Sunday, September 16, 2012

உசிலை வி.கே.சி. நடராஜன் நினைவு அறக்கட்டளை கூட்டம்

உசிலம்பட்டி, செப். 14: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ப.மு.தேவர் கல்லூரி நிறுவனத் தலைவர் வி.கே.சி.நடராஜன் நினைவு அறக்கட்டளைக் கூட்டம் நடைபெற்றது.
 முன்னதாக கல்லூரி வளாகத்தில் உள்ள வி.கே.சி.நடராஜன் நினைவிடத்தில் கல்லூரித்
 தாளாளர் பி.பாலசுப்பிரமணியன் தலைமையில், தலைவர் மாசாணம், முதல்வர் வைர.
 முருகானந்தம், பேராசிரியர்கள், அலுவலர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 பின்னர் நடைபெற்ற கூட்டத்திற்கு பி.கே.எம். இளைஞர் மேம்பாட்டு அறக்கட்டளைத் தலைவர் பொன்சூரியராஜன் தலைமை வகித்தார். வி.கே.சி. நடராஜன் நினைவு அறக்கட்டளைத் தலைவர் வி.கே.சி.ந.கணேஷ் வரவேற்றார்.
 ஓய்வு பெற்ற தாசில்தார் முத்துக்கருப்பத் தேவர், உளவியல் நிபுணர் ஜெயசந்திரன், புலவர் சின்னன் ஐயா உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
 நகர்மன்றத் தலைவர் யூ.பி.ஆர்.பஞ்சம்மாள் சிறப்புரையாற்றினார்.
 விளாம்பட்டி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அறக்கட்டளை நிர்வாகி மஞ்சுகணேஷ் பரிசுகளை வழங்கி நன்றி கூறினார்.

No comments: