Sunday, September 2, 2012

மூக்கையாத் தேவர் குரு பூஜை ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் செப்.6-ம் தேதி நடைபெற உள்ள பி.கே. மூக்கையாத் தேவர் குரு பூஜை ஆலோசனைக் கூட்டம் தாலுகா காவல் நிலையத்தில் நடைபெற்றது.
 மதுரை மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் குமார் மேற்பார்வையில் நடைபெற்ற கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் திருமால்அழகு தலைமை வகித்தார்.
 சப்-இன்ஸ்பெக்டர் லாவண்யா, ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 அ.இ.பார்வர்டு பிளாக் கட்சி பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ., பிரிவு, முன்னாள் எம்.எல்.ஏ. சந்தானம் பிரிவு, பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி முருகன்ஜீ பிரிவு, பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை பூபதிராஜா, ராஜபாண்டி பிரிவு, தேவர் அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் வாகனத்தில் செல்லுவது, பூஜை நேரம், பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

No comments: