Tuesday, December 25, 2012

கிறிஸ்துமஸ்:சேதுராமன் வாழ்த்து


இயேசுவின் அன்பும், சமாதானமும் உலகம் முழுவதும் தழைக்கட்டும் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் தெரிவித்துள்ளார்.
 அவர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி:
 நவீன உலகின் முன்னேற்றங்களையும், கல்வி விழிப்புணர்வையும் உலகெங்கும் கொண்டு சேர்த்ததில் கிறிஸ்துவ மதத்திற்கு பெரும் பங்கு உள்ளது. அன்பு, சமாதானம், இரக்கம்  இவற்றின் வடிமாகத் திகழ்ந்தவர் இயேசு கிறிஸ்து. தற்போதைய சூழலில் நாட்டுக்குத்  தேவைப்படும் அருமருந்தாக இருப்பதும் இதுவே. மனித இனம் அன்பைத் தொலைத்துக்  கொண்டிருக்கிறது. நாடுகள் சமாதானத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றன.
 இந்தக் குறைகள் களையப்பட்டு, உலகிற்கு புதிய விடியல் வேண்டுமெனில், இயேசுவின் நெறி ஒன்றே அதனைச் செய்ய முடியும்.
 கிறிஸ்துவ மக்கள் இந்த உறுதிப்பாட்டை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments: