Wednesday, August 12, 2015

பசும்பொன் தேவர் பெயர் சூட்டக்கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை மனு – உழவன் அறக்கட்டளை

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் பல வருடங்களாக கோரிக்கை எழுப்பி வருகின்றனர். மத்திய அரசு தேவர் பெயர் சூட்ட ஒப்புதல் அளித்தும் N.o.c யை மாநில அரசு வழங்க மறுத்ததால் மதுரை விமானநிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டுவது கிடைப்பில் போடபட்டுவிட்டது. இதனால் மத்திய அரசில் எழுத்து பூர்வமான ஒப்புதலை பெற உழவன் அறக்கட்டளை மற்றும் சீர் மரபினர் சங்கம் மத்திய.விமான போக்குவரத்து துறையகத்திற்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதில் இந்திய சுதந்தி போராட்டத்தின் தலை சிறந்த வீரரும் தேசியமும் தெய்விகத்தையும் கண்ணென பாதுகாத்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை உடனே சூட்ட வேண்டுமென கோரி கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.

மேலும் அதிகநாள் காலம் தாழ்த்துவதன் மூலம் பல்வேறு சிக்கல் தொடர்ந்து கொண்டே போவது உடனடியாக தேவர் பெயர் சூட்டப்படவேண்டுமென்ற கோரிக்கையை மனுவாக மத்திய விமான போக்குவரத்து துறையகத்திடம் கேட்டுள்ளனர்.

THANKS - MARUTHU TV

No comments: