Wednesday, November 23, 2011

விவேக்கின் சாதனை

இதுவரை பத்து லட்சம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டு விட்டார் விவேக். இந்த வருடம் டிசம்பருக்குள் பத்து லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று விவேக்கிடம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்திருந்தது வாசர்களுக்கு நினைவிருக்கலாம். அவர் கூறிய இந்த பத்து லட்சத்தைதான் கடந்த மாதமே நிறைவேற்றிவிட்டார் விவேக். ஆனால் இன்னும் பல்வேறு ஊர்களில் இந்த திட்டத்திற்காக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார் அவர். டிசம்பர் மாதத்தில் கடலு�ரில் இந்த பணியை நிறைவு செய்கிறாராம் விவேக். இந்த விழாவில் அப்துல் கலாமும் கலந்து கொள்ளவிருக்கிறார். இதுவரை எல்லா ஊர்களிலும் மரங்களை நட்டு வந்தவர், சிலரது அன்பு கட்டளையால் சில கோவில்களுக்குள்ளும் மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். ஒவ்வொரு கோவிலிலும் ஒரு மரம் இருக்கும். அதை தல விருட்சம் என்பார்கள். விவேக்கும் இப்போது மரங்களை நட்டிருப்பதால் அதை என்ன பெயர் சொல்லி அழைப்பார்களோ?

No comments: