Saturday, November 26, 2011

இன்று தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தநாள்

இன்று (நவம்பர் 26) தமிழீழத் தேசியத் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவருமான பிரபாகரன் அவர்களின் 57 ஆவது பிறந்தநாள். எப்போதும் இந்த நாளை அவர் கொண்டாடியதில்லை அதற்கு மாறாக மாவீரர்கள் நாளான நவம்பர் 27 ஆம் நாளில்தான் அவர் தன் உரையின் மூலமாகத் தமிழீழ மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் மற்றும் உலக மக்களுக்கும் தன் செய்தியை அளிப்பார்.

தமிழ் ஈழத்தின் வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதி அம்மாள் மகனாய் 26.11.1954 ஆம் ஆண்டு பிறந்த திரு.பிரபாகரன் அவர்கள் தன் இனம் தன் மண்ணிலேயே அழிக்கப்படுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் கருவி ஏந்தினார்.

No comments: