Tuesday, August 11, 2015

பூலித்தேவர் பெயர் வைக்க வேண்டும் – முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த கருணாஸ்தேவர்

நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்க்கு இருந்த பூலித்தேவர் மாளிகை என்ற பெயரை வைக்க வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது.கருணாஸ் தேவர் அவர்கள் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் நெல்லையில் அவர் அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார்.
மேலும்., கள்ளர் மறவர் அகமுடையார் சமுகங்களை ஒருங்கினைத்து போடப்பட்ட தேவரினம் அரசாணையை நிறைவேற்றி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில் மதுவினால் பலரும் பாதிக்கப்படுவதால் பூரண மதுவிலக்கு அமல் படுத்தபடவேண்டும் எனவும், நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி அமோக வெற்றி பெரும் எனவும் , தெரிவித்தார். பேட்டியில் அவருடன் புலிப்படை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மதுரை மீனாட்சி பஜார் அருகில் மணிநகரத்தில் இன்று வரையப்பட்ட கருணாஸ் தேவர் அவர்களின் சுவர் விளம்பரம்.

No comments: