Sunday, September 16, 2012

கௌதமின் நடிப்பில் ஈர்க்கப்பட்டார் மணிரத்தனம்

ராவணன் திரைப்படத்தை தொடர்ந்து மணிரத்தனம் இயக்கும் திரைப்படம் கடல். இப்படத்தின் மூலம் நடிகர் கார்த்திக் மகன் கௌதமும், நடிகை ராதாவின் மகள் துளசியும் முதன் முறையாக அறிமுகமாகின்றனர். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பெரும்பொருட் செலவில் இத்திரைப்படம் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு எவ்வாறு வந்துள்ளது என்பதை அறிய மணிரத்தனம், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் உடன் இணைந்து இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை திரையிட்டு பார்த்திருக்கிறார். அதில் கௌதமின் நடிப்பில் ஈர்க்கப்பட்ட மணிரத்தனம் மகிழ்ச்சியில் புன்னகையித்துள்ளார்.

No comments: