Wednesday, November 16, 2011

சினிமாவில் சங்கத்தமிழ் வளர்க்கும் வைரமுத்து!

சினிமாவிலும் சங்கத்தமிழ் வளர்க்கலாம் என்கிறார் கவிஞர் வைரமுத்து

உருமி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் சங்கத்தமிழ் இலக்கியத்திலிருந்து வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பதாக சொல்கிறார் கவிஞர் வைரமுத்து.

இதுபற்றி அவர் கூறுகையில்,

சினிமாவில் தமிழ் வளர்க்க முடியவிலலையே என்று ஏக்கம் எனக்கு நீண்ட காலமாக இருந்தது. அந்த ஏக்கத்தை இந்த உருமி படம் தணித்திருக்கிறது. காரணம் படத்தின் கதையும், சூழலும் அப்படி. இப்படத்தில் காதல் கொண்ட ஒரு இளவரசி பாடும்போது, இரு கரம் கொண்டு ஒரு யானையை அடக்கிய வீரன், என் இரு யானைகளை அடக்க என் குடில் வருகிறான் என்று எழுதியிருக்கிறேன். சங்க இலக்கியத்திலிருந்து இந்த தமிழை பயன்படுத்தியிருக்கிறேன் என்கிறார் வைரமுத்து.

No comments: