Monday, February 18, 2013

சென்னையில் நாம் தமிழர் கட்சி உண்ணாவிரத போராட்டம்

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இக்கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.




கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆவல் கணேசன் இதனை தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பெரியார் அன்பன் தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் மீசை முருகேசன், சரவணன், விஜயலட்சுமி, சங்கீதா மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

No comments: