Wednesday, November 16, 2011

நிலமோசடி- நடிகர் கைது

நிலமோசடி செய்ததாக நடிகர் ரிதீஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

நாயகன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ரிதீஷ்குமார். இவர் முன்னாள் திமுக அமைச்சர் சுப.தங்கவேனின் பேரன் ஆவார். கடந்த எம்.பி தேர்தலில் வெற்றி பெற்று தனது தாத்தாவுக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி எம்.பியானார் ரிதீஷ்குமார்.

இவர் மீது காஞ்சிபுரம் மாவட்டம பாப்பாங்குடி கிராமத்தைச்சேர்ந்த சாமிக்கண்ணு என்பவர் தனது 1.47 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை பயன்படுத்தி ரிதீஷ்குமார் அபகரித்துக்கெண்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் இன்று காலை ரிதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

நடிகரும், திமுக எம்.பியுமான ரிதீஷ்குமார் கைது செய்யப்பட்டிருப்பதை அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments: