Monday, June 24, 2013

படப்பிடிப்பில் விபத்து நடிகர் தருண்கோபி படுகாயம்

விஷால் நடித்த ‘திமிரு’ படத்தை டைரக்டு செய்தவர், தருண்கோபி. மாயாண்டி குடும்பத்தார், பேச்சியக்கா மருமகன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தும் இருக்கிறார். இவர் இப்போது, ‘கன்னியும் காளையும் செம காதல்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கரண் கதாநாயகனாக நடிக்கிறார். வடிவுடையான் தயாரித்து டைரக்டு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகில் உள்ள படூர் கிராமத்தில் நேற்று நடந்தது. மோட்டார் சைக்கிளில் செல்லும் தருண்கோபியை ஒரு கார் துரத்தி வந்து மோதுவது போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.




அப்போது கார் ‘பிரேக்’ பிடிக்காமல், தருண்கோபி மீது நிஜமாகவே மோதி விட்டது. அதில், தருண்கோபி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். அவருடைய கை–கால்களில் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள். இந்த விபத்து காரணமாக, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.



No comments: