Monday, December 24, 2012

மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் வேலுநாச்சியார் நினைவு நாள் பொதுக்கூட்டம்

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

வேலு நாச்சியாரை பெருமைபடுத்தும் வகையில் சென்னை சாலிகிராமத்தில் தசரதபுரம் பஸ் நிலையம் அருகில் வருகிற 25-ந்தேதி வேலுநாச்சியார் புகழ்பாடும் பொதுக் கூட்டம் மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கோகுல இந்திரா, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், எம்.எல்.ஏ.க்கள் செ.கு. தமிழரசன், பி.வி.கதிரவன், தனியரசு, வி.பி. கலைராஜன், அசோக், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத், விருகை ரவி, ஜோதி முத்துராமலிங்கம், கழக பொதுச் செயலாளர் இசக்கி முத்து மற்றும் அகில இந்திய தேவர் பேரவை உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். 

இவ்வாறு சேதுராமன் கூறி உள்ளார்.

No comments: