Thursday, June 27, 2013

கள்ளர் பள்ளி ஆசிரியர் கவனத்துக்கு...

அரசு கள்ளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.




இது தொடர்பாக, மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் சோ. செல்லம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:



மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின்கீழ் இயங்கி வரும் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, 2013-14 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.



கலந்தாய்வு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை நெறிமுறைகளின் படி நடைபெறும். பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள், தங்களது விண்ணப்பங்களை ஜூலை 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அலுவலகத்தில் உரிய வழியில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

.

No comments: