Monday, May 4, 2009

சிந்திப்போம் செயல்படுவோம்

இனிய தமிழ் உறவுகளே , இங்கு சிங்களன் செய்தது சரி புலிகள் துரோகிகள், இந்தியா வாழ்க, ஈழம் அல்ல இலங்கை என்று கூறுவது எல்லாம் சரி, கொஞ்சம் இந்த படத்தை பாருங்கள், இது ஒன்றும் கோரமான படமல்ல, உடனே இதை பார்த்த உடன் நெஞ்சை பிடித்துகொண்டு டாக்டரிடம் செல்ல , ஆனால் மனிதாமானம் என்ற ஒரு சொல்லுக்கு விளக்கம் சொல்லும் ஒரு படம். சில கிலோமிட்டருக்கு வெளியே இந்த சகோதர சகோதரிகளின் உறவுகள்(தமிழர்கள்) ஓட்டு போட்டு கொண்டும், டாஸ்மார்க்கில் அரட்டை அடித்து கொண்டும், அரங்கங்களில் வாய்கிழிய பேசிக்கொண்டும், இணையதளங்களிலும் குழுமங்களிலும் தேசதுரோகியே அவனே இவனே என்று இங்கு இருக்கு அடுத்த நிமிடம் சிங்கள் ஆமி எப்போ குண்டு போடுவான், நீ இருப்பாயா நான் இருப்பேனா, உணக்கு வலது கால் போகுமா, இடது கால் போகுமா, எனக்கு இந்த கை இருக்குமே இல்லை இருக்காதா என்ற கேள்விகளுடன் நம்மை பார்க்கும் இந்த குழந்தைகளுக்காகவாது மனிதாபிமானம் காட்டுங்கள், நமக்குள் இன்றுவரை கருத்து மோதல் காரணங்கள் தான் இந்த நிலை அனைவரும் ஒன்று கூடி என்றோ நின்றிருந்தால் இந்தியாவும் ராணுவத்தை அனுப்பி இருக்காது இன்று கலைஞரும் உண்ணாவிரதமிருக்க தேவை இருந்திருக்காது. சிந்திப்போம் செயல்படுவோம்

--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-

No comments: