத்தப்பநாயக்கனூர் பாறைப்பட்டியில் அமைந்துள்ள புதிய கண்மாய், பிரதான கால்வாயில் இருந்து பிரியும் பகுதி மற்றும் இந்த திட்டத்தின் முக்கிய பகுதியாக உள்ள தொட்டிப்பாலப்பணிகள் நடக்கும் பகுதிகளை பார்வையிட்டனர். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குலசேகரன், குண்டாறு வடிநில கோட்ட உதவி பொறியாளர் சந்திரன், உசிலம்பட்டி ஆர்.டி.ஒ., புகழேந்தி, தாசில்தார் ரவீந்திரன், மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர். இந்த திட்டத்திற்காக கூடுதல் நிதி சுமார் எட்டு கோடி வரை தேவைப்படுகிறது. அரசிடம் இது குறித்து தெரிவித்து நிதி பெற்றுத்தர ஏற்பாடு செய்யவும், பணிகள் விரைவில் முடிக்கவும் ஏற்பாடுகள் செய்வோம் என கலெக்டர் கூறினார். உத்தப்பநாயக்கனூரில் சமுதாயக்கூடம், நூலகம், ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆய்வுகள் மேற்கொண்டார்

No comments: