Wednesday, February 20, 2013

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியானது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, கர்நாடகாவின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி இன்று அரசிதழில் வெளியானது.




காவிரி நடுவர் மன்றம் விசாரணை செய்து இரு மாநிலங்களும் தண்ணீர் பகிர்ந்து கொள்வது குறித்து இறுதித் தீர்ப்பளித்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு இன்று அரசிதழில் வெளியானது. இதையடுத்து அரசாணையின் நகல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.



தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநில அரசுகளுக்கு இன்று அரசாணையின் நகல் வழங்கப்படும்.



காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு 419 டிஎம்சி தண்ணீர் காவிரியில் வழங்கப்பட வேண்டும். கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி தண்ணீரும், கேரளாவுக்கு 30 டிஎம்சியும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் அளிக்கப்பட வேண்டும் என்றும் இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டதால், நதிநீர் பங்கீடுகள் தானாகவே சட்ட நடைமுறைக்கு வந்து விடும். நடுவர் மன்றத் தீர்ப்பை மாற்ற யாருக்கும் உரிமையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

No comments: